The post இணையத்தில் பரவிய அந்த செய்தி… நானும் தமிழ் பொண்ணு தான் என கடுப்பான சாய்பல்லவி… appeared first on Touring Talkies.
]]>கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்ட சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த படத்தின் மூலம் அவரை அனைவரும் மலர் டீச்சராகவே நினைவில் வைத்துள்ளனர்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போதைய தகவலின்படி, ராமரின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம்.
இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.சாய் பல்லவி குறித்து “தமிழ் பெண் இல்லை, கன்னடர்” என பரவிய செய்திகளால் அவர் கோபமடைந்து, “என்னுடைய சொந்த ஊர் படுகா, ஊட்டி பக்கத்தில் கோத்தகிரி பக்கத்தில்தான் இருக்கிறது. ஊட்டியும் தமிழ்நாட்டில்தானே, அப்போ நானும் தமிழ் பொண்ணுதான்” என உறுதியாகக் கூறியுள்ளார்.
The post இணையத்தில் பரவிய அந்த செய்தி… நானும் தமிழ் பொண்ணு தான் என கடுப்பான சாய்பல்லவி… appeared first on Touring Talkies.
]]>The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.
]]>நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்தாலும், தெலுங்கு மொழி சரளமாக பேசுவார். இப்போது உத்தராந்திரா பேச்சு வழக்கில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் அவர் இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அமீர் கானின் மகன் ஜுனைத் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்துள்ள நடிகை சாய் பல்லவி, அடுத்து ரன்பீர் கபூரின் பிரமாண்ட கனவு படமான ராமாயணத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் சீதா தேவியாக நடிக்க இருக்கிறார்.
இந்தி படத்தில் பணிபுரியும் போது ஆங்கிலத்தில் பேசி சமாளித்தவர், இப்போது இந்தி மொழியும் கற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
The post மீனவ பெண்ணாக நடிக்கும் சாய் பல்லவி appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி ! appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு முன்னணி நடிகரான ராம்சரண், இப்போது ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிவருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ‘உப்பெனா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது சாய்பல்லவியும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்தில் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
The post தெலுங்கு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி ! appeared first on Touring Talkies.
]]>The post கடவுள் வேடத்தில் சாய் பல்லவி! எந்த கடவுள் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் யாஷ் ஜூலை மாதம் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன.
முதலில் இந்தப் படத்தில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார்.
The post கடவுள் வேடத்தில் சாய் பல்லவி! எந்த கடவுள் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post “காசுக்காக, கேவலமா, யு டியுபர்ஸ்”: வெளுத்த சாய் பல்லவி, த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் பூஜையின் போது நடிகை சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த சிலர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக இணையத்தில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சாய் பல்லவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“உண்மையாக நான் வதந்திகள் குறித்து கண்டுகொள்வதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருக்கும்போது அது குறித்து பேசுவேன். என்னுடைய படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை வேண்டுமென்றே க்ராப் செய்து கேவலமான நோக்கத்துக்காகவும், காசுக்காகவும் சிலர் பரப்பியிருக்கிறார்கள்.
எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, இப்படியான வேலையில்லாதவர்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலும் கேவலமானவை” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்கே21’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை க்ராப் செய்து ‘சாய் பல்லவிக்கு திருமணம்’ என பரப்பி வந்த நிலையில், சாய் பல்லவி ஆதங்கமாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
The post “காசுக்காக, கேவலமா, யு டியுபர்ஸ்”: வெளுத்த சாய் பல்லவி, த்ரிஷா! appeared first on Touring Talkies.
]]>The post ஏழாம் வகுப்பில் லவ் லெட்டர் எழுதிய சாய்பல்லவி! appeared first on Touring Talkies.
]]>“நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அவனுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினேன். அதை அவனுக்கு எப்படி கொடுப்பது என்று தெரியாமல் புத்தகத்தில் வைத்துக்கொண்டேன். என் அம்மா கண்ணில் அந்த கடிதம் பட்டு அளவு கடந்த கோபம் வந்துவிட்டது. என்னை செமையாக அடித்து விட்டார். அம்மா அடித்தது அதுதான் முதல் முறையும், கடைசி முறையும். இப்போது வரை மீண்டும் என் அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை” என்றார்.
The post ஏழாம் வகுப்பில் லவ் லெட்டர் எழுதிய சாய்பல்லவி! appeared first on Touring Talkies.
]]>The post “நான் அதைச் செய்ய மாட்டேன்!” : சாய் பல்லவி appeared first on Touring Talkies.
]]>மேக்கப் போடாத காரணங்களை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், “எனது முதல் படமான பிரேமம் படத்தில் இருந்து இன்றுவரை நான் ஒரு படத்தில் கூட மேக்கப் போட்டது இல்லை. பள்ளி நாட்களில் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருந்தது. முகத்தில் இருக்கும் முகப்பருக்களை பார்த்து வேதனைப்படுவேன். என் குரல் கூட நன்றாக இருக்காது என்று நினைத்தேன்.
ஆதங்கம் பிரேமம் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்ததை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்று முதலில் பயந்தேன். ஆனால் மேக்கப் இல்லாமல் கூட மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற பாராட்டு எனக்கு கிடைத்தது. அந்த பாராட்டுதான் எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அது முதல் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன்” என்றார்.
The post “நான் அதைச் செய்ய மாட்டேன்!” : சாய் பல்லவி appeared first on Touring Talkies.
]]>The post ‘கார்கி’ படத்தின் வசூல் 25 கோடி ரூபாயாம்! – விநியோகஸ்தர் சக்திவேலன் சொன்ன தகவல் appeared first on Touring Talkies.
]]>கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “இந்தக் ‘கார்கி’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அறைகூவல்விட்டு கூறியது பத்திரிகையாளர்கள்தான்.
விமர்சனங்களும், பத்திரிகையாளர்களும் இப்படத்தைத் தூக்கிப் பிடித்ததுதான் வெற்றிக்கு காரணம். இப்படத்தின் விமர்சனத்தை தனித்தனியாக வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பி கொண்டேயிருந்தார்கள்.
இப்படத்தை முதல்முதலாக பார்க்கும்போது அனைவருக்கும் என்ன உணர்வு இருந்ததோ? அதே உணர்வுதான் நான் பார்க்கும்போதும் இருந்தது.
இப்படத்தை தெருத்தெருவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் பிறகு 2-டி ராஜா அண்ணனிடம் சென்று இப்படத்தைப் பற்றிக் கூறினேன். சூர்யா அண்ணன் இது போன்ற படங்களுக்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார் என்று கூறினார்.
அதன் பிறகு இப்படத்தைப் பார்த்த சூர்யா சார், “இந்தப் படத்திற்கு ஆதரவு தரவில்லையென்றால், வேறு எந்த படத்திற்கு தருவது..? என்று கூறினார். மேலும், “இப்படம் செலவிட்ட தொகையை மீட்டு தருமா..?” என்று கேட்டார். “நிச்சயம் அவர்கள் செலவு செய்ததைவிட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு சம்பாதித்து விடும்” என்று கூறினேன். ஆகையால் சூர்யா சாரிடம் பேசி அவருடைய 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து வெளியிட்டோம்.
இன்றைய தேதிவரையிலும் இந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுநாள்வரையிலும் வந்த கலெக்சன்படி படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் கவுதமுக்கு 4 மடங்கு பணம் கிடைத்திருக்கும். அதாவது இந்தப் படம் இப்போதுவரையிலும் 25 கோடிவரையிலும் சம்பாதித்திருக்கிறது. இதுவே மிகப் பெரிய சாதனை..!
இப்போது, ‘சூரரைப் போற்று’ படம் 5 தேசிய விருதுகளை சூறையாடி வந்துருக்கிறது. இப்படம் ஊரடங்கு சமயத்தில் ஓடிடி-யில் வெளியாகியது. அப்போது சூர்யா சார் என் நிறுவனத்தை அவர்கள் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும், என்னுடைய லோகோவை போட்டு சக்தி பிலிம் ஃபேக்டரி இப்படத்தை விநியோகிக்கிறது என்று வெளியிட்டார்கள். நான் சூர்யா சாருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்…” என்றார்.
The post ‘கார்கி’ படத்தின் வசூல் 25 கோடி ரூபாயாம்! – விநியோகஸ்தர் சக்திவேலன் சொன்ன தகவல் appeared first on Touring Talkies.
]]>The post கார்கி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கிறார்கள். அந்தக் கதையைத்தான் இந்தப் படத்தின் அவுட் லைனாக வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்.
அயனாவரம் பகுதியில் இருக்கும் சாந்தி அபார்ட்மெண்ட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார் ஆர்.எஸ்.சிவாஜி. இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளான சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டிலும் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரது தங்கை பள்ளிக்குச் செல்லும் சிறுமி. இவரது அம்மா வீட்டிலேயே மாவு அரைத்துக் கொடுத்து அதை விற்பனை செய்து வருகிறார். சாதாரண நடுத்தரக் குடும்பம்.
சாய் பல்லவிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். சாய் பல்லவிக்கும் அந்த மாப்பிள்ளையைப் பிடித்துப் போக இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.சிவாஜி வேலை செய்யும் அந்த சாந்தி அபார்ட்மெண்ட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வழக்கில் ஓடிசாவரையிலும் சென்ற சென்னை போலீஸார் அங்கே 4 பேரை கைது செய்து அழைத்து வருகின்றனர். ஐந்தாவது நபராக ஆர்.எஸ்.சிவாஜியையும் கைது செய்கிறார்கள் போலீஸார்.
இதனால் அவரது குடும்பமே ஒரே நாள் இரவில் அவமானத்துக்குள்ளாகிறது. சாய் பல்லவிக்கு வேலை போகிறது. டியூஷன் படிக்க யாரும் வரவில்லை. மாவு வாங்கவும் ஆள் இல்லை.
தன் அப்பா குற்றமற்றவர் என்று சாய் பல்லவி உறுதியாய் நம்புகிறார். இதனால் அவரை ஜாமீனில் எடு்க்க முயல்கிறார். இவருடைய குடும்ப நண்பரும் மிகப் பெரிய கிரிமினல் லாயருமான ஜெயப்பிரகாஷ், வக்கீல் சங்கத்தினர் எடுத்த முடிவின் காரணமாக இதில் நான் வாதாட முடியாது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார்.
ஜெயப்பிரகாஷிடம் ஜூனியராக இருக்கும் காளி வெங்கட் தான் இந்த வழக்கினை எடுத்து நடத்துவதாக சாய் பல்லவியிடம் சொல்ல, அதை அவரும் ஏற்றுக் கொள்கிறார்.
தொடர்ந்து இந்த வழக்கில் தன் தந்தையைக் காப்பாற்ற சாய் பல்லவி போராடுகிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் அடங்கிய திரைக்கதை.
படத்தின் மிகப் பெரிய தூணே சாய் பல்லவிதான். எந்தவித மேக்கப்பும் இல்லாமல், மிக எளிமையாக, அதே சமயம் அழகாகவும் படம் முழுவதும் காட்சியளிக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளையிடம் வெட்கத்துடன் பேசும் அந்த சாய் பல்லவிதான் அதன் பின்பு அந்த சந்தோஷத்தையே முகத்தில் காட்டாமல் அடுத்த 2 மணி நேரத்துக்கு கண்ணீரும், கம்பலையுமாக காட்சியளித்து நம்மையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.
அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக சாய் பல்லவி பல காட்சிகளில் கை தட்டல்களை பெறுகிறார் சாய் பல்லவி. சாய் பல்லவியின் இந்த எதார்த்தமான நடிப்புதான் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.
சில எமோஷனல் காட்சிகளில் சாய் பல்லவியின் நடிப்பினால் பார்வையாளர்களின் கண்களும் கலங்குகின்றன. சிறையில் இருக்கும் தனது அப்பாவை பார்க்க வந்து அவரைப் பார்க்க முடியாமல் ஓரமாக ஒதுங்கி நிற்கும் நேரத்தில் சாய் பல்லவியும், சிவாஜியும் காட்டுகின்ற நடிப்புதான் படத்தின் உயிர் நாடி. இந்தக் காட்சிக்குப் பிறகு “எப்படியாவது சிவாஜியை காப்பாற்றியாக வேண்டுமே” என்ற எண்ணத்தை நமக்குள்ளும் சேர்த்துவிட்டார் இயக்குநர்.
வழக்கறிஞராக நடித்திருக்கும் நடிகர் காளி வெங்கட்டுக்கு இதுவொரு சிறப்பான படம். அவரது நடிப்புக்கு தீனி போட்டிருக்கும் படம். தனது திக்குவாய் பிரச்சினையினால் அவர் சந்திக்கும் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு எப்படியாவது தனது முதல் வழக்கான இதில் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் துடிக்கும் துடிப்பு பலே..!
பல காட்சிகளில் தனது கவுண்ட்டர் அட்டாக் வசனத்தின் மூலமாக காட்சிகளை ரசிக்கவும் வைத்திருக்கிறார். மேலும், இவர்தான் படத்தில் கதையை ஒவ்வொரு கட்டமாக நகர்த்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
சோகமான காட்சிகளில்கூட தனது நடிப்பு மற்றும் ஒற்றை வசனங்களின் மூலமாக லேசாக புன்னகைக்கவும் வைக்கிறார். நீதிமன்ற காட்சிகளில் வியர்த்து, விறுவிறுத்து தயக்கத்துடன் கேள்விகளைக் கேட்டு அரகத் தரப்பு வழக்கறிஞருடன் மல்லுக் கட்டும் அந்த அப்பாவி வக்கீல் கேரக்டருக்கு காளி வெங்கட் மிகச் சிறந்த பொருத்தம்தான்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரான ‘கவிதாலயா’ கிருஷ்ணன் இன்னொரு பக்கம் கோர்ட் சீன்களில் அலப்பறை செய்திருக்கிறார். தாங்கள் சொல்வதுதான் சரி என்பதை அழுத்தம்திருத்தமாக எடுத்து வைக்கும் அரசுத் தரப்பு வக்கீல்களுக்கு இவரது கதாபாத்திரம் சாலப் பொருத்தம். நீதிபதியையே கவுண்ட்டர் அட்டாக் கொடுத்து கோபப்பட வைக்கும் அந்தத் திமிரையும் கிருஷ்ணன் சரியாகவே காட்டியிருக்கிறார்.
மேலும் சாய் பல்லவியின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி மென்மையாக எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்.. இவர் போய் இதைச் செய்திருப்பாரா என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவித்து நம்மை கடைசிவரையிலும் நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் கதாபாத்திரத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார்.
நடிகர் சரவணன் பாசமிக்க அப்பாவாக குற்றவாளிகளை கொலை செய்யத் துடிக்கும் அளவுக்கு கோபக்காரராக தனது நடிப்பினைக் காண்பித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் வழக்கம்போல தனது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி படத்திற்கு கடைசி நேரத்தில் ‘பூஸ்ட்’ கொடுத்து படத்தின் உருவாக்கத்திற்கும் துணை நின்றிருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
கடைசியாக நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கையான சுதாவும் இந்தப் படத்திற்குக் கிடைத்த பலமாக இருக்கிறார். அரசுத் தரப்பு வழக்கறிஞரான கிருஷ்ணன் தனது பாலியல் தன்மையைச் சொல்லி கிண்டல் செய்ததைக் கேட்டவுடன் கோபத்தில் கோர்ட்டை ஒத்தி வைத்துவிட்டு வெளியேறுவதும், அடுத்த நாள் ஹியரிங்கில் அதற்குத் தகுந்த பதிலைச் சொல்லும்போதும் கை தட்டலைப் பெறுகிறார் சுதா.
ஒளிப்பதிவு அசத்தல் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக இருக்கிறது. சாய் பல்லவியின் அழகுக்கு எந்தப் பங்கமும் நடந்துவிடாத அளவுக்கு ஒளியமைப்பை வைத்து படமாக்கியுள்ளார். இன்னொரு பக்கம் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், பாடல் இசையும் நன்று.
சிவாஜி எப்படியும் விடுதலையாகிவிட வேண்டும் என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு திரைக்கதையில் குழப்பமே இல்லாமல் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் இடம் பெறும் வசனங்களும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. ‘என் பொண்ணு இப்படி இருக்குறதுக்கு செத்திருக்கலாம்’ என்று சரவணன் சொல்லும் வசனமும், “இப்பல்லாம் என் பொண்ணு என்னை அப்பாவா பார்க்கலம்மா.. ஆம்பளையாத்தான் பார்க்குறா…” என்ற வசனமும் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.
இன்றைய வாழ்க்கை போராட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி கொஞ்சம் ஆழமாகவும், வித்தியாசமாகவும் பேசியுள்ளது இந்த ‘கார்கி’ திரைப்படம்.
நீதிக்காக போராடும் ஒரு சாதாரண பெண்ணின் கதையை மிக இயல்பாக எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் நேர்த்தியான இயக்கத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கௌதம் ராஜேந்திரன்.
இது போன்ற சென்சிட்டிவ்வான வழக்குகளில் தவறுதலாக ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவரது குடும்பத்தினர் என்ன பாடுபடுவார்கள்..? இந்தச் சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் இன்றைய மீடியாக்கள் ஒரு வழக்கு விவகாரத்தை எப்படி ஹேண்டில் செய்கின்றன..? அவர்களுக்கும் சமூக அக்கறையில் பங்கில்லையா..? போலீஸ் சொல்வதை மட்டுமே எழுதுவதும், பேசுவதும், பரப்புரை செய்வதும் நியாயம்தானா என்ற கேள்வியையும் இயக்குநர் இந்தப் படத்தில் முன் வைத்துள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காதது. ஆனால், அந்த டிவிஸ்ட்டை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம்..!
‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று பேசும் வசனத்திற்கு நிச்சயமாக இந்தப் படத்தின் நாயகி பொருத்தமானவர்தான். இந்த இடத்தில்தான் சாய் பல்லவியை அனைவருக்குமே பிடித்துப் போகிறது.
இப்படம் சொல்லும் செய்தி இதுவரையிலும் எந்தப் படத்திலும் நாம் கேட்டிராதது. பார்த்திராதது. இதுதான் உண்மையான பெண்ணியம்.
தனக்கு வந்தால்தான் அது பிரச்சினை.. அடுத்தப் பெண்ணுக்கு வந்தால் அது பிரச்சினையில்லை என்று நினைக்காமல், ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் இன்னல்களை ஒட்டு மொத்த பெண் குலத்துக்கே எதிரான பிரச்சினையாக நினைத்தால்தான் இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த முடியும் என்பதை உரக்கச் சொல்கிறது இந்தக் ‘கார்கி’ படம்.
இந்த நல்ல கருத்துக்காகவே இந்தப் படத்தினை நாம் பார்த்தாக வேண்டும். கொண்டாட வேண்டும்..!
படக் குழுவினருக்கு கிரேட் சல்யூட்..!
RATINGS : 4.5 / 5
The post கார்கி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “சாய் பல்லவி ஒரேயொரு ஆக்சனில் நம்மை சாய்த்துவிடுவார்” – காளி வெங்கட் பேச்சு appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, இயக்குநர் கவுதம் ராமசந்திரன், நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, தயாரிப்பாளர்கள் 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் கவுதம் ராமசந்திரன் பேசும்போது, “என்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் படம் நன்றாக இருந்தால் உடனே கூறுங்கள். இல்லையென்றால், சிறிது தாமதமாக கூறுங்கள் என்று சொல்லி இருந்தேன். ஆனால், இப்படம் நன்றாக இருக்கிறது என்றுதான் றுவீர்கள். ஜூலை 15ந் தேதி வெளியாகிறது. பார்த்து விட்டு சொல்வீர்கள்.
சாய் பல்லவி இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நான் திருப்தி அடைந்தாலும் அவர் இன்னும் சிறப்பாக எடுக்கலாம் என்று நடிப்பார்.
இப்படத்தினைத் துவக்கிய பின்பு பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்ய லட்சுமி எங்களுடன் இணைந்து ஆதரவு கொடுத்தார். 2D ராஜசேகர் சாருக்கு நன்றி. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் இல்லையென்றால் இப்படம் இல்லை…” என்றார்.
நடிகை சாய் பல்லவி பேசும்போது, “என்னால்தான் இப்படம் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், நான் வருவதற்கு முன்பே எல்லாமே தயாராக இருந்தது. அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனையைத்தான் இந்தப் படத்தில் ஒரு பாடமாக கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக இயக்குநர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குநர் கெளதம் எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தார். படத்தில் பணியாற்றியாவர்கள் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று அல்லாமல் படத்திற்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள்.
ஒரு நாள் நடிகர் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை படக் குழுவினர் அனுப்பினார்கள். அப்போது அவரும் இதில் பகுதியாக இருக்கிறார் என்று நினைத்தேன். எதிர்பாராதவிதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் நேரில் பார்த்தபோது எனக்கு பேச்சு வரவில்லை. அன்றைய படப்பிடிப்பில் நான் எப்படி நடித்தேன் என்றுகூட தெரியவில்லை. ஏனென்றால், நான் சூர்யா சாரின் மிகப் பெரிய விசிறி. அவரைப் பார்த்ததும் உறைந்து போனேன்…” என்றார்.
நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேசும்போது, நான் கடந்த 3 வருடங்களாக கார்கியுடன் பயணித்து இருக்கிறேன். ஆனால், இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் 4 வருடங்கள் போராடியிருக்கிறார். சாய் பல்லவி இல்லாமல் இந்த ‘கார்கி’ படம் இல்லை. இப்படம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான படம். அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்…” என்றார்.
2D ராஜசேகர் பேசும்போது, “இந்த கார்கி டீமில் இணைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சாய்பல்லவி ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சிவரை தனது புத்திசாலிதனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
சூர்யா இப்படத்தைப் பார்த்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு, “இப்படத்தை நாமே வெளியிடுவோம்…” என்றார். இப்படத்தை சாதாரணமாக எடுக்கவில்லை. குறைந்த செலவிலும் எடுக்கவில்லை…” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் பேசும்போது, “நாம் ஒரு தொழிலில் இருக்கிறோம். அதில் பயணித்து கொண்டு இருக்கும்போது பெரிதாக தெரியாது. ஆனால், இடையில் எதிர்பாராத மகிழ்ச்சியான தருணம் வந்தால் அதை சாதாரணமாக கடந்து விட முடியாது. அப்படிதான் இப்படத்தைப் பார்த்தபோது இருந்தது. படம் ஆரம்பித்ததில் இருந்து, நான் பின் தொடர்ந்தது சாய் பல்லவியின் கண்களைத்தான். இப்படத்தின் இறுதி காட்சியில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
இப்படத்தை 2D நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய பேராசையாக இருந்தது. ராஜசேகரும், சூர்யாவும் பார்த்து ஒப்புக் கொண்டார்கள். ஆகையால், இப்படம் தரமானதாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை சாதாரணமாக கடந்து விட முடியாது. ஒரு திகில் படத்தில் கூட இந்தளவுக்கு தாக்கம் இருக்குமா என்று தெரியாது…” என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “முதலில் நடிகர் சூர்யாவிற்கு நன்றி. இப்படம் மக்களிடம் எப்படி சேரும் என்று நினைத்து கொண்டிருந்தேன். படம் 2-D-யின் கைகளுக்குச் சென்ற பிறகுதான் நிம்மதியாக இருந்தது.
இப்படத்தின் கதையைக் கேட்கும்போது பதட்டமாக இருந்தது. ஏனென்றால், இது மற்ற படங்களைப் போல் இருக்காது. இறுதிக் காட்சியைக் கேட்கும்போது இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் சிறப்பாக நடித்து விட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருவேன். ஆனால், ஒரே ஒரு பாவனையில் சாய் பல்லவி வென்று விடுவார்…” என்றார்.
The post “சாய் பல்லவி ஒரேயொரு ஆக்சனில் நம்மை சாய்த்துவிடுவார்” – காளி வெங்கட் பேச்சு appeared first on Touring Talkies.
]]>