The post மணிரத்னம் நினைத்தாலும் முடியாது! appeared first on Touring Talkies.
]]>தமிழின் முன்னணி இயக்குநரான மணி ரத்னம், “பல்லவி அணு பல்லவி” என்ற திரைப்படத்தின் கன்னட படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அடுத்து “பகல் நிலவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த இவர், தொடர்ந்து “மௌன ராகம்”, “நாயகன்” “ரோஜா” பம்பாய்”, “உயிரே”, “அலை பாயுதே”,என பல ஹிட் படத்தை அளித்தார்.
சமீபத்தில் அவர் இயக்கிய “பொன்னியின் செல்வன்” மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் மணிரத்தினம் குறித்து சொல்லி இருக்கிறார்.
அவர், “இப்போது அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் பெரும் வசூலை குவித்துள்ளது. ஆனால் முன்பு போல நீண்ட நாட்கள் எந்தப் படமும் ஓடுவதில்லை. ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதால் இந்த நிலை. நூறு நாட்களில் கிடைக்கும் வசூல் பத்து நாட்களில் கிடைத்து விடுகிறது.
இந்த நிலையில் மணிரத்தினத்தின் படம் ஒன்றை பற்றி சொல்ல விரும்புகிறேன். அவரது இயக்கத்தில் பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த அக்னி நட்சத்திரம் திரைப்படம் 1988 வெளியானது. இந்த திரைப்படம் பாபா திரையரங்கில் 100 நாட்கள், 400 ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது. இப்போது மணிரத்னம் நினைத்தாலும் அது போல நடக்காது” என்று ஆதங்கத்துடன் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
The post மணிரத்னம் நினைத்தாலும் முடியாது! appeared first on Touring Talkies.
]]>The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது.
அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.
இதைவிட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம்.
ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது. இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும்போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது.
இத்தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் இடம்பெற்ற சிறிய, சிறிய விசயங்களைகூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர்.
இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி.
லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும் திரையில் கொண்டு வருவது எளிதல்ல. இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது.
ஆனால் மணி சார்தான், “நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன்” என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழி நடத்தி உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி…” என்றார்.
The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.
]]>The post “என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி” – இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், ”பத்திரிகையாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் “சரி” என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது.
அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது.
ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
The post “என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி” – இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.
]]>நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. இப்போது 35 ஆண்டு காலம் கழித்து இருவரும் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன், மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, இதே அளவு உற்சாகமாக இருந்தேன். தற்போதும் அதே மனநிலை என்னுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது. இந்த தூண்டுதலில் திரு.ரஹ்மானும் அடங்குவர். திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுக்கவிருக்கும் இந்தப் படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.
இது குறித்து மணிரத்னம் பேசும்போது, “கமல் ஸாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..” என்றார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விக்ரம் மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை வழங்குவதற்காக கமல் சாருடன் இணைவது எனக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. சிறப்பான கதையில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கமல் சார் மற்றும் மணி சார் இருவருமே உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள், இந்த இரண்டு சாதனையாளர்களின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்து வருகிறேன். இந்த சிறந்த வாய்ப்புக்கு கமல் ஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.”
இந்தப் படம் அடுத்தாண்டு மத்தியில் துவங்கி 2024-ம் ஆண்டு வெளியாகுமாம்.
The post கமலும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள் appeared first on Touring Talkies.
]]>The post “இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ”ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சொன்ன விசயத்தை நான் வழி மொழிகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள பக்கத்தையும் பார்வையிட்டேன்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுவிசயத்தை பதிவிட்டிருந்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பொன்னியின் செல்வன் பிரமிப்பிலிருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் செல்லமாக கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன்.
இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது.
தற்போது அந்த கதாபாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக படைப்பாளி மணிரத்னத்திற்கு எங்களின் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது.
நடிகர்களுக்கு எப்போதும் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம் என எண்ணும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சரித்திர கதைகளில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களை வந்தடைந்திருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.
நாற்பது ஆண்டுகளாக திரையரங்கத்திற்கே செல்லாதவர்கள், இந்த படத்திற்காக மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சி மேலும் இரு மடங்காகிறது.
இந்தப் படத்தை பார்த்த இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்’ என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்,
இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும்தான் சேரும்…” என்றார்.
The post “இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>“அப்போது நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகளுக்கு திருணம். அங்கு மணமக்களுக்கு மேடை அமைத்தது போலவே, வருகிற வி.ஐ.பி.க்களுக்கும் தனி நேடை அமைத்திருந்தனர். மணிரத்னம் சார் அந்த மேடையில் உள்ள இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டார். நானும் அவர் பின்னால் நின்றிருந்தேன். மணிரத்னம் சார் உட்காரச் சொல்லவே நானும் பின் இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது கூட்டமாக வந்த சிலர், மணிரத்னம் சாரிடம் ஆட்டோ கிராப் வாங்கினார்கள். திடீரென சிலர் என்னிடமும் ஆட்டோ கிராப் கேட்க.. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஆனாம் மணிரத்னம் சாரே, ஆட்டோ கிராப் நோட்டை வாங்கி என்னிடம் கொடுத்தார். எனக்கு வெட்கமாக போய்விட்டது. அவர் எவ்வளவு பெரிய இக்குநர்.. இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரே என நினைத்தேன்.
நான் போட்ட முதல் ஆட்டோகிராப் அதுதான்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி.
The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் ஜெயராமின் இரட்டை ஆழ்வார்க்கடியான்கள்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி என முன்னணி கதாபாத்திரங்களுக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சுந்தர சோழர் என கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களுக்கும் என பிரபல நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம்.
மேலும் வரலாற்று புனைவு நாவல் என்பதால் அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரின் தோற்றத்தையும் மிகச் சிரத்தையாக வடிவமைத்திருந்தார் மணிரத்னம்.
இதில் சீரியஸாக செல்லும் கதைக்கு சற்றே ரிலாக்ஸ் அளிக்கும்விதமாக படத்தில் இடம் பெற்றிருந்த ஜெயராம் நடித்த ‘ஆழ்வார்க்கடியான் நம்பி’ கதாபாத்திரம் நகைச்சுவையாக அமைந்திருந்தது.
குடுமி வைத்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்தில் ஜெயராம் நடித்திருந்தார். அதேசமயம் இவரது கதாபாத்திரத்திற்காக வேறு ஒரு கெட்டப்பை முதலில் மணிரத்னம் உருவாக்கி வைத்திருந்தார் என்கிற விஷயம் தற்போது நடிகர் ஜெயராம் மூலம் வெளியாகி உள்ளது.
அப்படி உருவாக்கப்பட்ட ‘ஆழ்வார்க்கடியான் நம்பி’யின் இன்னொரு தோற்றத்தையும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
படத்தில் இடம் பெற்றுள்ள தோற்றத்தைவிட இது இன்னும் இளமையாக இருப்பதாகவும் படத்தில் நடித்த ஹீரோக்களின் கதாபாத்திரங்களுக்கு சரிசமமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. இதனால்தான் கடைசி நிமிடத்தில் மணிரத்னம் கெட்டப்பை மாற்றியிருக்கிறார் போலும்..!
The post நடிகர் ஜெயராமின் இரட்டை ஆழ்வார்க்கடியான்கள்..! appeared first on Touring Talkies.
]]>The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.
]]>மக்களிடம் பேராதரவு பெற்ற இப்படம், பல நூறு கோடி வசூல் ஆனதாகவும் இன்னும் வசூல் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், “கல்கியின் படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டு விட்டன. ஆகவே அவரது படைப்புகளை யாரும் எடுத்து கையாளலாம். அதே நேரம், பொ.செ. வை வைத்து பல நூறு கோடி சம்பாதித்த மணிரத்தினம், லைகா தயாரிப்பு நிறுவன அதிபர் சுபாஸ்கரன் ஆகியோர் கல்கியின் குடும்பத்தினருக்கு உதவலாமே..
கல்கி குடும்பத்தினர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்தான். ஆனால், அவர்கள் நடத்தும் கல்கி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார்கள். அந்த அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்யலாமே” என பலரும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
என்ன சொல்லப் போகிறார்கள் இருவரும்?
The post கல்கி குடும்பத்தினருக்கு உதவுவார்களா மணிரத்னம் – சுபாஸ்கரன்? appeared first on Touring Talkies.
]]>The post “எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி appeared first on Touring Talkies.
]]>இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கிதான். அந்தப் புகழ் அவரையே சாரும்.
இந்துக்களுக்கு எப்படி ராமாயணமோ அதுபோல, இனிமேல் தமிழர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ கதை இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள்தான். அவரது ஐந்தரை ஆண்டு கால உழைப்பு அளப்பரியது. எப்படி இந்த புத்தகத்தை படிக்காமல் போனோம் என்று அனைவருமே தற்போது வருத்தப்படுகிறார்கள்.
எனவே இந்தப் படத்தின் வெற்றியின் பெரும் பங்கு கல்கிக்குத்தான் போய்ச் சேரும். எழுத்தாளர் கல்கி உயிருடன் இருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்று ரஜினிகாந்தே கூறியிருந்தார். இப்போது தமிழ்நாட்டில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்கவில்லை என்றாலே அவர்களை பாவம் என்று கூறும் நிலைமை இருக்கிறது.
இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை.
படத்தின் முதல் காட்சியில்கூட கல்கியின் படத்தை காட்டவில்லை. கல்கி படத்துடன் கமல்ஹாசன் குரல் ஒலித்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்படைந்திருக்கும். ஆனால், இதை செய்யவில்லை. எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்ய வேண்டும்.
ஏனெனில், இந்தப் படத்துக்கு முக்கிய கதாநாயகனே எழுத்தாளர் கல்கிதான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதை செய்தால்தான் நல்லது.
மணிரத்னத்தின் கனவை நிறைவேற்ற லைகா நிறுவனம் இருந்தது. கல்கியின் கனவை கவுரவப்படுத்துவது மணிரத்னம் உள்பட படக் குழுவினரின் கடமையும் கூட…” என்று சொல்லியிருக்கிறார்.
The post “எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.
“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம். அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு.
நடிக்க வேண்டிய கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு த்ரிஷா எல்லோரும் வந்துவிட்டார்கள்.
இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.
ஆனால் குதரைகள் வந்தபாடில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சன் ஆகிவிட்டனர்.
சென்னையில் இருந்து 18 குதிரைகள் வந்த 5 மினி லாரிகளை குவாலியர் காவல்துறையினர் மடக்கி, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது தெரியவந்தது.
பிறகு காவல்துறையினர் குதிரை வண்டிகளை விடுவித்தனர். ‘‘குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன” என்று காவல்துறை விளக்கம் சொன்னது.
பெரிய நடிகர்கள் சிலர் தாமதமாக வருவதால், படப்பிடிப்பு தடைபடும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் குதிரைகளால் படப்பிடிப்பு தாமதமானது இப்போதுதான்.
பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை.
படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.
“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம். அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு.
நடிக்க வேண்டிய கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு த்ரிஷா எல்லோரும் வந்துவிட்டார்கள்.
இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.
ஆனால் குதரைகள் வந்தபாடில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சன் ஆகிவிட்டனர்.
சென்னையில் இருந்து 18 குதிரைகள் வந்த 5 மினி லாரிகளை குவாலியர் காவல்துறையினர் மடக்கி, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது தெரியவந்தது.
பிறகு காவல்துறையினர் குதிரை வண்டிகளை விடுவித்தனர். ‘‘குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன” என்று காவல்துறை விளக்கம் சொன்னது.
பெரிய நடிகர்கள் சிலர் தாமதமாக வருவதால், படப்பிடிப்பு தடைபடும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் குதிரைகளால் படப்பிடிப்பு தாமதமானது இப்போதுதான்.
The post பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்! appeared first on Touring Talkies.
]]>