The post ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து பிரபல இந்தியா டுடே இதழ் தெரிவித்துள்ளதாவது:
‘ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம், 250 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது. தவிர, இயக்குநர் அட்லீ உடைய இயக்கம் தென்னிந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும்.
சமீபத்தில், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “ஜவானில் விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ என அனைத்து தென்னக நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளதால், இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றி பெறும். இவர்கள் அனைவரும் தென்னக பார்வையாளர்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலம், அவர்களை விரும்பும் தென்னிந்திய ரசிகர்களால், இந்தப் படம் தெற்கில் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளது,” என்றார்.
அதே போல திரைப்பட நிபுணர் ஸ்ரீதர் பிள்ளை முத்தாய்ப்பாக ஒரு படி மேலே சென்று, “தென்னிந்தியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருப்பதால், ஜவானின் முக்கிய சந்தையாகத் தென்னிந்தியா இருக்கும்” என்கிறார்.
தமிழ்நாட்டு உரிமை சுமார் 20 கோடிக்குப் போகலாம். அதே சமயம் கேரள உரிமைகள் 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில், தெலுங்குப் பதிப்பை விட, ஹிந்திப் பதிப்பு சிறப்பாகச் செயல்படும் என, ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, பெங்களூரில் SRK க்கு நல்ல சந்தை உள்ளது, மேலும் அங்குப் பட உரிமைகள் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையிலும் இத்திரைப்படத்தின் வர்த்தகம் வெகு உற்சாகமாகப் பேசப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். UFO Moviez India, Film Distribution இன் CEO பங்கஜ் ஜெய்சிங் கூறுகையில், ” SRK உண்மையில் பதான் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துள்ளார். இரண்டாவதாக, இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் எனப் பல திறமைகள் இந்தப்படத்தில் உள்ளன. மூன்றாவதாக, ஆக்ஷன் திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன” என்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
The post ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை appeared first on Touring Talkies.
]]>The post ‘பதான்’ இயக்குநர் வியந்த கமல் படம்! appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “ஒரு திரைப்படம் என்பது, நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும், படம் நம்மை அழ வைக்கனும், அப்போதுதான் அது சிறந்த படம்” என்றார்.
மேலும், “ அப்படியான படம், மணிரத்னம் இயக்க்தில் கமல் நடித்த நாயகன்தான்” என்றார்.
உலகையே வியக்க வைத்த பதான் பட இயக்குநர், தமிழ்த் திரைப்படம் ஒன்றை வியந்து பாராட்டி இருப்பது நமக்கு பெருமைதானே!
The post ‘பதான்’ இயக்குநர் வியந்த கமல் படம்! appeared first on Touring Talkies.
]]>The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>
Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக இந்த பதான் படம் அமைந்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது
அதே போல முதல் நாள் வசூல் எதிர்பார்த்தது போல இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியவை மட்டுமே வெளியாகி இரு வாரங்கள் ஆகிவிட்டன. ஆகவே, தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால், அப்படங்களின் காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பதான் படத்துக்கு அதிக அளவில் திரையரங்கம் ஒதுக்கப்பட்டும் என திரையுலக புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.
The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>The post பதான்: படத்தை எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>‘படத்தை வெளியிடக்கூடாது’ என, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தன.
இந்நிலையில் திடீரென எதிர்ப்புகள் நின்றுவிட்டன. பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என விஷ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
அதற்குக் காரணம் படத்தின் கதை.
மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குகிறது. அதனால் கோபமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவதளபதி, இந்தியாவுக்கெதிராக ஒரு தீவிரவாதி மூலம் போர் தொடுக்கிறார். அதை ஷாருக்கானும் தீபிகா படுகோனும் இணைந்து முறியடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதனால் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன.
The post பதான்: படத்தை எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>