The post வெண்ணிறாடை நிர்மலாவை நெகிழ வைத்த ஹீரோ! appeared first on Touring Talkies.
]]>படத்தின் ஹீரோ கடும் கோபமாகிவிட்டார். இருவருக்கும் மோதல்!
ஆனால் அந்த ஹீரோவே ஒரு கட்டத்தில் நிர்மலாவை நெகிழ வைத்தார்.
நிர்மலா ஏன் தாமதமாக வந்தார்.. பிறகு அரை ஹீரோ எப்படி நெகிழ வைத்தார்.. அந்த ஹீரோ யார்..
The post வெண்ணிறாடை நிர்மலாவை நெகிழ வைத்த ஹீரோ! appeared first on Touring Talkies.
]]>The post அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம். கல்லூரி வாசல் ஆகிய படங்களை இயக்கியவர் சரண். இதில் கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த்தும் நடித்தார்.
தற்போது இயக்குநர் சரண், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் ஷாலினி திருமணம் முடிவானபோது ஷாலினி பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த படம் பாதியில் இருக்கும்போதே ஷாலினி அஜித்தை திருமணம் செய்துகொண்டார். அதனால் அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு ஷாலினி பங்கேற்க சற்று தாமதமாகிவிட்டது. அதை வைத்து அஜித்துக்கும் பிரஷாந்துக்கும் மோதல் என்று வதந்தி பரப்பி விட்டுவிட்டார்கள்.
மற்றபடி இருவருக்கிடையே மோதல் என்பது நடக்காத ஒன்று. இருவருமே அன்பாகத்தான் பழகினார்கள். மேலும், அப்படியான ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரசாந்த் நடித்த ஒரு படத்தைக் கூட அஜித் பார்த்திருக்க மாட்டார். ஆனால், பிரஷாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பார்த்தார்” என சரண் தெரிவித்து உள்ளார்.
The post அஜித்- பிரசாந்த் நேரடி மோதலா!: நடந்தது என்ன? appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சிந்து பைரவி படத்தின் மூலமாக இளையராஜா, பாலசந்தர் கூட்டணி இணைந்த நிலையில், இளையராஜாவுக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பாலசந்தர் இயக்கிய 6 படங்களுக்கு தொடர்ச்சியாக இளையராஜா இசையமைத்தார். மேலும் பாலச்சந்தர் தயாரித்த 14 படங்களுக்கும் இளையராஜா இசையமைத்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் காம்போ படங்கள் வெளியாகாமல் போனதையடுத்து பாலசந்தரும் இசையமைப்பாளர்கள் கீரவாணி, ஏ ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரை தமிழ் சினிமாவில் களமிறக்கினார் பாலச்சந்தர்.
இதற்குக் காரணம் இருக்கிறது..
1989 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய புது புது அர்த்தங்கள் திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. ரஹ்மான், கீதா உள்ளிட்டோர் நடித்த இப்படம் காதல், செண்டிமெண்ட் என உருவாகி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றது.
இப்பட உருவாக்கத்தின் போது, படத்தின் பின்னணி இசை வேலைகள் மட்டும் முடியாமல் இருந்துள்ளது.
இளையராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மேலும் 5 படங்களுக்கு இசையமைக்க வேண்டியுள்ளது. இப்படத்தின் பின்னணி இசையையை இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து முடித்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு இளையராஜா தீபாவளிக்கு வேண்டாம் வேறு நாளில் ரிலீஸ் பண்ணுங்கள் என கூறிவிட்டாராம்.
இதனால் வருத்தமான பாலசந்தர் ஏற்கனவே இவரது படங்களில் உள்ள பின்னணி இசையை தனியாக எடுத்து, ஒரு இசையமைப்பாளரை வைத்து, படத்தில் அந்த பின்னணி இசைகளை வைத்து இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். பின்னர் இப்படத்தை பார்த்த இளையராஜா பாலசந்தர் மீது கடும் கோபத்தில் இருந்தாராம். மேலும் இந்த படம் தான் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த கடைசி படமாகும்.
அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை.
The post இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்தது ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்! appeared first on Touring Talkies.
]]>கடந்த மாதம் பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்குமாரின் ‘துணிவு’ படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன.
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி ரஜினிகாந்தின் சந்திரமுகி கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இதில் சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது.
18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகப் போவதாக வெளியாகி உள்ள தகவல் இருவரின் ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்து உள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
The post 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்! appeared first on Touring Talkies.
]]>The post தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?! appeared first on Touring Talkies.
]]>வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்து, விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் தல 62 திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனால், மூன்று பெரிய ஸ்டார்கள் மோதும் சரவெடி தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், விஜய் நடிக்கும் படம், தீபாவளிக்கு முன்னதாக ஆயுதபூஜை அன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
The post தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?! appeared first on Touring Talkies.
]]>