The post கமல் ஹீரோ ஆவார் என முதன் முதல்கணித்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதில், தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து, எந்தெந்த நடிகர்கள் எப்படி அப்ரோச் செய்வார்கள், கமலுடன் சேர்ந்து நாடகம் போட்டபோது உயிருக்கு தப்பி ஓடி வந்தது… என்பது உட்பட பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனை, ஹீரோ ஆவார் என முன்னதாகவே கணித்த ஒருவரைப் பற்றியும் கூறியுள்ளார்..
அந்த நபர் யார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post கமல் ஹீரோ ஆவார் என முதன் முதல்கணித்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post சின்ன வயசிலிருந்தே விஜய் ‘அப்படி’!: சொல்கிறார் பரணி! appeared first on Touring Talkies.
]]>அவர், “எனக்கு பல இயக்குநர்கள் வாய்ப்பு அளித்தார்கள். ஆனால் சிலரது படங்களில் இசையமைக்க முடியவில்லை.
ஒரு முறை மணிரத்தினத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவர், ‘ஏ.ஆர்.ரஹ்மான்கூட பண்ணிட்டு இருக்கேன்.. நேரம் அமையும்போது சொல்கிறேன்’ என்றார்.
ஆனாலும் நான் அவரது அறைக்குள் நுழைந்தவுடன், எந்திரிச்சு நின்னு கை கொடுத்து உட்கார சொல்லிட்டு உட்கார்ந்தார்.
அவ்வளவு பெரிய மனிதர், அத்தனை மரியாதையுடன் பழகினார்” என்றார் பரணி.
மேலும் அவர், “நடிகர் விஜயை பல வருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்று அவர் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது..” என்றார்.
அதென்ன முக்கிய காரணம்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post சின்ன வயசிலிருந்தே விஜய் ‘அப்படி’!: சொல்கிறார் பரணி! appeared first on Touring Talkies.
]]>The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை பாரதிராாஜாவை சந்திக்க தனது மனைவியுடன் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இசையமைப்பாளரின் மனைவி பாரதிராஜாவிடம், “உங்க படத்துல என் கணவரை இசயமைக்கச் சொல்லாதீங்க” என்று சொல்லி இருக்கிறார்.
“கணவனுக்கு வாய்ப்பு தராதீங்க என்கிறாரே” என்று அதிர்ந்து போய்விட்டார். பிறகு, “ஏம்மா இப்படிச் சொல்றீங்க” என்றார்.
அதற்கு இசையமைப்பாளரின் மனைவி, “உங்க படத்துக்கு, இளையராஜாவின் இசைதான் சிறப்பா இருக்கு. அதனாலதான்!” என்று கூறினார்.
# கணவனுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று சொன்ன, அந்த இசையமைப்பாளரின் மனைவி யார்..
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>The post “கிண்டல் செய்கிறார்கள் என நினைத்தேன்!” – ஸ்ரீகாந்த் தேவா appeared first on Touring Talkies.
]]>இந்த விருது அறிவிக்கப்பட்டது எனக்குத் தெரியாது. நான் அன்று குடும்பத்துடன் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த தொலைபேசி அழைப்பில் நண்பர் ஒருவர், தொடர் வார்த்தைகளுடன்… வாழ்த்துக்கள் அண்ணே என்றார்.
சரியாக டவர் இல்லாததால் என்னால் அதனை கேட்க முடியவில்லை. எதற்கு என்று கேட்பதற்குள் வைத்து விட்டார். நெட்வொர்க் கிடைக்கவில்லை. அடுத்த வந்த அழைப்பிலும் அதேபோல் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எதோ மகிழ்ச்சியான விஷயம் என்று மட்டும் நினைத்தேன். உடனே நான் பாதியில் சாப்பிட்ட கையோட ரெஸ்டாரண்டின் வெளியே வந்து விட்டேன்.
அடுத்தடுத்து வந்த அழைப்புகளில் சிறந்த இசைக்காக தேசிய விருது என்பதை நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால், என்ன படத்திற்காக என்றால், அவரால் சொல்ல முடியவில்லை. கிண்டல் செய்கிறார்கள் என நினைத்தேன்.
அப்போது தான் தம்பி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து அண்ணன் ‘கருவறை’ படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது என்றார். அது 2021-ம் ஆண்டில் பண்ணிய படம் என்பது ஞாபகத்துக்கு வர `கடவுளே’ என்று அவரை நினைத்துக்கொண்டேன்” என்றார் ஸ்ரீகாந்த் தேவா.
The post “கிண்டல் செய்கிறார்கள் என நினைத்தேன்!” – ஸ்ரீகாந்த் தேவா appeared first on Touring Talkies.
]]>The post நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்! appeared first on Touring Talkies.
]]>மேலும், “நானும் கமலும் பக்கத்து பக்கத்து ஏரியாவைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் நாடகங்களுக்கு அவர் மேக் அப் போட… நான் இசையமை்பேன். அப்படி ஒரு முறை நாடகம் போட போனபோது, ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த பகுதி தாதா, எங்களை அடிக்க வந்தார். உயிருக்கு பயந்து நானும் கமலும் ஓடி வந்தோம்..” என்றார் தேவா.
# ஏன் இருவரையும், தாதா தாக்க வந்தார்.. இருவரும் தாக்குதலில் இருந்து தப்பித்தனரா?
விவரம் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post நிஜமாகவே உயிருக்குப் பயந்து ஓடிய கமல்! appeared first on Touring Talkies.
]]>The post சிவாஜி, இளையராஜாவிடம் ஒரே பழக்கம்! appeared first on Touring Talkies.
]]>அதில் அவர் பேசியதில் இருந்து..
“நடிகர் திலகம் சிவாஜிக்கு கதை சொல்ல சிரமப்பட வேண்டியதே இல்லை. இங்கே வா, அங்கே ரூம்போடு என்றெல்லாம் சொல்லவே மாட்டார். அவர் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையிலேயே கதை சொல்லலாம்.
கதையை கேட்பதோடு சரி. முதல் நாள் வசனத்தைக் கொடுத்துவிட்டால், ஹோம் ஒர்க் போல செய்வாரோ என்னவோ மறுநாள் அப்படியே உணர்ச்சிகரமாக பேசி விடுவார்.
இதே போலத்தான் இளையராஜாவும்..
அவருடன் நாங்கள் (ஏவி எம் ) இணைந்து பணியாற்றிய முதல் படம் முரட்டுக்காளை.
மறுநாள் ரெக்கார்டிங் என்றால் முதல் நாள் ஹோம் ஒர்க் செய்வார். நோட்ஸ் எழுதி வைப்பார். அவர் மட்டும்தான்.. இங்கிலீஸில் நோட்ஸ் எழுதுபவர்.
மறுநாள் கச்சிதமாக பாடல் ஒலிப்பதிவு ஆகிவிடும்” என்று தெரிவித்தார் ஏவிஎம் குமரன்.
ஏவி.எம்.குமரன் பேட்டியை முழுதுமாக பார்க்க கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..
The post சிவாஜி, இளையராஜாவிடம் ஒரே பழக்கம்! appeared first on Touring Talkies.
]]>The post ராமராஜன் ஒதுக்கிய இசை அமைப்பாளர்! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில்,‘மனசுக்கேத்த மகராசா’ என்கிற படத்தில் ராமராஜன் கமிட் ஆனார். படத்துக்கு இசையமைப்பாளர் தேவா என தயாரிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். ஆனால், இதற்கு ராமராஜன் ஒப்புக்கொள்ளவே இல்லை.
‘யார் தேவா?’ என ராமராஜன் கேட்க அவர் நிறைய பக்தி பாடல்களுக்கு இசையமைத்தவர் என சொல்ல ராமராஜன் மேலும் கடுப்பானார். ‘பக்தி பாடல்களை போடுபவர் எல்லாம் என் படத்துக்கு இசையமைப்பதா? வேண்டவே வேண்டாம்’ என மறுத்துவிட்டார். ஆனால், தேவாவிடம் மெட்டுக்கள் வாங்கி பாடல்களை பதிவு செய்து ராமராஜனிடம் போட்டு காட்ட அவருக்கு பிடித்தவிட்டது. ஆகவே அந்த படத்துக்கு மட்டுமல்ல.. அதன் பிறகு அவரது சில படங்களுக்கு தேவா இசை அமைத்தார்.
பின்னர் தேவா ‘வைகாசி பொறந்தாச்சி’ படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் வரை இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
The post ராமராஜன் ஒதுக்கிய இசை அமைப்பாளர்! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்த முதல் திரைப்படம் ரோஜா. இதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்! இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. இதில் ஒன்று, சின்ன சின்ன ஆசை பாடல். இப்பாடலை மின்மினி பாடியிருந்தார்.இந்த நிலையில் சமீபத்தில் மலையாள இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மின்மினி, “ஏற்கெனவே இளையராஜா இசையில் நான் பாடி வந்தேன். ஆனாலும் சின்ன சின்ன ஆசை பாடல் தான் எனக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி தந்தது. ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில் அந்த பாடலை பாடிய பிறகு இளையராஜா எனக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை” என்றார்.
இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இளையராஜா மீது இன்னொரு புகார்! appeared first on Touring Talkies.
]]>The post முதல் படத்தில் இமான் சந்தித்த அதிர்ச்சி! appeared first on Touring Talkies.
]]>அதில் அவர், “ நாம் சிறுவயதில் இருந்தே இசை மீது எனக்கு ஆர்வம். பள்ளி நாட்களிலேயே கீ போர்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
கோலங்கள், கல்கி திருமதி செல்வம் செல்லமே போன்ற சீரியல்களின் டைட்டில் பாடல்களை இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2001 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் தயாரான “காதலே சுவாசம்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தேன்.
படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆனால் அந்தப் படம் இன்று வரை வெளியாகவில்லை.
இதனால் என் மனம் துவண்டு போனது உண்மை. ஆனால் விரைவில், கவலையிலிருந்து விடுபட்டு மீண்டும் அதே உத்வேகத்துடன் பணி புரிய ஆரம்பித்தேன்.
2002ம் ஆண்டு பெரிய வாய்ப்பு வந்தது. விஜய் நடித்த “தமிழன்”திரைப்படம்தான் அது. அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி, திரையுலகில் எனக்கோர் இடத்தை அளித்தது” என்று சொல்லி இருக்கிறார் இமான்.
The post முதல் படத்தில் இமான் சந்தித்த அதிர்ச்சி! appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: வாரிசு appeared first on Touring Talkies.
]]>தில் ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். தமன் இசை அமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு: கேஎல் பிரவீன்.
கதை
மிகப்பெரிய கோடீஸ்வரரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள். அவர்களில் விஜய் கடைக்குட்டி. எப்போதும் பணம் பணம் என்றே ஓடும் சரத்குமாரை, விஜய்க்கு பிடிக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார். அங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். இவற்றை எல்லாம் விஜய் தீர்த்தாரா என்பது மீதிக்கதை!
விமர்சனம்:
வழக்கமான விஜய். ஆட்டம், அதிரடி சண்டை, பஞ்ச் டயலாக் என அவரது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார். அவரது அப்பாவாக வரும் சரத்குமார் வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார். பிரகாஷ்ராஜ் தனது வில்லத்தனத்தில் எப்போதும்போல முத்திரை பதிக்கிறார். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டுகிறார். நடிக்க வாய்ப்பு இல்லை.
படம் முழுதும் பிரம்மாண்டம். மிகப்பெரிய மாளிகை வீடு, பிரமிக்கவைக்கும் சுரங்கங்கள், பிரம்மாண்டமான செட்களில் பாடல்… அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தமன் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிகர்களை கவர்கின்றன.
கதைதான் நம்ப முடியாதபடி இருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் நிறுவனத்தின் சேர்மேன் யார் என்று வாக்கெடுப்பு நடக்க.. அங்கே காமெடி செய்து (கதை சொல்லி) ஜெயிக்கிறார் விஜய். பிரகாஷ் ராஜ் நடிப்பில் குறையில்லைதான். ஆனால், அவர் போடும் திட்டங்களை எல்லாம் முன்பே அறிந்து தவிடு பொடி ஆக்குகிறார் ஹீரோ விஜய். ஆகவே அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
குடும்ப பிரச்சினை என ஆரம்பித்து, தொழில் போட்டி ஆகி.. இடையில் சிறுமி கடத்தல்.. விஜய் மீட்பது என சென்று.. இறுதியில் குடும்பம் ஒன்றிணைகிறது.
“எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்” என்று மெசேஜ் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
மொத்தத்தில், விஜய் ரசிகர்கள் விரும்பும் படம்!
The post விமர்சனம்: வாரிசு appeared first on Touring Talkies.
]]>