The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தெலுங்கானாவில் வனபத்திரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரவி சினிமா உலகில் பரபரப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அவர்களுக்கு திருமணம் நிச்சயமானதை இன்ஸ்டாகிராம்-ல் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ENGAGED என தெரிவித்துள்ளார் சித்தார்த்.
நடிகர்கள் சம்பளமும் உயர்ந்து கொண்டே போவது போல இயக்குனர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகிறது. ஜவான் மூலம் பாலிவுட்-ல் டாப் இயக்குனராக மாறிய அட்லி விஜய்-ன் அடுத்த படத்தை இயக்க போவதாக செய்திகள் உலவுகின்றன.அப்படத்தில் விஜயின் சம்பளம் 200 கோடியாகவும் அட்லியின் சம்பளம் 100 கோடியாக உயரும் என சொல்லப்படுகிறது.
மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இதன் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு மே முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொகுப்பாளர் ஜாக்குலின்-க்கு பிக்பாஸ் சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் போட்டியாளராக பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய மாயா ஆனால் டைட்டில் கைப்பற்ற முடியாமல் போனது.பிக்பாஸ் பெரிதும் கைக்கொடுக்காத போதிலும் தற்போது ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு அமைய உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் மாயா.ஆனால் தமிழ் படத்தில் அல்ல தெலுங்கு படத்திலாம்.
2011-ல் நண்பன் திரைப்படம் வெளிவந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன் படம்.இதன் ரீமேக்கை முதலில் பார்த்திபன் இயக்குவதாக இருந்ததாம்.இதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, விஜய் 3 இடியட்ஸ் ரீமேக் கதைக்கு செட் ஆகமாட்டார் எனவும் ரீமேக் படங்களை நான் இயக்குவது இல்லை என வாய்ப்பை உதறி தள்ளினாராம் பார்த்திபன்.
The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>The post இயலாதோர்க்கு இயன்றதை செய்வதே சிறந்த செயல் – பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>மழையை காதலி எனலாம் கவிதையும் எழுதலாம். ஆனால் இயலாதோர்க்கு இயன்றதை செய்வதே இந்நேரத்தில் சிறந்த செயல். ‘புதிய பாதை’க்கு முன் வறுமையை உண்டு வளர்ந்தவன் என்பதால், புயல் செய்திகளைக் கேட்க முடியாமல் பசி காதை அடைக்கும் மக்களை நோக்கியே என் கவனம் மையங்கொண்டுள்ளது. அரசு செய்யும் உதவிகளை மீறி, அடுத்த அடுப்பில், அடுத்த வீட்டில், அடுத்த தெருவில் இப்படி அடுத்தவர்களின் பிரச்சினைகளுக்கு ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம். இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், ‘மத்திய பிரதேசம்’என்று நான் குறிப்பிட்டது உடலின் முக்கிய பகுதியான வயிறு. அதன் பசியின் கொடுமையை, கடுமையை சொல்லவே. மற்றபடி பிஜேபியையோ காங்கிரஸையோ உயர்நிலைப் படுத்தும் அரசியலை முன்னிலைப் படுத்தும் அரசியலை அல்ல. ஓரிருவர் என் கருத்தை தவறாகப் புரிந்துக் கொண்டு அவர்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அவரவர் கருத்தை அவரவர் சொல்லட்டும். அடுத்தவர் கருத்தை அதுவும் இதுபோன்ற அசாதாரண சூழலில் தங்கள் கருத்தைத் திணித்து அசிங்கப் படுத்த வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
The post இயலாதோர்க்கு இயன்றதை செய்வதே சிறந்த செயல் – பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவுக்கு ’நோ’ அட்வான்ஸை திருப்பி கொடுத்த பார்த்திபன்.! appeared first on Touring Talkies.
]]>தனது படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க இருந்தது. ஆனால் அந்த நிறுவனத்துக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் அவருக்கு ’நோ’ சொல்லி விட்டார்கள். அவர் இசை இல்லாத படத்தை எடுக்க விரும்பவில்லை. அதனால் வாங்கிய அட்வான்ஸை திரும்ப கொடுத்திருக்கிறேன் என தனது சினிமா அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.
The post இளையராஜாவுக்கு ’நோ’ அட்வான்ஸை திருப்பி கொடுத்த பார்த்திபன்.! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குனர் கேட்ட கேள்வி? வெட்கப்பட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>அவருடன் நான் ஷூட்டிங் சென்ற போது நடிகர்களைப் பார்த்து பிரமித்து போனேன். அவர்களுக்கு கிடைக்ககூடிய மரியாதை பார்த்து எக்குள் நடிக்க வேண்டும் என்ற என்னம் தோன்றியது. இயக்குனர் என்னிடம் நீ என்ன படிக்கிறாய் எனக்கேட்டார்.
நான் மூன்றம் வகுப்பு பாஸ் பன்னிட்டேன் என்றேன் அதற்கு அவர் ஏன்? என கேட்டார் உடனே வெட்கப்பட்டு ஓடி வந்து விட்டேன். என தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூம் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். வீடியோ கீழே…
The post இயக்குனர் கேட்ட கேள்வி? வெட்கப்பட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>அவரது எக்ஸ் பக்கத்தில் வெட்டுள்ள வீடியோவில், “நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம்; ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம்.
இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமெண்டல் என எந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது.
நானும் குதூகலமாக இருக்கிறேன், ஏனென்றால் அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன். படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்.
தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே ‘அவ்வையார்’, ‘சந்திரலேகா’ஆயிரத்தில் ஒருவன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎஃபெக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
The post பார்த்திபன் இயக்கும் புதிய திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post காலில் விழுந்தும்’நோ’ சொன்ன இளையராஜா’ இயக்குனர் பார்த்திபன்.! appeared first on Touring Talkies.
]]>அதில் புதிய பாதை படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகியபோது அவரைப் பார்க்க பல சிக்கல் இருந்தது. எப்படியோ அவரை சந்தித்து படம் பற்றி கூறி அவரது காலை பிடித்து கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. பாக்கியராஜ் மீது இருக்கும் கோபத்தில் நீயும் ஆர்மோனிய பெட்டி எடுத்து வாசி எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு பாக்யராஜ் சார் தான் அந்த படத்திற்கு இசையமைத்தார் என கூறினார் பார்த்திபன் முழு வீடியோ கீழே…..
The post காலில் விழுந்தும்’நோ’ சொன்ன இளையராஜா’ இயக்குனர் பார்த்திபன்.! appeared first on Touring Talkies.
]]>The post “தீவிரவாதி!”: இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.
]]>The post “தீவிரவாதி!”: இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.
]]>The post ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>டிக்கெட்டுகளை வாங்கிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் திண்டாடினர். பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றனர்.
கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்டவர்கள், சமூகவலைதளத்தில் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினர். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர்.
டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிக்கும் பணி நடந்து வருவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நடிகர் பார்த்திபன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “மறக்குமா நெஞ்சம், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர். ரஹ்மான், தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக்கொள்வதாக முன் வந்திருக்கிறார். அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்.
என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையே தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தபோது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து ‘பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்து கொள்ளுங்கள்’ எனக் கூறியதாக ராஜ உபசாரம் எனக்கு. தான் சம்பந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையைத் தொடர்ந்து கொண்டாடுவோம். பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு சிலர், “ஏ.ஆர்.ரஹ்மான் புகார்களை எதிர்கொண்டு சிக்கலில் இருக்கும்போது, தனது படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை என்கிற விசயத்தை குத்திக்காண்பிப்பது நியாயமா” என பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பார்த்திபன், “குறிப்பிட்ட வரி தவறென சிலருக்குப் படுவதால் அதை நீக்கிவிட்டேன். வருந்துகிறேன்” என பதிவிட்டு உள்ளார்.
.
The post ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: மன்னிப்பு கேட்ட பார்த்திபன் appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் ‘புதிய பாதை’ இரண்டாம் பாகம்! பார்த்திபன் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நேற்று, பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாலையும் இரவு சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருந்தார். அப்பதிவில் ரசிகர் ஒருவர் ‘புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கமென்ட் செய்திருந்தார்.
ரசிகரின் அந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள பார்த்திபன், “தற்போது தயாராகிவரும் படம் முடிந்ததும் PP2 (புதிய பாதை 2) தயாராகும்” என்று தெரிவித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு வெளியான ‘புதிய பாதை’ பார்த்திபன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். இப்படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. மேலும் இப்படத்தில் நடித்த மனோரமாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படம் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
The post விரைவில் ‘புதிய பாதை’ இரண்டாம் பாகம்! பார்த்திபன் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “கட்டாயப்படுத்திய பார்த்திபன்!”: நடிகை சீதா வருத்தம்! appeared first on Touring Talkies.
]]>2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை நடிகை சீதா திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்விலும் கசப்பு ஏற்பட, அவரையும் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் சீதா “திருமணத்திற்கு பிறகு பார்த்திபன் என்னை கட்டாயப்படுத்தி நடிப்பை நிறுத்தினார். இதற்கு உடன்பட்டது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று வருத்தமாக பேசியுள்ளார்.
The post “கட்டாயப்படுத்திய பார்த்திபன்!”: நடிகை சீதா வருத்தம்! appeared first on Touring Talkies.
]]>