The post வெற்றிமாறன் மாத்தி மாத்தி சொல்வார்… வாடிவாசல் குறித்து ஷாக் நியூஸ் சொன்ன அமீர்… appeared first on Touring Talkies.
]]>அவரின் அடுத்த படமான ‘வாடிவாசல்’, சி.சு.செல்லப்பா எழுதிய சிறுகுறுநாவலை மையமாக கொண்டுள்ளது. இந்த படம் சூர்யா நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார், இது தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் தங்கள் தனிப்பட்ட பணிகளில் பிஸியாகி, ‘வாடிவாசல்’ படத்தின் பணிகள் மேலும் காலதாமதமாகின. நடிகர் அமீர் சமீபத்திய பேட்டியில் பேசியபோது,வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்பார் பின்னர் மீண்டும் இப்போதைக்கு இல்லை லேட்டாகும் என்பார் இப்படி வெற்றிமாறன் ஷூட்டிங் தொடங்கும் தேதிகளை தொடர்ந்து மாற்றுவதாக தெரிவித்தார்.
இதற்கு நான் பெரிதாக ரியாக்ட் செய்யமாட்டேன். அவர் என்ன சொன்னாலும் அப்படியா என்று கேட்டுக்கொள்வேன். திடீரென்று ஒருநாள் இப்போதைக்கு வாடிவாசல் படம் பண்ணவில்லை என்று சொல்வார். நானும், வெற்றிமாறனும் நான்கு நாட்களுக்கு முன்னர்கூட சந்தித்துக்கொண்டோம். அப்போது அவர் வாடிவாசல் படத்தை நாம் மீண்டும் ஆரம்பிக்கிறோம் என்று சொன்னார். அதற்கும் நான் ஓ அப்படியா சந்தோஷம் என்று சொன்னேன் என்று கூறியுள்ளார்.
The post வெற்றிமாறன் மாத்தி மாத்தி சொல்வார்… வாடிவாசல் குறித்து ஷாக் நியூஸ் சொன்ன அமீர்… appeared first on Touring Talkies.
]]>The post அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய கரு பழனியப்பன்! கடுப்பான அமீர்… appeared first on Touring Talkies.
]]>அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களின் நண்பர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் தான் பதில் சொல்லவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் என்ன தொழில் செய்தார் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அவருக்கு இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது. அதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அமீர், இந்த கேள்வியை நீங்கள் லைகாவின் உரிமையாளரிடம் கேட்டீர்களா? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் கேட்கமாட்டீர்கள், ஆனால் என்னை போன்று தனி நபரிடம் இந்த கேள்வியை கேட்பதில் என்ன நியாயம். அவர் மீதும் இதுபோன்று குற்றச்சாட்டு இருக்கு ரஜினி, விஜய் கேட்டார்களா?, அப்போ என்னை மட்டும் ஏன் கேட்குறீர்கள் என்று அமீர் பதில் அளித்துக்கொண்டு இருந்த சமயத்தில், அமீரின் அருகில் இருந்த கரு பழனியப்பன், அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கி பேச ஆரம்பித்தார்.
தம்பி, எல்லாம் யானை எப்படி இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறோம்.நீங்கள் தடவிப் பார்ப்பது தும்பிக்கையை, நான் தடவிப் பார்ப்பது காலு, அவர் தடவிப்பார்ப்பது வயிறு, அனைவரின் கண்ணும் கட்டப்பட்டு இருக்கு யாருக்கு என்ன என்று தெரியாது என்றார்.
மீடியாக்கள் எதையும் விரைந்து முடிவு செய்து தீர்ப்பு எழுத கூடாது என்றார் அமீர்.அதேபோல், நீங்கள் எந்த விசாரணையையும் நடத்தாதீர்கள். இது “உயிர் தமிழுக்கு ” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்பது அவருக்குத் தெரியும், அதற்கெல்லாம் அவர் ஏற்கனவே பதிலளித்துவிட்டார், அமீர் இதுகுறித்து தனியாக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்துவார். இந்த பேச்சு முடிவுக்கு வராத பேச்சு என்று கரு.பழனியப்பன் கூறினார்.
The post அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய கரு பழனியப்பன்! கடுப்பான அமீர்… appeared first on Touring Talkies.
]]>The post “சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” – விஜயகாந்த் குறித்து அமீர் appeared first on Touring Talkies.
]]>இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அமீர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏழைகளின் தோழன், எளியவர்களின் பாதுகாவலன், அநீதியைத் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர் என்று நிஜ நாயகனாகவே வாழ்ந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவு உண்மையிலேயே தமிழ்த் திரையுலகுக்கும். இந்திய அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். திரைப்படங்களில் நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில், திரையிலும், தரையிலும் நல்லவராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடன் மறுபடியும் பேசி அளவளாவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்த என்னை, அவரது திடீர் மறைவு, பேரதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தினத்தில் உச்ச நடிகராகவும் இல்லாமல், அரசியலில் பெரும் பதவியிலும் இல்லாமல் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும், சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர். எங்களது ‘மண்ணின் மைந்தன்’ கேப்டன் விஜயகாந்த் ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் அமைதியடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post “சாதி – மதம் கடந்த மனிதநேயப் பண்பாளர்” – விஜயகாந்த் குறித்து அமீர் appeared first on Touring Talkies.
]]>The post அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கிறார். படத்துக்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசியாக கடந்த 2013-ல் வெளியாகி இருந்தது. அதன் பிறகு வட சென்னை உட்பட சில படங்களில் நடித்திருந்தார். மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் ஆகிய படங்களை இதற்கு முன்னர் அமீர் இயக்கி இருந்தார்.
The post அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! appeared first on Touring Talkies.
]]>The post அமீர்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம்!அ appeared first on Touring Talkies.
]]>மேலும் சத்யா (நடிகர் ஆர்யாவின் தம்பி), சஞ்சிதா, வின்செண்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் அமீர் இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வரும் 29-ந்தேதி மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post அமீர்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம்!அ appeared first on Touring Talkies.
]]>The post ராம் பட ஷூட்டிங்: இப்படித்தான் இருந்தோம் சரண்யா appeared first on Touring Talkies.
]]>அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா,சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராம்.
மனநோயளி கதாபாத்திரத்தில் ஜீவா,அவருக்கு அம்மாவாக சரண்யா நடித்திருப்பார். வித்தியாசமான கதை பின்னணியில் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்ற படம் ராம்.
படத்தின் அனுபவம் பற்றி சரண்யா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
கொடைக்கானலில் 20 நாள் படப்பிடிப்பு நடந்தது. அமீர் எங்களை வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர்கள் குறைவு. படப்பிடிப்பு மாதிரி இருக்காது ஏதோ சுற்றிப்பார்க்க வந்தது போல் இருக்கும்.
நானும் ஜீவாவும் நிறைய பேசியிருக்கிறோம், ஆராரிராரோ… பாட்டு மட்டும் பிட்டு பிட்டா பத்து நாள் எடுத்தார் அமீர். நாங்க எதுக்கு வந்தோம் என்பதையே மறந்து ஜாலியாக இருந்தோம். இப்படித்தான் எங்களை டென்ஷன் இல்லாமல் வைத்திருந்தார் அமீர் என்றார் சரண்யா.
The post ராம் பட ஷூட்டிங்: இப்படித்தான் இருந்தோம் சரண்யா appeared first on Touring Talkies.
]]>The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும்கூட. என் படங்களைகூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்தப் படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அரசியலையும், அமீரையும் தவிர்க்கவே முடியாது. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..” என்று கூறினார்.
The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டுபட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. ‘யோகி’ படத்திற்கு பிறகு இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.
The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல. கதாநாயகன்தான்.
இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதேசமயம் இந்த படம் உருவாகும்வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.
இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்கூட ஹீரோ ஆனந்தராஜ்தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்…” என்று கூறினார்.
The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.
இந்தப் படத்தில் அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ், வெளியீடு – வி ஹவுஸ் புரொடக்சன், இயக்கம் – ஆதம்பாவா, இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு ; சார்லஸ், பாடல்கள் – பா.விஜய், வசனம் – பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா, தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், நிர்வாக தயாரிப்பு – B.மகேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>