The post செல்வராகவனின் விஸ்வரூபத்தைக் காட்டும் ‘பகாசூரன்’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் படத் தொகுப்பு செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே., பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் டீசரும் ‘சிவ சிவாயம்…’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2 நிமிடம் 56 விநாடிகள் ஓடும் அந்த டிரைலர்… படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. சிவலிங்க பூஜையில் தொடங்கும் டிரைலரில் ஆங்காங்கே செல்வராகவன் காட்டும் ஆக்ரோஷமும், நட்டி வெளிப்படுத்தும் ஆங்காரமும் மிரட்டுகிறது. ஒருவனின் கழுத்தை திருகிப் போட்டுவிட்டு கடலை கொறித்தபடி செல்வராகவன் அசால்டாக நடந்து வரும் காட்சி அசத்தல்.
சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் அதன் பின்னணி பற்றி விசாரணை உட்பட நிகழ்கால நிஜத்தின் முகம் டிரைலரிலேயே பிரதிபலிப்பது ‘பகாசூரனை’ பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’ டிரைலர்.
படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
The post செல்வராகவனின் விஸ்வரூபத்தைக் காட்டும் ‘பகாசூரன்’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.
]]>The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பு : பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய், இசை : சத்யதேவ் உதயசங்கர், ஒளிப்பதிவு : தேவராஜ், இயக்கம் : கே.பி.தனசசேகர்.
கோடீஸ்வரர் ராம்கி 5 கோடி ரூபாய் பணத்துடன் காரில் புறப்படுகிறார். வழியில் கடை யொன்றில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க காரிலிருந்து இறங்கி செல்கிறார். அப்போது காரிலிருக்கும் பணப் பெட்டியை திருடன் திருடி செல்கிறான்.
திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டியிடம் புகார் தருகிறார் ராம்கி. பணப் பெட்டியை தேடி எஸ்டேட் முழுவதும் நட்டியும் போலீஸ் டீமும் அலைகிறது. பெட்டி ஒவ்வொருவர் கை மாறி சென்று கொண்டே இருக்கிறது. பலரும் அந்த பணத்தை ஆட்டயை போட முயல்கின்றனர். கடைசியில் பணம் ராம்கிக்கு திரும்பி வருகிறதா. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு ராம்கியை திரையில் பார்த்தாலும் அதே இளமை மாறாமலிருக்கிறார். ஆனால் அவருக்கு அதிகம் வேலையில்லை. பணத்தை பறி கொடுத்த பின் அவரது ஆன்மா பணப் பெட்டி எங்கெல்லாம் செல்கிறதோ அதன் பின்னாடி அலையும்போது இது பேய் கதையாக மாறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. நல்ல வேலையாக அப்படியெதுவும் நடக்கவில்லை.
நட்டி ஸ்டிரிக்ட்டான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் செய்யாமல் நியாயமான நடிப்பை வழங்கி கதாபாத்திரத்தை கச்சிதமாக நிறைவு செய்கிறார். ரவுடிகளுடன் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார்.
மனைவி பூனம் பாஜ்வாவுடன் பாடல் காட்சியொன்றில் நெருக்கமாக நடித்து கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறார்.
போலீஸ் ஜீப் டிரைவராக வரும் ரவி மரியா, ஹெட்கான்ஸ்டபிள் மனோபாலா காமெடி அரட்டை அடிக்கின்றனர். ரவிமரியா பாத்திரத்தில் கொஞ்சம் வில்லத்தனமும் கலந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. சஞ்சனா சிங், அஸ்மிதா கவர்ச்சி ஊறுகாய் பரிமாறுகின்றனர்.
கொடைக்கானல் எஸ்டேட்டை வளைத்து வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். சத்யதேவ் உதயசங்கரின் இசை பரவாயில்லை.
காமெடியுடன், ஒரு க்ரைம் கதையை கமர்ஷியல் மசாலா தடவி அளித்திருக்கிறார் இயக்குநர் கே.பி.தனசசேகர்.
குரு மூர்த்தி – கமர்ஷியல் காமெடி மசாலா
RATING : 2.5 / 5
The post குருமூர்த்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஒரு விஷயத்தைத் தேடி நாங்கள் இருவரும் வெவ்வேறு வழிகள்ல டிராவல் செய்வோம். அதனால் எனக்கும், அவருக்கும் குறைந்த காம்பினேஷன் காட்சிகள்தான் இருந்தன. ஸ்பாட்ல சாதாரணமாத்தான் நின்னு பேசிட்டிருப்பார். ஆனா ரோல், கேமிரா, ஆக்சன்னு சொல்லிட்டா போதும் அப்படியே பீமராஜா மாதிரி ஆயிருவார்.
ஒவ்வொரு காட்சிலேயும் அவர் நடிச்சு முடிச்சதும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். அவர் என்னைப் பார்த்து லைட்டா சிரிப்பார். அவர்கிட்ட இந்த அளவுக்கு பர்பார்மென்ஸ் இருக்குறதுனாலதான் அவர் இயக்கத்துல நடிக்கிறவங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியுதுன்னு நினைக்கிறேன்..” என்றார் நடிகர் நட்டி நட்ராஜ்.
The post “ஆக்சன்னு சொல்லிட்டா ‘பீம ராஜா’ மாதிரி ஆயிருவாரு செல்வராகவன்” – நட்டி நட்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>The post “கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்” appeared first on Touring Talkies.
]]>நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள் நிச்சயமாக இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும்விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ராம்கியும் இதில் நடித்திருக்கிறார். கார்த்திக்கை எல்லோருமே ப்ளேபாய் என்பார்கள். அது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் இந்த ராம்கியும் ஒரு பிளேபாய்தான். ஆனால் இது யாருக்கும் தெரியாது.
சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம்கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத் துறைக்கு வழங்கப்படவில்லை.
வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக் கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக் கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது..?
இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத் துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நல நிதிகூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றும் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்றார் கூறினார்.
The post “கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்” appeared first on Touring Talkies.
]]>The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். ஷலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் நகுல், நட்டி நட்ராஜ்,ஸ இயக்குநர் சி.ரங்கநாதன், இயக்குநர் P.V.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post ஜீவன் – நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘ சிக்னேச்சர்’. appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஜீவனும், நட்டி நட்ராஜும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக முன்னணி நடிகர் ஒருவரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஒளிப்பதிவு – சீனிவாசன் தயாநிதி, சண்டைப் பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – கல்யாண், தினேஷ், படத் தொகுப்பு- கலை, திரைக்கதை- பொன் பார்த்திபன், கலை இயக்கம்- மைக்கேல், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.
இத்திரைப்படத்தை ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.
நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறதுதான் இந்த ‘சிக்னேச்சர்’ படத்தின் கதைக் கரு.
இந்தப் படத்தில் சாமானிய மக்களோடு பழகி அவர்களின் ரகசிய தகவல்களைத் திருடும் கேரக்டரில் ‘திருட்டுப் பயலே’ ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடுபவராக, ’சதுரங்க வேட்டை’ நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’தான் இந்த ‘சிக்னேச்சர்’ படத்தின் திரைக்கதையின் சுவாரசியம்.
விநாயகர் சதுர்த்தியான இன்றைக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் நாயகர்கள் ஜீவன், நட்டி நட்ராஜ் இருவரும் லந்து கொண்டார்கள்.
இயக்குநர் ஹரி இந்தப் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு கிளாப் அடித்துப் படத்தைத் துவக்கி வைத்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது.
The post ஜீவன் – நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘ சிக்னேச்சர்’. appeared first on Touring Talkies.
]]>The post நட்ராஜ் – பூனம் பஜ்வா நடித்திருக்கும் ‘குரு மூர்த்தி’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நடராஜ்(எ) நட்டி நாயகனாகவும், பூனம் பஜ்வா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ராம்கி, மனோபாலா, ரவி மரியா, ‘மொட்டை’ ராஜேந்திரன். அஸ்மிதா, சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – தேவராஜ், இசை – சத்ய தேவ் உதய சங்கர், பாடல்கள் – மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன், படத் தொகுப்பு – S.N. பாசில், கலை இயக்கம் – தாகூர், நடன இயக்கம் – ராதிகா, சண்டை இயக்கம் – பயர் கார்த்திக், புகைப்படங்கள் – மதன், மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், வசனம் – கீர்த்தி வாசன், தயாரிப்பு -சிவசலபதி, சாய் சரவணன், கதை, திரைக்கதை, இயக்கம் – கே.பி.தனசேகர்.
இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.
‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான ‘குரு மூர்த்தி’ என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் அவரது பணியில் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு அது அவரது குடும்பத்திலும் தொற்றுகிறது. இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார்…? அந்தச் சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றாரா? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக இது உருவாகியிருக்கிறது.
ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும் முடிவடைந்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீலகிரி, பாண்டிச்சேரி, கேரளாவைச் சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் நடந்து முடிவடைந்திருக்கிறது.
வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்காக, படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
The post நட்ராஜ் – பூனம் பஜ்வா நடித்திருக்கும் ‘குரு மூர்த்தி’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post “புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இந்தப் படங்களை இயக்கியிருக்கிறார்கள்.
இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.
சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் இவர்களுடன் சுஹாசினியின் அம்மாவும் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
ஐந்து கதைகளிலும் நடிப்பு பரவாயில்லை.. ஆனால், சுவாரசியமில்லாத திரைக்கதையாக உள்ளது. பெரிய இயக்குநர்கள், பிரபலங்கள் என்றால்தான் அமேஸானில் இப்படி வாய்ப்பு தருவார்களா என்றெல்லாம் இணையத்தில் கமெண்ட்டுகள் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், “புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துகள். தாங்க முடியலடா சாமி. கர்ப்பமுற்றால் ஸ்பேனிஷ் பாட்டு பாடுவோம். எங்களுக்கு ஸ்பேனிஷ் தெரியுமே…
ஆகச் சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது. நீங்கள் தோல்வியுற்ற நெறிமுறைகளைப் பாருங்கள். தயவு செய்து ஒரு தலைமுறையைக் கொல்லாதீர்கள். இடம் கொடுங்கள்.. இடம் கிடைக்கும்…” என்று ‘நட்டி’ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
‘நட்டி’ நட்ராஜின் இந்த தைரியமான ட்வீட் தற்போது தமிழ்ச் சினிமா துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post “புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..! appeared first on Touring Talkies.
]]>