The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.
]]>பட டைட்டிலில், கதை – எஸ்.ராமகிருஷ்ணனன் என பதியப்பட்டு இருந்தது. ஆனால், எழுத்தாளர் மாதவராஜ், ‘இந்தக் கதை என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அதை வைத்து எழுதினேன். எஸ்.ராமகிருஷ்ணன் என் கதையை திருடிவிட்டார்’ என புகார் கூறினார்.
இந்த நிலையில், 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்பட போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதில் சிறந்த படமாக அயோத்தி படம் தேர்ந்தெடுக்ககப்பட்டது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக தேர்வான உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.
மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.
The post சசிகுமாரின் சர்ச்சை படத்துக்கு விருது! appeared first on Touring Talkies.
]]>The post 2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.
]]>லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.
ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. இதனால் படம் உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் 2: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.
வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.
துணிவு: அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசிய இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.
மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ அதன் ஜாலியான திரைக்கதையால் வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.
மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.
மாமன்னன்: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. மாரிசெல்வராஜ் ஹீரோயிசத்துக்குள் சிக்கிவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.
போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
The post 2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.
]]>The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>கலைஞானம், தமிழ்த் திரைப்படக் கலைஞரான இவர் 67 ஆண்டுகளாய் சினிமாவில் பயணித்தவர். இவர் 1960 – 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர்.
கலைஞானம் தனக்குள் எப்படி சினிமா ஆசை வந்தது மற்றும் டூரிங் டாக்கீஸில் அவர் படம் பார்த்த அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
The post நான் பார்த்த முதல் படத்தில் ஹீரோ யார் ?கலைஞானம் appeared first on Touring Talkies.
]]>The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது.
அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.
நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.
இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.
மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.
கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
என தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில் அந்த அறிக்கையில் பாரதிராஜா கூ றியுள்ளார்,
The post சினிமாவில் சக கலைஞர்களை மதிக்க வேண்டும் – பாரதிராஜா appeared first on Touring Talkies.
]]>The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.
]]>மொழி தெரியாத நடிகர்களுக்கு பணத்தை வாரி கொடுக்கின்றனர். திறைமையான நடிகர்கள் அவர் நடித்த காட்சிக்கு பணம் வாங்க உதாசினப்படுத்தப்படுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸ் நேர்காணலில் செம்புலி ஜெகன் பகிர்ந்து கொண்ட வீடியோ….
The post சினிமாவில் ’துணை நடிகர்களுக்கு மரியாதை இல்லை’’ செம்புலி ஜெகன் வருத்தம்.! appeared first on Touring Talkies.
]]>The post “தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”: செம்புலி ஜெகன் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>இவர் தற்போது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது, “என்னைப்போன்ற காமெடி நடிகர்களுக்கு உரிய ஊதியம் தருவது இல்லை. வாங்கும் சம்பளம் வீட்டு வாடகை, மளிகை செலவுக்கே சரியாகிவிடுகிறது.
அதே நேரம் தமிழே தெரியாத நடிகர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
அவரது முழு பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…
The post “தமிழ் தெரியாதவங்களுக்குத்தான் சினிமாவில் சம்பளம் அதிகம்!”: செம்புலி ஜெகன் ஆதங்கம் appeared first on Touring Talkies.
]]>The post ’கண்ணே கலைமானே’: மேலும் மூன்று சிறப்பு அங்கீகாரம்! appeared first on Touring Talkies.
]]>சில மாதங்களுக்கு முன்னர், இந்திய – பிரெஞ்சு திரைப்பட விழாவில் ’கண்ணே கலைமானே’ படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும் பெற்றனர்.
இந்நிலையில் படத்துக்கு தொடர்ந்து பல அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன. அக்கோலேட் சர்வதேசத் திரைப்படப் போட்டி, ஜெய்ப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா, தொழிலாளர் ஒற்றுமை திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில், ’கண்ணே கலைமானே’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிப் பிரிவில் பங்கு பெற்றுள்ளது.
The post ’கண்ணே கலைமானே’: மேலும் மூன்று சிறப்பு அங்கீகாரம்! appeared first on Touring Talkies.
]]>The post பாரதிராஜாவை நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.
]]>குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பல பிரபலங்களுடன் பணியாற்றியவர்.சின்னத்திரை,வெள்ளித்திரை,பின்னணி குரல் என பல துறையில் சாதனை படைத்து வருபவர்.
பாரதிராஜா உதவி இயக்குனராக இருந்த போதிலிருந்து எனக்கு தெரியும். பிறகு அவர் பெரிய இயக்குனராக வளர்ந்த பின். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்தேன் அவர் பார்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமா? என்ற தயக்கத்தில் அவரிடம் நான் பேச வில்லை.
பிறகு அவரே வந்து என்னிடம் பேசினார் அதை பார்த்து குற்ற உணர்வில் வருத்தப்பட்டேன் என சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் நடிகை நித்யா பகிர்ந்து கொண்ட வீடியோ..
The post பாரதிராஜாவை நான் தவறாக புரிந்து கொண்டேன் நடிகை நித்யா.! appeared first on Touring Talkies.
]]>The post “தீவிரவாதி!”: இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.
]]>The post “தீவிரவாதி!”: இயக்குநர் சீனு ராமசாமி சொன்னது யாரை? appeared first on Touring Talkies.
]]>The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவானது இத்திரைப்படம்.
ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ். பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் முக்கய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே, ஒரு வித்தியாசமான திரைப்படம் இது.
அது என்ன வித்தியாசம்…
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8
The post “இந்திய திரையுலக வரலாற்றிலேயே…”: இந்த தகவல் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>