சமீபத்தில் பாலிவுட்டை கலக்கிய பதான் படத்தை இயக்கியவர் சித்தார்த் ஆனந்த். இவர் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம், சுமார் 240 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 1000 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது.
இந்த படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “ஒரு திரைப்படம் என்பது, நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும், படம் நம்மை அழ வைக்கனும், அப்போதுதான் அது சிறந்த படம்” என்றார்.
மேலும், “ அப்படியான படம், மணிரத்னம் இயக்க்தில் கமல் நடித்த நாயகன்தான்” என்றார்.
உலகையே வியக்க வைத்த பதான் பட இயக்குநர், தமிழ்த் திரைப்படம் ஒன்றை வியந்து பாராட்டி இருப்பது நமக்கு பெருமைதானே!