The post ஜெய்சங்கர் முன்யோசனை! நெகிழ்ந்த உதவியாளர்! appeared first on Touring Talkies.
]]>அவரிடம் ஜெய்சங்கர், “ஆயுள் காப்பீடு அதிகாரி ஒருரிடம் உன்னைப் பற்றி சொல்லி இருக்கிறேன். அவரிடம் சென்று எல்.ஐ.சி. ஏஜெண்ட் அப்ளிகேசன் வாங்கிட்டு வா” என்றார்.
உதவியாளருக்கு வருத்தமாக போய்விட்டது. “நான் சிறப்பாகத்தானே பணிபுரிகிறேன். என்னை வேலையை விட்டு ஏன் நீக்க நினைக்கிறீர்கள்” என்று சோகத்துடன் கேட்டார்.
அதற்கு ஜெய்சங்கர், “எனக்கு எப்போதுமே மார்க்கெட் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் நான் வாழ்ந்துவிடுவேன். உனக்கு சேமிப்பு இருக்காது. திடீரென எனக்கு வாய்ப்பு குறைந்தால் உன்னையும் பாதிக்கும். ஆகவே எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக இருந்துகொண்டே என்னிடமும் பணியாற்று. எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி பாலிசி போட வைக்கிறேன். உனக்கு இரட்டை வருமானம் கிடைக்கும்” என்றார்.
இதைக் கேட்ட உதவியாளர் நெகிழ்ந்துவிட்டார்.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=EVORwJ1Ez2o
The post ஜெய்சங்கர் முன்யோசனை! நெகிழ்ந்த உதவியாளர்! appeared first on Touring Talkies.
]]>The post ரயிலை தவறவிட்டு சினிமாவைப் பிடித்த ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>இவர் குறித்து பலரும் அறியாத தகவல் ஒன்றை இவரது மகன் சஞ்சய் சங்கர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்:
“என் அப்பா சட்டம் பயின்றவர். அதற்கேற்ப மத்திய அரசின் உயர் பதவி டில்லியில் அவருக்குக் கிடைத்தது. ஆனாலும் நடிப்பின் மீது அவருக்கு ஈடுபாடு உண்டு. துக்ளக் சோ நடத்திய நாடங்களில் அப்பா நடித்து உள்ளார்.
டில்லி வேலைக்காக டிரெய்ன் டிக்கெட் எல்லாம் புக் செய்து, வீட்டில் இருந்து பெட்டிப் படுக்கையோடு கிளம்பத் தயாரானார் என் அப்பா.
அந்த நேரத்தில் ஒரு போன்.
இரவும் பகலும் என்ற படத்தில் நடிக்க வாாய்ப்பு இருக்கிறது வர முடியுமா.. என்பதுதான் போனில் வந்த செய்தி.
அந்தக் காலத்தில்.. ஏன் இப்போதுமே மத்திய அரசு பதவி என்றால் தனி மரியாதைதான். ஆனாலும் அப்பா, அந்த பணியை நிராகரித்து, சினிமாவில் நடித்தார்..” என்றார் சஞ்சய் சங்கர்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post ரயிலை தவறவிட்டு சினிமாவைப் பிடித்த ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>The post 20 வருட காமெடி..மீண்டும் ரஜினி படத்தில்! appeared first on Touring Talkies.
]]>ஆம்…
கோமல் சுவாமிநாதன் எழுதிய நாடகத்தை தழுவி நவாப் நாற்காலி படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த இப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.படத்தில் ஒரு காட்சியில் விசிட்டிங் கார்டில் நேசமணி பொன்னையா என்ற பெயரில் இருக்கும். அதை ரமா பிரபா, நாசமா நீ போனியா என்று வாசிப்பார்.
இதே காமெடியை காமெடியை 20 வருடங்கள் கழித்து 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் பேசி இருப்பார்.
The post 20 வருட காமெடி..மீண்டும் ரஜினி படத்தில்! appeared first on Touring Talkies.
]]>The post நிஜ ஹீரோ ஜெய்சங்கர்! மறக்கமுடியாத அந்த சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>“ஜெய்சங்கர் எப்போது, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக வந்து விடுவார். அனைவரிடமும் எந்தவித ஈகோவும் இன்றி ஜாலியாக பேசுவார். உடன் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களோடும் அமர்ந்து சாப்பிடுவார். ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்த பிறகு மழை வந்ததால் படப்பிடிப்பு கேன்சல் ஆனது. மழை நின்றவுடன் கிளம்பலாம் என அனைவரும் காத்திருந்தனர்.
ஒருவழியாக மழை விட்டது. அந்த இடம் முழுதும் சிறு வெள்ளம்போல் தண்ணீர் தேங்கி இருந்தது.‘நாளை படப்பிடிப்பை தொடரலாம்’ என அறிவிக்கப்பட எல்லோரும் புறப்பட தயாரானார்கள்.
ஜெய்சங்கரோ, ‘வாங்க.. படப்பிடிப்பை தொடருவோம்’ என்று கூறி, தேங்கிய மழை நீரை ஒரு வாளியை எடுத்து தண்ணீரை இரைத்து ஊற்றினார்.
இதைப் பார்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு ஹீரோவே, இப்படி களத்தில் இறங்கி விட்டார் நாம் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதா என்று கூறி அங்கிருந்த தண்ணீரை இரைத்து வெளியில் ஊற்றினர். இதனால் நின்றுபோன படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
The post நிஜ ஹீரோ ஜெய்சங்கர்! மறக்கமுடியாத அந்த சம்பவம்! appeared first on Touring Talkies.
]]>The post ஜெய்சங்கர் இறுதிக்காரியத்துக்கு செல்லாத ரஜினி! appeared first on Touring Talkies.
]]>ரஜினி நடித்த தளபதி திரைப்படத்தில் ஏறக்குறைய அவரின் அப்பா வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருப்பார். அதுதான் ஜெய்சங்கருடன் ரஜினி நடித்த கடைசி திரைப்படம். இவர் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார்.
ஆனால் நெருங்கிய நண்பராக இருந்தும் அவரின் இறுதிகாரியத்துக்கு ரஜினி செல்லவே இல்லை.
இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், ஜெய்சங்கரின் மரணசெய்தியை கேள்விப்பட்டதும் அவரின் மகனை தொலைப்பேசியில் அழைத்த ரஜினி ‘நான் வீட்டிற்கு வரும்போது ஸ்டைலாக ஹாய் ஹாய் என சிரித்த முகத்துடன் உன் அப்பா என்னை வரவேற்பார். தற்போது அவரது உடலை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. எனவே, நான் வரமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்’ என சொல்லி இருந்தார்.
இந்த தகவலை ஜெய்சங்கரின் மகன் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார்.
The post ஜெய்சங்கர் இறுதிக்காரியத்துக்கு செல்லாத ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post கமல் நடிகராக காரணம் ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>அதே நேரம், நாயகனாக நடிப்பதற்கு முன், இடைப்பட்ட காலத்தில் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெய்சங்கர், சிவாஜி என பல நடிகர்களுக்கு நடனம் சொல்லி கொடுத்தவர் கமல்.
ஒருமுறை ஜெய்சங்கர் நடிக்கும் படத்தில் கமல் பணிபுரிந்தார். அப்போது ஜெய்சங்கர் ‘திரைக்கு பின்னாலேயே இருக்காதே.. நீ நல்ல நடிகன். திரைப்படத்தில் நடி’ என ஆலோசனை கூறினார்.
இந்த நிலையில்தான், நடிப்பதற்காக இயக்குநர் கே.பாலசந்தர் கமலை அழைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார். ஆக, கமல் நடிராக வந்ததற்க ஜெய்சங்கர் முக்கிய காரணம்.
இதை கமலே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
The post கமல் நடிகராக காரணம் ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>The post வாழ்நாள் முழுதும் அதை கடைப்பிடித்த ஜெய்சங்கர்..! appeared first on Touring Talkies.
]]>ஒருகட்டத்தில் அவர் பொருளாதாரத்தில் நலிந்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதை அறிந்த ஜெய்சங்கர், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவருக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தார்.
ஜோசப் வீட்டிற்கு சென்று, ‘உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய விரும்புகிறேன்’ என்றார்.
அவரோ, ‘எனக்கு எந்த உதவியும் தேவையில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். உனக்கு உதவ வேண்டுமெனில் என்னுடன் வா’ என்றவர், ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஜெய்சங்கரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு உதவினார். அன்று மட்டுமல்ல.. தனது வாழ்வில் நடந்த எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் அந்த கருணை இல்லத்தில்தான் நடத்தினார் ஜெய்சங்கர்.
அதுமட்டுமல்ல.. எங்கெல்லாம் படப்பிடிப்பு செல்கிறாரோ அங்கு எதாவது ‘கருணை இல்லம்’ இருக்கிறதா என விசாரித்து அங்கு சென்றும் உதவி வந்தார்.
The post வாழ்நாள் முழுதும் அதை கடைப்பிடித்த ஜெய்சங்கர்..! appeared first on Touring Talkies.
]]>The post என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran Part_2 appeared first on Touring Talkies.
]]>