The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தாவுடைய ஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
உன்னி முகுந்தன் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ்.ஜே.சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர்.
வதந்திகள், பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் வலையில் சிக்கி இருந்தாலும், உண்மையை வெளிக் கொண்டு வரும்வரை மனம் திரும்ப மறுக்கும் ஒரு சிக்கலான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.
எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில விமர்சனங்களை இங்கே காணலாம்….
சில்வர் ஆரிப் எனும் ரசிகரின் பதிவு… ” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான வதந்தி எங்களை ஏமாற்றவில்லை. தரமான படைப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் மிகப் பெரும் படைப்பாக உருவாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, எங்களை சிறந்த நடிப்பின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் பள்ளி பாடப் புத்தகத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு குறித்த ஒரு அத்தியாயம் இடம்பெறும் என நம்புகிறேன்.”
ரிச்சர்ட் மகேஷ் என்பவரின் பதிவில், ” எஸ். ஜே. சூர்யாவின் கம்பீரமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படைப்பு. எந்த இடங்களிலும் குறை கூற முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு திகில் கதையை நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். வெலோனியாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா, முழு தொடரின் ஆன்மாவாக பரவி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இதனை உருவாக்கிய புஷ்கர் -காயத்ரிக்கும் பாராட்டுகள்..!” என பதிவிட்டிருக்கிறார்.
நித்யா எனும் ரசிகையின் பதிவில்,” வதந்தி இதயத்தை கனமாக்கிய தொடர்..! எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு உங்களை உணர்வுபூர்வமாக தொடருடன் இணைக்கும். என்னை பொருத்தவரை எத்தனை காட்சிகளில் கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் எஸ். ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பை காணலாம். இயக்குநரால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொடர். அவருக்கும் நன்றி” என பகிர்ந்திருக்கிறார்.
யூமரி பாலன் எனும் ரசிகரின் பதிவில், ” என்ன ஒரு தொடர்..! இந்த தொடரில் பங்களிப்பு செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக தலைவர் எஸ் ஜே சூர்யா சார், மது அருந்தும் காட்சியும், வசனமும் எனக்கு இறைவி திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நினைவு படுத்தியது. அருமை.. தொடர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டிருக்கிறார்.
வி வேலன் என்பவரின் பதிவில், ” வதந்தி- எஸ் ஜே சூர்யா நடிப்பில் வேட்டையாடியிருக்கும் தொடர். ஒளிப்பதிவாளர், பின்னணி இசை, கதை, நடிப்பு அனைத்தும் பிரமாதம். இதன் மூலம் எஸ் ஜே சூர்யாவால் நடிக்க முடியாத வேடம் ஏதும் உண்டா? என்ற அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். அத்துடன் இதைக் கடந்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் ? எஸ் ஜே சூர்யா ஒரு நேச்சுரல் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.” என பகிர்ந்திருக்கிறார்.
‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரில், எஸ். ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ் ஜே சூர்யா மூழ்கி விட்டார். இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.
The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>The post வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>இந்த ‘வதந்தி’ தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இத்தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் போராடும் கதை வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கதையை உருவாக்கியது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பேசும்போது, “நீண்ட காலமாக இந்த ‘வதந்தி’ தொடரின் கதை என் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விஷயங்கள், நாம் படிக்கும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தளங்களில் நமக்கு கிடைக்கும் தரவுகள் இது எல்லாம் நிறைந்ததுதான் இந்த தொடர்.
மிக நீண்ட காலமாக, எனக்குள் ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது, ‘நமக்கு தரப்படும் செய்திகளில் உண்மையிலேயே முழு உண்மையும் கிடைக்கிறதா, அல்லது உண்மையை சார்ந்து இருக்கும் பாதி உண்மையை மட்டுமே நாம் பெறுகிறோமா? இல்லை இவை அனைத்திலும், உண்மை மறைக்கப்பட்டு போகிறதா?’ இந்தக் கேள்விகள் என் மனதில் ஒலித்தன. இதுதான் இந்தக் கதையின் தொடக்கம்.
காலப்போக்கில், நான் நிறைய விஷயங்களைச் சேகரித்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது ஒரு தொடராக உருவாக்கப்படுவதற்கு என்னிடம் போதுமான விசயங்கள் இருப்பதை உணர்ந்தேன்..! அதுதான் இப்போது தொடராக மாறி உள்ளது.” என்றார்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி பேசும்போது, “ஒரு தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது. மக்கள் எப்படி பயணம் செய்கிறார்கள் அல்லது ஆன்லைனில் படங்களைத் தேடுகிறார்கள் என்பதைப் போன்றது.
கடந்த 2-3 ஆண்டுகளில், தென்னிந்திய படங்கள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் இருந்து வரும் இந்த ‘வதந்தி’ போன்ற கதைகள், அத்தகைய தனித்துவத்தை கொண்டுள்ளன. அதுதான் எங்களை ஆக்கப்பூர்வமான பல கதைகளை மீண்டும் மீண்டும் வழங்க தூண்டுகிறது.
பிரைம் வீடியோவுடன், எங்களது இந்த கதை மிக பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையவிருக்கிறது. இத்தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மேல் திரையிடப்பட உள்ளது.” என்றார்கள்.
The post வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2-ம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ‘ வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ் ஜே சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ”என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன்முதலாக வலைத்தள தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன்முதலாக வலைத்தள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம், ‘நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு… இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள். திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும்.
அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்.” என்றார்.
The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>The post அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுள்ளார்.
இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ளனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது.
திருமணம் என்பது தனது வாழ்க்கையில் காதலும் மேஜிக்கும் நிறைந்ததாக இருக்கும் என்ற கனவில் இருக்கும் அம்மு என்ற சராசரி பெண்ணைச் சுற்றித்தான் இந்தப் படம் சுழல்கிறது.
திருமண வாழ்க்கையில் அவளுடைய போலீஸ்-கணவன் அவளை முதல்முறையாக கை நீட்டி அடிக்கும்போது எல்லாமே தலைகீழாக மாறுகிறது. ஒரு முறை நடந்த சம்பவம் என்று அம்மு நினைக்க இது முடிவில்லாத கதையாகத் தொடர்கிறது. இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதுதான் இந்த அம்மு படத்தின் கதைச் சுருக்கம்.
“ஐஸ்வர்யா, நவீன் மற்றும் சிம்ஹா ஆகிய நடிகர்களின் அற்புதமான நடிப்பு இல்லாமல் எங்களால் இதைச் சாதிக்க முடியாது. என் மீதும் எனது குழு மீதும் நம்பிக்கை வைத்த கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பிரைம் வீடியோ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் இயக்குநர் சாருகேஷ்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், “ஒரு தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் பாத்திரத்தை எனக்குச் சித்தரிப்பது சவாலாகவும், அதன் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் பெண்கள் தொடர்பு கொள்ள நிறைய இருக்கிறது, அதில் மிக முக்கியமானது எப்போதும் ஒருவரின் உண்மையைப் பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் ஆகும்.
கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச், இயக்குநர் சாருகேஷ் சேகர், எனது சக நடிகர்கள் நவீன் மற்றும் சிம்ஹா மற்றும் பிரைம் வீடியோவில் உள்ள குழுவினரின் நிலையான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அம்முவுக்கு பார்வையாளர்களின் எதிர்வினைகருத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
“அம்முவின் கணவராக எனது கதாப்பாத்திரமான ரவியின் மனநிலையைப் புரிந்து கொள்வது முதலில் சவாலாக இருந்தது. ஒரு நடிகராக, இது போன்ற ஒரு சுவாரஸ்யமான கதையில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், அத்தகைய சவாலான கதாபாத்திரத்தை சித்தரிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சாருகேஷ், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக, பார்வையாளர்களின் மனதில் ஊடுருவும் ஒரு கதையை சிறப்பாகப் பின்னியுள்ளார்…” என்கிறார் நடிகர் நவீன் சந்திரா.
“கதையைக் கேட்ட மறுநிமிடம் அம்மு என்பது நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய தலைப்பு என்பதை நான் உணர்ந்தேன். ஐஸ்வர்யா மற்றும் நவீன் இருவரும் மிகவும் வலிமையான நடிகர்கள், அவர்கள் திரையில் நடிக்கும்போது உங்கள் கண்களைத் திருப்ப முடியாது. சாருகேஷ் கடைசிவரை பார்வையாளர்களை ஈர்க்கும் கதையை பின்னியிருக்கிறார்.” என்றார் நடிகர் பாபி சிம்ஹா.
இந்த ‘அம்மு’ திரைப்படம் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வரும் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் டப்பிங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
The post அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த திரையுலக நட்சத்திரங்கள்! appeared first on Touring Talkies.
]]>‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.
உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சாகசமும், கற்பனையும் கலந்த காவிய நாடகத் தொடரான ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் வெளியீட்டிற்கு முன்னர் பிரைம் வீடியோ, மும்பையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் எனப்படும் பிரத்யேக காட்சியை திரையிட்டது.
இத்தொடரில் நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென்,மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த்,தைரோ முஹாப்ஃதீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர், தயாரிப்பாளர் ஜே டி பெய்ன் உடன் கலந்து கொண்டனர்.
இந்த பிரத்யேக பிரீமியர் திரையிடல், திரை உலகினரை கவர்ந்தது. ஏனெனில் நடிகர்கள் மற்றும் பட குழுவினர், சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன் மும்பை திரையுலக பாணியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, அரங்கத்தினுள் நுழைந்தனர்.
இதில் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி, பாணி ஜே, ரசிகா துக்கல், சயானி குப்தா, மான்வி சுக்ரூ, ஜிம் ஸர்ப் என திரை உலகில் பிரபலமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அரங்கம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களின் விண்ணை முட்டும் கரவொலியுடன், இந்த தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெய்னின் முன்னுரையுடன் பிரீமியர் திரையிடல் தொடங்கியது.
The post ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த திரையுலக நட்சத்திரங்கள்! appeared first on Touring Talkies.
]]>The post “இரண்டு கணவர்களுடன் குடும்பம் நடத்தியது போல் இருந்தது” – நடிகர் பார்த்திபனின் வெப் சீரீஸ் அனுபவம்..! appeared first on Touring Talkies.
]]>வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பிரம்மா மற்றும் அனுசரண்.எம் ஆகியோரின் இயக்கத்தில் அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இந்த ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ வெப் சீரீஸ் வெளியாகவுள்ளது.
திறமையான நடிகர்களான கதிர், ஐஸ்வர்யா இராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பிரபல இயக்குநருமான நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இந்த வெப் சீரீஸில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக உலகளவில் மிக அதிக எண்ணிக்கையில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வெப் சீரீஸ் அமேஸான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் சீரிஸ் என்ற பெருமையைப் பெறுகிறது.
ஹிந்தி, கன்னடா, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மற்றும் ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனிஸ், போலிஸ், போர்ச்சுகீஸ், கேஸ்ட்லியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அராபிக் மற்றும் டர்க்கீஸ் போன்ற அந்நிய மொழிகளிலும் இது ஒளிபரப்பாகிறது. இதற்கும் கூடுதலாக பல அந்நிய மொழிகளில் சப்-டைட்டில்ஸ் உடன் இந்த சீரிஸ்-ஐ பார்த்து ரசிக்கலாம்.
8 எபிசோடுகளைக் கொண்ட இந்த புலன் விசாரணை கதையானது, ஒரு பள்ளிச் சிறுமி காணாமல் போவதைத் தொடர்ந்து தொழிலகங்கள் நிறைந்த ஒரு சிறு நகரத்தில் பல சீர்குலைவை விளைவிக்கிற நிகழ்வுகள் வழியாக பல திருப்பங்களும் எதிர்பாரா சம்பவங்களும் நிறைந்த பாதையில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
இந்த வெப் சீரீஸின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் படத்தின் கிரியேட்டிவ் இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரி, இயக்குநர்களான பிரம்மா, அனு சரண், நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தானபாரதி மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களுடன் அமேஸான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசும்போது, “இந்தக் கதையோடு நீண்ட நாட்கள் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் அதையே சுவாசித்திருக்கிறோம்; இந்த அற்புதமான அனுபவத்தில் பார்வையாளர்களும் பங்கு வகிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது சிறப்பான உணர்வைத் தருகிறது.
எனது கடந்த 32 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் சௌகரியமான முறையில் ஒரு படைப்பில் பணியாற்றி இருக்கிறேன் என்றால், அது இந்த சுழல் தொடரில்தான். நான் முதன் முதலில் நடிக்கும் வலைத்தள தொடர் இது.
படப்பிடிப்பு நெருங்கும் தருணத்தில் என்னைத் தொடர்பு கொண்டு புஷ்கர் & காயத்ரி பேசினார்கள். அவர்களது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடன் அதில் ஒரு ஜீவன் இருந்ததை உணர்ந்தேன்.
இது போன்ற சீரீஸ் மூலம் எனது டிஜிட்டல் அறிமுகத்தை செய்திருப்பது, அதுவும் சிறப்பான நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளோடு சேர்ந்து செய்திருப்பது உண்மையிலேயே எனக்குப் புத்துணர்ச்சி தரும் அனுபவமாகும்.
நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு புராணக் கதை உண்டு. ஞானப் பழம் யாருக்கு என்ற அநத கதையில், ஞானப் பழத்திற்காக முருகன் உலகமெல்லாம் சுற்ற சென்று விடுவார். விநாயகர் அருகிலிருக்கும் அப்பா, அம்மாவை சுற்றிவிட்டு, ஞானப் பழத்தைப் பெற்று விடுவார். அந்த விநாயகர் கதைதான் இந்த அமேசான் நிறுவனத்தின் கதை.
அந்தக் காலத்தில் சிவாஜியைவிட மிகச் சிறந்த நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய நடிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் போனது. ஏனெனில் நடிகர்களென்றால் ஒவ்வொரு ஊர், ஊராகச் சென்று நடிக்க வேண்டும். சென்னையில் அழகாக நடிக்க வேண்டும். பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று மீண்டும் அதே போல் அழகாக நடிக்க வேண்டும். பிறகு மும்பைக்குச் சென்று அதே போல அழகாக நடிக்க வேண்டும்.
ஆனால் அமேசானில்.. ஒரே ஒரு தொடரில் நடித்தால், உலகத்தில் உள்ள 240 நாடுகளில் ஒரே நேரத்தில், இந்த தொடரைப் பார்க்க முடியுமென்றால், இதுதான் அமேசானின் ஞானப்பழம். நம்முடைய படைப்பை உலக அளவில் ஒரே தருணத்தில் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அது மட்டற்ற மகிழ்ச்சிதானே..?!
ரெண்டு பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவது கடினம் என்பார்கள். ஆனால் இங்கு இரண்டு புருஷன்களுடன் குடும்பம் நடத்திய அனுபவம் எனக்கேற்பட்டது. ஆனால் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஒரே ஆள் இரட்டை வேடம் போட்டது போல் இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும், சந்தானபாரதி போன்ற கலைஞர்களையும் மனதார பாராட்டுகிறேன்.
இந்தத் தொடரில் ‘சண்முகம்’ என்ற கதாபாத்திரத்தில் தொழிற்சங்க தலைவராகவும், ஒரு பெண்ணின் தகப்பனாராகவும் நடித்திருக்கிறேன். என் மகள் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த தெரியாது. எனக்கு நடிக்க தெரியாது அதனால் என்னுடைய நடிப்பு நன்றாக இருக்கும்.” என்றார்.
The post “இரண்டு கணவர்களுடன் குடும்பம் நடத்தியது போல் இருந்தது” – நடிகர் பார்த்திபனின் வெப் சீரீஸ் அனுபவம்..! appeared first on Touring Talkies.
]]>The post ஜோதிகா-சூர்யா தயாரித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை 2-D எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோடியான ஜோதிகா-சூர்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் R.B. டாக்கீஸின் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு.
இந்தப் படத்தின் முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் (அறிமுகம்) இருவரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவினை கோபிநாத் செய்துள்ளனர். இயக்குநர் சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் மூவரின் கதாபாத்திரங்களின் புகழ் பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும்.
இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப் பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று.
அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பாஸ இவர்கள் இருவர்பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும்.
ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழ வேண்டிய படம். எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு, தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.
இந்தப் படம், பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 240 நாடுகளிலும், மற்றுமுள்ள பிரதேசங்களிலும் வரும் ஏப்ரல் 21-ம் தேதி வெளிவர இருக்கிறது.
The post ஜோதிகா-சூர்யா தயாரித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம் appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் நடித்த ‘மகான்’ படம் ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் சென்சாரில் ‘U / A’ சான்றிதழைப் பெற்றுள்ளது.
துவக்கத்தில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில்தான் வெளியாகப் போவதாகச் செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. இந்தச் செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 10-ம் தேதியன்று அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த மகான் படம் வெளியாவதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது நினைவிருக்கலாம்.
The post விக்ரம் நடித்த ‘மகான்’ படம் ஓடிடியில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post கல்யாண வீடியோவை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த கத்ரீனா கைப் appeared first on Touring Talkies.
]]>பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003-ம் ஆண்டு ‘பூம்’ என்ற ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலுக்கும் இடையில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.
இவர்களின் திருமணம் கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள Six Senses என்ற கோட்டையில் நடைபெற்றது.
இந்தத் திருமணம் மிகப் பெரும் பொருட்செல்வில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், இவர்களின் திருமணத்தை பதிவு செய்து வெளியிட அமோஸான் ஓடிடி தளம் 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இவர்களது திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காத்ரீனா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
The post கல்யாண வீடியோவை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த கத்ரீனா கைப் appeared first on Touring Talkies.
]]>