The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் பாடலும் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் சமீபத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முன்னரே படக்குழு சென்னை திரும்பியது.
கடந்த சில நாட்களாக, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்தப் படப்பிடிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அது படத்தின் சண்டைக்காட்சியா அல்லது வேறு எந்தவொரு காட்சியா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வாரங்களில் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், அதன்பிறகு படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தில் இருப்பதால், அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கடைசிகட்டத்தை நெருங்கிய தி கோட்…சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடக்கும் ஷூட்டிங்? appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, சொன்னதைவிடச் சிறப்பாக ‘தி கோட்’ படத்தை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கே சிறப்பான விளையாட்டுத்தனம், காமெடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
எடுத்தவரையிலான காட்சிகளை ரஃப் எடிட்டில் பார்த்த விஜய்க்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ஆனாலும், படத்தின்மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என விஜய் கூறியுள்ளார். அடக்கி வாசிக்கவும் என படக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post ஆட்டம் எல்லாம் வேண்டாம்! அடக்கி வாசிக்க சொன்ன விஜய்… #TheGoat appeared first on Touring Talkies.
]]>The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.
]]>தி கோட் விசில் போடு பாடலில் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாகவும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஸ்டைல் பாடலாகவும் உருவாகியுள்ள இந்த பாடல் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது எனலாம்.
இந்த பாடலின் வரிகளை எழுதிய மதன் கார்க்கி இப்பாடல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இப்பாடல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடிய பாடலாக தான் உருவாக்கப்பட்டது.எப்படி கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள போன்ற பாடல்கள் எல்லாம் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டதோ அதே போல தான் இந்த விசில் போடு பாடலும் ரசிகர்களை நிச்சயம் வெகுவாக இனி கவரும் என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இப்பாடலில் அஜித், சிம்பு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த படங்களின் ரெஃபரஸ்ன்களும் இடம்பெற்று கவனத்தை பெற்றுள்ளன.
The post இத கேட்டா பிடிக்காது, கேட்க கேட்க தான் பிடிக்கும்! விசில் போடு பற்றி மதன் கார்க்கி… appeared first on Touring Talkies.
]]>The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான புதிய கீதை படத்தில் அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன் டா என ரஜினிகாந்த் படத்தின் ரெஃபரன்ஸை வைத்து இருப்பார் விஜய் தற்போது அதே போல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யுவன் இசையில் பாட்டுப் பாடி அதிரடி ஆட்டம் போட்ட இப்பாடலில் நடிகர்கள் அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்து சிறப்பித்துள்ளார்.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான லிரிக்ஸ்கள் இப்பாடலில் இடம்பெற்றாலும் அதனை தாண்டி நன்றாக உற்று கவனித்தால் இப்பாடலில் தரமான சம்பவத்தை செய்துள்ளார் வெங்கட் பிரபு.அஜித் சூர்யா மட்டுமின்றி கார்த்தி மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களின் ரெஃபரன்ஸ்களை சைலன்டாக உள்ளே கொண்டுவந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ல் வீடியோவில் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களின் மினியேச்சர்கள் ரெஃபரன்ஸ்களாக கொண்டு வந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, பிரியாணி மற்றும் மாநாடு படங்களின் ரெஃபரன்ஸை தான் வெங்கட் பிரபு இந்த பாடலில் வைத்து இருக்கிறார். இவற்றையெல்லாம் பாடலில் இடம்பெறும் முன் கண்டிப்பாக விஜய் இவற்றை பார்த்து சம்மதம் தெரிவித்த பின்னர் தான் இப்பாடல் வெளியாகி இருக்கிறது.இவை அனைத்து ரசிகர்களையும் அரவணைக்க விஜய் செய்த முயற்சியின் தான் என இணையத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
The post இத கவனிச்சீங்களா? தி கோட் விஜய் பாட்டுல அஜித் சிம்பு கார்த்தி சூரியா! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.
]]>“பிரசாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து சாக்லேட் படம் எடுத்தேன். அடுத்து விஜயை வைத்து பகவதி படத்தின் படப்பிடிப்பை துவங்கினேன்.
அப்போது விஜய், ‘பிரசாந்தை பார்த்து பேச வேண்டும்’ என்றார். இதை, பிரசாந்திடம் சொன்னேன். அவர், ‘நானே வருகிறேன்’ என படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டார்.
அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் விஜயும், பிரசாந்தும் மணிக்கணக்காக பேசினார்கள்” என்றார் ஏ.வெங்கடேஷ்.
இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவர் சொல்லவில்லை. அது ரகசியமாகவே உள்ளது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பாருங்கள்.
மேற்கண்ட சம்பவத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம். கல்லூரி வாசல் ஆகிய படங்களை இயக்கியவர் சரண். இதில் கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த்தும் நடித்தார்.
தற்போது இயக்குநர் சரண், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் ஷாலினி திருமணம் முடிவானபோது ஷாலினி பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படம் பாதியில் இருக்கும்போதே ஷாலினி அஜித்தை திருமணம் செய்துகொண்டார். அதனால் அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு ஷாலினி பங்கேற்க சற்று தாமதமாகிவிட்டது. அதை வைத்து அஜித்துக்கும் பிரஷாந்துக்கும் மோதல் என்று வதந்தி பரப்பி விட்டுவிட்டார்கள்.
மற்றபடி இருவருக்கிடையே மோதல் என்பது நடக்காத ஒன்று. இருவருமே அன்பாகத்தான் பழகினார்கள். மேலும், அப்படியான ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரசாந்த் நடித்த ஒரு படத்தைக் கூட அஜித் பார்த்திருக்க மாட்டார். ஆனால், பிரஷாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பார்த்தார்” என சரண் தெரிவித்து உள்ளார்.
The post அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>The post லோகேஷ் குறித்து அப்படி ஒரு கேள்வி கேட்ட பிரசாந்த்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் ஆகாமலே இயக்குனர் ஆனவர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் மூவரும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது நடிகர் பிரசாந்த்”இயக்குனர்கள் பலர் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக சினிமாவிற்குள் வருகின்றனர். ஆனால் சிலர் குறும்படங்கள் மட்டும் எடுத்துவிட்டு திரைக்கு வருகின்றனர். இதில் எது சரி?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், “தமிழ் சினிமாவில் முன்பும் இது நடந்துள்ளது. பாலு மகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம், மகேந்திரன் ஹாலிவுட்டில் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பர்க் கூட உதவி இயக்குனராக இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதனால் உதவி இயக்குனராக இருப்பதை வைத்து நாம் தரம் பிரிக்க முடியாது” என பதிலளித்தார்.
The post லோகேஷ் குறித்து அப்படி ஒரு கேள்வி கேட்ட பிரசாந்த்! appeared first on Touring Talkies.
]]>