The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.
மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தொடங்கி வைத்த இந்த அனைவரும் சமம் நாமும் தொடர வேண்டும் என 10 வருடங்களுக்கு முன்பே அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய படப்பிடிப்பிலும் தன்னுடைய அலுவலகத்திலும் நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.
The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>The post “விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா appeared first on Touring Talkies.
]]>‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமான நடிகை அபிநயாவிற்கு காது கேட்காத மற்றும் வாய் பேசவும் முடியாத மாற்றுத் திறனாளியாவார். இவரை நடிகர் விஷால் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த வாரம் கிசுகிசுக்கள் ரெக்கை கட்டி பறந்தன.
ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறு என்று மறுத்துள்ளார் நடிகை அபிநயா. “மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக நான் நடித்துள்ளேன். சினிமாவில் கணவன் மனைவியாக நடித்ததால் உண்மையில் அப்படி ஆகிவிட முடியுமா..?” என்னும் கேள்வியையும் நடிகை அபிநயா எழுப்பி உள்ளார்.
ஆக, இந்தக் கல்யாண செய்தியும் புஸ்ஸாகிவிட்டது. அப்போ நிசமா விஷாலுக்கு எப்போதாங்க கல்யாணம்..?
The post “விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா appeared first on Touring Talkies.
]]>The post சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் தனது படத் தயாரிப்பு செலவுக்காக, பிரபல பைனான்சியரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
பின்னர், இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்றுக் கொள்வது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதைம் திருப்பிச் செலுத்தும்வரை, விஷால் நடிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டு உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கு விஷால் தரவில்லை.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த லைகா நிறுவனம், “எங்களுக்கு கொடுக்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கொடுக்காமல், ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டு படத்தை வெளியிட அனுமதி தந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் 15 கோடி ரூபாயை செலுத்தவில்லை.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை..?” என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது விஷால் தரப்பில், “லைகா நிறுவனம் மேல்முறையீட்டுக்கு சென்றதால்தான் நாங்கள் பணத்தை செலுத்தவில்லை. வீரமே வாகை சூடும் படம் ஓடாததால் எனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கான வட்டியை இப்போதுவரையிலும் நான் கட்டி வருகிறேன். இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட 15 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை இன்னும் 6 மாதங்களானாலும் என்னால் செலுத்த இயலாது.ஒரு படத்தை எடுக்க பெரும் பாடுபடும் நிலையில், கடைசி நேரத்தில்தான் தடை கோருகிறார்கள்..” என்று வாதிட்டனர்.
அப்போது லைகா தரப்பில், “விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த நீதிமன்றத்திற்கு தொடர்ந்து தவறான தகவல்களையும் தெரிவிக்கிறார். எனவே அவர் தன்னுடைய சொத்துக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும்” என்று வாதிடப்பட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தொடர்ந்து படங்களில் நடிக்கும்போது நீங்கள் கடனை திரும்ப செலுத்தலாமே? உங்களுடைய திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டதா?” என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது விஷால் தரப்பில், “என் சினிமா வாழ்க்கை முடிவில்லை. எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன்..” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The post சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Touring Talkies.
]]>The post விஷால்-எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் ரீது வர்மா appeared first on Touring Talkies.
]]>தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்ததுவரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார்.
தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
இவர் தற்போது ‘ஓகே ஓகே ஜீவிதம்’ என்ற தெலுங்கு படத்திலும் ‘கானம்’ என்ற தமிழ், தெலுங்கு இரு மொழித் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் இவர் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ (தெலுங்கில் ‘ஆகாசம்’) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகை ரிது வர்மா, விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக அடுத்த மாதம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பிற்கு செல்லவிருக்கிறார் ரீது வர்மா.
ரிது வர்மா தென்னிந்திய திரைத்துறையின் பல மொழிகளிலும் பணிபுரிவதால் மிக பிஸியான நடிகையாக மாறியுள்ளார். விரைவில் மலையாள திரையுலகிலும் இவர் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post விஷால்-எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் ரீது வர்மா appeared first on Touring Talkies.
]]>The post “ஆர்யா திடீர்ன்னு நல்லா நடிக்க ஆரம்பிச்சிட்டான்..” – நடிகர் விஷாலின் கிண்டல் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பாடல்களை தமன் இசையமைக்க, R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை இயக்கம் – ரவிவர்மா, பின்னணி இசை – சாம் C.S. படத் தொகுப்பு – ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா.
‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய
இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப் பெரிய பலம் அவர்தான்.
ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.
அவர் பணத்தை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன்.
ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.
அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனைதான் இந்தப் படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப் போகிறது என்று சொன்னால், அசராமல் “இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்வார். எதையுமே சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, அப்போதுதான் சர்பாட்டா படத்தில் நடித்துவிட்டு வந்திருந்தார். உண்மையிலேயே அந்த ஷூட்டிங்கில் பாக்ஸிங் கற்றுக் கொண்டு இந்த ஷூட்டிங்கிற்கு வந்து என்னை அடி வெளுத்து விட்டான்.
ஏற்கனவே அவருடன் ‘அவன் இவன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படமும் சூப்பராக இருக்கும்.. இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும்போதும் இதே ரசனையோடு இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன்.
மிருணாளினி ஆல்வேஸ் வெல்கம். நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த முறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம். கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும்போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 600 தியேட்டர்களில் மிகப் பிரமாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது. இந்த எனிமி நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம். இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அட்டகாசமாக நடித்துள்ளார்கள்…” என்றார்.
The post “ஆர்யா திடீர்ன்னு நல்லா நடிக்க ஆரம்பிச்சிட்டான்..” – நடிகர் விஷாலின் கிண்டல் appeared first on Touring Talkies.
]]>The post “தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறேன்..” – நடிகர் விஷால் பேட்டி appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளேன். பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர் இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ முடியவில்லை.
தேர்தலின்போது திமுக நிறைய வாக்குறுதிகளை அளித்தது. அவைகளை தொடர்ந்து நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இ்ப்போது அதைவிட சிறப்பாக அவர் செயல்படுவார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்..” என்றார் நடிகர் விஷால்.
The post “தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறேன்..” – நடிகர் விஷால் பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post ‘சக்ரா’ திரைப்படத்திற்கு மீண்டும் தடையுத்தரவு..! appeared first on Touring Talkies.
]]>ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருந்த சூழலில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ‘ஆக்சன்’ திரைப்படத்தின் மூலம் தனக்கேற்பட்ட 8 கோடி ரூபாய் நஷ்டத்தை விஷால் தான் சரி கட்டுவதாகச் சொன்னார். ஆகவே, எனக்கு தகுந்த நஷ்ட ஈட்டினை கொடுக்காமல் சக்ரா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று கேட்டு நீதிமன்றப் படியேறினார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 11-ம் தேதியன்று “ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்திவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்…” என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இதே வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்திரன் “இந்த ‘சக்ரா’ படத்தின் கதையை முதன்முதலில் என்னிடம்தான் இந்தப் படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஆனந்தன் கூறினார். நான் இந்தப் படத்தை தயாரிப்பாதற்காக சில முன் பணிகளைச் செய்திருக்கிறேன். எனவே இதற்காகவும் தனக்கு நஷ்ட ஈடு வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
ஆனால், “இந்தப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்…” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், இப்போது இதே கோரிக்கையை முன் வைத்து மீண்டும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்திரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதில் காப்புரிமை சட்டத்தை மீறியிருப்பதால் இதற்கு தனக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நாளை வியாழக்கிழமைக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி விஷால் தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ‘சக்ரா’ படத்தை வெளியிடவும் தடை விதித்திருக்கிறது.
‘சக்ரா’ திரைப்படத்தை இந்த வார வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 19-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் விஷால். இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கல் எழுந்துள்ளது.
பாவம் விஷால்.. இ்ப்போதைக்கு அவருக்கு பெரிய அளவில் யாரும் உதவிக்கரம் நீட்டாமல் இருக்கும் சூழலில் இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வரப் போகிறார் என்று தெரியவில்லை.
The post ‘சக்ரா’ திரைப்படத்திற்கு மீண்டும் தடையுத்தரவு..! appeared first on Touring Talkies.
]]>The post விஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..? appeared first on Touring Talkies.
]]>“அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு. கடுமையான மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார்” என்றெல்லாம் செய்திகள் வந்தன.
அந்த மைக்ரேன் தலைவலிக்கு ‘அவன் இவன்’ படத்தின்போது பல காட்சிகளில் அவர் ஒன்றரை கண்ணை வைத்து நடித்திருந்ததுதான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது வேறு சில காரணங்களும் விஷாலின் ‘மைக்ரேன் தலைவலி’ வந்தமைக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்பவருக்கும் இடையே திருமண நிச்சயத்தார்த்தம் சென்ற வருடம் நடைபெற்றது. ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கட்டிடம் கட்டி முடித்த பின்பு அந்தக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் சபதம் எடுத்திருந்ததால் கட்டிடம் கட்டி முடிக்கும்வரையிலும் திருமண நிகழ்வும் காத்திருந்தது.
இடையில் திடீரென்று மணமகள் வீட்டார் இந்தத் திருமணத்தை முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மை என்று இப்போது தெரிகிறது. விஷாலுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.
இந்தத் தோல்வியும் விஷாலின் திடீர் உடல்நலக் குறைவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள். கூடவே அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் விஷால் நிறைய பணம் வாங்கியிருந்ததாகவும், இப்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு வந்திருப்பதால் ஒட்டு மொத்தமாய் அவருக்கு மைக்ரேன் தலைவலி வந்துவிட்டது என்கிறார்கள்.
“விஷால், நிச்சயமாக இது எல்லாவற்றையும் சமாளித்து கரை சேருவார்…” என்று அவரது நண்பர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள்.
The post விஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..? appeared first on Touring Talkies.
]]>The post விஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – எஸ்.தமன், கலை இயக்கம் – டி.ராமலிங்கம், படத் தொகுப்பு – ரெய்மண்ட் டெர்ரிக் கிரெஸ்டா, எழுத்து – ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ரவி வர்மா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பி.சொக்கலிங்கம், உடைகள் வடிவமைப்பு – ப்ரீத்தா அகர்வால், பாடல்கள் – அறிவு, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, புகைப்படங்கள் – டி.நரேந்திரன், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமத், தயாரிப்பு – எஸ்.வினோத்குமார், எழுத்து, இயக்கம் – ஆனந்த் சங்கர்.
ஆர்யா விஷாலுடன் இணைந்து ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததில்லை. அவர் விஷாலுக்கு வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கவிருக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் ஆர்யாவும் சில நாட்கள் கலந்து கொண்டார்.
மீண்டும் சென்னையில் 16 நாட்களும், ஊட்டியில் 12 நாட்களும், 32 நாட்கள் மலேசியாவிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.
மலேசியாவில் நடைபெறும் 32 நாட்கள் படப்பிடிப்பு முழுவதிலும் ஆர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.
The post விஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..! appeared first on Touring Talkies.
]]>The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இது குறித்து அவர் முழுமையான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “விஷால் எனது நெடுநாளைய நல்ல நண்பர். அடுத்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி செய்யும் குணமுள்ளவர். அவருடன் பழகும் நண்பர்கள் யார், என்ன சொன்னாலும் நம்பிவிடுவார். பிறகு அவர்களாலேயே சிக்கலில் மாட்டிக் கொள்வார். இப்படித்தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வந்தபோது விஷால் அதில் நிற்பதாகவே இல்லை. அவர் ஒரு அணி அமைத்து அந்த அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாகத்தான் முதலில் அவருடைய திட்டம் இருந்தது.
இது குறித்து பல முறை அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வேனில் அமர்ந்து மணிக்கணக்காக நான் பேசியிருக்கிறேன். பின்பு அவரது அலுவலகம், என் அலுவலகம் என்று பல இடங்களிலும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
என்னை பொருளாளர் பதவிக்கு நிற்கச் சொன்னார். நானும் “ஓகே” என்று சொல்லிவிட்டேன். டி.சிவாவை தலைவர் பதவிக்கு முதலிலேயே நிறுத்தலாம் என்று முடிவு செய்திருந்தோம்.
திடீரென்று விஷால் தனது நண்பர்கள் பேச்சைக் கேட்டு “தலைவர் பதவியில் நான் நிற்கிறேன்…” என்றார். இதில் எனக்கு உடன்பாடில்லை. “இரட்டைக் குதிரையில் சவாரி செய்வது சரியல்ல…” என்று விஷாலிடம் சொன்னேன். விஷால் கேட்கவில்லை. அப்போ.. நானும் போட்டியிடவில்லை என்று சொல்லி விலகிக் கொண்டேன்.
பிறகு சுயேச்சையாக தனித்து நிற்கலாம் என்று கூட நினைத்து, பின்பு அதுவும் வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொண்டேன். விஷால் அந்தத் தேர்தலில் நின்றிருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து..” என்றார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
The post “விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..! appeared first on Touring Talkies.
]]>