The post வெற்றி மாறனோடு கைக்கோர்த்த கவின்… கவினோட இணையும் ஆண்ட்ரியா! appeared first on Touring Talkies.
]]>விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் தனது குறும்படமான ‘தருமி’ க்கு சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதைப் பெற்றவர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். அவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகர் கவனிக்க, படத்தொகுப்பை ராமர் மேற்கொள்கிறார். கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்ற, ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் பணிபுரிகின்றனர். பூஜையுடன் துவங்கிய மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.
The post வெற்றி மாறனோடு கைக்கோர்த்த கவின்… கவினோட இணையும் ஆண்ட்ரியா! appeared first on Touring Talkies.
]]>The post ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்யத்தை அமீர் பகிர்ந்துள்ளார்.
வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ராஜன் கேரக்டரில் அமீர் நடித்திருந்தார். கேமியோ ரோலாக 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ராஜன் கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதனால் அமீர் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த கேரக்டர் குறித்து பேசிய அமீர், “முதலில் வெற்றிமாறன் என்னை சந்தித்து நடிப்பது குறித்து கேட்டார். வெற்றிமாறனுக்காக நான் வடசென்னை படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாலும், ஆண்ட்ரியா தான் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ஷாக்காகிவிட்டது. ஆண்ட்ரியா என்னைவிட ஹைட் அதிகம்.. அப்படி இருக்கும் போது எப்படி நடிக்க முடியும்… இது செட் ஆகாது என வெற்றிமாறனிடம் கூறினேன்.
ஆனால், வெற்றிமாறன் தான் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது தான் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது” என அமீர் கூறியது வைரலாகி வருகிறது.
The post ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு! appeared first on Touring Talkies.
]]>The post தீவிர உடற்பயிற்சியில் ஆண்ட்ரியா! வைரலாகும் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>கண்ணும் கண்ணும் நோக்கியா, ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
The post தீவிர உடற்பயிற்சியில் ஆண்ட்ரியா! வைரலாகும் வீடியோ! appeared first on Touring Talkies.
]]>The post வெற்றிமாறனை பார்த்து ஓடி விட்டேன் ஆண்ட்ரியா…! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் பலர் எடுக்கத் தயங்கிய கதைகளைக் கூட வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய திரைப்படங்கள் மூலம் நிஜங்களை திரையில் ரசிகர்களுக்கு காட்டியவர்.
நடிகை ஆண்ட்ரியா படம் குறித்து வெற்றிமாறனை முதன் முதலில் பார்க்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தொடர்ந்து புகை பிடித்து கொண்டே இருந்துள்ளார். அந்த புகை காரணமாக ஆண்ட்ரியா கண்ணில் தண்ணீர் வந்து விட்டதாம். அதற்கு மேல் பேச முடியாமல் நான் உங்களை இன்னோரு நாள் பார்க்கிறேன் என்று கிளம்பி விட்டாராம்.
என் முதல் சந்திப்பு அப்படி தான் இருந்தது. அதன் பிறகு வட சென்னை படத்தில் என்னை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
இப்போது வெற்றி சார் தொடர்ந்து புகைப்பதை குறைத்து விட்டார். என்று ஒரு பேட்டியில் கூறினார் ஆண்ட்ரியா.
The post வெற்றிமாறனை பார்த்து ஓடி விட்டேன் ஆண்ட்ரியா…! appeared first on Touring Talkies.
]]>The post மறக்க முடியாத அந்த நபர்கள்..: ஆண்ட்ரியா appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர்,
“நான் என் வாழ்க்கையில் இரு முறைதான் பேருந்தில் சென்று இருக்கிறேன். முதன் முறை பதினோரு வயதில் சென்றபோத, ஒரு ஆண் என்னிடம் அத்து மீற முயன்றான். பிறகு கல்லூரி படிக்கும்போது ஒரு முறை இப்படி நடந்தது. அதில் இருந்து பேருந்து என்றாலே பயம் வந்துவிட்டது.
என்னால் காரில் செல்ல முடியும்.. ஆனால் ஏழைப் பெண்கள் என்ன செய்வார்கள்.. மோசமான ஆண்கள் இது குறித்தும் சிந்திக்க வேண்டும்” என ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார்.
The post மறக்க முடியாத அந்த நபர்கள்..: ஆண்ட்ரியா appeared first on Touring Talkies.
]]>The post சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்தக் கதை எதிர்பாராதவிதமான கதைக் களத்துடனும், திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது.
வெற்றிமாறன் தயாரித்திருக்கக் கூடிய இந்தத் திரைப்படம் இந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
சென்னையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நீதிக்கான போராட்டத்தின் வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாத மதியின் (ஆண்ட்ரியா ஜெரிமையா) கடினமான கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது, இந்த வழக்கை மதி கைவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவர்களையும் காட்சிப்படுத்துகிறது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதி இந்த வழக்கிற்காக போராடுவாளா அல்லது பாதியிலேயே கைவிடுவாளா என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் மதியின் பயணத்தைப் பாருங்கள்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர். கெய்சர் ஆனந்த் கூறுகையில், ”சோனி லிவ் ஓடிடி தளம் நம்முடைய வட்டாரக் கதைகளைக் கொண்டு வருவதில் மிகவும் வலுவானது. அந்த வகையில் திறமையான கதைகள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களைத் தனக்கு கீழ் கொண்டு வருகிறது. ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் கதையில் நம்பிக்கைக் கொண்டு இதைத் தயாரிக்க முன் வந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. மதி தனக்கான நீதியைப் பெறுவதற்கான பயணத்தை இந்தக் கதையில் தெரியப்படுத்துகிறாள்.
இது போன்ற ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வை மதி தன் வாழ்வில் எதிர்கொள்ளும் போது அவள் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதும் இந்தக் கதையில் காண்பிக்கப்படுகிறது. இது போன்ற ஒரு வலுவானக் கதையில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம். மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு மனதையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்றும் கதையைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆர். கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
’அனல் மேலே பனித்துளி’ திரைப்பம் இந்த நவம்பர் மாதம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
The post சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post “ஆண்ட்ரியாவின் நிர்வாணப் புகைப்படங்களை நான் பார்க்கவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் திடீரென்று அந்த நிர்வாணக் காட்சிகளையெல்லாம் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் அறிவித்தார். இதனால் இந்தக் காட்சிக்காகவே இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் “அப்போ நீங்க மட்டும் பார்க்குறதுக்குத்தான் ஆண்ட்ரியாவுக்கு கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுத்து ஷூட் செஞ்சீங்களா…” என்று இயக்குநர் மிஷ்கினை நோக்கி சமூக வலைத்தளங்களில் கேள்விகள் பறந்தன.
இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் “அந்த நி்ர்வாணக் காட்சிகளை நான் பார்க்கவே இல்லை. டெலீட் செய்ய சொல்லிவிட்டேன்..” என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின் இது குறித்து அளித்த பேட்டியில், “இந்த பிசாசு-2 படத்தின் கதையை சொல்லி முடிச்சவுடனேயே “இதுல நிர்வாணக் காட்சியிருக்கா?”ன்னு ஆண்ட்ரியா கேட்டாங்க. “ஆமாம் இருக்கு”ன்னு சொன்னேன். “அப்படீன்னா வழக்கமான சம்பளத்தைவிட எனக்கு அதிகமான சம்பளம் வேணும்ன்”னு கேட்டாங்க. அதெல்லாம் நியாயமானதுதான்னு நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான போட்டோகிராபர் பிரெண்டான சுந்தரை வைச்சு ஆண்ட்ரியாவோட நியூட் போட்டோ ஷூட்டை செஞ்சோம். ஆண்ட்ரியா வீட்லேயே அந்த போட்டோ ஷூட் நடந்துச்சு. அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவரும், என்னுடைய பெண் உதவி இயக்குநர் ஈஸ்வரியும் மட்டுமே உடன் இருந்தாங்க.
அதுக்கப்புறம் எனக்கு அதையெல்லாம் அனுப்பட்டுமான்னு அவர் கேட்டப்போ.. நான், “இப்போ வேண்டாம்.. வெயிட் பண்ணு”ன்னு சொல்லிட்டு ஒரு பக்கம் யோசிச்சுக்கிட்டே இன்னொரு பக்கம் மற்ற வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.
அப்புறம் ஒரு நாள் நான் ஆண்ட்ரியாவைக் கூப்பிட்டு “நிர்வாணக் காட்சிகளை படத்துல வைக்கப் போறதில்லை. ஏன்னா இது ஒரு பெண்ணைப் பற்றிய படம். பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது. படத்துக்கு இந்த நிர்வாணக் காட்சிகளால் ஏ சான்றிதழ் கொடுத்துட்டாங்கன்னா குழந்தைங்க வந்து பார்க்க முடியாமல் போயிரும்”ன்னு சொன்னேன்.
அப்புறம் போட்டோகிராபர் சுந்தருக்கு போன் செஞ்சு “அந்த போட்டோக்களை டெலீட் செஞ்சிருங்க”ன்னு சொல்லிட்டேன். இதுதான் நடந்தது. நிர்வாணக் காட்சிகள் என்பது இந்தப் படத்தைப் பொருத்தவரை பேச்சு அளவிலேயே காணாமல் போய்விட்டது..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
The post “ஆண்ட்ரியாவின் நிர்வாணப் புகைப்படங்களை நான் பார்க்கவில்லை” – இயக்குநர் மிஷ்கின் மறுப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post ஆண்ட்ரியாவுடனான காதல் முறிவு பற்றி அனிருத் சொன்னது என்ன..? appeared first on Touring Talkies.
]]>அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்களின் காதல் உடைந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதுவரையிலும் ஆண்ட்ரியா இது குறித்து எதுவும் சொல்லாத நிலையில் தங்களது காதல் முறிவு குறித்து இசையமைப்பாளர் அனிருத் சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அனிருத் இது குறித்துப் பேசும்போது, “நான் ஆண்ட்ரியாவை காதலித்தபோது என் வயது 19. அவருடைய வயது 25. எங்களது இந்தக் காதல் தோல்வியில் முடிந்ததற்கான ஒரே காரணம் எங்களுக்கு இடையேயான இந்த 6 வயது வித்தியாசம்தான். என்னைவிட 6 வயது பெரிய பெண்ணாக இருந்ததனால் அவர் எனக்கு செட் ஆக மாட்டார் என்று நினைத்தேன். அதனால் நாங்கள் இருவருமே பேசி பிரேக் அப் செய்துவிட்டோம்” என்று அனிருத் கூறியிருக்கிறார்.
The post ஆண்ட்ரியாவுடனான காதல் முறிவு பற்றி அனிருத் சொன்னது என்ன..? appeared first on Touring Talkies.
]]>The post “ஹீரோக்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பேமஸானார்…” – நடிகை ஆண்ட்ரியாவின் கணிப்பு..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இப்போதும் இருந்து வரும் நடிகை ஆண்ட்ரியா. இவர், நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் இருக்கிறார். ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றவர்.
தற்போது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு-2’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா பேசும்போது ‘லேடி சூப்பர் ஸ்டாரான’ நயன்தாரா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஆண்ட்ரியா பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்தில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர்வதற்கு அவர்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் இவர், இந்த நடிகரின் படத்தில் நடித்த நடிகை என்று ரசிகர்களால் அடையாளம் காண முடிகிறது.
நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. அதோடு, அந்தப் படங்களின் ஹீரோக்களோடு நயன்தாரா மிக நெருக்கமாக நடித்திருந்தார். அதனால்தான் அவருக்குப் பெயரும், புகழும் கிடைத்தது.
ஆனால், என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. நான் நடிக்கின்ற படங்களில் கதை நன்றாக இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பேன். கதைக்குத் தேவையென்றால் மட்டும்தான், நான் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன்..” என்று பேசியிருக்கிறார்.
“ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பெரும் புகழடைந்தார்..” என்று ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
“ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில், நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு…” என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுடன் மிக நெருக்கமாக நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
“குந்தி தேவி பிள்ளை பெற்றாள் என்ற செய்தியைக் கேட்டவுடன், அம்மிக் குழவியை எடுத்து அடிவயிற்றில் அடித்துக் கொண்டாளாம் காந்தாரி…” என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது..!
The post “ஹீரோக்களுடன் நெருக்கமாக நடித்ததால்தான் நயன்தாரா பேமஸானார்…” – நடிகை ஆண்ட்ரியாவின் கணிப்பு..! appeared first on Touring Talkies.
]]>