The post ரஜினி படத்தை இயக்குகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்? appeared first on Touring Talkies.
]]>தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இதுவரை அறுபது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கவனத்தை ஈர்த்து உள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து, சோசியல் மீடியாவில் பலரும், “வெற்றி பெற்ற பட இயக்குநர்களை ரஜினி சந்திப்பதும், பிறகு தனது படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பதும் வழக்கம். ஆகவே லோகேஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்குப் பிறகு அவரது படத்தை ஆதிக் இயக்குவார்” என பகிர்ந்து வருகிறார்கள்
The post ரஜினி படத்தை இயக்குகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்? appeared first on Touring Talkies.
]]>The post ஜெயம் ரவி இயக்க விரும்பும் ஹீரோ விஜய் சேதுபதி! appeared first on Touring Talkies.
]]>இறைவன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றன.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் ஜெயம் ரவி பேசும்போது படம் குறித்தும், தனது அண்ணன் ராஜா குறித்தும் பேசினார். “இந்த படம் பயங்கர டெரராக இருக்கும். ஆகவே குழந்தைகளை அழைத்து வராதீர்கள்” என்று வேண்டுகோளும் வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்” என்று கூறினார்.
இறைவன் திரைப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
The post ஜெயம் ரவி இயக்க விரும்பும் ஹீரோ விஜய் சேதுபதி! appeared first on Touring Talkies.
]]>The post ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! appeared first on Touring Talkies.
]]>இப்படத்துக்கு முன்னதாக ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இப்படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முருகதாஸை டேக் செய்து கூறியிருப்பதாவது: எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”- இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
The post ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! appeared first on Touring Talkies.
]]>The post “டைரக்ட் பண்ண மாட்டேன்!”: தயாரிப்பாளரிடமே சொன்ன இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>தித்திக்குதே படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளர், ஒரு படத்தை இயக்க வாய்ப்பு அளித்தார். ஆனால் இயக்குநர் கனவுடனே இருந்த பிருந்தா சாரதி அந்த வாய்ப்பை மறுத்தார். தயாரிப்பாளர் எடுத்துச் சொல்லியும் பிருந்தா சம்மதிக்கவில்லை.
வாய்ப்பு கிடைக்க பலரும் குட்டிக்கரணம் போடும் நிலையில், வந்த வாய்ப்பை ஏன் மறுத்தார்.. அதன் பின்னணி என்ன..
அவரே சொல்கிறார்..
# அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “டைரக்ட் பண்ண மாட்டேன்!”: தயாரிப்பாளரிடமே சொன்ன இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post “பகத்பாசிலை வைத்து படம் இயக்குவேன்!”: மோகன் ஜி ஆவேசம்! appeared first on Touring Talkies.
]]>இவற்றில், திரவுபதி, ருத்ரதாண்டவம் ஆகியவற்றை, ‘ ஜாதி ரீதியானவை’ என்று சிலர் விமர்சிக்கவும் செய்தனர். அடுத்து வெளியான, ‘ருத்ரதாண்டவம்’ படம், செல்போன் மூலமாக ஏற்படும் ஆபத்தைச் சொன்னது. இதற்கும் சிலர் சாதி முத்திரை குத்தினர். இதற்கு மோகன் ஜி, கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் பகத்பாசில், அதிகார வெறியராக நடித்தார். தனது அதிகாரத்தை நிலைநாட்ட தனது கட்சியைச் சேர்ந்தவர்கள், தனது சாதியைச் சேர்ந்தவர்களையே கொல்லும் அவரது கதாபாத்திரம் அதிரவைத்தது.
ஆனால் அவர் நடித்த காட்சிக்கு, சாதி ரீதியான பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு சிலர் சமூகவலைதளத்தில் பரப்பினர்.
இந்நிலையில் பகத்பாசில் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் பட புகைப்படத்தை வைத்தார். இது சர்ச்சையாகவே, அந்த படத்தை நீக்கினார்.
இந்நிலையில் வாரமிருமுறை இதழில், ‘மோகன் ஜி, பஹத் பாஸிலை சந்தித்து கதை சொன்னார். அதிலும் மாமன்னன் ரத்தினவேல் போன்ற கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடிக்க வேண்டும் என்றார். இதையடுத்தே தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்த மாமன்னன் டிபி படத்தை பகத்பாசில் நீக்கினார்’ என்று செய்தி வெளியானது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மோகன் ஜி, ‘மானங்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டரே, இந்த செய்தி உண்மையில்லை என்று எழுதி இருப்பதை ஏன் புகைப்படத்தில் போடவில்லை. நீங்கள் ஜாதி வெறியுடன் படங்களுக்கு மார்க் போடுவீர்கள் என்று தெரியும், இப்போது ஜாதி வெறியோடு செய்திகளையும் போடுகிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால், நிச்சயமா பஹத் பாஸிலுடன் ஒரு படத்தை எடுத்து அதை செய்தியாக இந்த பத்திரிகையில் வரவைப்போம்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
The post “பகத்பாசிலை வைத்து படம் இயக்குவேன்!”: மோகன் ஜி ஆவேசம்! appeared first on Touring Talkies.
]]>The post 50-வது படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ்! appeared first on Touring Talkies.
]]>எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் தனுஷுக்கு சகோதரர்களாக நடிப்பதாகவும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. வட சென்னை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் மோதல் கதையம்சம் கொண்ட படம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் .
The post 50-வது படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ்! appeared first on Touring Talkies.
]]>The post மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கும் அட்லி! appeared first on Touring Talkies.
]]>ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை முடித்ததும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்ததும் மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் முராத் கெடானி தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
The post மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்கும் அட்லி! appeared first on Touring Talkies.
]]>