The post நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் மைக்செட் ஶ்ரீராம் கதையின் நாயகனாக வெள்ளித் திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார்.
முழுக்க, முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும்விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் படக் குழுவினருடன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo நிறுவனத்தின் தலைமை அதிகாரியான விசு ஆகியோருடன் 4 you கம்பெனி நிறுவனர் R.பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினை தொடந்து, படக் குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக் குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
The post நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.
]]>The post சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘கிக்’. appeared first on Touring Talkies.
]]>இதில், சந்தானம் ஜோடியாக, ‘தாராள பிரபு’ ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகினி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை – அர்ஜூன் ஜன்யா, ஒளிப்பதிவு – சுதாகர் ராஜ், கலை இயக்கம் – மோகன் பி.கேர், படத் தொகுப்பு – நாகூரா ராமசந்த்ரா, சண்டை பயிற்சி இயக்கம் – Dr.ரவி வர்மா, டேவிட் காஸ்டில்லோ, நடனப் பயிற்சி இயக்கம் – குலபுஷா, சந்தோஷ் சேகர், பத்திரிகை தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு – நவீன் ராஜ்.
இப்படத்தின் மூலமாக, பிரபலமான கன்னட இயக்குநரான பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் கன்னடத்தில் ஹிட்டான ‘லவ் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் இயக்குநராக உள்ளார்.
இது ஒரு அக்மார்க் சந்தானம் படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் இதன் கதை அமைந்துள்ளது.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக்குதான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகியுடன், தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன் ‘சந்தானம்’ பாணியில் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார்.
படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களுக்காக 12 விதமான செட்டுகள் அமைத்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. பின்னர் ஒரே கட்டமாக சென்னையிலும் தொடர்ந்து பாங்காங்கில் 15 நாட்களும் நடந்து முடிவடைந்துள்ளது.
The post சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘கிக்’. appeared first on Touring Talkies.
]]>The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள்.
ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது அவ்வளவு சரியானதாக இல்லை. அதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவதில் தவறில்லை.
திரைப்படங்கள் கடவுளைப் போல.. இதில் தியேட்டர்கள் கோவில் போன்றவை.. ஓடிடிக்கள்தான் பூஜையறை. இதனால் ஒன்றும் பாதிப்பில்லை.
சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் துவங்கி போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள்வரையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த சினிமா தொழிலை நம்பியே உள்ளார்கள்.
தியேட்டர்களை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது என்பதால் அனைவரது நலனுக்காகவும் ஓடிடிக்களில் படங்களை வெளியிடுவதே சரியானதாக இருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.
The post OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு appeared first on Touring Talkies.
]]>The post பாரிஸ் ஜெயராஜ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கிறார். அனைகா சோடி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிருத்வி ராஜ், மொட்டை ராஜேந்திரன், தங்கராசு, சேசு, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன், இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – பிரகாஷ் மாபு, கலை இயக்கம் – துரைராஜ், மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – கே.ஜான்ஸன், வெளியீடு – 11-11 புரொடெக்சன்ஸ்.
சென்னையில் பிரபலமான கானா பாடகராக இருக்கிறார் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்னும் சந்தானம். இவர் வசிக்கும் பகுதி ‘பாரிஸ் கார்னர்’ என்பதால் பெயருடன் ‘பாரிஸ்’ என்பதும் சேர்ந்து கொண்டது.
ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் சந்தானம். அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலைப் பிரிக்க வேண்டி இந்த விஷயத்தில் கில்லாடி வக்கீலான சந்தானத்தின் தந்தை பிரகாஷ்ராஜை அணுகுகிறார்.
தன்னுடைய மகனின் காதலைப் பிரிக்கிறோம் என்பது தெரியாமலேயே அந்தப் பெண்ணின் தந்தைக்கு உதவுகிறார் வக்கீல் பிரகாஷ்ராஜ். அவருடைய செட்டப் ஏற்பாட்டின்படி சந்தானத்தின் நல் ஒழுக்கத்திற்கு களங்கம் வருகிறது. இதைப் பார்த்த சந்தானத்தின் காதலி அவரை விட்டுப் பிரிகிறார். ஆனால், இந்தக் காதலைப் பிரித்தது தனது தந்தைதான் என்பதை அறியும் சந்தானம், தன் தந்தை மீது கோபமாக இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவருக்குள் இன்னொரு காதலும் பிறக்கிறது. கல்லூரியில் படித்து வரும் அனைகா சோடி, கல்லூரியின் விழாவில் பாடுவதற்காக சந்தானத்தை அழைக்க வருகிறார். கூடவே காதலும் பிறக்கிறது. ஒரு காதலை மறக்க இன்னொரு காதலை ஏற்பதுதானே சரி. இதனால் இந்தக் காதலும் செம ஸ்பீடில் போகும்போதுதான் ஒரு டிவிஸ்ட் தெரிய வருகிறது.
தன் மகன் சந்தானம் காதலிக்கும் பெண் தன்னுடைய இரண்டாம் தாரத்து மகள் என்பது வக்கீல் பிரகாஷ்ராஜூக்கு தெரிய வருகிறது. இதனால் இந்தக் காதலைப் பிரிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
இரண்டு மனைவிகள் மேட்டர் இரண்டு மனைவிகளுக்குமே தெரியாது என்பதால் அவர்களுக்குத் தெரியாமல் இந்தப் பிரச்சினையை முடிக்கப் போராடுகிறார் பிரகாஷ்ராஜ்.
ஆனால் அது முடிந்ததா..? இல்லையா..? சந்தானம் காதலித்தது நிஜமாகவே அவருடைய ரத்த உறவு முறையிலான தங்கையைத்தானா என்பதையெல்லாம் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக வைத்து நகைச்சுவையில் மிதக்க வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
சந்தானத்திற்கு வழக்கமான அவருக்கே உரித்தான கதாபாத்திரம். தந்தையை மதிக்காத குணம்.. அனைவரையும் கிண்டல் செய்யும் கதாபாத்திரம்.. பல இடங்களில் சந்தானம் அக்மார்க் சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறார்.
கடைசி காட்சிகளில் பலவிதங்கள் எதுவும் புரியாமல் அவர் தவிக்கும்போது ஏற்படும் கலகலப்புதான் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது. கடைசி கட்ட டிவிஸ்ட் வெளிவந்தவுடன் அவர் ஓடும் ஓட்டமும்.. “எல்லாம் முடிஞ்சு போச்சு” என்ற விரக்தியில் அவர் காட்டும் பாவனையும், பேசும் வசனங்களும் நிறுத்த முடியாத சிரிப்பலை.
முதல் ஹீரோயின் ஒரு சில காட்சிகளே என்றாலும் இரண்டாவது நாயகியான அனைகா சோடி கடைசிவரையிலும் சந்தானத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் உருவத்திற்குக் கச்சிதமான பொருத்தமாக இருக்கிறார் அனைகா சோடி. வசனத்தை மென்று, முழுங்காமல் மிக அழகாக பேச வைத்திருக்கிறார்கள். டப்பிங் கலைஞருக்கு நமது வாழ்த்துகள்.
மிகவும் பாராட்டத்தக்கவர் சந்தானத்தின் அப்பாவாக நடித்தவர்தான். சிறந்த தேர்வு. துணிக் கடையில் மனிதர் மாட்டிக் கொண்டு முழிப்பதும், கடைசிக் காட்சியில் அவர் செய்யும் சமாளிப்புகளும் உண்மையாகவே ரசிக்க வைப்பவை. தெலுங்கு நடிகராம். ஆனால் தமிழை உணர்ந்து பேசி நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
அம்மாக்கள் இருவருமே நாயகியைவிடவும் அழகுதான். அவரவர் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். சந்தானத்தின் அல்லக்கைகள் பேசும் வசனங்கள்கூட சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.
இன்னொரு பக்கம் ‘மொட்டை’ ராஜேந்திரன், சேசு கூட்டணி உருவாக்கும் நகைச்சுவையும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். ‘மொட்டை’ ராஜேந்திரன் இதுவரையிலும் எந்தவொரு திரைப்படத்திலும் இப்படியொரு மகிழ்ச்சியை நமக்குத் தந்ததில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
சந்தோஷ் நாராயணின் இசையில் அனைத்துப் பாடல்களும் கானா பாடல்கள்தான். என்றாலும் இசை தாளம் போடவும், ஆடவும் வைத்திருக்கிறது. ஆனால், இது சென்னையைத் தாண்டி மற்றவர்களுக்குப் புரியுமா.. பிடிக்குமா.. என்பது தெரியவில்லை.
ஒளிப்பதிவில் குறையில்லை. அழகு மிளிர அனைத்துக் காட்சிகளையும் படமாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநரின் கை வண்ணத்தில் நாயகியின் வீடு செட்டப் அழகாக இருக்கிறது. சந்தானத்தின் அறிமுக காட்சியில் அவரே நமக்கு அழகான இளைஞனாகத் தெரிகிறார். மேக்கப்பும், ஒளிப்பதிவும் அவரை அப்படி காட்டியிருக்கிறது.
சிறப்பான கதை, திரைக்கதை. நிஜமாகவே பல காட்சிகளில் திரைக்கதையிலேயே சிரிக்க வைத்திருக்கிறார்கள். வசனங்களும் பன்ச் டயலாக்குகளாக வாய்விட்டுச் சிரிக்கும்படியாகவே அமைந்திருக்கிறது.
கிளைமாக்ஸில் பிரகாஷ் ராஜை “நாய் கடிச்சிருச்சு” என்று சந்தானம் பொய் சொல்வதும், அதற்கேற்றாற்போல் தெரியாமல் பிரகாஷ்ராஜ் அது போலவே நடந்து கொள்வதும்.. அவரை விரட்டிச் செல்வதுமாக கதையை மிக லாகவமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாதி தூள் பறக்கிறது. நேரம் போவதே தெரியாமல் இருந்தது.
இந்த அளவுக்கு பாராட்டத்தக்க அளவில் சந்தானத்தின் காமெடி முந்தைய படங்களில் படம் முழுவதிலும் இருந்ததில்லை. ஆனாலும், இத்திரைப்படம் ஏன் மக்களிடையே பேசப்படவில்லை என்பது மட்டும் புரியவேயில்லை.
பார்த்து மகிழ வேண்டிய திரைப்படத்தை கூவி, கூவி அழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தது கொரோனாவா அல்லது மக்களின் சிக்கன நடவடிக்கையா என்பது ஆராய வேண்டிய விஷயம்.
எப்படியிருந்தாலும் இத்திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது நிச்சயமாக டி.ஆர்.பி.யை அள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
‘பாரிஸ் ஜெயராஜ்’ நிச்சயமாக பார்க்க வேண்டிய நகைச்சுவை திரைப்படம்.
The post பாரிஸ் ஜெயராஜ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “ஆக்சனா, காமெடியான்னு என்னை எல்லாரும் குழப்புறாங்க?” – சந்தானத்தின் பரிதவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசும்போது, “கொரோனா நேரத்தில்தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம்; அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார்தான் காரணம்.
எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். ‘ஏ-1’ படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில்தான் இயக்குநர் ஜான்சனுடன் பணி புரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மளிடம் காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.
இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன். நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதி செய்தார்.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார்தான். ‘ஏ-1’ படத்தின் ஹிட்டுக்கு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள்தான். ரொம்பவே ரசித்து இசையமைத்திருக்கிறார். அவருடைய உழைப்புக்கு மிகப் பெரிய நன்றி. கலை இயக்குநர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். அப்போது வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்கள்தான் கானா பாட்டுக்கள் மிகவும் பிரபலம். அங்குதான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போதுதான் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம்.
கானா பாடகரைச் சுற்றியே கதை என்பதால், அந்தப் பாடல்களுடன் அமைத்தால் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும். கானா பாட்டு பாடுபவர் கவிதை நடையுடன் பாடினால் அந்தக் கதாபாத்திரம் ஒட்டாது என்பதுதான் காரணம். கானா என்பதே காக்டெய்ல் மாதிரிதான். அனைத்து மொழி வார்த்தைகளும் மிக்ஸ் செய்ததுதான். அதற்கு தமிழில் அர்த்தம் சொல்ல முடியாது.
மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால், அடுத்து படம் பண்ணும்போது எளிதாக இருக்கும். அதனால்தான் ‘ஏ-1’ படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்தி உள்ளோம்.
ஆக்ஷன் படங்களில் நடித்தால், “ஏன் ஆக்ஷன் படம்.. காமெடி படம் பண்ணுங்கள்..?” என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் “ஏன் ஆக்ஷன் படம் பண்ணுவதில்லை..?” என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்ஷன் படம் பண்ணலாமா என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம் என்று எண்ணியுள்ளேன்…” என்று பேசினார்.
The post “ஆக்சனா, காமெடியான்னு என்னை எல்லாரும் குழப்புறாங்க?” – சந்தானத்தின் பரிதவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post “ராஜ்யசபா சீட் கொடுத்தால் அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் சந்தானம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையொட்டி இன்று காலை நடைபெற்ற இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “உங்களது நண்பர் உதயநிதி அரசியலில் தீவிரமாகிவிட்டார். நீங்களும் அரசியலில் நுழைவீர்களா..?” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சந்தானம் பதிலளித்தார்.
சந்தானம் தன் பதிலில், “ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன். போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டு என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டீர்கள். ‘பா.ஜ.க.வில் சேரப் போகிறேன்’ என்று நீங்கள் எழுதிய கதைகளால் பல நாட்கள் பலரும் என்னைத் தொலைபேசியில் அழைத்து இதைத்தான் கேட்டார்கள்.
உதயநிதி சாருடன் இணைந்து படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தேன். காமெடிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அந்தந்த படங்களில் செய்தேன். இப்போதும் அதேபோல் அவருடன் படம் மட்டும்தான் பண்ணுவேன்.
இதேபோல் ஆக்ஷன் படங்களில் நடித்தால், “ஏன் ஆக்ஷன் படம்.. காமெடி படம் பண்ணுங்கள்..” என்கிறார்கள். “காமெடி படம் செய்தால் ஏன் ஆக்ஷன் படம் பண்ணுவதில்லை…” என்கிறார்கள். இப்படி பல பேர் குழப்புவதால்தான் சில சமயங்களில் அடுத்து ஆக்ஷன் படம் பண்ணலாமா என்றுகூட நான் யோசிப்பதுண்டு. இப்போதைக்கு மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை என் படங்களில் செய்து கொண்டிருக்கிறேன். முதலில் இதை சரியாக செய்வோம்…” என்று பதிலளித்தார்.
The post “ராஜ்யசபா சீட் கொடுத்தால் அரசியலுக்கு வரத் தயார்” – நடிகர் சந்தானம் அறிவிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post திடீரென்று புலிப் பாய்ச்சல் காட்டும் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.
]]>நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவான ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்கள் வெளியீ்ட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலைமையில் கடந்த மாதம் ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தினை முழுமையாக முடித்துக் கொடுத்த சந்தானம், அடுத்த இரண்டே நாட்களில் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை தொடரச் சென்றுவிட்டாராம்.
அந்தப் படம் ‘சபாபதி’. சத்தமே இல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இடையிடையே நடத்தப்பட்டு இப்போது வெறும் 2 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடும் அளவுக்கு இருக்கிறதாம்.
சமீபத்தில் நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளன்று வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின்போதுதான் இந்தப் படம் பற்றிய தகவலையே வெளியில் தெரிவித்தார்கள். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் சீனிவாச ராவ் என்பவர் இயக்கி வருகிறார்.
ஆக. மொத்தம் அடுத்த மாத இறுதிக்குள் சந்தானம் நடிப்பில் உருவான நான்கு திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயார் என்ற நிலையில் காத்துக் கொண்டிருக்கும்.
இந்த நிலைமை தற்போது தமிழ்ச் சினிமாவில் யாருக்குமே கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம்.
‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘டிக்கிலோனா’ ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்றுதான் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால், இப்போது ‘மாஸ்டர்’ படத்திற்கு தியேட்டர்களில் கிடைத்திருக்கும் வரவேற்பு அவர்களை சற்று யோசிக்க வைத்திருக்கிறதாம்.
ஓடிடியா.. அல்லது நேரடியாக தியேட்டர்களாக என்பதை முடிவு செய்ய வேண்டிய இறுதியான தருணத்தில் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சந்தானம் தற்போது தனது படங்களின் ஸ்கிரிப்ட்டுகளை வெளியில் இருக்கும் சில எழுத்தாளர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி இந்தக் கதை தனக்கு செட்டாகுமா.. ஏதாவது திருத்தம் செய்தால் சோபிக்குமா என்றெல்லாம் விசாரிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
இதெல்லாம் அவருடைய கேரியரை வலுப்படுத்த அவர் செய்யும் விஷயம் என்றாலும் சந்தானத்தின் இந்த திடீர் மாற்றம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும் என்றே கருதலாம்..!
The post திடீரென்று புலிப் பாய்ச்சல் காட்டும் நடிகர் சந்தானம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் துவங்கியது. appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் சந்தானத்திற்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லு சபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – மாதவன், எழுத்து, இயக்கம் – ஆர்.ஸ்ரீனிவாசன்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான ஸ்ரீனிவாசராவ். இவர், ‘வல்லினம்’ படத்தில் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது. காமெடி கதைக் களம் என்றாலும்கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்து வைக்கும்.
ஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்து வந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப் போக முடியும்.
மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.
காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார் சந்தானம். இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும். மற்றும் இன்றைய அரசியல் சூழலை வெளிப்படுத்தும்வகையில் பல சுவாரஸ்யமான ,ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.
ஹீரோயினாக ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம். மேலும், படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.
கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது…” என்றார்.
இந்தப் படம் இன்று காலை கும்பகோணத்தில் பூஜை நிகழ்வுடன் ஒரு கோவிலில் நடைபெற்றது.
நடிகர் சந்தானம் ‘பேரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதியப் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
The post நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் துவங்கியது. appeared first on Touring Talkies.
]]>The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>அதன் பின்பு செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது சந்தானம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “நான் பா.ஜ.க.வில் சேர்வதாகச் சொல்வது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி..” என்றார்.
மேலும் சந்தானம் பேசுகையில், “கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் இதுபோல் நான் பயந்தது இல்லை. கொரோனா காலத்தில் ‘பிஸ்கோத்’ படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோமே.
மக்கள் வருவார்களோ, இல்லையோ என்று பயந்தேன். தற்போது அந்த பயம் போய்விட்டது. ரசிகர்கள் அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகளைக் கடைப்பிடித்து தியேட்டர்களுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..!
ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி. ஓடிடியைவிட தியேட்டர்களில் படங்கள் வெளியாவதுதான் சிறப்பானது. ரசிகர்கள் திரையில் நடிகர்களைப் பார்த்து கை தட்டி ரசிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர்கள் மீது ரசிகர்கள் அன்பு வைத்திருப்பதும் அவர்களைக் கொண்டாடுவதும் தியேட்டர்களில் படங்கள் வெளியாவதன் மூலமாகத்தான் நடக்கிறது. இதனால் தியேட்டர்களில்தான் உண்மையான சந்தோஷமே ரசிகர்களுக்குக் கிடைக்கும். இதேபோல் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு கிடைக்கும். இது ஓடிடியில் நிச்சயமாகக் கிடைக்காது.
நான் பா.ஜ.வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. இது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி. எனக்கு எதற்கு அரசியல்… ? சினிமாவில் இருக்கும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்…” என்றார்.
The post “பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>The post டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>பொதுவாக திரைப்படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கான சம்பளத்தில் பாதியை படத்தின் துவக்கத்திலும் மீதியை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பின்பும்தான் கொடுப்பது வழக்கம். உச்ச நட்சத்திரங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதுதான் நடைமுறை.
டப்பிங் பேசுவதற்கு முன்பாக மொத்தமுள்ள மீதித் தொகையையும் கொடுத்தால்தான் டப்பிங் பேசவே வருவேன் என்று சொல்லி கறாராய் சம்பளத்தை வசூலிக்கும் நட்சத்திரங்களும் திரையுலகத்தில் உண்டு. இதற்கு உதாரணமாக கவுண்டமணியைத்தான் சொல்வார்கள். மீதிப் பணம் அவர் கைக்குப் போகாமல், அவர் வீட்டில் இருந்து காரில் ஏற மாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்.
அந்த வரிசையில் இப்போது சந்தானமும் இணைந்திருக்கிறாராம். தற்போது தான் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளுக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறாராம் நடிகர் சந்தானம்.
ஒரு நாள் ‘தலைவலி’.. அடுத்த நாள் ‘காய்ச்சல்’.. மூன்றாவது நாள் ‘மூடு சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்க்கிறாராம். இத்தனைக்கும் படத்தின் முற்பாதி முழுவதும் சந்தானம் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இடைவேளைக்குப் பின்னான காட்சிகளுக்குத்தான் தற்போது டப்பிங் பேச வேண்டியிருக்கிறதாம்.
ஒருவேளை சம்பளப் பாக்கியிருக்குமோ என்று விசாரித்தால் அதுவும் இல்லை. மொத்தப் பணமும் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பாகவே சந்தானத்திற்கு செட்டில் செய்யப்பட்டுவிட்டதாம்.
பிறகென்னதான் பிரச்சினை என்று விசாரித்தபோது, சம்பளப் பாக்கி கதையைவிடவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் சிக்கியிருக்கிறது.
சந்தானம் நடித்து வெளியாகாமல் இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ‘பிஸ்கோத்து’ ஆகிய திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாவது உறுதியாகிவிட்டதாம். இந்த நிலைமையில் மூன்றாவதாக இந்த ‘டிக்கிலோனா’ திரைப்படமும் தற்போது தயாராகி நின்றால், இதுவும் ஓடிடிக்கே போய்விடும் என்று சந்தானம் பயப்படுகிறாராம்.
வரிசையாக தனது அனைத்துப் படங்களும் ஓடிடியில் ரிலீஸானால் தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து போகும் நிலைமைக்கு போய்விடுமே என்றெண்ணிதான் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்திற்கு டப்பிங் பேச வராமல் தப்பிக்கிறாராம்.
சமீபத்தில் இந்தப் படத்தை எடுத்தவரைக்கும் போட்டுப் பார்த்தபோது பிரிவியூ தியேட்டரே சிரிப்பாய் சிரித்ததாம். அந்த அளவுக்கு நகைச்சுவை படத்தில் தெறிக்கிறதாம். இந்த அளவுக்கு சிறந்த படமாக இருக்கும்போது இதை எதற்கு ஓடிடியில் தள்ளிவிட வேண்டும்..? இந்தப் படம் தியேட்டருக்குத்தான் வர வேண்டும் என்று நினைக்கிறார் சந்தானம்.
ஆனால், தயாரிப்பாளரோ தியேட்டர்கள் இல்லையெனில் உடனேயே ஓடிடியில் வெளியீடு என்பதில் குறியாக இருக்கிறார்.
இந்த இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்..!
The post டப்பிங் பேச வராமல் டபாய்க்கும் நடிகர் சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>