The post எம்.ஜி.ஆர். துரோகம் செய்துவிட்டார்!: நம்பியார் வீசிய குண்டு appeared first on Touring Talkies.
]]>‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படம் சூப்பர் ஹிட். இதற்கான வெற்றி விழாவில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சக கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்… நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று நகைச்சுவையுடன் நம்பியார் கேட்க.. கூட்டத்தில் சிரிப்பலை.
உடனே எம்.ஜி.ஆர்., ‘‘படத்தில் எனக்கு இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள்’’ என்று சிரித்தபடி பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆர் குறித்து, ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று ஒரு வார இதழில் பேட்டி கொடுத்தார் நம்பியார்.
பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பேட்டியில், ‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. என்னை கிழவனாக்கி தவிக்க விட்டு அவர் அரசியலுக்குப் போய்விட்டார். இதுதான் அவர் எனக்கு செய்த துரோகம்’’ என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் நம்பியார்.
The post எம்.ஜி.ஆர். துரோகம் செய்துவிட்டார்!: நம்பியார் வீசிய குண்டு appeared first on Touring Talkies.
]]>The post நம்பியாருக்கு அதிர்ச்சி கொடுத்த சில்க்! appeared first on Touring Talkies.
]]>“சில்க், திரையில் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை என்றாலும் அவருடைய குணம் முற்றிலும் மாறுபட்டது. யாருடனும் சகஜமாக பேசாத நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக லட்சக்கணக்கில் அப்போது அவர் சம்பாதித்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
ஒரு படத்தில் நம்பியார் வில்லனாக நடித்தார். அதில் நம்பியாரும், சில்க் ஸ்மிதாவும் நடனம் ஆடுவது போல் பாடல் காட்சி இருந்தது. ஆனால் சில்க், ‘வயதான அவருடன் ஆட விருப்பம் இல்லை. இவரை எல்லாம் இப்போது யார் நடிப்பதற்கு வர சொன்னார்கள்’ என்று அவர் முன்பாகவே பேசிவிட்டார்.
நம்பியார் கோபப்படாமல் பெருந்தன்மையாக சிரித்துவிட்டு பரவாயில்லை என்று சொன்னார்.
ஆனால் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. உடனே சில்க்கிடம், ‘முதலில் நம்பியாரிடம் மன்னிப்பு கேள். அடுத்து அவருடன் ஆடு. இல்லாவிட்டால் இனி உன்னுடன் நான் வேலை செய்ய மாட்டேன்ட என்று கோபமாக கூறினேன்.
அதன் பிறகு நம்பியாரிடம் மன்னிப்பு கேட்ட சில்க், நடனமும் ஆடினார்” என கூறியிருக்கிறார் புலியூர் சரோஜா.
The post நம்பியாருக்கு அதிர்ச்சி கொடுத்த சில்க்! appeared first on Touring Talkies.
]]>The post நம்பியாரின் உடையைப் பார்த்து டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>
படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதிக்கொண்டாலும் நிஜத்தில் நல்ல நணபர்கள். ஒருமுறை எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த ஒரு திரைப்படத்தில் நம்பியாருக்கு இளவரசர் வேடம் அளிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு அழகான ஆடை வழங்கப்பட்டது. அந்த ஆடையை அணிந்ததும் நம்பியாருக்கே மிகவும் பிடி
படப்பிடிப்பு துவங்கியது.. நம்பியாரின் உடையை பார்த்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டார். எம்.ஜி.ஆர் அணிந்திருந்த ஆடையை விட தன்னுடையை ஆடை அழகாக இருந்ததால்தான் பொறாமைப்பட்டு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என நம்பியார் நினைத்தார். மேலும், இனி அந்த உடையை நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்றும் நினைத்தார்.
இரண்டு நாட்கள் கழித்து படப்பிடிப்பு மீண்டும் நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த நம்பியாருக்கு அதே உடை அளிக்கப்பட்டது.
பிறகுதான் அவருக்கு விபரம் தெரிந்துள்ளது. ஏனெனில், நம்பியாருக்கு இளவரசர் வேடம் எனில் எம்.ஜி.ஆருக்கு அரசர் வேடம். ஆகவே நம்பியாரை விட தன் கதாபாத்திரத்துக்கு சிறந்த ஆடை வேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்திருக்கிறார்.
“எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் அந்த ஆடையை எனக்கு கொடுக்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவரிடம் இந்த நல்ல பண்பை நான் கற்றுக்கொண்டேன்” என நம்பியாரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
The post நம்பியாரின் உடையைப் பார்த்து டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.
]]>