The post துல்கர் சல்மான் யாருடைய ரசிகர் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இதுவரை காதல் படங்களில் நடித்து வந்த துல்கள், இப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக தோன்றுகிறார்.
இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் பிரமோஷனில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ரஜினியின் ஜெயிலர் படத்தை பாராட்டியதோடு, , ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜெயிலரின் 1 சதவிகித ரசிகர்களை கவர்ந்தாலும் கிங் ஆஃப் கோதா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.
தானும் ஒரிஜினல் சென்னை பையன்தான் என்று கூறியுள்ள துல்கர் சல்மான், சென்னையில்தான் தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் வழக்கமாக சென்னையின் சத்யம் சினிமாஸ் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் படங்களை பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன் என்பதையும் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார்.
The post துல்கர் சல்மான் யாருடைய ரசிகர் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ”நாய் மாதிரி துரத்துறாங்க” : விஜய் ரசிகைகள் வேதனை appeared first on Touring Talkies.
]]>அப்போது விஜய்யை பார்க்க காத்திருந்த தாங்கள், விரட்டப்பட்டதாக புகார் தெரிவித்து உள்ளனர். அவர்கள், “விஜய்யை பார்க்க வேண்டும் என்கிற ஆசையால் வந்ததோம். உள்ளே விடமாட்டோம் என சொல்லியிருந்தாலே தாங்கள் திரும்பி சென்றிருப்போம். ஆனால் எங்களை நாயை அடிப்பது போல விரட்டியடிக்கிறாங்க” என்று வேதனை தெரிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ”நாய் மாதிரி துரத்துறாங்க” : விஜய் ரசிகைகள் வேதனை appeared first on Touring Talkies.
]]>The post மாரி செல்வராஜை விளாசும் கமல் ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “தேவர் மகன் படத்தில் வந்த இசக்கி என்ற கேரக்டர் தான் மாமன்னன். நான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் இந்த 3 படங்கள் பண்ணுவதற்கு முன்பாகவும் ஒவ்வொரு முறையும் தேவர்மகன் படத்தை பார்த்துதான் திரைக்கதை அமைத்தேன்.
தேவர்மகன் படத்தில் பெரிய தேவர் சின்ன தேவர் என்ற கேரக்டருக்கு இடையில் எனது அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த மாமன்னன் படம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் சாதி வெறியை ஏற்படுத்திய படம் தான் தேவர்மகன் என்பது போல் மாரி செல்வராஜ் பேசியிருந்ததார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் வைத்து சாதி பெருமையை வளர்த்துவிட்டதால் இசக்கி போன்ற ஆட்கள் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்தனை நாள் கழித்து, மாரி செல்வராஜ் பேச்சு, கமலை அசிங்கப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அவர்கள், “தேவர் மகன் படம் மட்டுமே சாதிய மோதலையும் சாதி வெறியையும் தூண்டுவதாக பேசுவது அரவேக்காட்டுத்தமான பேச்சு. நீங்க மாறுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது என்று பரியேறும் பெருமாள் படத்தினால் எல்லாரும் திருச்திட்டாங்களா” என்ற கேள்வியை கமல் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ் “அந்த படத்தில் அப்பா அந்த பெண்ணை பாதுகாக்க மட்டுமே செய்வார். தப்பு பண்ணது அவன் நீ ஏன் பயப்படனும் என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கமல் ரசிகர்கள், “அந்த படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் ரீமேக் என்பது கூட மாரி செல்வராஜூக்கு தெரியவில்லையா? ரீமேக் படத்தில் கதையை எப்படி மாற்ற முடியும் என்று ஆரம்பத்தில் இருந்தே கமல் மீதான மாரி செல்வராஜூன் வெறுப்பு” என விமர்சித்து வருகின்றனர்.
The post மாரி செல்வராஜை விளாசும் கமல் ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>The post “தனியா வா பேசலாம்!”: ரசிகருக்கு ஷாக் கொடுத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.
]]>அவப்போது ரசிகர் ஒருவர், “னிமாவில் வெற்றி பெறுவது போல உங்கள் காதல் ஏன் நிஜத்தில் வெற்றி பெறுவதில்லையே?” என கேள்வியெழுப்பினார்.
அதற்கு சித்தார்த், “இதைப் பற்றி நான் ஒரு முறை கூட யோசித்ததில்லை. ஆனால் உங்களுக்கு என் காதல் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை உள்ளது போல இருக்கிறது.
இங்கிருக்கும் அனைவரும் டக்கர் படம் குறித்து தெரிந்து கொள்ள வந்துள்ளனர். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். அதனால், இதுகுறித்த நாம் இருவரும் தனியாக சென்று உரையாடலாம்” என கிண்டலாக பதில் அளிக்க, அந்த ரசிகர் அமைதியாகிவிட்டார்.
The post “தனியா வா பேசலாம்!”: ரசிகருக்கு ஷாக் கொடுத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.
]]>The post “ அதுக்கு நான் ஒர்த் இல்லே..!”: ரசிகைக்கு சல்மான்கான்பதில் ! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் துபாயில் பட விழா நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்க சென்ற சல்மான்கானிடம் ஒரு ரசிகை, “உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
அதற்கு சல்மான்கான், “எனக்கு திருமண வயது கடந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை நீங்கள் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று பதில் அளித்துள்ளார். . இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
The post “ அதுக்கு நான் ஒர்த் இல்லே..!”: ரசிகைக்கு சல்மான்கான்பதில் ! appeared first on Touring Talkies.
]]>The post “ஐஸ்வர்யா ராய்…!”: உணர்ச்சிவசப்பட்ட ஜெயம் ரவி! appeared first on Touring Talkies.
]]>ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் மெழுகுச் சிலை போன்று காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் கை கோர்த்து நடந்து வந்த ஐஸ்வர்யா ராய் தெரியாமல் அவர் மீது உரசி விட்டார். இதையடுத்து சந்தோஷத்தில் ஹய்யா என்று உணர்ச்சிவசப்பட்டார் ஜெயம் ரவி. அதை பார்த்து ஐஸ்வர்யா ராய் சிரித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஐதராபாத் நிகழ்வின் தருணங்களை உள்ளடக்கிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ள ஜெயம் ரவி, “நான் பாதி தமிழ், பாதி தெலுங்கு. ஆனால், நான் 100 சதவீதம் ஐஸ்வர்யா ராயின் ரசிகன்” என குறிப்பிட்டு உள்ளார்.
The post “ஐஸ்வர்யா ராய்…!”: உணர்ச்சிவசப்பட்ட ஜெயம் ரவி! appeared first on Touring Talkies.
]]>The post குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று, “விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் தன்னை பார்க்க வருமாறு கேட்ட குட்டி ரசிகையுடன் நடிகர் விஜய் இன்று வீடியோ காலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது.
The post குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்! appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி! appeared first on Touring Talkies.
]]>இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு ரசிகை வாலிக்கு தினமும் கடிதங்கள் எழுதி வந்தாராம். அந்த கடிதத்தில், “நான் மைலாப்பூரைச் சேர்ந்த பெண், நான் உங்களை சந்திக்க வேண்டும்” என தொடர்ந்து எழுதி வந்தாராம்.
ஒரு நாள் வாலி, “நாளை என்னை நீங்கள் சந்திக்க வரலாம்” என்று பதில் கடிதம் எழுதினாராம். அதற்கு அடுத்த நாள் அந்த கடிதத்தை கையில் வைத்திருந்தவாறு அந்த பெண் வாலியை பார்க்க வந்தாராம். அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம்.
சில நாட்களில் அவர்கள் மிகவும் நட்போடு பழகத் தொடங்கினர். அதனை தொடர்ந்து அந்த நட்பு காதலாகி மாறியது. அதன் பின் வாலி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் ரமணி திலகம். இவ்வாறு தன்னுடைய ரசிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் வாலி.
The post எம்.ஜி.ஆர் பாடலால் வாலிக்கு கிடைத்த காதலி! appeared first on Touring Talkies.
]]>The post ‘சின்னக்குயில்’ சித்ரா, யார் ரசிகர் என தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இதை சித்ராவே தெரிவித்து உள்ளார்.
‘திண்டுக்கல் சாரதி’ படத்தில், ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான அந்தோணி தாசன், தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம், பாண்டிநாடு, குக்கூ உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை அளித்தார்: அவியல் மற்றும் எம்ஜிஆர் மகன் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றினார்.
அவர் தற்போது புதிய இசை நிறுவனத்தை துவக்கி உள்ளார். இதற்கான விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி, பாடகி சின்னக்குயில் சித்ரா, கிராமிய பாடகி ‘கிடக்குழி’ மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ‘சின்னக்குயில்’ சித்ரா, “அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன்” என்றார்
The post ‘சின்னக்குயில்’ சித்ரா, யார் ரசிகர் என தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post மறக்க முடியாத அந்த ரசிகர்!: நடிகை சயானி appeared first on Touring Talkies.
]]>கொல்கத்தாவை சேர்ந்த சயானி பிரதன், மாடலிங் துறையில் ஈடுபட்டு பிறகு திரையுலகுக்கு வந்தவர். அதனாலோ என்னவோ, தனது கவர்ச்சிப் படங்களை, வித்தியாசமான கேமரா கோணங்களில் எடுத்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், “இன்ஸ்டா கிராமில் நான் வெளியிடும் படங்களை பலரும் ரசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு ரசிகரை மறக்கவே முடியாது. டில்லியைச் சேர்ந்த அவர், எனக்கு கொரியரில் ஒரு சுடிதார் அனுப்பினார். ‘உங்களுக்கு இந்த ஆடை மிகவும் பொருத்தமாக இருக்கும்’ என்றும் எழுதி இருந்தார்.
அட இப்படியும் ஒரு ரசிகரா என்று ஆச்சரியப்படு, கொரியரில் இருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தேன். ஆனால் அந்த எண் எடுக்கவில்லை. இன்று வரை அவர் யார் என தெரியவில்லை. ஆனாலும் அவரது அன்மை மறக்க முடியவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார் சயானி.
The post மறக்க முடியாத அந்த ரசிகர்!: நடிகை சயானி appeared first on Touring Talkies.
]]>