The post சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷிடம் பறந்த நடிகை! என்ன காரணம் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>அதன்படி, சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமா மூலம் அறிமுகமானார்.இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.சிவகார்த்திகேயன் தான் பிரியங்கா மோகனின் மேனேஜர் போல் இருந்து அவரின் கால்ஷீட் போன்றவை பார்த்துக்கொண்டு இருந்தாராம். இப்போது அவரிடமிருந்து தனுஷ் பக்கம் சென்றுள்ளார் பிரியங்கா மோகன்.
அதாவது முன்னரே தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா மோகன்.தற்போது தனுஷின் குபேரா படத்திலும் நடிக்க உள்ள நிலையில் இப்படத்திற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.
இதுமட்டுமின்றி பிரியங்கா மோகன் தனுஷ் நடிக்கும் மேலும் சில படங்களிலும் நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரின் காம்போவில் மேலும் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் பிரியங்கா மோகன் நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷிடம் பறந்த நடிகை! என்ன காரணம் தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.
]]>இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.திராவிட இயக்கங்களின் கருத்தியல் ஈர்ப்பால் தன்னை திராவிடத்தோடு இணைத்துக்கொண்டார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக விளங்கியவர் அவர். முக்கியமாக எம்ஜிஆரின் வலது கரமாக இருந்தவர். எம்ஜிஆரை பார்க்க வேண்டுமென்றால் முதலில் ஆர்.எம்.வியைத்தான் பார்க்க வேண்டும் என்ற பேச்சு அப்போதைய அரசியல் காலத்தில் இருந்தது.
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தபோது முதலில் ஜானகி அணியில் இருந்தவர் ஜானகியின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார்.பிறகு ஜெயலலிதா அணி அதிமுகவை முழுதாக கைப்பற்றிய பிறகு ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். எந்த அணியில் இருந்தாலும் தனதுஅரசியல் ஆளுமையை வலிமையை இழக்காமல் இருந்தார் ஆர்.எம்.வி .இதற்கிடையே எம்ஜிஆர் கழகம் என்ற ஒரு கட்சியையும் அவர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எம்.வீரப்பன் அரசியல்வாதியாக வலம் வந்தது மட்டும் இன்றி சினிமாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.எம்ஜிஆர் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியபோது; அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஆர்.எம்.வியிடம்தான் வழங்கினார் எம்ஜிஆர். அதனை திறம்பட நிர்வகிக்கவும் செய்தார். அதனால் ஆர்.எம்.வியின் பெயர் சினிமா துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.எம்ஜிஆர் பிக்சர்ஸில் தொழிலாளியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் எம்ஜிஆர், சரோஜா தேவி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான தெய்வ தாய் படத்தை முதலில் தயாரித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.
தொடர்ந்து எம்ஜிஆரை வைத்து நான் ஆணையிட்டால் , காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாக்காரன் மற்றும் இதயக்கனி உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இவர் எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் ஆர்.எம்.வி படங்கள் தயாரிப்பாரா என்று பலமாக கேள்வி எழுந்த பொழுது கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார்.
ஆர்.எம்.வி தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. அதில் முக்கியமான படம் என்றால் பாட்ஷா தான். பாட்ஷா திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆர்.எம்.வி மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று பலரும் சொல்வார்கள். ஏனெனில் அந்தப் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது என்று சொல்லிவிட்டார். அப்போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா என்பதால் தான் ஆர்.எம்.வியின் அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் பறிக்கப்பட்டதாக தகவலும் உண்டு.
வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து தள்ளியிருந்தார்.பின்னர் அவரது குடும்பத்திலிருந்து தியாகராஜ சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார் அதில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் மின்னிய ஆர்.எம்.வீரப்பன்! appeared first on Touring Talkies.
]]>The post பொங்கல் ரிலீஸ்.. வெற்றி யாருக்கு? appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகளில் சில…
@ பொங்கல் ரிலீஸ் படங்களான கேப்டன் மில்லர், அயலான் ஆகியவற்றில் எது வெற்றி பெற்று உள்ளது?
@ மிசன் சேப்டர் ஒன் படத்துக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் அடுத்த படம் என்ன?
@ தக்லைப் படத்தில் கமலுக்கு ஜோடி இல்லையா..?
@ ரஜினி ஆசைப்பட்டு எடுத்த வள்ளி, மாவீரன், ராகவேந்திரன், பாபா ஓடவில்லையே…?
@ ரஜினியின் 175வது திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் யார்..?
# மேலும் இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=wBy2yyF56uA
The post பொங்கல் ரிலீஸ்.. வெற்றி யாருக்கு? appeared first on Touring Talkies.
]]>The post “கேப்டன் மில்லர் கதையை திருடிட்டாங்க!”: எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி பரபர புகார்! appeared first on Touring Talkies.
]]>தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.
சிவராஜ் குமார் -தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி. வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.
இப்படம் தற்போது உலக அளவில் ரூ.65 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு பதிப்பு வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுவந்த சூழலில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தான் எழுதிய பட்டத்து யானை நாவலைத் திருடி, கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளதாகச் சில தினங்களுக்கு முன்பு கூறினார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுத்துள்ளார். மேலும் பட்டத்து யானை நாவலை சங்கத்தில் ஒப்படைத்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து உயிரிழந்த பிறகு, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
The post “கேப்டன் மில்லர் கதையை திருடிட்டாங்க!”: எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி பரபர புகார்! appeared first on Touring Talkies.
]]>The post புதிய போஸ்டர்: ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்…’ என்ற முதல் பாடல் மற்றும் ‘உன் ஒளியிலே…’ என்ற இரண்டாவது பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஏற்கனவே பொங்கல் வெளியீடு எனப் படக்குழு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் யு/ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post புதிய போஸ்டர்: ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>The post வருடும் மொலோடி… தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ 2-வது சிங்கிள்! appeared first on Touring Talkies.
]]>சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் எப்படி? – ஷான் ரோல்டன் பாடியுள்ள இப்பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார். காதல் மெலோடியான இப்பாடலின் தொடக்கத்தில், ‘விதி சிரிக்குதா அழுகுதா தெரியல…’ என ஜி.வி.பிரகாஷ் குரல் ஒலிக்கிறது. தொடர்ந்து வரும் ‘உன் ஒளியிலே என் நிழல் விரியுதே… உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே’ என்ற ஷான் ரோல்டன் குரல் இதம் சேர்க்கிறது. பிரிவின் வலியைச் சொல்லும் பாடலின் வரிகள் கவனம் பெறுகின்றன. குறிப்பாக, “ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே… போகாத தூரங்கள் எனை ஈர்க்குதே” போன்ற வரிகளுடன் ஷானின் மென்சோக வாய்ஸூம் இணையும் இடங்கள் ஈர்க்கின்றன
The post வருடும் மொலோடி… தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ 2-வது சிங்கிள்! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக அவர் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து அவர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலாவின் புதிய படங்களில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
The post தனுஷ் இயக்கி நடிக்கும்‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Touring Talkies.
]]>The post மலையாள பட வாய்ப்பு எனக்கு இப்படித்தான் வந்தது – நடிகை விஜி appeared first on Touring Talkies.
]]>அதன் பிறகு அவர் ’இந்திரா’ ’பார்த்தாலே பரவசம்’ ’ஆயுத எழுத்து’ ’ஆரோகணம்’ ’மதயானை கூட்டம்’ ’கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது அவர் தனுஷ் நடிக்கும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனது ஆரம்ப கால சினிமாவில் மலையாள நடிகர் மம்முட்டி,ஜெயராமுக்கு அம்மாவாக நடித்திருந்திருக்கிறேன். தனக்கு மலையாள சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார் நடிகை விஜி சந்திரசேகர்.
The post மலையாள பட வாய்ப்பு எனக்கு இப்படித்தான் வந்தது – நடிகை விஜி appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களின் கேள்விக்கு ’கேப்டன் மில்லர்’ படகுழு பதில் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில், தனுஷின் இரண்டு பழைய படங்கள் திரையரங்குகளில் ஓடுகின்றன. இது அடுத்த மாதம் வெளியாகும் அவரது பிரமாண்ட படமான கேப்டன் மில்லரின் முன்னோட்டமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகும் என்று பதிலளித்துள்ளது.
The post ரசிகர்களின் கேள்விக்கு ’கேப்டன் மில்லர்’ படகுழு பதில் appeared first on Touring Talkies.
]]>The post எதிரிகளை துவம்சம் செய்யும் ’கேப்டன் மில்லர் ’கில்லர் கில்லர்’ பாடல் வெளீடு.! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ’கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். போன்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர். சாணிக்காயிதம்’ பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ’கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
ஆக்ரோஷத்தில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். போன்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
The post எதிரிகளை துவம்சம் செய்யும் ’கேப்டன் மில்லர் ’கில்லர் கில்லர்’ பாடல் வெளீடு.! appeared first on Touring Talkies.
]]>