Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பொன்னியின் செல்வன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sun, 06 Nov 2022 18:46:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பொன்னியின் செல்வன் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! https://touringtalkies.co/tamil-nadu-is-celebrating-ponniyien-selvan-movie-actor-karthis-pride/ Sun, 06 Nov 2022 18:29:40 +0000 https://touringtalkies.co/?p=26691 ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது. அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது […]

The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.

மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது.

அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும்  ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.

இதைவிட பொன்னியின் செல்வன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம்.  இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம்.

ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது. இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும்போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது.

த்தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் இடம்பெற்ற சிறிய, சிறிய விசயங்களைகூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர்.

இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.

பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி.

லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும்  திரையில் கொண்டு வருவது எளிதல்ல. இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் மணி சார்தான், “நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன்” என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழி நடத்தி உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி…” என்றார்.

The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.

]]>
“என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி” – இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி..! https://touringtalkies.co/thank-you-for-allowing-and-approving-my-greed-director-mani-ratnam-speech/ Sun, 06 Nov 2022 18:15:15 +0000 https://touringtalkies.co/?p=26684 ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், ”பத்திரிகையாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை […]

The post “என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி” – இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், ”பத்திரிகையாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் “சரி” என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது.

அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது.

ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

The post “என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி” – இயக்குநர் மணிரத்னம் நெகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
“இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..! https://touringtalkies.co/this-film-keeps-the-younger-generation-re-reading-seeyan-vikrams-appreciation/ Sat, 05 Nov 2022 18:42:28 +0000 https://touringtalkies.co/?p=26699 ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ”ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சொன்ன விசயத்தை நான் வழி மொழிகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக […]

The post “இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதியம் நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ”ஜெயம் ரவி மற்றும் கார்த்தி சொன்ன விசயத்தை நான் வழி மொழிகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

பத்திரிகைகளும், ஊடகங்களும் இப்படத்தின் தொடக்கத்திலிருந்து பெரும் பாலமாக இருந்துள்ளீர்கள். வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில், இந்தப் படத்தின் படத்தைப் பற்றிய விமர்சனத்திற்காக ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதள பக்கத்தையும் பார்வையிட்டேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுவிசயத்தை பதிவிட்டிருந்தார்கள். இது எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. ‘பொன்னியின் செல்வன் பிரமிப்பிலிருந்து வெளியே வந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள்’ என்று என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் செல்லமாக கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கி இருந்தேன்.

இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது.

தற்போது அந்த கதாபாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக படைப்பாளி மணிரத்னத்திற்கு எங்களின் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர்களான நாங்கள், எத்தனையோ வேடத்தில் தோன்றியிருக்கிறோம். ஆனால் வாசகர்களின் கற்பனையில் நீண்டகாலமாக இருந்த ஒரு முகமாக நாங்கள் மாற்றம் பெற்றிருப்பது என்பது புதிது.

நடிகர்களுக்கு எப்போதும் பார்வையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம் என எண்ணும்போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சரித்திர கதைகளில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களை வந்தடைந்திருக்கிறது. இதற்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது.

நாற்பது ஆண்டுகளாக திரையரங்கத்திற்கே செல்லாதவர்கள், இந்த படத்திற்காக மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள் எனும் போது மகிழ்ச்சி மேலும் இரு மடங்காகிறது.

இந்தப் படத்தை பார்த்த இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை  படிக்க வேண்டும்’ என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள்,

இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும்தான் சேரும்…” என்றார்.

The post “இந்தப் படம் இளைய தலைமுறையினரை மீண்டும் படிக்க வைத்திருக்கிறது..” – சீயான் விக்ரமின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த சுபாஷ்கரன்-மணிரத்னம் கூட்டணி https://touringtalkies.co/subhashkaran-maniratnam-alliance-donates-1-crore-to-kalki-foundation/ Sat, 05 Nov 2022 18:14:55 +0000 https://touringtalkies.co/?p=26653 அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் […]

The post கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த சுபாஷ்கரன்-மணிரத்னம் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.

மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர்.

அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்.

இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் இந்த செயலுக்கு, திரை உலகினர் மட்டுமல்லாமல், அமரர் கல்கியின் வாசகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

The post கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த சுபாஷ்கரன்-மணிரத்னம் கூட்டணி appeared first on Touring Talkies.

]]>
“எனக்குப் பிடித்தவைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன்..” – இயக்குநர் மணிரத்னம் பேட்டி https://touringtalkies.co/i-have-filmed-only-what-i-like-director-mani-ratnam-interview/ Mon, 17 Oct 2022 08:30:25 +0000 https://touringtalkies.co/?p=25545 ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியது பற்றி இயக்குநர் மணிரத்னம் விளக்கமாகப் பேட்டியளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே : “நான் முதன்முதலாக பெரிய நாவலாகப் படித்தது கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’த்தான். சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் ஈஸ்வரி லெண்டிங் நூலகம் உள்ளது. அங்குதான் இந்த ‘பொன்னியின் செல்வனின்’ 5 பாகங்களையும், மணியம் சாரின் ஓவியங்களுடன் படித்தேன். முழு கதையையும் ஒரே நீட்டிப்பில் படித்து முடித்தேன். படிக்கும்போது புன்னகையுடன் படித்தேன். சோழர்களுடைய நிலப் பரப்புகள், குதிரைகள், […]

The post “எனக்குப் பிடித்தவைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன்..” – இயக்குநர் மணிரத்னம் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியது பற்றி இயக்குநர் மணிரத்னம் விளக்கமாகப் பேட்டியளித்துள்ளார்.

அதிலிருந்து சில பகுதிகள் இங்கே :

“நான் முதன்முதலாக பெரிய நாவலாகப் படித்தது கல்கியின் பொன்னியின் செல்வனை’த்தான். சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் ஈஸ்வரி லெண்டிங் நூலகம் உள்ளது. அங்குதான் இந்த பொன்னியின் செல்வனின்’ 5 பாகங்களையும், மணியம் சாரின் ஓவியங்களுடன் படித்தேன்.

முழு கதையையும் ஒரே நீட்டிப்பில் படித்து முடித்தேன். படிக்கும்போது புன்னகையுடன் படித்தேன். சோழர்களுடைய நிலப் பரப்புகள், குதிரைகள், கதாபாத்திரங்கள், பழுவேட்டரையரின் இரட்டை மீசை, இவை யாவும் என் மனதைவிட்டு போகவே இல்லை.

அவர் எழுதிய விதத்தில், படிப்பவர்களை தன்வசம் ஈர்த்துக் கொள்வார். எழுத்தால் நம்மிடம் தொடர்ந்து பேசுவார். நான் பாதியிலேயே விட்டுவிட்டு வந்த வந்திய தேவன் இப்போது என்ன செய்கிறார் என்று ஆர்வமாக பார்ப்போம். அவர் கூடவே பயணித்த உணர்வு நமக்கும் வரும்.

மணியம் சார் ஓவியம் இல்லாமல் கல்கியைப் படித்திருக்க முடியாது. மணியம்தான் அடித்தளமாக இருந்தார். ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் குடுமியோடு மதில் மேல் வெறும் தலை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பவர். நந்தினி என்றால் ஒரு ஆண்டாள் கொண்டை தேவைப்படுகிறது என்பதை அவரே சுலபமாக வரையறுத்துக் கொடுத்துவிட்டார்.

ஆனால், அவர் அதை சாதாரணமாக வரையவில்லை. அவரும் அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்கத்துடன்தான் வரைந்து கொடுத்திருக்கிறார். ஆகையால், நான் அந்த அடித்தளத்தை மீறி போகவில்லை. ஆனால், அந்த கதையில் இருந்து வரும் இது இன்னொரு கிளை.

பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் புனை கதை. ஆனால், கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு நடந்த சம்பவங்களையும் வரலாற்றை உண்மையாக எழுதியிருக்கிறார். இதைத் தாண்டி நந்தினி கதாபாத்திரம் மட்டுமே, முழுக்க முழுக்க புனையப்பட்டது. மேலும், பல புனையபட்ட கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்து இருக்கிறார்.

இந்த கதை 5 பாகங்களைக் கொண்டது. அதை 2 பாகங்களாக 2 படங்களிலேயே கொண்டு வருவதற்கு சில தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. சில காட்சிகளை நீக்கியது தெரியக் கூடாது, கதையின் ஓட்டம் ஒரே சீராக இருக்க வேண்டும், அதற்காக ஒரு பாலம் கட்ட வேண்டியிருந்தது.

கதையாக எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி என்று 3 அல்லது 4 பக்கங்களில் சொல்லி விடலாம். உதாரணத்திற்கு, வந்தியத்தேவன் நந்தினியை பார்க்கும்போது என்ன நினைத்தார்? குந்தவையை பார்க்கும்போது என்ன நினைத்தார் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால், சினிமாவாக எடுக்கும்போது அந்த அனுகூலம் இருக்காது.

சுந்தர சோழரை முதல்முறையாக பார்க்கும்போதே, அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்பது புரிய வேண்டும். இரண்டாவது பேரரசரின் எண்ணங்கள், இவை யாவும் முதல் காட்சியிலேயே வெளிவர வேண்டும். அதனால் அதற்குத் தேவைப்படுபவற்றைக் கொண்டு வருவது அவசியம்.

அதே மாதிரி, குந்தவை புத்திசாலி. சோழ சாம்ராஜ்யத்தின் தூண். அரசியல் தெரிந்தவர் மேலும், அருண்மொழி வர்மன் வருவதற்கு அவர்தான் முக்கிய காரணம். இப்படி அந்த புத்தகத்தில் நிறைய இடத்தில் நிறைய கதாபாத்திரங்கள் குந்தவையை பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். கேட்பதைவிட பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களை கொண்டு வந்தோம்.

மேலும், கல்கியின் எழுத்து அலங்கார தமிழ் இல்லை. அதை மேடையில் நடிப்பதும் கஷ்டம். மேடையின் தரம் சுலபமாக வந்துவிடும். இதில் முதல் விஷயம், இந்த தலைமுறையினருக்கு சுலபமாக புரிய வேண்டும். இரண்டாவது சோழர் காலத்தையும் குறிக்க வேண்டும். இதை ஜெயமோகன் மிக எளிமையாக செய்தார்.

பாரம்பரிய தமிழ்தான். ஆனால், குறுகிய வாக்கியங்களாக எழுதினார். அது உணர்ச்சியுடன் நடிப்பதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் மிகப் பெரிய அனுகூலமாக இருந்தது.

தமிழ்நாட்டிலேயே பொன்னியின் செல்வன்’ மீது ஈர்ப்பும், மிகப் பெரிய கொண்டாட்டமும் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதை படமாக எடுக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கலாம்.

மேலும், முதல் பாகம் பார்க்காதவர்களுக்கும், இரண்டாவது பாகம் புரிய வேண்டும். இந்த இரண்டு பாகமும் தனியாகவும் இருக்க வேண்டும். சேர்ந்து இருந்தால் இன்னமும் நன்றாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் எடுத்தோம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் நிறைய பேர் இதை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள், அதேபோல்தான் இந்த புத்தகத்தில் எனக்கும் நிறைய பிடித்து இருந்தது. அதை நான் படமாக்கி கொண்டேன்…” என்றார்.

The post “எனக்குப் பிடித்தவைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன்..” – இயக்குநர் மணிரத்னம் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
“எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி https://touringtalkies.co/why-didnt-the-author-pay-respect-to-kalki-question-about-the-producer/ Sun, 09 Oct 2022 09:42:13 +0000 https://touringtalkies.co/?p=25008 “பொன்னியின் செல்வன்’ படத்தில் எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்..?” என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான  கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கிதான். அந்தப் புகழ் அவரையே சாரும். இந்துக்களுக்கு எப்படி ராமாயணமோ அதுபோல, இனிமேல் தமிழர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ கதை இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள்தான். அவரது […]

The post “எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
“பொன்னியின் செல்வன்’ படத்தில் எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்..?” என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான  கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி காத்திருந்தது. இந்த வெற்றிக்கு 50 சதவீத காரணம் அமரர் கல்கிதான். அந்தப் புகழ் அவரையே சாரும்.

இந்துக்களுக்கு எப்படி ராமாயணமோ அதுபோல, இனிமேல் தமிழர்களுக்கு ‘பொன்னியின் செல்வன்’ கதை இருக்க போகிறது. இதற்கு காரணம் அமரர் கல்கியின் எழுத்துகள்தான். அவரது ஐந்தரை ஆண்டு கால உழைப்பு அளப்பரியது. எப்படி இந்த புத்தகத்தை படிக்காமல் போனோம் என்று அனைவருமே தற்போது வருத்தப்படுகிறார்கள்.

எனவே இந்தப் படத்தின் வெற்றியின் பெரும் பங்கு கல்கிக்குத்தான் போய்ச் சேரும். எழுத்தாளர் கல்கி உயிருடன் இருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன் என்று ரஜினிகாந்தே கூறியிருந்தார். இப்போது தமிழ்நாட்டில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்கவில்லை என்றாலே அவர்களை பாவம் என்று கூறும் நிலைமை இருக்கிறது.

இந்த படத்தில் அனைத்து சுமைகளையும் டைரக்டர் மணிரத்னமே தாங்கிக் கொண்டு விட்டார். ஆனாலும் மணிரத்னம் மேல் எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கல்கியின் ஒரு மாபெரும் காவியத்தை அவர் படமாக்கி இருக்கிறார். ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்படவில்லை.

படத்தின் முதல் காட்சியில்கூட கல்கியின் படத்தை காட்டவில்லை. கல்கி படத்துடன் கமல்ஹாசன் குரல் ஒலித்திருந்தால் இன்னும் இந்த படம் சிறப்படைந்திருக்கும். ஆனால், இதை செய்யவில்லை. எனவே 2-ம் பாகத்திலாவது இதனை செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்தப் படத்துக்கு முக்கிய கதாநாயகனே எழுத்தாளர் கல்கிதான். அவருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு சன்மானம் வழங்கி கவுரவித்திருக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது. இதை செய்தால்தான் நல்லது.

மணிரத்னத்தின் கனவை நிறைவேற்ற லைகா நிறுவனம் இருந்தது. கல்கியின் கனவை கவுரவப்படுத்துவது மணிரத்னம் உள்பட படக் குழுவினரின் கடமையும் கூட…” என்று சொல்லியிருக்கிறார்.

The post “எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி appeared first on Touring Talkies.

]]>
“ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! https://touringtalkies.co/im-jealous-to-see-aishwarya-rai-actress-meenas-powerlessness/ Fri, 07 Oct 2022 17:14:31 +0000 https://touringtalkies.co/?p=24974 “நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமான நடிகை மீனா தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்ற வாரம் வெளிவந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த நடிகை மீனா அது […]

The post “ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! appeared first on Touring Talkies.

]]>
“நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார்.

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமான நடிகை மீனா தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சென்ற வாரம் வெளிவந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்த்த நடிகை மீனா அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்தப் படத்தில் நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்துள்ளது. இதனால் ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

மீனாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post “ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்! https://touringtalkies.co/why-is-the-shooting-of-ponnis-selvan-delayed/ Thu, 06 Oct 2022 12:29:58 +0000 https://touringtalkies.co/?p=24927 பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை. படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது. “பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம்.  அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு. நடிக்க வேண்டிய  கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு […]

The post பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்! appeared first on Touring Talkies.

]]>
பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை.

படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.

“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம்.  அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு.

நடிக்க வேண்டிய  கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு த்ரிஷா எல்லோரும் வந்துவிட்டார்கள்.

இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.

ஆனால் குதரைகள் வந்தபாடில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சன் ஆகிவிட்டனர்.

சென்னையில் இருந்து 18 குதிரைகள் வந்த 5 மினி லாரிகளை குவாலியர் காவல்துறையினர் மடக்கி, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது தெரியவந்தது.

பிறகு காவல்துறையினர் குதிரை வண்டிகளை விடுவித்தனர். ‘‘குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன” என்று காவல்துறை விளக்கம் சொன்னது.

பெரிய நடிகர்கள் சிலர் தாமதமாக வருவதால், படப்பிடிப்பு தடைபடும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் குதிரைகளால் படப்பிடிப்பு தாமதமானது இப்போதுதான்.

பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை.

படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.

“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு அருகில்உள்ள ஓர்ச்சா என்ற நகரத்தில்மூன்று நாட்கள் நடைபெற்து. அங்கு உள்ள குவாலியர் கோட்டைதான் எங்கள் களம்.  அப்போது நடக்கும் காட்சிக்கு 18 குதிரைகளை சென்னையில் இருந்து அழைத்து வருவதாக ஏற்பாடு.

நடிக்க வேண்டிய  கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு த்ரிஷா எல்லோரும் வந்துவிட்டார்கள்.

இவர்களுக்கான காட்சிகளில் போர் வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து செல்வது போல் படமாக்கப்படுகிறது.

ஆனால் குதரைகள் வந்தபாடில்லை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் டென்சன் ஆகிவிட்டனர்.

சென்னையில் இருந்து 18 குதிரைகள் வந்த 5 மினி லாரிகளை குவாலியர் காவல்துறையினர் மடக்கி, தங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பது தெரியவந்தது.

பிறகு காவல்துறையினர் குதிரை வண்டிகளை விடுவித்தனர். ‘‘குதிரைகள் கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டன” என்று காவல்துறை விளக்கம் சொன்னது.

பெரிய நடிகர்கள் சிலர் தாமதமாக வருவதால், படப்பிடிப்பு தடைபடும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் குதிரைகளால் படப்பிடிப்பு தாமதமானது இப்போதுதான்.

The post பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்! appeared first on Touring Talkies.

]]>
“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் https://touringtalkies.co/hinduism-did-not-exist-during-rajaraja-cholas-time-actor-kamal-haasan-explains/ Thu, 06 Oct 2022 06:25:16 +0000 https://touringtalkies.co/?p=24886 மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் […]

The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
ணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுபோக இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கிறார்கள். பல நடிகர்கள் இந்த இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இவர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் வரும்.. அது என் குரலில் வரும். அதை மீண்டும் ஒரு முறை சொல்ல ஆசைப்படுகிறேன்.. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஒரு சினிமா தயாரிப்பாளராக கலைஞராக எனக்கு அது பெருமிதம்.

ஆரோக்கியமான ஒரு போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியதுதான். ஆனால், மற்றவர்கள் வீழ்ச்சியை பார்த்து மகிழ்வதில் எந்த சந்தோஷமும் கிடையாது. ஏனென்றால் இந்த படகில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை. இதில் ஓட்டை விழுந்தால் நானும் சேர்ந்து முழுகுவேன் என்பதுதான் உண்மை.

தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் பிலிம்ஸின் படமாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று இல்லை. இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் எனக்கு சந்தோஷம்.

இது வெற்றிப் படம். லைக்கா ப்ரொடக்ஷனையும், மணிரத்தினத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இதில் நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். நான் மலையாள படத்தில் ஆரம்பிக்கும்போது மொத்தமாகவே 12, 13 பேர்தான் இருப்போம். இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டதை பார்த்தால் மலைப்பாக உள்ளது. இப்படி ஒரு தயாரிப்புக்கு துணையாக இருந்த லைக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

கார்த்தி நடித்தது நான் நடிப்பதாக இருந்த வேஷம்.. இவருக்கு வந்தது. சிவாஜி சார் அருண்மொழிவர்மன் நான் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பல வேஷங்களில் நானே நடிக்க ஆசைப்பட்டேன். இதை அருமையாக நடித்துள்ளார்கள். போர்க்களத்தில் வரும் காட்சிகளை எல்லாம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இந்த படத்தை நான் தயாரித்தது போல ஒரு சந்தோஷம். ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. அது நான் தயாரித்த மாதிரிதான். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த கூட்டுணர்வு நீடிக்க வேண்டும்.

நாளைக்கு என் படத்தை நீங்கள் இதுபோல கொண்டாட வேண்டும் என நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியிடம் கேட்டுக் கொண்டார். சுமாராக இருந்தால் ரகசியமாக என்னிடம் சொல்லி விடுங்கள்..” என கமலஹாசன் சொன்னதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.

மேலும், “ஒரு புத்தகத்தை படமாக்குவது போன்ற கஷ்டம் வேறு கிடையாது. ராமாயணத்தை எப்படி எடுப்பீர்கள்.. எங்கிருந்து தொடங்குவீர்கள். இந்த படத்தைப் பொறுத்தவரை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்கள். என்னைப் போன்ற புத்தகம் படித்தவர்களுக்கு இன்னும் நான்கு காட்சிகள் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.

இதை விமர்சனமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் காட்ஃபாதர் புத்தகத்தை அப்படியே எடுக்க முடியாது. கதையில் எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு படம் எடுத்து உள்ளார்கள். தெரிந்த பாடலை எங்களோடு சேர்ந்து பாடுங்கள், இடையில் இரண்டு வரிகள் சரணம், பல்லவி விட்டால் கோவித்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல முடியும். தவறுகள் கண்டுபிடித்தால் எல்லாவற்றிலும் தவறுகள் கண்டுபிடிக்கலாம். காந்திக்கு பல்லு இல்லை என சொல்வது முக்கியமில்லை.

கல்கி எழுதியதிலேயே நிறைய வரலாற்று உண்மைகள் இருக்க முடியாது. மறைமலை அடிகளார் எழுதிய அம்பிகாபதி, அமராவதி கதாபாத்திரங்கள் இருந்ததற்கான சான்றுகளே இல்லை. இது சரித்திர புனைவுதானே தவிர சரித்திர புத்தகம் அல்ல.

பாலச்சந்தர் ஆந்திராவில் போய் படம் எடுத்த பொழுது ஆந்திர மக்கள் அதை கொண்டாடினர். மொழி அரசியலை சினிமா துறையில் பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.  நாம் சங்கரா புராணத்தை கொண்டாடியதுபோல ஆந்திராவில் சமமாக கொண்டாடினார்கள்.

கர்நாடகாவில் ஒரு முறை நான் பேசும்போது உங்கள் நாகேஷ் என்று சொல்லக் கூடாது, எங்கள் நாகேஷ் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறினேன். எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் யாரும் எனக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதை நிகழ்த்தி காட்டுவதற்கான திறமைகள் தமிழ் சினிமாவில் இருப்பதற்கான சான்றுதான் இந்த பொன்னியின் செல்வன் படம்..” என்றார் கமல்ஹாசன்.

“பொன்னியின் செல்வன் படம் விக்ரம் பட வசூலை முறியடித்துள்ளது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கமலஹாசன், “இதில் எனக்கு சந்தோஷம்தான், அதனால்தான் நான் இங்கே வந்துள்ளேன்.” என்றார்.

“படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனா,  வந்தியத்தேவனா, அருள்மொழிவர்மனா?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இவர்கள் 3 பேருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட பார்க்கிறீர்களா?” என கேட்டதும் சிரிப்பலை எழுந்தது. மேலும் தொடர்ந்த கமல், “கல்கிக்கே யாரைப் போற்றுவது என்ற குழப்பம் இருந்தது. இரண்டாவது பாகத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்பொழுது சொல்ல முடியாது. படத்தின் இடைவேளையில் படம் எப்படி இருக்கிறது என கேட்டால் என்ன சொல்ல முடியும்? அதுபோலத்தான் இதுவும்..” என்றார்.

தொடர்ந்து “இயக்குநர் வெற்றி மாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை” என்று கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம்’ என்ற பெயர் கிடையாது. ‘சைவம்’, ‘வைணவம்’, ‘சமணம்’ போன்ற சமயங்கள் இருந்தன. ‘இந்து’ என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம்’ என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்.” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், “எங்களின் கனவு நிஜமாகியதில் சந்தோஷம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி. அனைத்து தலைமுறையினரும் இந்தப் படத்தை பார்க்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்த மாதிரி இதைப் போன்ற ஒரு படத்தில் நடிப்பது திருப்தியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லருக்கு கமல் சார் வாய்ஸ் கொடுத்தார். இந்தப் படத்தின் தொடக்கத்தில் கமல் சார் கொடுக்கும் descriptionதான் படத்தில் ஜிவ்வுனு ஏறி அப்படியே போகும்…” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “அனைவரும் இந்தப் படத்தை நமது படம்… தமிழ்நாட்டின் படம் என கொண்டாடுகிறார்கள். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு அம்மாவையும், பாட்டியையும் உடன் அழைத்து வந்து படம் பார்க்கிறார்கள் என்றால் இது சந்தோஷமான விஷயம். நாங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் எங்கள் வெற்றி கமல்ஹாசன் சாரை சேரும். ‘பருத்தி வீரன்’ பட பூஜையின்போது மருதநாயகம் படத்தின் டிரைலர் போட்டு காட்டினார்கள். அந்த ட்ரெய்லரில் குதிரையில் நீங்கள் வருவது என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது…” என்றார்.

The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
“மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..! https://touringtalkies.co/ask-to-manirathnam-actor-sarathkumars-reply/ Tue, 04 Oct 2022 12:32:23 +0000 https://touringtalkies.co/?p=24840 ”இயக்குநர் வெற்றி மாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ”பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு நான் பொருந்துவேன் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப் பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை நினைக்கும்போது […]

The post “மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..! appeared first on Touring Talkies.

]]>
”இயக்குநர் வெற்றி மாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ”பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு நான் பொருந்துவேன் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப் பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது” என்றார்.

மேலும், ”குறை சொல்பவர்கள், அந்தக் குறையை இயக்குநரிடம் சென்று இப்படி சித்தரித்து இருக்கிறீர்களே என்று கேட்க வேண்டும். தவறு இருக்கிறது என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் ஒரு கருத்தினை பதிவு செய்திருக்கிறார். இது ஜனநாயக நாடு. சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ அதைச் சொல்ல அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவர் கருத்து சொல்லி இருக்கிறார் என்றால் அதை யாரிடம் கேட்க வேண்டுமோ, அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

என்னைப் பார்த்து அந்த கருத்தை கேட்டால் நான் சொல்லும் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமா? படத்தில் நடித்ததினால் என்னிடம் கேட்க வேண்டுமா? இயக்குநரிடம் சென்று கேளுங்கள். “இப்படி சித்தரிக்கப்பட்டது தவறு என்று நினைக்கிறோம். இப்படி படத்தில் சொல்லி இருக்கிறீர்கள்” என்று நீங்கள் ஜெயமோகனிடம் கேளுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்” என தெரிவித்தார்.

The post “மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..! appeared first on Touring Talkies.

]]>