The post ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..! appeared first on Touring Talkies.
]]>வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்து அதன் பெரும்பாலான காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ மோகன் ஹபு அவர்களின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் தளத்திற்காகத் தயாரிக்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்தக் கட்டப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
வரலட்சுமி சரத்குமார் & சந்தோஷ் ப்ரதாப் இருவரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் ஆகியோர் EINFACH ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். தயாள் பத்மநாபன் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதையையும் சேர்த்தே கவனிக்கிறார். இந்தப் படத்தை டி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும், தயாள் பத்மநாபன் படத்தில் ஜான் மகேந்திரனுடன் இணைந்து வசனமும் எழுதுகிறார்.
படத்தின் தொழில் நுட்பக் குழு விவரம்:
கான்செப்ட்: மோகன் ஹபு,
இசை & பின்னணி இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: ஆர். செழியன்,
எடிட்டர்: ப்ரீத்தி பாபு,
கலை இயக்குநர்: விதால் கோசனம்,
பாடல் வரிகள்: பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன்,
நடன இயக்குநர்: லீலா குமார்,
ஒலிக்கலவை: உதய் குமார்,
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: வினோத் குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்,
ஒப்பனை: சண்முகம்,
உடை: சக்ரி,
ஆடை வடிவமைப்பாளர்: மீரா சித்திரப்பாவை,
விளம்பர வடிவமைப்பாளர்: நவீன் குமார்.
The post ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..! appeared first on Touring Talkies.
]]>The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த ’யசோதா’ படத்தில் நடித்தது பற்றி நடிகை வரலட்சுமி பேசும்போது, “இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. முதலில் இது போன்ற கதையையும் கதாபாத்திரங்களையும் எப்படி எழுதினார்கள் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன்.
இந்தப் படத்தில் நான் வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக் கூடிய ஒருத்தி. என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.
என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில்தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.
என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும்.
படத்தை இயக்கிய இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இவர்களைப் போன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும்.
வாடகைத் தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத் தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை, தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.
சமந்தாவை கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.
படத்தில் யசோதா கதாபாத்திரம் மிகவும் வலுவானது. சமந்தா அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். எனக்குப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களும் பிடிக்கும். ஏனென்றால் கதைதான் படத்தின் ஹீரோ…” என்றார் நடிகை வரலட்சுமி.
The post “யசோதா’ படத்தில் கதைதான் ஹீரோ..” – சொல்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்! appeared first on Touring Talkies.
]]>The post வரலஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவு..! appeared first on Touring Talkies.
]]>மேலும் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி, சுனைனா, ராஜ்ஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பாம்பே), ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமாரி, அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், ப்ரோமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகம் – லக்ஷ்மிபதி கண்டிபுடி, இணை இயக்குநர் – வம்சி, சண்டைப் பயிற்சி இயக்கம் – நந்து- நூர், VFX: ராஜேஷ், நடனப் பயிற்சி இயக்கம் – சுசித்ரா சந்திரபோஸ்- ராஜ் கிருஷ்ணா, கலை இயக்கம் – ஆஷிஷ் தேஜா புலாலா, படத் தொகுப்பு – தர்மேந்திரா ககரலா, ஒளிப்பதிவு – நாஞ் சமிதிஷெட்டி, எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் – சீதாராமராஜூ மலேலா, இசை – கோபி சுந்தர், வழங்குபவர் – மஹரிஷி கொண்டலா, தயாரிப்பாளர் – மகேந்திர நாத் கொண்டலா, கதை- திரைக்கதை- வசனம் – அனில் கட்ஸ், கூடுதல் திரைக்கதை – சன்னி நாகபாபு, பாடல்கள் – ரஹ்மான், மிட்டாப்பள்ளி சுரேந்தர், ஒப்பனை – சித்தூர் ஸ்ரீனு, உடைகள் – மானசா, புகைப்படங்கள்: ஈஸ்வர், விளம்பர வடிவமைப்பு: சுதிர், டிஜிட்டல் & மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா, பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One).
இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “இந்தப் படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை.
படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்..” என்றார்.
இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கொடைக்கானல் ஷெட்யூலில் நடிகை வரலஷ்மி மற்றும் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான மகேந்திரநாத் கொண்டலா பேசும்போது, “படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை இந்த 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம். சுசித்ரா சந்திரபோஸ் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, நந்து- நூர் இயக்கியுள்ள சண்டை காட்சிகளை இங்கு படமாக்கினோம்.
இதற்கடுத்து விசாகப்பட்டினம் ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவு செய்து விட்டோம். பாடல்களை பாடகி சித்ரா, அனுராக் குல்கர்னி, ரம்யா பெஹரா மற்றும் அம்ரிதா சுரேஷ் பாடியுள்ளனர்” என்றார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது.
The post வரலஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவு..! appeared first on Touring Talkies.
]]>The post காட்டேரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>திருட்டுத் தொழில் செய்து வரும் நாயகன் வைபவ்வுக்கு திருமணமான நாளன்றே சோதனை வருகிறது. நைனா என்னும் டானிடம் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார் வைபவ். அவரிடமிருந்து தப்பிக்க வேண்டி தங்கப் புதையலை தேடி சென்ற தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, தனது நண்பர்கள் மற்றும் புது மனைவியுடன் பறக்கிறார் வைபவ்.
இவரது பயணம் கொடைக்கானல் அருகேயிருக்கும் பூம்பாறை கிராமத்தையும் கடந்து காடுகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு மலை கிராமத்தை சென்றடைகிறது. அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு அதிர்ச்சி இந்தத் திருடர் கூட்டணிக்குக் காத்திருக்கிறது.
அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள். இப்போது பேயாக அதே கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் இந்தத் திருடர் கூட்டம் வந்து அவர்களிடத்தில் சிக்கிக் கொள்கிறது.
கிராமத்தில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் வழியே கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். இதிலிருந்து வைபவ் தனது கூட்டாளிகளுடன் தப்பித்தாரா? இல்லையா..? தங்கப் புதையல் கிடைத்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
காமெடி பீஸான ரவுடிக் கும்பலின் தலைவராக வைபவ் நடித்திருக்கிறார். நகைச்சுவையைக் கையாள முடியவில்லை. அதேபோல் பயத்தையும் காட்ட முடியவில்லை. இயக்குநர் சொன்னதை அப்படியே செய்துவிட்டு தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.
இவரது மனைவியாக சோனம் பஜ்வா.. அழகில்லை. நடிப்பும் இல்லை. எப்படி இவரைத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆத்மிகா மன நல மருத்துவராக நடித்திருக்கிறார். இவருக்கும் பெரிய நடிப்புக்கான ஸ்கோப் இல்லை.
பேய்களாக வந்து அட்டகாசம் செய்யும் வரலட்சுமியின் “நான் அழகா இருக்கேனா..?” டயலாக் மட்டுமே சற்று சுவாரஸ்யத்தைத் தருகிறது. அதேபோல் இவரது தங்கையான மணாலி ரத்தோரும் சில காட்சிகளில் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.
இவர்கள் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தை எடுத்திருக்கலாம். அவ்வளவு ஸ்கோப் உள்ள கதையம்சம். ஆனால் இப்படியா அதை கொத்துக் கறி போடுவது..?
ஜான் விஜய்க்கு வழக்கம்போல ஸ்டைலான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ‘மைம்’ கோபி, பொன்னம்பலம், ‘லொள்ளு சபா’ மனோகர், கருணாகரன், ரவி மரியா என்று பேய் படங்களுக்கே உரித்தான நடிகர்கள் இருந்தும் படத்தில் இயக்கம் என்ற ஒன்றே இல்லாததால் அனைவரும் வந்து போனதாகவே கணக்கில் வருகிறது.
ரவி மரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் வக்கிரமான உணர்வைக் காட்டுகிறது. ரவி மரியா தொடர்ந்து ஏன் இது போன்ற கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார் என்பதும் புரியவில்லை. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் கேவலமாக இருக்கிறது.
பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு ஓரளவு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. 1960-ல் நடக்கும் கதைக்குப் பின்னணியில் ஒளிப்பதிவும் அழகாக நின்றுள்ளது.
பின்னணி இசையில் பயத்தைக் கூட்ட எத்தனித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என். பிரசாத். ஆனால் முடியவில்லை போலும். படத் தொகுப்பாளர் பிரவீன் இன்னும் கொஞ்சம் நறுக்கியிருக்கலாம். இது போன்ற பேய் படங்களில் படத் தொகுப்புதானே முக்கியம்.. இங்கே அது எங்கே என்று கேட்க வைத்திருக்கிறது.
‘யாமிருக்கே பயமேன்’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநரான இவர் என்ற சந்தேகத்தைக் கொடுக்கிறது இந்தப் படத்தின் மேக்கிங். இந்தக் ‘காட்டேரி’யில் கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ், திரில்லர், நகைச்சுவை என்று எதுவுமே கணக்கில் இல்லை..!
ஏற்கனவே பல முறை பார்த்துப் பார்த்து சலித்துப் போன ஒரு கதைக் களமென்றால், புதுமையான திரைக்கதையும், நடிகர்களின் அதகளமான நடிப்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால் பேய்களுக்கே பேய் பிடித்து ஓடியதைப் போல மொத்தப் பேய்களும் படத்தில் ஓடியிருப்பதால் படமும் அதே ஓட்டமாக ஓடிவிட்டது போலும்..!
காட்டேரி – நமக்கும் பிடித்துவிட்டது..!
RATING : 2 / 5
The post காட்டேரி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “வரலட்சுமி ஸ்கிரீன்ல வந்தாலே போதும்; ரசிகர்களைக் கவர்ந்துவிடுவார்” – நடிகர் பிரபுதேவா பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன், ‘ஹரஹர மகாதேவகி’, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் பிரபுதேவா பேசுகையில், ” இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், ‘ஜூன் போனால் ஜூலை..’ எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன்.
இந்தப் படத்தில் எனக்கிருந்த ஒரேயொரு கஷ்டம் ஒற்றைக் காலுடன் நடனமாட வேண்டியதிருந்ததுதான். சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னைவிட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதங்களுக்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தில் ஒற்றைக் காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தபோதும் எந்த சிரமமும் இல்லை. சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.
நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும்கூட. சிலர் திரையில் நடிக்கும்போதுதான் அவரது திறமை வெளிப்படும். ஆனால், வரலட்சுமி திரையில் தோன்றினாலே போதும்; ரசிகர்களை கவர்ந்து விடுவார்…” என்றார்.
The post “வரலட்சுமி ஸ்கிரீன்ல வந்தாலே போதும்; ரசிகர்களைக் கவர்ந்துவிடுவார்” – நடிகர் பிரபுதேவா பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் ‘சபரி’..! appeared first on Touring Talkies.
]]>இந்த ‘சபரி’ படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரையிலும் அவர் நடித்திருக்காத ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம் ஷெட்டி, மைம் கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத் தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். அனில் காட்ஸ் எழுதி, இயக்குகிறார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய பன்மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், கடந்த உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக துவக்கப்பட்டது.
இந்த ‘சபரி’ படத்தின் துவக்கத்தை குறிக்கும் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான இந்தப் போஸ்டர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் பேசுகையில், “இந்த ‘சபரி’ திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த புதிரான கதையாகும், மேலும், இது ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் டைப்பில் உருவாகிறது..” என்றார்.
ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் உள்ள சில அழகான இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
The post வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் ‘சபரி’..! appeared first on Touring Talkies.
]]>The post வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘அரசி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ரசி மீடியா மேக்கர்ஸ், மற்றும் வி.வி.பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர்.கே.ராஜ ராஜா, ஆவடி சே.வரலட்சுமி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கார்த்திக் ராஜு, சித்தார்த் ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், ‘கலக்கப் போவது யாரு’ சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர்.
செல்வா R. ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநரான சூரிய கிரண் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள கேளம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
The post வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘அரசி’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post செயற்கைக் காலுடன் பிரபுதேவா-அதிர்ச்சியான ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>‘ஹரஹர மகாதேவா’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய இயக்குநரான சந்தோஷ் ஜெயக்குமார் பிரபுதேவா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை டார்க் ரூம் பிக்சர்ஸும், மினி ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை அந்தப் பட நிறுவனம் வெளியிட்டது.
அதைப் பார்த்த பிரபுதேவா ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ்த் திரையுலுக ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
இந்தப் படத்தில் செயற்கை கால் பொருத்திய தோற்றத்தில் பிரபு தேவாவின் படம் இடம் பெற்றிருந்ததுதான் அனைவரின் அதிர்ச்சிக்கும் காரணமான விஷயம்.
இந்த வித்தியாசமான தோற்றமே அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒருவேளை இந்தக் காட்சிகள் தற்போது நடப்பதாக வைத்துக் கொண்டு பிளாஷ்பேக் காட்சியில் பிரபுதேவா நடனமாடுவதான காட்சிகள் நிச்சயமாக இருக்கும் என்கிறார்கள் தமிழ்ச் சினிமாவின் நீண்ட கால ரசிகர்கள்.
The post செயற்கைக் காலுடன் பிரபுதேவா-அதிர்ச்சியான ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>The post சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
The post சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>