The post எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார் அவரது தனித்துவ உடல் மொழியிலான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா-2 படத்தில் லாரன்சுக்கு வில்லனாகவும் நடிக்கிறார்.
ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக வில்லன் வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளாராம்.
The post எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post “கல்யாணத்துக்கு அப்புறமும் வாய்ப்புகள் குவிகின்றன!: காஜல் மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>
ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால், அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர், “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார். அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போது பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.
ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெறுகிறது என்பதால்தான்.
இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என பதில் அளித்தார் சித்ரா லட்சுமணன்.
The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.
]]>