The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.
]]>இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் காலத்தில் இருந்தது.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனதுஅரசியல் ஆளுமையை வலிமையை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி .இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற ஒரு கட்சியையும் அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எம்.வீரப்பன் அரசியல்வாதியாக வலம் வந்தது மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் , காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன் மற்றும் இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவர் எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த பொழுது கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார்.
ஆர்.எம்.வி தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷா தான். பாட்ஷா திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பதால் தான் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதாக தகவலும் உண்டு.
வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து தள்ளியிருந்தார்.பின்னர் அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் அதில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், அவரிடம், “ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா” என்று ஒரு நேயர் கேட்டார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதில் என்ன… அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=InFyHIgx88s
The post ரஜினியோடு ஜெயலலிதா நடிக்காததற்கு எம்.ஜி.ஆர் தான் காரணமா? appeared first on Touring Talkies.
]]>The post சவுகார் ஜானகி – ஜெயலலிதா பனிப்போர் காரணம் என்ன? appeared first on Touring Talkies.
]]>நேற்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலில் சில..
கமலை கே.பா அறிமுகப்படுத்தியவர் யார்?
சூர்ப்பனகை படம் வெளிவராத காரணம் என்ன ?
விஷால் பெரிய பட்ஜெட் படம் எது?
சவுகார் ஜானகி – ஜெயலலிதா மோதல் காரணம் என்ன?
வெளிநாட்டு தலைவர்களை ரஜினி சந்திக்க காரணம் என்ன?
# இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=y6qTUK_4xpE
The post சவுகார் ஜானகி – ஜெயலலிதா பனிப்போர் காரணம் என்ன? appeared first on Touring Talkies.
]]>The post கட் அவுட்டைப் பார்த்து வியந்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.
]]>அந்த நினைவுகளை லயன் ராம்குமார் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். அவர், “ஏற்காட்டுக்கு படப்பிடிப்பிற்கு வந்த ஜெயலலிதா, தன்னுடைய தாயார் சந்தியாவுடன் எங்களது தியேட்டருக்கு வந்தார். அப்போது எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ எங்களது தியேட்டரில் ஓடிக்கொண்டு இருந்தது. எம்.ஜி.ஆருக்கு 109 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து இருந்தோம்.
அந்தக் கட்-அவுட் உலகத்தில் 2-வது உயரமான கட்-அவுட் என்று ‘இல்லஸ்டடு வீக்லி’ ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டு இருந்தது. அதனைப் பார்த்த எம்.ஜி.ஆர். எங்களது தியேட்டருக்கு போன் செய்து எங்களை மனதார பாராட்டியதை மறக்க முடியாது.
தியேட்டருக்கு வந்த ஜெயலலிதா, அந்தக் கட்-அவுட்டை நேரில் பார்த்தார். பின்னர் தியேட்டரில் அமர்ந்து, என் அண்ணன் படத்தைப் பார்த்து ரசித்தார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார். சென்னையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்தது போல் இருந்ததாக எங்களிடம் கூறினார்.இன்னொன்றை இங்கு நினைவு படுத்த வேண்டும். அன்றைக்கு குளிர்சாதன வசதி செய்து இருந்ததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, தியேட்டருக்கு அழைத்து வரவேண்டாம் என அறிவிப்பே செய்து இருந்தோம்.
ஏனென்றால் முதலில் குழந்தைகளையும் அனுமதித்தோம். அப்போது சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டது. அதன்பிறகு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நாங்கள் தியேட்டருக்குள் அனுமதிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்தோம். அன்றைய நாட்களை நினைத்து பார்த்தால் இன்னமும் வியப்பாகவே இருக்கிறது’ என கூறி முடித்தார்.
The post கட் அவுட்டைப் பார்த்து வியந்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.
]]>The post சரோஜாதேவிக்கு போட்டியாக ஜெயலலிதாவை வளர்த்த சின்னப்ப தேவர்! appeared first on Touring Talkies.
]]>அதில் சரோஜாதேவியை எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி அந்தஸ்தில் இருந்து சின்னப்பா தேவர் நீக்க செய்த முயற்சிகளையும், கண்ணதாசன் அதற்கு உதவியதையும் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில், “ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி ஜோடி புகழ்பெற காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் சின்னப்ப தேவர். சரோஜாதேவி பிரபலமான பிறகு, அவரின் தாயார் ருத்ரம்மா தயாரிப்பாளர்களிடம் கறாராக நடந்துக் கொள்ள ஆரம்பித்தார். இது பிரச்சினையை ஏற்படுத்தியது.
அப்படியான சமயத்தில் சின்னப்பா தேவர் வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சரோஜாதேவியின் கால்ஷீட் கேட்க, ருத்ரம்மா மீண்டும் பிரச்சினை செய்து இருக்கிறார்.
அடுத்ததாக சின்னப்பா தேவர் நடிகை சாவித்திரியிடம் சென்று கால்ஷீட் கேட்டு வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வைத்தார்.
அடுத்தடுத்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக, ஜெயலலிதாவை தொடர்ந்து நடிக்கவைத்து, ஆஸ்தான நடிகை என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தினார்” என்று தெரிவித்தார் பத்திரிகையாளர் துரை.
The post சரோஜாதேவிக்கு போட்டியாக ஜெயலலிதாவை வளர்த்த சின்னப்ப தேவர்! appeared first on Touring Talkies.
]]>The post சந்தியா – ஜெயலலிதா: பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்திருந்த தன் மகளுக்கு அதை ஆசைஆசையாய் காட்டியபோது, தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகாக சேலைகளை தேர்வு செய்திருக்கமுடியாது என தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஜெ. “இதெல்லாம் உனக்கு தீபாவளி ஆடைகள் என அன்போடு சொன்னார். “எல்லாம் எனக்காம்மா…உனக்கு இல்லையா” என்றார் ஜெயலலிதா.
“என் வயதில் எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனிமேல் எனக்கு எதற்கு விலையுயர்ந்த ஆடைகள்…எல்லாம் உனக்காகவே வாங்கிவந்தேன்” என்றார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளவில்லையே என கோபித்துக்கொண்ட ஜெயலலிதாவை சந்தியாவால் தேற்ற முடியவில்லை. ஜெயலலிதா முடிவாக சொன்னார். “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இதில் ஒன்றைக்கூட தொடமாட்டேன்” என உறுதிபட சொன்னார். மகளின் பிடிவாதம் தெரிந்த சந்தியா வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டார். விறுவிறுவென களத்தில் இறங்கினார் ஜெயலலிதா.
வழக்கமாய் தான் துணி எடுக்கும் ராதா சில்க் எம்போரியத்துக்கு போன் செய்தவர், தன் தாயார் தனக்கு எடுத்த அதே எண்ணிக்கை அதை டிசைனில் பல மாதிரிகளில் புடவை எடுத்துவைக்கச்சொல்லிவிட்டு நேரில் அந்த கடைக்கு புறப்பட்டார்.
கடையில் தன் தாயாருக்கு தீபாவளி புடவைகளை வாங்கியவர் அதை அவரிடம் காட்டி மகிழ்ந்தார். “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள் எனக்கு?” என மீண்டும் முரண்டு பிடித்த அம்மாவை, ‘தீபாவளி தினம் வரை தினம் ஒருபுடவை கட்டிக்கோ’ என கட்டிப்பிடித்தபடி குறும்பாக கூறி சிரித்தார் ஜெயலலிதா.
இந்த ச ம்பவம் வெகு காலத்துக்கு முன், ஆனந்த விகடன் இதழில் வெளியானது.
The post சந்தியா – ஜெயலலிதா: பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயலலிதாவுக்கு நோ சொன்ன அஜித்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் அவரைத் தேடி அரசியல் வாய்ப்பு வந்தது. இதை, திரைப்பட செய்தியாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
அவர், “2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் பாராட்டு விழா நடத்தினர். அந்த கூட்டத்தில், அஜித் எழுந்து, ‘அய்யா.. இந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்கய்யா..’ என தைரியமாகச் சொன்னார். திரைத்துறையினர் அனைவருமே சொல்ல பயந்த விசயம் அது.
அஜித்தின் இந்தத் துணிவு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அதற்கு முன்பே அஜித்தின் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா, அவரது திருமண வரவேற்பில் முதல் ஆளாக கலந்துகொண்டார்.
இந்த 2010ம் ஆண்டு சம்பவத்துக்குப் பிறகு, அஜித்திடம் ஜெயலலிதா அரசியலுக்கு வருமாறு கூறினாராம். ஆனால், ‘இறுதி வரை படங்களில் நடிப்பதே என் லட்சியம். அரசியல் வேண்டாம்’ என நாசூக்காக சொல்லிவிட்டாராம்” என்றார் செய்யாறு பாலு.
The post ஜெயலலிதாவுக்கு நோ சொன்ன அஜித்! appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…! appeared first on Touring Talkies.
]]>அதை தவிர்க்க இவருடன் நடிக்க வரும் நடிகைகளிடம் ஐந்தாண்டு அக்ரிமெண்ட் வாங்கி கொண்டார் எம்.ஜி.ஆர் .அப்படி நடிக்க வந்த நடிகைகள் பலர் உண்டு. குறிப்பிட்டு சொல்வதென்றால் லதா,மஞ்சுளா,ஜெயலலிதா போன்றோர்.
நடிகை லதா அக்ரிமெண்ட் முடியும் வரை எம்.ஜி.ஆர்.படத்தை தவிர வேறு யாருடனும் நடிக்க வில்லை. ஆனால் மஞ்சுளா அப்படியில்லை. ஏனென்றால் அக்ரிமென்டில் கை எழுத்தை அவருக்கு பதில் மஞ்சுளா அம்மா போட்டுள்ளார்.
அதையே காரணம் காட்டி மஞ்சுளா மற்ற படங்களில் நடிக்க சென்றுவிட்டார். எம்.ஜி.ஆர்.கேட்டபோது அம்மா போட்ட கை எழுத்துக்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறிவிட்டாராம்.
The post எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…! appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி நடிப்பை பாராட்டிய ஜெயலலிதா appeared first on Touring Talkies.
]]>அவர், “அத்திரைப்படத்தில் நாயகி விஜயசாந்தியின் கதாபாத்திரம் ஆதிக்க உணர்வு உள்ள பெண்ணாக உருவாக்கப்பட்டு இருக்கும். இது ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதையடுத்து தயாரிப்பு தரப்பினர், படத்தை ஜெயலலிதாவுக்கு திரையிட்டு காண்பித்தனர்.
படத்தைப் பார்த்த அவர் ரஜினி, விஜயசாந்தி இருவரது நடிப்பையும் பாராட்டினார். படத்தை ரசித்தார். அதன் பிறகே படக்குழுவினருக்கு நிம்மதி ஏற்பட்டது” என்றார்.
The post ரஜினி நடிப்பை பாராட்டிய ஜெயலலிதா appeared first on Touring Talkies.
]]>The post ரவிச்சந்திரன் குறித்து ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அரசியல்வாதி ஜெயலலிதா வெளிப்படையாக, தைரியமாக பேசுவார். செயல்பாடுகளும் அப்படித்தான். இது அனைவருக்கும் தெரியும்.
திரைத்துறையில் இருந்தபோதும் அவரது குணம் இப்படித்தான்.
பொதுவாக சக நடிகர்கள் குறித்து கருத்து கேட்டால், நடிகைகள் பதில் சொல்ல மாட்டார்கள்.. அல்லது மழுப்பி தப்பித்து விடுவார்கள். ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல.
ஒருமுறை செய்தியாளர், “உங்களுடன் நடித்த ரவிச்சந்திரன் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார்.
அதற்கு ஜெயலலிதா பட்டென்று, “ரவிச்சந்திரனுக்கு பல ப்ளஸ் பாயிண்ட்டுகள் உண்டு. கதாநாயகனுக்கான தோற்றம், நடிப்பு, நடனம் எல்லாம் அவருக்கு உண்டு. அவர் என்னுடன் பல திரைப்படங்களில் நடிக்கும்போது இதை கவனித்து இருக்கிறேன்.
ஆனால் முதல் திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் காணாமல் போய்விட்டது. அவர் மட்டும் அதே ஆர்வத்தைத் தொடர்ந்திருந்தால், இன்னும் உச்சத்தை தொட்டிருப்பார்” என்றார்.
அப்படி ஒரு அதிரடி பெண்மணியாகவே விளங்கினார் ஜெயலலிதா.
The post ரவிச்சந்திரன் குறித்து ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>