The post “அந்த ஹீரோவுடன் ஏழு படங்கள் மிஸ் ஆனது!”: ரேணுகா அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.
]]>இவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ டி.ராஜேந்தரின் கிரியேட்டிவிட்டி பிரமிக்க வைக்கும். படப்பிடிப்பில், ஒவ்வொரு டேக்குக்கும் டயலாக்கை மாற்றிக்கொண்டே இருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. ஆனால் புதிது புதிதாக டயலாக் மாற்றுவதால் நாம் பேச திணறுவோம். அதற்கு கண்ணாபின்னா என திட்டுவார்” என்றார்.
மேலும், “பிரபல ஹீரோ ஒருவருடன் ஹீரோயினாக மேக் அப் டெஸ்ட்டில் எல்லாம் ஓகே ஆகி பிறகு கேன்சல் ஆனது. ஓரிருமுறை அல்ல.. ஆறேழு முறை இப்படி ஆனது” என்றார்.
ஒன்றிரண்டு முறை என்றால் பரவாயில்லை.. ஆறேழு முறை.. அதுவும் ஒரே ஹீரோவுடன்… ஏன் இப்படி ஆனது.. அந்த ஹீரோ யார்..
ரேணுகாவின் முழு பேட்டியையும் பார்க்க கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “அந்த ஹீரோவுடன் ஏழு படங்கள் மிஸ் ஆனது!”: ரேணுகா அதிர்ச்சி தகவல் appeared first on Touring Talkies.
]]>The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை பாரதிராாஜாவை சந்திக்க தனது மனைவியுடன் சென்றார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென இசையமைப்பாளரின் மனைவி பாரதிராஜாவிடம், “உங்க படத்துல என் கணவரை இசயமைக்கச் சொல்லாதீங்க” என்று சொல்லி இருக்கிறார்.
“கணவனுக்கு வாய்ப்பு தராதீங்க என்கிறாரே” என்று அதிர்ந்து போய்விட்டார். பிறகு, “ஏம்மா இப்படிச் சொல்றீங்க” என்றார்.
அதற்கு இசையமைப்பாளரின் மனைவி, “உங்க படத்துக்கு, இளையராஜாவின் இசைதான் சிறப்பா இருக்கு. அதனாலதான்!” என்று கூறினார்.
# கணவனுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று சொன்ன, அந்த இசையமைப்பாளரின் மனைவி யார்..
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post “என் கணவருக்கு சான்ஸ் கொடுக்காதீங்க!”: அதிரவைத்த மனைவி யார்? appeared first on Touring Talkies.
]]>The post ரயிலை தவறவிட்டு சினிமாவைப் பிடித்த ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>இவர் குறித்து பலரும் அறியாத தகவல் ஒன்றை இவரது மகன் சஞ்சய் சங்கர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்:
“என் அப்பா சட்டம் பயின்றவர். அதற்கேற்ப மத்திய அரசின் உயர் பதவி டில்லியில் அவருக்குக் கிடைத்தது. ஆனாலும் நடிப்பின் மீது அவருக்கு ஈடுபாடு உண்டு. துக்ளக் சோ நடத்திய நாடங்களில் அப்பா நடித்து உள்ளார்.
டில்லி வேலைக்காக டிரெய்ன் டிக்கெட் எல்லாம் புக் செய்து, வீட்டில் இருந்து பெட்டிப் படுக்கையோடு கிளம்பத் தயாரானார் என் அப்பா.
அந்த நேரத்தில் ஒரு போன்.
இரவும் பகலும் என்ற படத்தில் நடிக்க வாாய்ப்பு இருக்கிறது வர முடியுமா.. என்பதுதான் போனில் வந்த செய்தி.
அந்தக் காலத்தில்.. ஏன் இப்போதுமே மத்திய அரசு பதவி என்றால் தனி மரியாதைதான். ஆனாலும் அப்பா, அந்த பணியை நிராகரித்து, சினிமாவில் நடித்தார்..” என்றார் சஞ்சய் சங்கர்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post ரயிலை தவறவிட்டு சினிமாவைப் பிடித்த ஜெய்சங்கர்! appeared first on Touring Talkies.
]]>The post கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ் appeared first on Touring Talkies.
]]>பிறகு, குணச்சித்திர மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சந்திரமுகி திரைப்படத்தில் அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
இவர் தனக்கு சினிமா வாய்ப்பு எப்படி வந்தது என்கிற சுவாரஸ்யமான விசயத்தை கூறியிருக்கிறார்.
ஷீலா ஒரு திருமணத்திற்காக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில் நாடகம் ஒன்று நடந்துள்ளது. இவருக்கு நாடகம் மீது விருப்பம் இருந்ததால் அங்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் நடித்துள்ளார்.
அவரிடம் சென்ற ஷீலா எனக்கும் நாடகத்தில் வாய்ப்பு வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார். இது வாய்ப்பு கேட்கும் இடமல்ல சென்னையில் என் அலுவலகத்தில் வந்து கேளுங்கள் என கூறியுள்ளார் எஸ்.எஸ்.ஆர். உடனே சென்னைக்கு வந்துள்ளார் ஷீலா.
பிடிவாதமாக இருக்கிறாரே என ஒரு நாடகத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எஸ்.எஸ்.ஆர். அந்த நாடகத்திலேயே இவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குனர் டி.ஆர் ராமன்னா அவரது நடிப்பை கண்டு சினிமாவில் சேர்த்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பாசம் என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார் ஷீலா. இப்படி மிக எளிதாகவே சினிமாவில் வாய்ப்பை பெற்றுள்ளார் ஷீலா.
The post கல்யாணத்தால் கிடைத்த ஹீரோயின் சான்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post ராதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த முதல் வாய்ப்பு கிடைத்தது குறித்து ராதா தெரிவித்து உள்ளார்.
“எனக்கு அம்பிகா உள்ளிட்ட இரு சகோதரிகள். எங்கள் மூவரின் படங்களையும் பாரதிராஜாவிடம் கொடுத்தார் என் அம்மா.
மற்ற இருவரின் முகத்தில் மலையாள சாயல் இருக்கிறது. ஆகவே ராதாவை நடிக்கவைக்கிறேன்” என்று பாரதிராஜா கூறினார்.
அப்போது நான் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டு இருந்தேன். இன்னொரு விசயம்.. என் உண்மையான பெயர் உதயசந்திரிக்கா. சினிமாவிற்காக ராதா என்று மாற்றியவர் பாரதிராஜா தான்” என்று ராதா தெரிவித்து உள்ளார்.
The post ராதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ‘அவர்’ பெயரைச் சொன்னா வெளியே போ!: விரட்டிய வடிவேலு appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இவர் பேசும்போது, “காமெடி காட்சியில் நடிக்க வரும்படி வடிவேலு சொல்லி அனுப்பி இருந்தார். அதன்படி நான் சென்றபோது, ‘நீங்க அந்த விஜயகாந்த் கூட சுத்திட்டு இருக்கவங்க தானே.. உங்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.நான், ‘நான் விஜயகாந்த் கூட இருக்கிறேன் என்று தெரியாமலா, நேற்று என்னை அழைத்தீர்கள்’ என கேட்டேன்.
மறுபடி வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார் வடிவேலு.
அப்படியே அவரை தூக்கி போட்டு மிதிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அப்போது அவர் டாப்பில் இருந்ததால் அப்படியே அமைதியாக சென்றுவிட்டேன்” என்றார் மீசை ராஜேந்திரன்.
The post ‘அவர்’ பெயரைச் சொன்னா வெளியே போ!: விரட்டிய வடிவேலு appeared first on Touring Talkies.
]]>The post “எல்லாத்துக்கும் சம்மதிச்சாத்தான் நடிக்க வாய்ப்பு!”: அதிரவைத்த ‘காதல்’ சுகுமார் appeared first on Touring Talkies.
]]>ஆண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண்கள் நிலைமை ரொம்ப மோசம். எல்லாத்துக்கும் சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தான் உட்கார வேண்டும்” என்று கூறி அதிரவைத்து இருக்கிறார்.
The post “எல்லாத்துக்கும் சம்மதிச்சாத்தான் நடிக்க வாய்ப்பு!”: அதிரவைத்த ‘காதல்’ சுகுமார் appeared first on Touring Talkies.
]]>The post குஷ்புதான் சுந்தர் சி-க்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தாரா? appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், இது குறித்து விளக்கிய பிஸ்மி ‘சுந்தர்.சி இயக்கிய முதல் திரைப்படமான “முறை மாமன்” திரைப்படத்திலேயே குஷ்புவுக்கும் சுந்தர்.சிக்கும் காதல் மலர்ந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் நீண்ட காலம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் குஷ்பு, சுந்தர்.சிக்காக சிபாரிசுகள் செயதார்.
“அன்பே சிவம்” திரைப்படம் கூட குஷ்புவின் சிபாரிசில்தான் சுந்தர்.சிக்கு கிடைத்தது” என்று விளக்கினார் பிஸ்மி.
The post குஷ்புதான் சுந்தர் சி-க்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தாரா? appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பொய்யால் பட வாய்ப்பை பறிகொடுத்த ஹீரோயின்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ஸ்ரீதர் தனது கல்யாண பரிசு படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் ஈடுபட்டார்.
இதைக் கேள்விப்பட்ட சரோஜாதேவி, “இதிலும் என்னை நாயகியாக்குவதாக கூறியிருந்தீர்களே..” என ஆதங்கத்துடன் கேட்டார்.
அதற்கு ஸ்ரீதர், “நான் அப்படித்தான் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் ‘பெல்லி கனுகா’ படப்பிடிப்பின் இடையே ஒரு நாள், உடல் நிலை சரியில்லை என்று சொல்லி, படப்பிடிப்பை தள்ளி வைக்கச் சொன்னீர்கள். ஆனால் வேறு படத்தில் அன்று நடித்தீர்கள். உண்மையைச் சொல்லி இருந்தால் நான் ஒப்புக்கொண்டிருப்பேனே.. ஏன் பொய் சொன்னீர்கள்.. ஆகவேதான் அடுத்த படத்தில் உங்களை ஒப்பந்தம் செய்யும் முடிவை மாற்றிக்கொண்டேன்” என்றாராம்.
சமயோஜிதம் என நினைத்துச் சொல்லும் பொய், இப்படி சிக்கலை ஏற்படுத்திவிடுவதும் உண்டு என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
The post ஒரு பொய்யால் பட வாய்ப்பை பறிகொடுத்த ஹீரோயின்! appeared first on Touring Talkies.
]]>The post இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்! appeared first on Touring Talkies.
]]>அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து திரைத்துறை செய்தியாளர், ரமேஷ் ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர், “கதாசிரியர் செல்வராஜ்தான், பஞ்சுவிடம் இளையராஜாவை அழைத்துச் சென்றார். ‘இந்தப் பையன் நல்லா மியூசிக் பண்றான்.. வாய்ப்பு கொடுங்க’ என்றார்.
அதற்கு பஞ்சு, ‘நாளைக்கு உன் ட்ரூப்போட வந்து ஏதாவது பாட்டுப் பாடி காண்பிச்சுரு.. பார்க்கலாம்’ என்றார்.
அதற்கு இளையராஜா, ‘ட்ரூப் எல்லாம் எதுக்கு.. இப்பவே பாடிக்காட்டுறேன்’ என்றார்.
பஞ்சு, ‘ஆர்கெஸ்ட்ரா இல்லாம எப்படி பாடுவே’ என கேட்க, ‘இந்த டேபிள் போதுமே’ என்று டேபிளை தட்டி பாட ஆரம்பித்து இருக்கிறார் இளையராஜா.
அதி அற்புதமான இசை. இதைக் கேட்டு மயங்கிய பஞ்சு அருணாசலம் உடனடியாக அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு அளித்துவிட்டார்” என்றார் பத்திரிகையாளர் ரமேஷ்.
பஞ்சு அருணாசலத்திடம் கதைசிரியர் செல்வராஜ் கூப்பிட்டு வந்தார் இந்த பையன் நல்லா மியூசிக் போடுவான்
நாளை ஆர்கெஸ்ட்ரா வச்சு பாடிக்காட்டு
இந்த டேபிள் போதும்
The post இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்! appeared first on Touring Talkies.
]]>