The post யோகி பாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இப்போது அவர் ‘தூக்குதுரை’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபுவுடன், இனியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவு: ரவி வர்மா.கே, இசை – கே.எஸ்.மனோஜ், படத் தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத், கலை இயக்கம் – ஜெய்முருகன், பாக்கியராஜ், சண்டைப் பயிற்சி இயக்கம் – மான்ஸர் முகேஷ், ராம்குமார், பாடல்கள் – அறிவு, மோகன்ராஜன், நடனப் பயிற்சி இயக்கம் – ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், உடைகள் – பாலாஜி, ஒப்பனை: ஏ.பி.முகமது, Effects & Logics (VFX): அரவிந்த், நடிகர்கள் தேர்வு (Casting): ஸ்வப்னா ராஜேஷ்வரி, படங்கள்: சாய் சந்தோஷ், தயாரிப்பு மேலாளர்: மனோஜ் குமார், தயாரிப்பு நிர்வாகி: பாலாஜி பாபு.எஸ், நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜெயசீலன், பத்திரிகை தொடர்பு – டீம் D’One, விளம்பர வடிவமைப்பு: சபா டிசைன்ஸ், இணை-தயாரிப்பு : வினோத் குமார் தங்கராஜூ.
அட்வென்ச்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார்.
’தூக்குதுரை’ திரைப்படம் ‘PRE’ (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது மற்றும் மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.
The post யோகி பாபு- இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post அதிர்ந்த யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விசயம் குறித்து ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டார் யோகி பாபு.
““ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றேன். அங்கே படப்பிடிப்புத் தளத்தில் ஷாருக் கான், என்னைப் பார்த்து, “வெல்கம் பேக் டூ பாலிவுட் ஆஃப்டர் 12 இயர்ஸ்” என சொல்லி வைத்து வரவேற்றார்.
எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
2013ம் வருடம், ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில், சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அதை நினைவு வைத்துத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் ஷாருக் கான்.
அவர் எவ்வளவு பெரிய நடிகர், சிறு கதாபாத்திரத்தில் நடித்த என்னையும் நினைவு வைத்திருக்கிறாரே என வியந்தேன்” என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.
The post அதிர்ந்த யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>The post இவ்வளவு கோவக்காரரா யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>கைகைவசம் சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, அந்தகன், பிஸ்தா என ஏகப்பட்ட படங்கள்.. நிற்க நேரமில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தனது ஆதங்கத்தை ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார்:
“பெரும்பாலான படங்களில் நான் காமெடியனாகத்தான் நடிக்கிறேன். சில படங்களில் மட்டுமே ஹீரோவாக வருகிறேன். ஆனால் நான் காமெடியனாக சில காட்சிகள் வரும் படத்தில்கூட என்னை போஸ்டர்களில் பெரிதாக போட்டு ஹீரோ போல ஒரு தோற்றத்தைக் காண்பித்துவிடுகிறார்கள்.
தாதா 87 படத்தில் நிதின் சத்யாதான் ஹீரோ. ஆனால் போஸ்டர்களில் அவரது படத்தையே காணவில்லை. எங்கள் இருவருக்குமே இது வருத்தம்
அதே போலத்தான் விரைவில் வர இருக்கும் ஷூ படத்திலும் நடந்திருக்கிறது. படத்தின் இயக்குநர் கல்யாணண் என் நண்பர்தான். அவர் அழைக்கிறாரே என நான்கு நாட்கள் நடித்துக் கொடுத்தேன். அதாவது நான்கு இரவுகள். அவ்வளவுதான். படத்தின் ஹீரோ திலீபன்.
ஆனால் படத்தின் பிரமோசனில்.. போஸ்டர்களில் என் படத்தை பெரிதாக போடுகிறார்கள். பட வியாபாரத்துக்காக இப்படி செய்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற படங்கள் தோல்வி அடைந்துவிட்டால், அடுத்து நான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு வியாபாரம் இருப்பதில்லை. ‘நீங்கள் ஹீரோவாக நடித்த முந்தைய படம் ஓடவில்லையே’ என்கிறார்கள்.
ஆகவே தங்களது வியாபாரத்துக்கா இப்படி போஸ்டர் அடிக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்போகிறேன்” என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் யோகிபாபு.
எல்லோரையும் சிரிக்கவைக்கும் நடிகரை ஏம்பா இப்படி கொந்தளிக்க வைக்கிறீங்க!
The post இவ்வளவு கோவக்காரரா யோகிபாபு! appeared first on Touring Talkies.
]]>The post 2023 பொங்கல் தினத்தில் விஜய், அஜீத்துடன் மோதும் விமல்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தைத் தனது கான்ஃபிடன்ட் பிலிம் கேப் (Confident Film Cafe) நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார் இயக்குநர் அப்துல் மஜீத்.
இந்தப் படத்தில் விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறார்கள்.
இன்று உலகமே புரோக்கர் மயமாகிவிட்டது. அதில் சில புரோக்கர்கள் தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன், ரொமான்ஸ் கலந்து இப்படம் சொல்கிறது.
இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரண்மனையில் நடக்க உள்ளது.
2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட் டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டைட்டிலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
The post 2023 பொங்கல் தினத்தில் விஜய், அஜீத்துடன் மோதும் விமல்..! appeared first on Touring Talkies.
]]>The post “அடுத்தப் படம் எப்போ..?” – இயக்குநரை குடையும் யோகிபாபு..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ரெஜிஷ் மிதிலா, தயாரிப்பாளர்கள் – ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ், தயாரிப்பு நிறுவனம் – தி கிரேட் இந்தியன் சினிமாஸ், ஒளிப்பதிவு – கார்த்திக் S.நாயர், படத் தொகுப்பு – சைலோ, இசை – பரத் சங்கர், ஆடை வடிவமைப்பு – குவோச்சாய்.S, ஒப்பனை – கோபால், நிர்வாக தயாரிப்பு – சுனில் ஜோஸ், தயாரிப்பு மேற்பார்வை – ஜெயபாரதி, முதன்மை இணை இயக்குநர் – நிதிஷ் வாசுதேவன், இணை இயக்குநர் – கார்த்தி, இணை இயக்குநர் – அகில் V.மாதவ், உதவி இயக்குநர்கள் – பிரஜின் M.P., தண்டேஷ் D நாயர், வந்தனா, விளம்பர வடிவமைப்பு – சிவகுமார், புகைப்படங்கள் – ஜோன்ஸ், பத்திரிகை தொடர்பு – ஜான்சன்.
இந்த ‘யானை முகத்தான்’ படம் பற்றி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா பேசும்போது, “எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையைக் கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ‘யானை முகத்தான்’.
கதை சொன்னதுமே பிடித்துப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார் யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு எல்லாரையும் கூப்பிட்டு நடிக்கச் சொல்லிட்டார். இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு.
ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், உணர்வுகளை மிக எளிதாகக் கொண்டு வந்து விடுகிறார்.
ஒரு காட்சியில் நடிக்கும்போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி யோகி பாபு நடிக்கிறார்.
பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். விநாயகரின் தீவிர பக்தர் அவர். எங்கே கணபதி சிலையைப் பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால், கொஞ்சம் பிராடு.
அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், ‘விநாயகர்’ என்று சொல்லிக் கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நம் கஷ்டங்களை தீர்க்கச் சொல்லி மன்றாடும்போது அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி அவர் வந்துவிட்டால், ‘நான்தான் கடவுள்’ என்று நிரூபிக்க அவர் மிகவும் போராட வேண்டியிருக்கும்.
ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன வினோத நிகழ்வுகள் நடக்கிறது..? அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதுதான் இப்படம்.
நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றங்களை அழகாக, கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள்வரைக்கும் போய் மனசில் நிற்கணும். அதற்காக சில உணர்வுபூர்வமான விஷயங்களையும் படத்தில் வைத்துள்ளோம்.
நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப தமிழ் ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் இந்த ‘யானை முகத்தானை’ எடுத்திருக்கிறேன்.
என்னுடைய அடுத்த படத்திலும் யோகிபாபுதான் ஹீரோ. அதில் அவரை இன்னும் நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி, மேகாலயாவில்தான் நடக்கும். “இப்பவே வா.. கிளம்புவோம்”னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார். இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதற்கு தயாராக வேண்டும்.” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
The post “அடுத்தப் படம் எப்போ..?” – இயக்குநரை குடையும் யோகிபாபு..! appeared first on Touring Talkies.
]]>The post யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் நடிகர் என்பதையும் தாண்டி தற்போது புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்துள்ளார் யோகிபாபு. கதையின் நாயகனாக தான் நடிக்கும் படம் ஒன்றில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார் நடிகர் யோகிபாபு.
லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ் மூர்த்தியின் தயாரிப்பில் புரொடக்சன் NO-3 ஆக இந்தப் படம் தயாராகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பெப்சி விஜயன், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் – யோகிபாபு, இயக்கம் – ரமேஷ் சுப்ரமணியம், ஒளிப்பதிவு – அதிசயராஜ்.R, கலை இயக்குநர் – S.ஜெயச்சந்திரன், படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், ஆடை வடிவமைப்பு – முதுல் ஹபீஸ், ஒப்பனை – ஸ்ரீதர், புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – K.வீரமணி, நடன ஒருங்கிணைப்பு – தினேஷ் & சுரேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – FIRE கார்த்திக், பாடல்கள் – விவேக், புகைப்படங்கள் – சந்தோஷ், விளம்பர வடிவமைப்பு – தண்டோரா சந்துரு, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அகமது.
‘வில் அம்பு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.
மேலும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் புரொடக்சன் NO-2 ஆக உருவாகி வரும் படத்தையும் இதே லெமன் லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று இனிதே நடைபெற்றது.
The post யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் புதிய படம் appeared first on Touring Talkies.
]]>The post பூஜையுடன் துவங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>தற்பொழுது அவரது நடிப்பில் கே.வி.கதிர்வேலுவின் எழுத்து மற்றும் இயக்கத்தில், பிரபல நடன பள்ளியான ராக் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாக இருக்கும் பெயர் சூட்டப்படாத புரொடக்ஷன் நம்பர் ஒன் என்னும் திரைப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் கே.வி.கதிர்வேலு இதற்கு முன்பாக சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘ராஜ வம்சம்’ என்னும் திரைப்படத்தை இயக்கியவர். இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குநர் சுராஜ் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்தினை படக் குழுவினருக்கு வெளிப்படுத்தினர்.
The post பூஜையுடன் துவங்கிய நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “யோகிபாபு இருந்தாலே படம் ஓடிரும்..” – இயக்குநர் கே.பாக்யராஜின் நம்பிக்கை..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, K.P.Y.பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்தினை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார். சாம் C.S. இசையமைத்துள்ளார்.
புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப் பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் நியாஷ் பேசும்போது, “தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பில் இயங்கியுள்ளோம். எங்களது முதல் திரைப்படமாக கல்யாண் இயக்கத்தில் ‘ஷூ’ திரைப்படம் உருவானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அடுத்து பல திரைப்படங்களை வரிசையில் வைத்துள்ளோம். உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை. தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம்.” என்றார்.
நடிகை ஷஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “படத்தின் தலைப்பு ‘ஷூ’ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்தக் கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்…” என்றார்.
நடிகை கோமல் ஷர்மா பேசும்போது, “இது போன்ற கதைக் களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். இப்படம் உருவாக தயாரிப்பாளர்தான் காரணம். நல்ல சமூகக் கருத்துகளைக் கொண்ட இந்தப் படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.
இயக்குநர் கல்யாண் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் தங்களது கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்கு மிகப் பெரியது. இந்தப் படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் உடைய நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..” என்றார்.
நக்கீரன் கோபால் பேசும்போது, “இந்தப் படத்தின் கதைக் கருதான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன்.
தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம்தான் வருகிறார்கள். அது பற்றிய உண்மையை நாம்தான் வெளிக் கொண்டு வர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் பேசும்போது, “இவர்கள் மாதிரியான புதிய தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது ஆரோக்கியமான விஷயம். இயக்குநர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.
The post “யோகிபாபு இருந்தாலே படம் ஓடிரும்..” – இயக்குநர் கே.பாக்யராஜின் நம்பிக்கை..! appeared first on Touring Talkies.
]]>The post யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் ‘யானை முகத்தான்’. appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – ரெஜிஷ் மிதிலா, தயாரிப்பாளர்கள் – ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ், தயாரிப்பு நிறுவனம் – தி கிரேட் இந்தியன் சினிமாஸ், ஒளிப்பதிவு – கார்த்திக் S.நாயர், படத் தொகுப்பு – சைலோ, இசை – பரத் சங்கர், ஆடை வடிவமைப்பு – குவோச்சாய்.S, ஒப்பனை – கோபால், நிர்வாக தயாரிப்பு – சுனில் ஜோஸ், தயாரிப்பு மேற்பார்வை – ஜெயபாரதி, முதன்மை இணை இயக்குனர் – நிதிஷ் வாசுதேவன், இணை இயக்குநர் – கார்த்தி, இணை இயக்குநர் – அகில் V.மாதவ், உதவி இயக்குநர்கள் – பிரஜின் M.P., தண்டேஷ் D நாயர், வந்தனா, விளம்பர வடிவமைப்பு – சிவகுமார், புகைப்படங்கள் – ஜோன்ஸ், பத்திரிகை தொடர்பு – மனோவா.
இயக்குநர் ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார்.
இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். இவரிடம், யோகி பாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன் வைக்கிறார்.
இப்படி லூட்டி அடிக்கும் இவர்களை சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இப்படி போகும் கதைக்கான திரைக்கதையை சுவாரசியமாக எழுதி, படத்தையும் இயக்கியுள்ளார் இயக்குநர்.
இவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளராக மல்லியக்கா கேரக்டரில் ஊர்வசியும், சிறிய பான் மசாலா கடை நடத்தும் மைக்கேலாக கருணாகரனும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி, ராஜஸ்தான் பகுதிகளில் நடந்தது.
The post யோகிபாபு நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் ‘யானை முகத்தான்’. appeared first on Touring Talkies.
]]>The post யோகிபாபு நடித்த படத்திற்கு வெளிநாட்டு விருது appeared first on Touring Talkies.
]]>இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயமும் யோகிபாபுவுக்குக் கிடைத்திருக்கிறது. அது, அவர் நடித்திருக்கும் படமான ‘மீன் குழம்பு’ படத்திற்கு வெளிநாட்டு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பதுதான்.
இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படத்தின் இயக்குநர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் திரைக்கதை ‘சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை’ என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.
இந்த விருதினை படத்தின் இயக்குநர் யோகிபாபுவிடம் காண்பித்து வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.
வெறுமனே காமெடியனாகவும் இல்லாமல் இது போன்று கதையம்சம் கொண்ட படங்களிலும் இருந்து தனது இருப்பை தமிழ்ச் சினிமாவில் வித்தியாசப்படுத்துகிறார் யோகிபாபு.
யோகிபாபுவுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
The post யோகிபாபு நடித்த படத்திற்கு வெளிநாட்டு விருது appeared first on Touring Talkies.
]]>