The post ஆதிக் – ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
The post ஆதிக் – ஐஸ்வர்யா தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post ராணுவ வீரராக நடிக்கும் சூர்யா? appeared first on Touring Talkies.
]]>இது சூர்யா ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர் பாலு, “இப்படத்தில் சூர்யா, ராணுவ வீரராக நடிப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்து உள்ளார்.
The post ராணுவ வீரராக நடிக்கும் சூர்யா? appeared first on Touring Talkies.
]]>The post அம்மாவுக்கு பிடிக்காத பெயர்- நடிகர் சூரி appeared first on Touring Talkies.
]]>வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு நடித்த காட்சி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பரோட்டா சூரியாக சினிமாவிலும் ரசிகர்களுக்கும் பிரபலமானார்.
பெரிய நடிகர்களுடன் நகைச்சுவை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்.
சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசிய சூரி என் தாத்தா பெயர் தான் எனக்கு. அதனால் அம்மா என்னை பெயர் சொல்லி அழைக்க மாட்டார் சாமி என்று தான் கூப்பிடுவார். தாத்தா பெயரை பிடிக்காத நான் சூர்யா என மாற்றிக்கொண்டேன். அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்னை திட்டி விட்டார்.
சென்னைக்கு வந்த பிறகு அம்மா வைத்த பெயரும்,நான் வைத்த சூர்யா என்ற பெயர் காலபோக்கில் மாறி சூரி ஆனது. சினிமாவில் இந்த பெயர் தான் நிலைத்து நிற்கிறது,எனது அடையாளத்தை எல்லாம் சூரி என மாற்றி விட்டேன் என்றார்.
The post அம்மாவுக்கு பிடிக்காத பெயர்- நடிகர் சூரி appeared first on Touring Talkies.
]]>The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>இதற்குப் பின்பு ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவை வைத்து இயக்கி பெரும் வெற்றியடைந்தார் பாலா. அதோடு சூர்யாவின் அப்பா சிவக்குமாருடன் பாலாவுடனான நட்பு தனித்துவம் வாய்ந்தது. பாலாவுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே சிவக்குமார்தான். அந்த அளவுக்கு பாலா சிவக்குமார் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ‘2-டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை துவங்கினார் பாலா. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று இரவு இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதுதான் :
“என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.
மற்றபடி ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும்…
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.
]]>The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.
“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.
The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.
]]>The post “விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் “தம்பி நல்லபடியா செய்வோம்” என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுது கொண்டே சொல்வார்.
இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். இதற்காக ராஜாவிற்கு நன்றி.
பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு. இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல்…” என்றார்.
The post “விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>The post “எங்கள் குடும்பத்துப் பெண்களின் தியாகம்தான் எங்களை வளர்த்துள்ளது..” – நடிகர் சூர்யாவின் நன்றி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசும்போது, “கொரோனா காலகட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கடுமையான சூழலிலும் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்த நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஏற்கனவே நன்றி தெரிவித்துவிட்டோம். அவர்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளோம்.
கேமேராவுக்கு பின்பு வேலை பார்த்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தயாரிப்புப் பணிகளை செய்த ராஜாவுக்கு நன்றி. இப்படம் உருவாகுவதற்கு இயக்குநர் முத்தையா எப்படியோ, அதே போல்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் வெளியாகும்வரை இருந்த ராஜாவும் முக்கிய காரணம். ராஜா மூலமாகத்தான் இந்த வெற்றியை இன்று அடைய முடிந்தது.
மனோஜ், செந்தில் சார், விஜய், மஹாதேவன், நந்து, கார்த்தி, குணா, சத்யா என இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. எந்தவித தங்கு தடையுமின்றி ‘விருமன்’ வெற்றிக்கு இவர்கள்தான் முக்கிய காரணம். இதற்காகவே இங்கு அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டேன். அதை ராஜா மிகவும் அழகாக நடத்திக் காட்டியுள்ளார்.
கார்த்தி சொன்ன வார்த்தைகள் உண்மையானதுதான். தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது. குடும்பங்களின் தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும்தான் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்யக் காரணமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
எங்களுக்கு பின் மிக பெரும் பலம் உள்ளது. எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள்தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும்.
ஒரு ஆண் ஜெயிப்பது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின் தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே இருக்கலாம், தியாகம் என்ற சொல்லுக்குள் பல வார்த்தைகள் உள்ளது.
என் தங்கை பிருந்தா மற்றும் செல்வி சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. “எங்களுக்கு சொர்க்கம் என்றால், நாங்கள் சாப்பிட்ட தட்டை வேறு ஒருவர் கழுவுவதுதான்…” என்றார். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி…” என்றார்.
The post “எங்கள் குடும்பத்துப் பெண்களின் தியாகம்தான் எங்களை வளர்த்துள்ளது..” – நடிகர் சூர்யாவின் நன்றி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை appeared first on Touring Talkies.
]]>நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சிலர் காவல் துறையிலும், நீதிமன்றத்திலும் புகார் கொடுத்தனர். இதையொட்டி நடிகர் சூர்யா, மற்றும் இயக்குநர் ஞானவேலு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கினை எதிர்த்து நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலுவும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று கூறியதோடு வழக்கை ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
The post ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் தடை appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் சூர்யாவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது..?” நடிகர் சிவக்குமார் சொன்ன ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இது குறித்து நடிகர் சிவகுமார் பேசுகையில், ”கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ படம் வெளியானது. அந்தச் சினிமாவைப் பார்த்துவிட்டு தமிழக அரசு “இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது. “நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென” ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். “அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரையிலும் நடக்காத விசயம் அந்த ‘ஜெய் பீம்’ படத்தினால் நடந்தது.
அந்தப் படத்தை உருவாக்கும்போது இதுவெல்லாம் நடைபெறும் என்று யாருமே நினைக்கவில்லை. சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ‘ஜெய் பீம்’தான்.
எனக்கும், என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இந்தப் பையன்(சூர்யா) என்ன ஆகப் போகிறான்..?” என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் அவன் நாலு வார்த்தை பேசினால் அது அதிசயம்தான்.
‘ஹோலி ஏஞ்சல்ஸ்’ என்ற பள்ளிக் கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம்தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான்.
ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன் அவன்.
அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர்.
நாங்களும் வேறு வழி இல்லாமல் ‘செயின்ட் பீட்ஸ்’ என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம்.
அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980=88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன்.
நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக் கொண்டே இருக்கிறான். இறுதியாக பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். “நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம்” என்றார்.
அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் “அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன்” என்று கதறி அழுதான். “எங்க அப்பாவை ரோட்டுல நிக்க வைச்சுட்டாங்க..” என்று சொல்லி கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். அதன் பிறகு நாங்கள்தான் அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.
அதன் பிறகு கல்லூரி படிப்பிற்காக ‘லயோலா கல்லூரி’க்கு சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், “சூர்யாவுக்கு காலேஜ் சீட் வேண்டும்” என கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள்..” என்று சொன்னார். நான் “ஏன்?” என்று கேட்டேன். “நடிகர் பாலாஜியின் பையன், சிவாஜியின் பையன், கொட்டாரக்கரா பையன்… என திரையுலகினரின் வாரிசுகள் யாருமே இங்கே பட்டப் படிப்பை நிறைவு செய்யவில்லை…” என சொன்னார். “என் பையன் நிறைவு செய்வான்” என அவரிடம் உறுதியளித்தேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார்.
ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் சூர்யாவின் அரியர்ஸ் பாடங்கள் உயர்ந்தது. அப்போது அவனிடம், “டிகிரியை முழுசா முடிக்கணும். இல்லையென்றால்..” என்று கோபமாக சொன்னேன் அதன் பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான்.
அதன் பிறகு அவனிடம் “தொடர்ந்து எம்.காம் படி” என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான். “படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை…” என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான்.
அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார்.
அப்போது என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர் சூர்யாவை, “இவர் சிவகுமாரின் பையன் சரவணன்” என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னை தொடர்பு கொண்ட இயக்குநர் வசந்த், “சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா?” என கேட்டார். அப்போது அவரிடம் “அவனுக்கு அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாடவே தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேச மாட்டான்…” என சொன்னேன். ஆனால் வசந்தோ, “எனக்கும் இது போன்ற பையன்தான் வேண்டும்…” என்றார்.
டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக சூர்யாவை அழைத்துச் சென்றார் வசந்த். அப்போதுகூட அவரிடம் “அவன் வாழ்க்கையே நாசம் செய்து விடாதீர்கள்” என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் அந்தப் படம் துவங்கியது. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார்தான் சென்று வந்தார்.
அந்தப் படம் வெளியானபோது நான் எனது படத்தின் படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் சென்னையில் ‘காசி’ திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தான் சூர்யா. அங்கிருந்த ஒருவர் சூர்யாவிடம் கை குலுக்கி “சூப்பராக சொதப்பிவிட்டீர்கள்…” என்று விமர்சனம் செய்திருக்கிறார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சூர்யா.
ஆறு மணி காட்சி.. அதன் பிறகு இரவு காட்சி… என அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு காட்சிகளும் அந்தப் படத்தைப் பார்த்தான் சூர்யா. அதன் பிறகு எனக்கு போன் செய்து, “அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். டொரன்ட்டோவிலிருந்தும்… வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். “படம் பார்த்தேன். பல காட்சிகளில் நீ நல்லா நடிக்கலை…” என்று சொன்னதாகச் சொல்லி வருத்தப்பட்டான்.
திரையுலகில் ஒன்றுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு, மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. அவனது எட்டாவது படத்தில்தான் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார்.
இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான்.
இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன்….” என்றார்.
The post “நடிகர் சூர்யாவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது..?” நடிகர் சிவக்குமார் சொன்ன ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>உலகின் மிக உயர்ந்த சினிமா விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும்.
அந்த ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் அமைப்பு, தனது சொந்த யூடியூப் சேனலில் ’ சீன் அட் தி அகாடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜாமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து ஓடிடியில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் பேசப்பட்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஆஸ்கர் அமைப்பு.
அந்த வீடியோவில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குநர் அந்த படத்தைப் பற்றிப் பேசும் சில விஷயங்களையும் ஆஸ்கர் அமைப்பு பகிர்ந்துள்ளது.
“இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக பெரிய கவுரவம்” என்று திரையுலகத்தினர் பலரும் சூர்யாவிற்கும், இயக்குநர் ஞானவேலுவிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
The post ஆஸ்கர் விருது அமைப்பின் யூடியூப் சேனலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>