The post “என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படையாக சமந்தா தெரிவித்த பின்னர் முதன் முறையாக அவரைப் பற்றியும் படம் பற்றியும் ஊடகத்திடம் மனம் திறந்து உரையாடியுள்ளார்.
“இந்த ’யசோதா’ போன்ற ஒரு கதைதான் நான் உடனடியாக செய்ய விரும்பக் கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை நான் கேட்ட பிறகு அதை நான் ஒத்துக் கொள்ள ஒரு நாள் எடுத்துக் கொள்வேன். ஆனால், இந்தக் கதையை நான் கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒத்துக் கொண்டேன். அந்த அளவிற்கு இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி & ஹரிஷ் இருவரும் புதிய ஒரு கான்செப்ட்டோடு வந்திருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை இது எல்லாமே நீங்கள் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.
இந்த ’யசோதா’ படத்தில் நான் கர்ப்பிணியாக, ஒரு சாதரணமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யானிக் மற்றும் வெங்கட் இருவரும் முடிந்த அளவிற்கு சண்டைக் காட்சிகளை இயல்பாக இருக்கும்படி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கேற்றபடி பயிற்சி எடுத்து நன்றாகவே செய்திருக்கிறேன்.
இந்தக் கதைக்காக நிறைய ஹோட்டல்கள், மருத்துவமனைகள் எல்லாமே பார்த்தோம். ஆனால், சில நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக எல்லாமே செட் அமைத்து விட்டோம். படம் பிரம்மாண்டமாக வெளிவர வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார்.
‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக் கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் – இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மொழிகள் கடந்து இந்தப் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு அவர்கள் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி தனிப்பட்ட ரசனை இருக்கிறது. மொழிகள் கடந்து இந்தப் படத்தின் ட்ரைய்லரை பலரிடமும் எடுத்து சென்ற என்னுடைய சக நண்பர்களான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர், ரக்ஷித் ஷெட்டி மற்றும் வருண் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் படத்திற்கு நான்தான் டப்பிங் பேச வேண்டும் என்று முன்பேயே முடிவெடுத்து விட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும்போது, அதற்கான குரலும் அவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத இந்த சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப்பிங் செய்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சிதான்.
இந்தப் படத்தில் வரலஷ்மி சரத்குமாரின் கதாபாத்திரமும் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே எனக்கு பிடித்திருந்தது. இதற்கு மேல் நான் எதுவும் சொன்னால் அது ஸ்பாய்லர் ஆகிவிடும். அதை ஏன் நான் சொல்கிறேன் என படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.
இந்த யசோதா படம் நீங்கள் டிரெயிலர் & டீசரில் பார்த்துள்ள காட்சிகளைத் தாண்டி இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.
என் மீது என் ரசிகர்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. என் உடல் நலனில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலு அனைத்தையும் ரசிகர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் நன்றி..” என்று சொல்லி முடித்தார் நடிகை சமந்தா.
The post “என் ரசிகர்கள்தான் எனக்கு சக்தி கொடுத்திருக்கிறார்கள்” – நடிகை சமந்தா பேட்டி appeared first on Touring Talkies.
]]>The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தெலுங்கு சினிமா துறையில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்த படங்களை ஆந்திராவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார்.
இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார். இந்த ‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார்.
“இந்த ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார்.
அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.
கடைசியாக சென்ற வருடம் செப்டம்பர் 8-ம் தேதி அவர் இந்த யசோதா கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.
’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.
சமந்தாவின் உடல் நிலை பற்றி டப்பிங்கின்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவரே டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம்.
அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார். அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்...” என்றார் தயாரிப்பாளர்.
The post “கதை கேட்ட 45 நிமிடங்களிலேயே சமந்தா நடிக்க ஒத்துக் கொண்டார்” – யசோதா பட தயாாிப்பாளர் சொன்ன உண்மை..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>மேலும் அப்பதிவில் “யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குணமடைய நான் எதிர்பார்த்ததைவிட அதிக நாள் எடுத்துக் கொண்டது.
நாம் எப்பொழுதும் வலுவான நிலையில் முன்னிற்க அவசியம் இல்லை என்பதை நான் பொறுமையாக உணர்கிறேன். இந்த நோயில் இருந்து குணமடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன.
இன்னும் ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கும்போதுகூட அந்த நிமிடம் எப்படியோ கடந்து செல்கிறது. என்னுடைய கணிப்பின்படி இன்னும் ஒரு நாளில் குணமடைவதை நெருங்கி விட்டேன் என நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
The post ‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்ஷனின் 14வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.
இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை: மணிஷர்மா, வசனம்: புலகம் சின்நாராயனா, Dr. செல்லா பாக்யலஷ்மி, பாடல்: ராமஜோகியா சாஸ்த்ரி, கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜஸ்தி, கேமரா: M. சுகுமார், கலை: அஷோக், சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென், படத் தொகுப்பு: மார்தாண்ட். K.வெங்கடேஷ், லைன் புரொடியூசர்: வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில், இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ், தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்.
படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “இந்த ’யசோதா’ படம் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. இந்தக் கதைக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள்.
இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம்.
இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். வரும் நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்று கூறினார்.
The post சமந்தா நடிக்கும் ‘யசோதா’ நவம்பர் 11-ம் தேதி வெளியாகிறது! appeared first on Touring Talkies.
]]>The post “இனிமேல் சமந்தாவுக்கு நோ டப்பிங் வாய்ஸ்” – சின்மயி திடீர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகியான சின்மயி சிறந்த டப்பிங் கலைஞரும்கூட. நடிகைகள் சமந்தா, காஜல், தமன்னா உட்பட பலருக்குத் தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசி வருகிறார். நடிகை சமந்தாவுக்குத் தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் பேசி வந்தவரும் இவரே.
’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பில், சமந்தாவுக்குப் பின்னணி பேசியது இவர்தான். சமந்தாவின் நடிப்பைப் போலவே அவரது பின்னணி குரலும் கவனிக்கப்பட்டது.
ஆனால், “இனிமேல் சமந்தாவுக்குக் டப்பிங் குரல் கொடுக்க வாய்ப்பில்லை” என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
இது பற்றி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில், ‘‘தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கேரக்டர்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது’’ என்று எழுதியுள்ளார்.
The post “இனிமேல் சமந்தாவுக்கு நோ டப்பிங் வாய்ஸ்” – சின்மயி திடீர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு முடிந்தது.!! appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் 14-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலட்சுமி, பாடல்கள் – ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பாளர் – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி – ஹரிஷ், தயாரிப்பாளர் – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், பேனர் – Sridevi Movies.
திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள்.
இந்த யசோதா படம் பற்றி தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பேசும்போது,
“இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது.
ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15-ம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்த பான்-இந்திய படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.
இந்த எட்ஜ்-ஆஃப் சீட் த்ரில்லர் உலகம் முழுவதும் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்…” என்றார்.
The post ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் ‘யசோதா’ படப்பிடிப்பு முடிந்தது.!! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒப்பனை : பாஷா, ஆடை வடிவமைப்பாளர்கள் : ராஜேஷ், ஹார்மான் கௌர் மற்றும் பல்லவி சிங், கலை இயக்கம் : உத்தர் குமார், சந்திரிகா, சண்டை பயிற்சி இயக்கம் : பீட்டர் ஹெய்ன், வசன உதவி : நரேஷ் பாபு, மக்கள் தொடர்பு : யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி : தினேஷ் நரசிம்மன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், படத்தொகுப்பு : பிரவீன் புடி, இசை : ஹிஷம் அப்துல் வஹாப், தலைமை நிர்வாக அதிகாரி : செர்ரி, ஒளிப்பதிவு : ஜி முரளி, தயாரிப்பாளர்கள் : நவீன் எர்னானி, ரவிசங்கர் யெலமஞ்சிலி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஷிவா நிர்வாணா.
இந்த ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர்.
இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
‘குஷி’ உற்சாகமான.. வண்ண மயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
The post விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post ஹாலிவுட் சண்டை இயக்குநருடன் பணியாற்றும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘யசோதா’. இந்தப் படத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், வரலஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – மணி சர்மா, வசனம் – புலகம் சின்னராயனா, Dr.சல்லா பாக்யலக்ஷ்மி, பாடல் வரிகள் – ராமஜோகையா சாஸ்திரி, கிரியேட்டிவ் டைரக்டர் – ஹேமம்பர் ஜாஸ்தி, ஒளிப்பதிவு – M.சுகுமார், கலை இயக்கம் – அசோக், சண்டை இயக்கம் – வெங்கட், படத் தொகுப்பு – மார்த்தாண்டன், K.வெங்கடேஷ், லைன் புரடியூசர் – வித்யா சிவலெங்கா, இணை தயாரிப்பு – சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, இயக்கம் – ஹரி, ஹரிஷ், தயாரிப்பு – சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
தற்போது இந்தப் படத்திற்கு ஹாலிவுட் சண்டைப் பயிற்சி அமைப்பாளரான யானிக் பென்(Yannick Ben) சண்டை இயக்கம் செய்திருக்கிறார். இவர் ஹாலிவுட் படங்களான ‘Transporter 3’, ‘Project 7’, ‘Paris By Night Of Living Dead’, ‘City Hunter’, Christopher Nolan படங்களான ‘Inception’, ‘Dunkirk’, ஷாருக்கானின் ‘Raees’, சல்மான் கான் நடிப்பில் ‘Tiger Zinda Hai’, பவன் கல்யாண் நடிப்பில் ‘Attarintiki Daredi’, மகேஷ் பாபு நடிப்பில் 1 – Nenokkadine முதலான படங்களுக்கு சண்டை இயக்கம் அமைத்துள்ளார்.
இவர் நடிகை சமந்தா உடன் முன்னதாக ‘Family Man-2 இணையத் தொடரில் பணியாற்றியுள்ளார். தற்போது இந்த ‘யசோதா’ படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “யானிக் பென் இயக்கத்தில் சமந்தா உள்ளிட்டோர் நடித்த முக்கிய ஆக்ஷன் காட்சிகளை பத்து நாட்கள் படமாக்கியுள்ளோம். மூன்றுவிதமான செட்களில் படமாக்கிய அந்த சண்டைக் காட்சிகளில் சமந்தா அசாத்தியமான ஆக்ஷன் காட்சிகளை நடிக்க கடுமையாக உழைத்துள்ளார்.
சமீபத்திய திரைப்படங்களில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப்போல் அல்லாமல் இப்படத்தில் ஆக்ஷன் எபிசோடுகள் மிக அபாரமாக இருக்கும். படத்தின் கதை மட்டுமின்றி இந்த ஆக்சன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹை லைட்டாக இருக்கும்.
தற்போதைக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 கோடி செலவில் கலை இயக்குனர் அசோக் அந்த செட்டை வடிவமைத்துள்ளார். வபும் மே 1-ம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது…” என்றார்.
The post ஹாலிவுட் சண்டை இயக்குநருடன் பணியாற்றும் சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>The post 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தா 2010-ம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார். இதன், பின்னர் ‘பாணாக் காத்தாடி“ படம் மூலம் தனி ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா.
இதனைத் தொடர்ந்து, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘24’, ‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘தெறி’ போன்ற படங்களில் சிம்பு, விக்ரம், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அப்படியே தெலுங்கு பக்கமும் சென்ற சமந்தா குறுகிய காலத்தில் அங்கேயும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறிவிட்டார்.
நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12-வது ஆண்டை இந்த வருடம் கொண்டாடுவதையொட்டி தனது சந்தோஷத்தை தனது சமூக வலைத்தளத்தில் செய்தியாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நான் இன்றுடன் இந்தச் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்து சரியாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன்.
இங்கே ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகச் சிறந்த தருணமாகவே இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே மிகவும் விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை சமந்தா..! appeared first on Touring Talkies.
]]>The post ஒரு பக்கம் தடை; இன்னொரு பக்கம் சம்பள உயர்வு – சமந்தாவுக்குக் கிடைத்த பரிசு appeared first on Touring Talkies.
]]>அதிகப்படியான இந்திய மொழிகளில் பார்க்கப்பட்ட சீரீஸில் நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் சமந்தா இந்த ‘தி பேமிலி மேன்’ தொடர் மூலமாகப் பெற்றுள்ளார்.
இந்தத் தொடர் விடுதலைப் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியதாக இருந்தாலும் சமந்தாவின் பெண் விடுதலைப் புலி நடிப்பு அபாரம்.. அற்புதம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
தற்போது சமந்தா, மகாகவி காளிதாஸரின் காவியமான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘சாகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.
இந்தப் படத்தில் சமந்தாவுடன் ஈஸா ரெப்பாவும், மலையாள நடிகர் தேவ் மோகனும் நடிக்கிறார்கள். ‘ருத்ரமா தேவி’ படத்தை இயக்கிய குணசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த ‘தி பேமிலி மேன்-2’ படத்தில் நடித்தமைக்காக சமந்தாவை இனிமேல் தமிழில் நடிக்க வைக்க வேண்டாம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் எண்ணியிருக்கிறார்களாம்.
ஆனாலும், தற்போது சமந்தா ‘காத்துல வாக்குல ரெண்டு காதல்’ என்ற விக்னேஷ் சிவனின் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகவே உள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா சென்னைக்கு வந்தால் நல்ல ‘வரவேற்பு’ கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஒரு பக்கம் தடை; இன்னொரு பக்கம் சம்பள உயர்வு – சமந்தாவுக்குக் கிடைத்த பரிசு appeared first on Touring Talkies.
]]>