The post சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் K V அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. காதலும் காமெடியும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், முழுமையான ரொமான்டிக் காமெடி படமாக இப்படம் அனைவரையும் கவர்ந்தது.
ஒரு தமிழ் பையன் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் எளிமையான கதை. அன்பு (சிவகார்த்திகேயன்), ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக பணியாற்றுகிறான். அதே பள்ளியில், ஜெசிகா (மரியா ரியாபோஷப்கா) ஆங்கிலம் கற்பிக்கிறார்.
ஜாதிக்கு எதிரானவராக வாழும் உலகநாதன் ( சத்யராஜ்) தன் மகன் ஜாதியை விட்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். இந்நிலையில் ஜாதிக்கெதிராக மட்டுமல்லாமல் முற்றிலும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அப்பா எதிர்க்க மாட்டார் என நினைக்கிறான் அன்பு. அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. உலகநாதன் ஆங்கிலேயர்களால் தனது தந்தை கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ்காரர்களை முற்றிலுமாக வெறுக்கிறார். இதனால் தன் மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்பு தனது காதலில் எப்படி ஜெயிக்கிறான் என்பது தான் ‘ப்ரின்ஸ்’ படம்.
தீபாவளி வெளியீடாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிரிப்பு மழை பொழிய வைத்தது. தற்போது உங்களை மகிழ்விக்க இல்லங்கள் தேடி வருகிறது. நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.
The post சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post “மாவீரன் ஷூட்டிங் நிறுத்தமா?” – இயக்குநர் மடோன் அஸ்வின் மறுப்பு appeared first on Touring Talkies.
]]>மழையின் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக படக் குழுவினர் தெரிவித்தாலும், சிவகார்த்திகேயனுக்கும், மடோன் அஸ்வினுக்கும் கதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகத்தான் ஷூட்டிங் நின்றுவிட்டதாக வெளியில் பேசப்பட்டது.
ஆனால் இதை முற்றிலுமாக மறுக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். இது குறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின், “படப்பிடிப்பு நிறுத்தமா? யார் இந்தப் புரளிய கிளப்புனது? அவுட்டோர் ஷுட்டிங் ஆரம்பிக்கிற நேரத்துல செம மழை வந்துருச்சு. இப்ப மழை நின்னதும் திரும்பவும் ஷுட்டிங்கை ஆரம்பிச்சிட்டோம். நம்பிக்கையா, வேகமா வேலை செஞ்சுட்டு இருக்குறப்ப இதைல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ ஷுட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. படம் நல்லா வந்துட்டு இருக்கு. சீக்கிரம் தியேட்டருக்கு வரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
The post “மாவீரன் ஷூட்டிங் நிறுத்தமா?” – இயக்குநர் மடோன் அஸ்வின் மறுப்பு appeared first on Touring Talkies.
]]>The post “புரியாமலேயே நடிச்சோம்!”: பிரின்ஸ் பற்றி சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் சிவகார்த்திகேயன் – மரியா ஆகியோரது காதல் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் இதைக் குறிப்பிட்டு, “மரியாவுக்கு தமிழ் தெரியாது. அவருடன் ஆங்கிலத்தில் பேசி காட்சியை விளக்கி நடித்தீர்களா. இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதே” என சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு சிவகார்த்திகேயன் சிரித்துக்கொண்டே, “அவங்க உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவங்க.. உக்ரேனிய மொழிதான் தெரியும். ஆங்கிலம் அவ்வளவா வராது.. அதனால அவங்க பேசற ஆங்கிலம் எனக்கு புரியாது.. நான் பேசற ஆங்கிலம் அவருக்குப் புரியாது..! ஆனாலும் காட்சிகளை புரிஞ்சி நடிச்சாங்க.. அதான் இயல்பா வந்திருக்கு” என்றார்.
மொழிகளைக் கடந்தது உணர்வு என்பதை நிரூபித்துவிட்டார் மரியா!
The post “புரியாமலேயே நடிச்சோம்!”: பிரின்ஸ் பற்றி சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அறிவுரை..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும், சினிமா கதாசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர், ‘பிரின்ஸ்’ படத்தையும், நடிகர் சிவகார்த்திகேயனையும் விமர்சித்து தனது முக நூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
அது இங்கே..!
“முதல் காட்சியிலேயே இது மொக்கை காமெடிகளும், ஒருவரை ஒருவர் கவுண்ட்டர் கொடுத்து கலாய்க்கும் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் சாயலும் கொண்ட, லாஜிக் எதிர்பார்க்க அவசியமில்லாத, ஒரு காட்சியிலும் சீரியஸ்னெஸ் இல்லாத படம் என்பதை ஒரு டிஸ்கிளைமர் போல பதிவுசெய்துவிடுவதால் அவற்றைப் பற்றி எதுவும் விமரிசிக்க இயலாது.
ஆனாலும் பார்க்கிற நமக்குள் என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்..?
அங்கங்கே சில காட்சிகளில் மட்டும் சிரிக்கிறோம்.
அங்கங்கே பல காட்சிகளில் கடுப்பாகிறோம்.
அங்கங்கே வசனத்தின் சாமர்த்தியத்தை ரசிக்கிறோம்.
அங்கங்கே அதே வசனத்தின் காரணமாக எரிச்சலடைகிறோம்.
சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்திலிருந்து ராஜினாமா செய்து வெளியே வந்தால் நல்ல படங்கள் தர இயலும்.
அல்லது ‘சீமைராஜா’, ‘டான்’, ‘பிரின்ஸ்’ என்றேதான் தன் கேரியரைத் தொடரப் போகிறார் என்றால் மிகுந்த பொட்டென்ஷியல் கொண்ட அவரைத் தொடர்பவர்கள் குறையத் தொடங்கிவிடுவார்கள் என்பது நட்பு ரீதியில் அவருக்கான ஒரு எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
The post நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அறிவுரை..! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் பல்வேறு நடிகர்களைப் பற்றி மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது சிம்பு அரசியலுக்கு வந்த என்ன செய்வார் என்கிற கான்செப்டில் பேசிய சிவகார்த்திகேயன், “கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தால் அதை நிறைய பேரை வாங்க வைப்பேன் சார்..” என்று காமெடியாக சிம்புவின் குரலிலேயே பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிகராவதற்கு முன்பாக நகைச்சுவைக்காக இப்படி பேசி இருந்தாலும், தற்போது அவர் ஒரு முன்னணி நடிகராக இருப்பதால் அவரின் இந்த பேச்சுக்கு சிம்புவின் ரசிகர்கஎிடையே பலவித எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.
The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.
]]>The post பிரின்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>இவருடைய மகனான அன்பரசன் என்ற சிவகார்த்திகேயன் புதுச்சேரியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வருகிறார் இங்கிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெசிகா.
பார்த்தவுடன் காதல் என்ற சினிமா டெம்ப்ளேட் திரைக்கதையினால் சிவாவும் ஜெசிகாவை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். சில, பல பிரச்சினைகளுக்குப் பிறகு இந்தக் காதலுக்கு ஓகே சொல்கிறார் ஜெசிகா.
ஆனால், சத்யராஜ் இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார். அவருடைய தாத்தா, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டவர் என்பதால் தன் மகன் சிவா பிரிட்டிஷ் நாட்டு மருமனாக ஆவதை கடுமையாக எதிர்க்கிறார் சத்யராஜ். இதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
இந்த இரு வீட்டார் எதிர்ப்புகளை சமாளித்து ஊரார், உற்றார், நண்பர்கள் ஆதரவுடன் சிவா, ஜெசிகாவை எப்படி திருமணம் செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்த ‘ப்ரின்ஸ்’ படத்தின் ராஜா கண்டிப்பாக அன்பரசனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்தான். ஆயிரம் வாட்ஸ் எனர்ஜியுடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தனது முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களில் டார்க் காமெடியையும், காலேஜ் காமெடியையும் வைத்து ஹிட் கொடுத்தவர், இதில் கொஞ்சம் கூடுதலாக பத்திரிகைகளில் வந்த நகைச்சுவை துணுக்குகள், டிவி நிகழ்ச்சிகளில் வரும் ஒன் லைன் நகைச்சுவைகளை வைத்து காமெடிகளை கொடுத்திருக்கிறார்.
காட்சிக்குக் காட்சி டைமிங்சென்ஸ் மிக்க ரிவீட் அடிப்பது போன்ற வசனங்கள், தன்னுடைய உடலை அசைத்தே அடுத்தடுத்த நடிப்பைக் காண்பிப்பது, நடிகர் விஜய்க்கு போட்டியாக நடனத்தில் சிறப்பு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதிலும் ‘பிம்பிளிக்கி பிளாப்பி’ பாடலில் வரும் சிங்கிள் ஷாட் டான்ஸ் அசத்தல். ரொமான்ஸ், பாசம், வீரம், காமெடி, நடிப்பு என்று படம் நெடுகிலும் தானே தாங்கிப் பிடித்திருக்கிறார் சிவா.
இவருடைய நண்பர்களாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், பாரத், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்து முகத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் சிரிக்க வைக்கவில்லை. ஒரேயொரு காட்சியில் வரும் சூரியும் சிரிக்க வைக்கவில்லை என்பது கொடுமையானது. ஆனால் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆனந்த்ராஜ் அதகளமான காமெடியை வழங்கி கொஞ்சம் சமன் செய்திருக்கிறார். பிரேம்ஜியின் வில்லன் நடிப்பும் காமெடியானதால் அதுவும் சீரியஸாக இல்லை.
உலகநாதனாக நடித்திருக்கும் சத்யராஜ் தன்னுடைய பாணியில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அனைத்திலும் ஓவர் ஆக்ட்டிங்காகிவிட்டது. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் சீரியஸான காட்சிளில்கூட நகைச்சுவையாக பேசி பிரச்சினையை டைவர்ட் செய்வதால் நம்மால் ரசிக்க முடியவில்லை.
ஜெஸிகா கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா. புரியாத, தெரியாத மொழி என்பதால் நடிப்பை வரவழைக்க முடியவில்லை. நடன அசைவுகளில் கொஞ்சம் தேர்ச்சி பெறுகிறார். டப்பிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. பாண்டிச்சேரியின் அழகையும், ஜெசிகாவின் அழகையும் ஒரு சேர படம் பிடித்திருக்கிறார். இருவரில் யார் அழகு என்று போட்டிதான் வைக்க வேண்டும். பாடல் காட்சிகளை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தமனின் இசையில் ‘ஜெஸிகா’ பாடலும், ‘பிம்பிளாக்கி பிளாப்பி’ பாடலும் ஹிட். காட்சிகளும் ரசிக்கும்படிதான் படமாக்கியுள்ளனர். கிருத்திகா சேகரின் ஆடை வடிவமைப்பு இளமையானவர்கள் நடித்த படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது.
இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சில இடங்களில் நகைச்சுவைகள் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கின்றன. பல இடங்களில் சிவாவின் படத்தில் இப்படியொரு காமெடியா என்று கேட்கவும் வைக்கிறது.
“இவர்தான் எங்கப்பா… வயசுல என்னைவிட மூத்தவரு”, என்ற வசனத்தில் துவங்கி “என் ரத்தம் லைட்டு பிங்க்”, “இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு. ஆனா, இதுதான் ஃபர்ஸ்ட் டைம்”, “எலிசபத் டெய்லருன்னு குழந்தைக்கு பேரு வைக்கிறான். ஒரு டெய்லரோட புள்ள டெய்லராத்தான் ஆகணுமா?” என்று வரும் வசனங்கள் லேசான சிரிப்புக்களை ஆங்காங்கே வரவழைத்தாலும், ஒட்டு மொத்தமாய் நகைச்சுவை காட்சிகளுக்கு சிறிதளவு பஞ்சத்தைத் தருகிறது இந்தப் படம்.
இந்த தீபாவளி கொண்டாட்ட மூடில் குடும்பத்தோடு தியேட்டருக்கு வருபவர்களை ரசிக்க வைத்து அனுப்புகிறான் இந்த ‘பிரின்ஸ்’.
RATING : 3.5 / 5
The post பிரின்ஸ் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “எப்போ ஸார் கதை சொல்வீங்க?” – வெங்கட் பிரபுவிடம் கேட்ட சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>அப்போது எதிர்பாராதவிதமாக இயக்குநர் வெங்கட் பிரபு, “நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம்..? அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ஷூட்டிங் எப்போ வேணாலும் போலாம் சார். ஆனால் இந்த கதையை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்?” என்று கேள்வியெழுப்பினார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
The post “எப்போ ஸார் கதை சொல்வீங்க?” – வெங்கட் பிரபுவிடம் கேட்ட சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>The post “இந்தத் தீபாவளி எனக்கு ஸ்பெஷல்” – சிவகார்த்திகேயன் சொன்ன ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த பிரின்ஸ் படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான் என்பதுதான் கதை.
ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம்.
அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியை தமிழுக்கு மாற்றி கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்து பார்க்க கூடாது என நினைத்தோம்.
தமிழிலிருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இது க்ளிக் ஆகிவிட்டால் தென்னிந்திய திரைத்துறையில் மாற்றங்கள் இருக்கும். காரணம் நிறைய நாயகர்கள் ஆப்ஷன்ஸ் இருக்கும். கூட்டணிகள் அமையும். தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். அதனால்தான் இதை சவாலாக கொண்டு வந்திருக்கிறோம்.
இது அனுதீப்பின் சிக்னேஞ்சர். அவருடைய ஸ்டைல் இது. இந்தப் படத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக் கொண்டு ரசிக்கப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும்.
இந்தப் படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஊர் தமிழ்நாட்டில் இல்லை. அது கற்பனையில் தோன்றிய ஊர். அந்த ஊர், மக்கள் குறித்தும் அங்கு நிலவும் காதல் குறித்து ஜாலியாக கொண்டு சேர்க்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.
தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்த ஜாலியாக படம் பார்க்கும் மூட்-ஐதான் உருவாக்கியிருக்கிறோம். சொல்லப் போனால் ஒரே ஒரு சண்டைக் காட்சிதான் இருக்கும்.
எனக்கு இது முதல் பண்டிகைக் கால திரைப்படம் என்பதால் இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்.. அதாவது கடந்த இருபதாண்டுகளாக தீபாவளி நாளில் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல கதாநாயகர்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முதன்முறையாக தீபாவளியன்று என் படத்தையே பார்க்கும் சந்தோசம் எனக்கு அமைந்திருக்கிறது. அதனால், இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்.
‘சர்தார்’ படமும் திரைக்கு வருகிறது. கார்த்தி, பி.எஸ்.மித்ரனுக்கு வாழ்த்துகள். இரண்டு படங்களும் ஹிட் ஆக வேண்டும்..” என்றார்.
The post “இந்தத் தீபாவளி எனக்கு ஸ்பெஷல்” – சிவகார்த்திகேயன் சொன்ன ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது நடிகர் சிவகார்த்திகேயன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘மாநாடு’ படம் வெளியான சமயத்திலேயே வெங்கட் பிரபு உடன் சிவா இணைய பேச்சுவார்த்தை நடந்துவந்தது. அந்த சமயத்தில் இருவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியதால் அந்தப் படங்களை முடித்துவிட்டு இருவரும் இணையலாம் என்று சொல்லப்பட்டது.
வெங்கட் பிரபு இப்போது நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
சிவகார்த்திகேயன் தற்போது தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் ‘பிரின்ஸ்’. படத்திற்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படம் மற்றும் ‘மண்டேலா’ படத்தின் இயக்குநரான அஷ்வின் இயக்கும் ‘மாவீரன்’ என்று 2 படங்களில் நடிக்கவுள்ளார்.
இருவரும் தங்களின் இந்த கமிட்மென்ட்களை முடித்த பின்னர் இணையலாம் என்றும், அந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.
The post சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது. appeared first on Touring Talkies.
]]>இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான ‘ஜெஸ்ஸிகா’வும் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
The post நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது. appeared first on Touring Talkies.
]]>