இயக்குநர் பார்த்திபனும், நடிகை சீதாவும் கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு பிரிந்தனர்.
2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை நடிகை சீதா திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்விலும் கசப்பு ஏற்பட, அவரையும் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் சீதா “திருமணத்திற்கு பிறகு பார்த்திபன் என்னை கட்டாயப்படுத்தி நடிப்பை நிறுத்தினார். இதற்கு உடன்பட்டது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று வருத்தமாக பேசியுள்ளார்.