Thursday, April 11, 2024

“விஷாலுடன் திருமணமா..?” – “பச்சைப் பொய்” என்கிறார் நடிகை அபிநயா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷால் ‘நாடோடிகள்’ பட நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான செய்தி பொய்யானது என்று நடிகை அபிநயாவே சொல்லியிருக்கிறார்.

நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமான நடிகை அபிநயாவிற்கு காது கேட்காத மற்றும் வாய் பேசவும் முடியாத மாற்றுத் திறனாளியாவார். இவரை நடிகர் விஷால் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த வாரம் கிசுகிசுக்கள் ரெக்கை கட்டி பறந்தன.

ஆனால் இத்தகவல் முற்றிலும் தவறு என்று மறுத்துள்ளார் நடிகை அபிநயா. “மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு மனைவியாக நான் நடித்துள்ளேன். சினிமாவில் கணவன் மனைவியாக நடித்ததால் உண்மையில் அப்படி ஆகிவிட முடியுமா..?” என்னும் கேள்வியையும் நடிகை அபிநயா எழுப்பி உள்ளார்.

ஆக, இந்தக் கல்யாண செய்தியும் புஸ்ஸாகிவிட்டது. அப்போ நிசமா விஷாலுக்கு எப்போதாங்க கல்யாணம்..?

- Advertisement -

Read more

Local News