The post “பேரம் பேசுவேன்”: ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.
]]>அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க… ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு…’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.
The post “பேரம் பேசுவேன்”: ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.
]]>The post 30 சீன்.. கத்தையாக பணம் கொடுத்த பாரதிராஜா!: கலைஞானத்தின் அனுபவம் appeared first on Touring Talkies.
]]>அதில் ஒரு அனுபவம்..
நெல்லையில் கண்ணன் என்பவர் இருபது நிமிட நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். ஊரில் பஞ்சாயத்து நடக்கிறது.. ஒருத்தனை இருன்னொருவன் சாதியைச் சொல்லி திட்டிவிட்டான்.. இதனால் சாதிச் சண்டை மூள்கிறது.. நாடகத்தின் முடிவில்… சாதிகள் இல்லையடி பாப்பா.. என்ற பாரதி பாடல் ஒலிக்கிறது.
இதுதான் நாடகம். மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நாடகத்தைப் பார்த்த பாரதிராஜா, இதைத் திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டார். பலரிடமும் கதையைச் சொல்லி, முழு நீள சினிமாவுக்கு காட்சிகள் அமைக்கச் சொன்னார். ஆனால், ‘இருபது நிமிட நாடகத்தை எப்படி முழு நீள சினிமாக எடுக்க முடியும்’ என தயங்கி ஒதுங்கினர்.
இந்த நிலையில், கலைஞானத்திடம் கதையைச் சொன்னார் பாரதிராஜா. அவர், ‘ஓட்டலில் எனக்கு ரூம் போடுங்கள். இரண்டு இட்லி வாங்கிக் கொடுங்கள். பசிக்கும்போது சாப்பிடுகிறேன். நாளை காலை பதினோரு மணிக்கு வாருங்கள். முழு நீள திரைப்படத்துக்கான காட்சிகள் தயாராக இருக்கும்’ என்றார் கலைஞானம்.
பாரதிராஜாவும் கிளம்பிச் சென்றார். மறுநாள் பதினோரு மணிக்கு வந்தார்.
முப்பது காட்சிகள் தயாராக இருந்தன. ஆச்சரியப்பட்ட பாரதிராஜா, தனது கைப்பையில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து கலைஞானத்திடம் கொடுத்தார்.
அதோடு, ‘கணக்கு பார்க்கலை.. உன் அறிவுக்கு இந்த மரியாதேயே குறைவு’ எனநெகிழ்ந்து சொன்னார்.
அப்படி உருவான படம்தான், வேதம் புதிது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post 30 சீன்.. கத்தையாக பணம் கொடுத்த பாரதிராஜா!: கலைஞானத்தின் அனுபவம் appeared first on Touring Talkies.
]]>The post தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>இளையராஜா, கங்கை அமரன், சங்கர் – கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பலரது இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள கே.எஸ்.சித்ரா 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலை பாடியுள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கே.எஸ் சித்ரா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “நான் பாடகியாக வந்த புதிதில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல ஐடியாக்கள் கொடுத்தார்கள். பாடும்போது நான் தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி அடுத்த பாடலில் அதை திருத்திக்கொள் என்று சொல்வார்கள்.
அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலை முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தேவா சார் சாந்தமானவர். அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் மாற்றி தர முடியுமா சார் ரொம்ப வல்கரா இருக்கு என்று சொன்னேன்.
அவரும் சரிமா நான் ட்ரை பண்றேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம். இன்னொரு நான் நான் சொல்றேன் நீங்க கிளம்புங்க என்று சொன்னார். அதன்பிறகு என்னை கூப்பிடவே இல்லை.
சில நாட்களுக்கு பிறகு இளையராஜா சார் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அழைத்து தேவா சார் ஸ்டூடியோவில் பாட முடியாது என்று சொன்னாயா என்று கேட்டார்.
ஆமாம் சார் வரிகள் கொஞம்சம் வல்கரா இருந்துச்சு அதான் என்று சொன்னேன். அதற்கு அவர், அதையெல்லம் நீங்க ஏன் பாக்குறீங்க. உங்க வேலை பாடுவது மட்டும் தான். எந்த கவிஞரும் வேண்டுமென்றே அவ்வாறு எழுதமாட்டார்கள். கதைக்கு தேவையானதை தான் எழுதுவார்கள். அவர்களின் எழுத்துக்கு குரல் கொடுப்பது தான் உன் வேலை” என்று சொன்னார். அப்போது தான் நான் தவறு செய்தது புரிந்தது என்று கூறியுள்ளார்.
The post தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா! appeared first on Touring Talkies.
]]>The post “மோசமான டைரக்டர்கள்!”: விசித்திரா ஆதங்கம்! appeared first on Touring Talkies.
]]>அதிலும் எங்களை படங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்காகவே அழைப்பார்கள். ஆனால் அதை நேருக்கு நேராகவே சொல்லாமல், கேரக்டர் இருக்கக்கூடிய கதாபாத்திரம் தான் என நம்ப வைப்பார்கள். அங்கு போய் பார்த்தால் தான் தெரியும் ஐட்டம் பாடல் இருக்கக்கூடிய முதல் சீனிலும், கடைசி சீனிலும் மட்டுமே இருப்போம். நான் ஐட்டம் நடிகையாக நடிக்க தயார், ஆனால் அந்த கேரக்டருக்கு என்றே படத்தில் ஒரு சில காட்சிகளை கொடுக்கலாம்.
வெறும் பொம்மை மாதிரி வந்து ஆடிட்டு மட்டும் போவதற்காக தான் கவர்ச்சி நடிகைகளை பயன்படுத்துகின்றனர். இப்படி எல்லாம் செய்தவர்கள், அந்த காலகட்டத்தில் முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பது தான் காலக்கொடுமை. சினிமாவில் ஹீரோ உடன் கிளாமர் ஆர்டிஸ்ட் ஆக இணைந்து ஆடுவோம், அந்தப் பாடல் முடிந்தபின் அவர் எங்களை அறைந்து விட்டு கிளம்பி விடுவார் இதுதான் நடக்கும்’ என்று நடிகை விசித்ரா வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.
The post “மோசமான டைரக்டர்கள்!”: விசித்திரா ஆதங்கம்! appeared first on Touring Talkies.
]]>The post “ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்! appeared first on Touring Talkies.
]]>தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
“ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.
ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது” என்று கூறியுள்ளார்.
அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம்.
The post “ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்! appeared first on Touring Talkies.
]]>The post “விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>காட்சியில் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றேன். விஜய்யுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது” என்றார்.
The post “விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.
]]>