The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அடுத்து ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார். ‘நீர்ப்பறவை’ படம் கடந்த 2012-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடலோரத்தில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்வியல் இந்தப் படத்தில் கதையாக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ‘நீர்ப்பறவை’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “நீர்ப்பறவை பாகம்-2′ தொடங்கப்படும். ‘நீர்ப்பறவை’ அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post படப்பிடிப்பு இடைவேளையில் ஜிவி.பிரகாஷ் செய்யும் காரியம்! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் – காயத்ரி ஜோடியாக நடிக்கும் இடி முழக்கம் படம் உருவாகிறது.
படம் குறித்து பேட்டி ஒன்றில், புது தகவலைச் சொன்னார் சீனு ராமசாமி:
“ இதுரை நான் இயக்கிய படங்களில் இருந்து வித்தியாசமான வகையில் க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது; ஆனால் வழக்கம்போல, மனிதம்தான் இப்படத்தின் அடிநாதமும்” என்றவர், “இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்தான் முழுமையாக பொருந்துவார் என நினைத்தேன். அதே போல கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார்.
அவருக்கு எப்போதுமே சினிமா, சினிமா, சினிமாதான். வேறு எதையும் அவர் யோசிப்பதே இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில்கூட அவர் சற்று நேரம் ஓய்வெடுப்போம் என நினைப்பதில்லை. அந்த நேரத்திலும் இசை அமைக்கும் பணியை மேற்கொள்கிறார். அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது” என கூறியிருக்கிறார் சீனு ராமசாமி.
The post படப்பிடிப்பு இடைவேளையில் ஜிவி.பிரகாஷ் செய்யும் காரியம்! appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இடம் பொருள் ஏவல்’.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, 2015-ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய வேறு படங்களே வெளியாகிவிட்டன.
இதனிடையே, தற்போது இந்தப் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டதாம். இதனால் இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் appeared first on Touring Talkies.
]]>முன்னதாக ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நடித்திருக்கும் மாதம்படி ரங்கராஜ் தற்போது ‘கேசினோ’ எனும் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இப்படத்தின் இதர தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
The post சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் appeared first on Touring Talkies.
]]>The post “நடிகர் மோகனும் நானும் அண்ணன் தம்பி.. எப்படி தெரியுமா?: ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.
]]>பலருக்கும் குழப்பம்.
இதற்கு விடையாக அவர் பேசும்போது, “பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய முதல் படமான கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். அதன்படி பாலு மகேந்திரா அவர்களின் மூத்த பிள்ளை மோகன்.
சமீபத்தில் நடந்த திரைவிழா ஒன்றில் தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது மேடையில் இருந்த நடிகர் மைக் மோகனைப் பார்த்து, “நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி” என்றார்.
பலருக்கும் குழப்பம்.
இதற்கு விடையாக அவர் பேசும்போது, “பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய முதல் படமான கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன். அதன்படி பாலு மகேந்திரா அவர்களின் மூத்த பிள்ளை மோகன்.
பாலு மகேந்திரதா அவர்களிடம் பணி புரிந்த உதவி இயக்குநர்களில் கடைசியானவன் நான். அந்த வகையில் நான் அவருக்கு கடைசி பிள்ளை. ஆகவே மோகனும் நானும் சகோதரர்கள்” என்று விடையைச் சொல்லி முடித்தார் சீனு ராமசாமி
The post “நடிகர் மோகனும் நானும் அண்ணன் தம்பி.. எப்படி தெரியுமா?: ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி appeared first on Touring Talkies.
]]>The post Aha ஓடிடி தளத்தின் சொந்தப் படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற் காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.
சிலம்பரசன் நடிப்பில் தயாரான ‘ஈஸ்வரன்’, ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான ‘குற்றம் குற்றமே’ ஆகிய திரைப்படங்களையும், ஆஹாவில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குத்துப் பத்து’ எனும் வலைதள தொடரையும் இத்தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே தயாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, கே.பி.ஒய் தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. மதன் மேற்கொள்கிறார்.
பேமிலி டிராமா / டிராஜிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே வி.துரை தயாரிக்கிறார்.
ஆஹா ஒரிஜினல் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
The post Aha ஓடிடி தளத்தின் சொந்தப் படம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாமனிதன்’ – பூடான் சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகள் பெற்றது appeared first on Touring Talkies.
]]>நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார்.
இனம், மதம், மொழி கடந்த மனித நேயத்தை வெளிப்படுத்திய இப்படம், மக்களின் பேராதரவைப் பெற்றது. திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
இந்நிலையில், பூட்டான் நாட்டில் நடைபெறும் புகழ் பெற்ற (Druk international film festival) டுருக் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ‘மாமனிதன்’ திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த குடும்ப திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.
The post ‘மாமனிதன்’ – பூடான் சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகள் பெற்றது appeared first on Touring Talkies.
]]>The post மறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி appeared first on Touring Talkies.
]]>அவருக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி தனது நண்பர் தாமிராவுக்கு செலுத்திய அஞ்சலி பதிவு இது :
அனைவருக்கும் வணக்கம்.
தங்களோடு பயணித்த ஒரு படைப்பாளியை நினைவு கூற நினைத்த உங்கள் பெரு உள்ளத்திற்கு இந்த வணக்கம் அன்பின் காணிக்கை.
ஒரு முறை “ஒரு மேனேஜர் வேணும் சீனு” என்றார் இயக்குநர் தாமிரா. என் உடலில் பாகமாக இருக்கும் நண்பன் ஜாகீர் உசேனை அனுப்பி, “என்னுடன் நீ இருப்பதை போல, அவருடன் இரு” என்றேன். ஒரு வருடம் கழித்து, “ஜாகீரை தந்தமைக்கு நன்றி” என்றார்.
கொரோனா காலத்திற்கு முன்பு “ஒரு உதவி இயக்குநர் வேண்டும்” என்றார். என் மீது மையல் கொண்டு என்னிடம் வந்து சேர முயன்ற இளைஞன் ஒச்சுமாயியை அனுப்பினேன்.
அந்தத் தம்பிதான் தாமிராவின் ஆஸ்பத்திரி நாட்களை ஒவ்வொரு நாளாக நம்பிக்கையாக என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தான்.ஆனால் இதய தசைகள் கிழிபட “தாமிரா சார் நம்மை விட்டுட்டு போய்ட்டார் சார்” என்று அன்றைய கொடூர நாளில் என்னை அலைபேசியில் அழைத்து அழுதான்.
அன்று முழுவதும் அமைதியாக இருந்தேன். அவர் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பத்திரியின் வாசலை இப்பவும் கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை என் மனம் நினைக்கும்.
“சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி… அது ஸ்கீரின் பிளேல்ல வருது.. அது இருக்கிறவரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல.. உடம்ப மட்டும் பார்த்துக்கங்க சீனு…” என்றார்.
உலகம் என்னை கைவிட்ட ஓர் நாளில் அவரிடம் இருந்து எனக்கு வந்த வார்த்தைகள் இவை. உலகம் மட்டுமல்ல என்னை நானே அப்போது கை விட்டுருந்தேன். “சரிங்க சார்” என்று மட்டும் சொன்னேன். என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.
பிறந்து மூன்று மாதங்களேயான என் மூத்த மகளின் அருகே படுத்து நிம்மதியாக தூங்கினேன். அந்நாள், இந்நாள் போல் நினைவில் இருக்கிறது.
நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயை போல் உயர்ந்தவன். இதுதான் இயக்குநர் தாமிரா. அவர் நேசித்த தாமிரபரணி ஆறும் அப்படியானதுதான்.
இயக்குநர் தாமிரா அவர்களை நான் முதன் தலாக பார்த்தது 1997-ம் ஆண்டு அண்ணன் சீமான் அவர்களின் சாலிகிராமத்து வீட்டில்தான். ஒரு எழுத்தாளராகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.
சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார்.
பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறன். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு, பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன். எப்போதும் எளிமையாகவும், அன்பான மனிதராகவும் அவர் இருந்தார்.
அவர் பெற்ற குழந்தைகளை சிறு வயதில் அவருடைய வடபழநி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன். எப்போது சந்தித்தாலும் இலக்கியம், சினிமா என பேசி களைத்திருக்கிறோம்.
அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையற்று நாளை பற்றிய நம்பிக்கையோடு இருந்தவர். சதா இயங்கியபடி இருக்கும் தன்னம்பிக்கையாளர். எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார்.
என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தோற்றவனுக்கு பிரியமாக தரும் சிகரெட் போல எனக்கு ரொம்ப முக்கியமானது.
அவர் கோல்டு பிளேக் கிங்சை எனக்கு நீட்டி “வாங்க சீனு” என்பார். பின்பு சிகரெட் குடிப்பதை அறவே நிறுத்தி அதற்கு எதிராக என்னிடம் பிரச்சாரமும் செய்தார். புகைப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று..!
முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குநர் தாமிரா. தாமிரா ஒரு நல்ல ஆன்மா. தன் தந்தையை பெருமையாகக் கொண்டாடியவர். தன் சொந்த ஊரை நேசித்த கலைஞன். தலைக்கனம் இல்லாத மனிதன். வசந்த கால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்று விட்டது.
என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன். அவர் சிரிப்பில் எப்போதும் ஒரு இள வெயிலை உணர்ந்திருக்கிறேன். இப்போதும் இக்கணத்திலும்…!
தாமிரா சார்.. உங்கள் புகழ் வாழ்க..!
நீங்கள் நடந்து பாதங்களால் உருவாக்கிய நல்லுணர்வுமிக்க ஒற்றையடிப் பாதையில் உங்கள் சந்ததிகள் வளர்க..!
தன் விவசாய நிலத்தில் காலூன்றி நிற்கும் உங்கள் தந்தை வாழ்க..!
வாழ்க வாழ்க… அன்பு மிகுந்த தோழரே நீர் வாழ்க…!
நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் அலைபேசியை எடுக்கக் காத்திருப்பேன்.
சீனு ராமசாமி
The post மறைந்த இயக்குநர் தாமிராவுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் அஞ்சலி செய்தி appeared first on Touring Talkies.
]]>