The post ஜப்பான் – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படம் கார்த்தியின் 25வது படமாகும்.
ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இயக்குனர் ராஜ்முருகன் என்றால் தனது படங்களில் அரசியலும் கலந்து இருக்கும். தனித்துவமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுக்க கூடிய இயக்குனர் என்ற பெயர் அவருக்கு உண்டு. இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்ட ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நபராக இருக்கிறார் நாயகன் ஜப்பான் முனி [கார்த்தி] . இந்த சமயத்தில் கேவையில் உள்ள நகை கடையில் ரூ. 200 கோடி மதிப்புடைய நகைகள் திருடபோகிறது. இவ்வளவு பெரிய திருட்டுக்கு காரணம் யாராக இருக்கும் என்று யோசிக்கிறது போலீஸ்.
இந்தப் புள்ளியில்தான் காவல்துறைக்கு ஜப்பான் முனி (கார்த்தி) மீது சந்தேகம் வருகிறது. ஜப்பான் முனி ஒரு பெரிய திருடன். நாடு முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் நகைகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் திரைப்படம் எடுத்து ஜாலியான வாழ்க்கை வாழ்பவன்தான் ஜப்பான் முனி.
காவல்துறை தன்னைத் தேடுவதைத் அறிந்து கொண்டு தனது காதலியான சஞ்சுவை(அனு இம்மானுவேல்) கடத்திக்கொண்டு பல பகுதிகளுக்கு காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான் ஜப்பான் முனி.
ஒரு கட்டத்தில் போலீஸ் அவரை பிடித்து விசாரிக்கிறது அந்த நகைகளை நான் கொள்ளை அடிக்க வில்லை, இந்த கொள்ளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். நகைத்திருட்டில் சம்பந்தப்பட்டவன் வேறொருவன், அவன் என்னை இதில் மாட்டிவிட்டு தப்பித்து விட்டான் என கூறுகிறார் ஜப்பான்.அடுத்து என்ன நடந்தது உண்மையில் அந்த நகைகளை யார் திருடினார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் கார்த்தி வழக்கமான தனது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அதே போல் அவருடன் நடித்த விஜய் மில்டன், சுனில் மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பும் பாரட்டலாம்.
கதாநாயகியாக அனு இமானுவேல் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர. வலுவாக இல்லை என்றாலும் ஓகே.
படத்தின் ஆரம்பம் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாகம் சற்று சுவாரஸ்யம் குறைந்து கானப்படுகிறது. கடைசியாக வரும் அந்த 20 நிமிடம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இரண்டாம் பாதியில் சற்று தொய்வுதான் இருந்தாலும் மனதை தொடு வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றபடி சுவாரஸ்யம் குறையாமல் பயணிக்கிறது ஜப்பான்.
அரசியல் வசனங்கள் பக்காவாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பொருந்துகின்றன. ஜி.வி. பிரகாஷ் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது. மொத்ததில் ஜப்பான் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது.
The post ஜப்பான் – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post கார்த்தியை பார்த்தால் கூச்சமாக இருக்கும் – சூர்யா appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் கார்த்தி ,சூர்யா இருவரது படங்களும் வேறு வேறு கோணத்தில் இருந்தாலும் வெற்றியில் சரிசமமாக இருப்பவர்கள். சிக்ஸ் பேக் நடிகராக வலம் வருபவர் சூர்யா.
தம்பியுடன் விமானத்தில் பயணிக்கும் போது, எனக்கு ஒரு மாதிரி அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும்.கம்ப்யூட்டர் சுத்தி புக் நெரைய வைத்திருப்பான். படிச்சிட்டே இருப்பான்.என்ன படிக்கிறே சொல்லுனு கேட்பேன். அவன் படித்ததை பேசும் போது அவனிடம் இருந்து அறிவை எடுத்துப்பேன்.
500 பக்கம் இருந்தாலும் அசால்ட்டா படிச்சிருவான். அவனை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும் என்னால் படிக்க முடியலேன்னு.ஒரு பேட்டியின் போது சூர்யா தனது தம்பி கார்த்திக் பற்றி பகிர்ந்து கொண்டார்.
The post கார்த்தியை பார்த்தால் கூச்சமாக இருக்கும் – சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post “சூரியுடன் சண்டை போட நினைத்தேன்!” : கார்த்தி appeared first on Touring Talkies.
]]>இருவரும் விருமன் படத்தில் சேர்ந்து நடித்த போது, படப்பிடிப்பின் இடையிலும் ஒரே காமடிதான். பொதுவாக காமெடி நடிகர்கள், ஹீரோவின் நண்பர்களாக வருவார்கள். ஆனால் அந்தப் படத்தில் நாங்கள் உறழினர்களாகவே வந்தோம்.
அப்போது இயக்குநரிடம், ‘சூரிக்கும் எனக்கும் ஒரு சண்டைக் காட்சியாக வையுங்கள்’ என விரும்பிக் கேட்டேன்.
அதற்குக் காரணம், சூரியை நகைச்சுவை நடிகர் என அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் குணச்சித்திர வேடத்தில் அற்புதமாக நடிக்கக்கூடியவர். அவரது அந்தத் திறமை வெளிப்பட வேண்டும் என நினைத்தே, அப்படி சண்டைக் காட்சி வைக்கச் சொன்னேன்” என்றார்.
The post “சூரியுடன் சண்டை போட நினைத்தேன்!” : கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>“அப்போது நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகளுக்கு திருணம். அங்கு மணமக்களுக்கு மேடை அமைத்தது போலவே, வருகிற வி.ஐ.பி.க்களுக்கும் தனி நேடை அமைத்திருந்தனர். மணிரத்னம் சார் அந்த மேடையில் உள்ள இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டார். நானும் அவர் பின்னால் நின்றிருந்தேன். மணிரத்னம் சார் உட்காரச் சொல்லவே நானும் பின் இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது கூட்டமாக வந்த சிலர், மணிரத்னம் சாரிடம் ஆட்டோ கிராப் வாங்கினார்கள். திடீரென சிலர் என்னிடமும் ஆட்டோ கிராப் கேட்க.. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஆனாம் மணிரத்னம் சாரே, ஆட்டோ கிராப் நோட்டை வாங்கி என்னிடம் கொடுத்தார். எனக்கு வெட்கமாக போய்விட்டது. அவர் எவ்வளவு பெரிய இக்குநர்.. இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரே என நினைத்தேன்.
நான் போட்ட முதல் ஆட்டோகிராப் அதுதான்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி.
The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post சர்தார் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ஏனெனில் இந்த உலகத்தின் புவியியல் அமைப்பியல் அப்படித்தான் உள்ளது. ஒரு நாட்டில் உருவாகும் நதி பாய்ந்தோடி பல நாடுகளை வளம் செழிக்க வைக்கிறது. அந்த நதியை ஒரே நாட்டிலேயே அடைத்து வைக்கப் பார்த்தால் போர் வெடிக்காதா..? அப்படியொரு சூழல் வரத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார் இந்த ‘சர்தார்’ படத்தின் இயக்குநரான மித்ரன்.
‘விஜயபிரகாஷ்’ என்னும் கார்த்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். நேர்மையாகவும், துடிப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும் ஒரு இளைஞர். அதே நேரம் கொஞ்சம் விளம்பர விரும்பி. தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதை விரும்புவர்.
அப்படியொரு வேலையில் இருக்கும்போது ஒரு பெண் சம்பந்தப்பட்ட தேசத் துரோக வழக்கினை கையில் எடுக்கிறார். விசாரணையில் அந்தப் பெண் மீது எந்தத் தவறும் இல்லை. சுகாதாரமான நீருக்காக அந்தப் பெண் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு என்று அனைவரையும் தனி மனுஷியாக எதிர்த்து வருவதை அறிகிறார் கார்த்தி.
இதன் தொடர்ச்சியாய் நாட்டில் இருக்கும் நீர் வளத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் கோடி, கோடியாய் கொள்ளையடிக்க ஒரு கும்பல் ஆளாய் பறப்பதை அறிகிறார் கார்த்தி. இதன் பின்னணியில் மத்திய உளவுத்துறையும், பக்கத்து நாடுகளும் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் கார்த்தி.
கூடவே இந்தப் பிரச்சினையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு உளவாளி இருப்பதையும் அறிகிறார் கார்த்தி. அந்த உளவாளி யார் என்பதை அவர் அறிய முற்படும்போது அதிலிருந்து மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் கார்த்தி.
அந்தத் தண்ணீர் மாஃபியா கும்பலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் என்பது உட்பல பல கிளைக் கதைகளுடன் இந்தப் படம் நகர்ந்து இறுதியில் அனைத்திற்கும் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.
‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ், காவல் ஆய்வாளர் விஜய பிரகாஷ் என்று இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இன்ஸ்பெக்டரைவிடவும் ‘சர்தார்’தான் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவருடைய தேசப் பற்றுக்கு நாம் ஒரு சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயமும் படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
அந்த முதிர்ச்சியான வயதுக்குரிய கை நடுக்கம், சற்றே தளர்ந்த உடல் மொழி, ஆனாலும் அதே வேகத்துடன் சண்டையிடும் சாகசம்.. ஒரு உளவாளிக்கு உள்ள சமயோசிதப் புத்தி.. என்று பலதையும் தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார் ‘சர்தார்’ கார்த்தி.
கூத்து நடனத்திலும், ரஜிஷா விஜயனுடனான காதல் காட்சிகளும் இன்ஸ்பெக்டர் கார்த்தி அல்லாமல் வேறொரு இளைஞரை கண் முன்னே காண்பித்திருக்கிறார் கார்த்தி.
வில்லனாக பாலிவுட்டின் சங்கி பாண்டேவை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அந்த முகத் தோற்றமும், உடல் மொழியும் வில்லனாகக் காண்பித்தாலும் டப்பிங் குரலும், ஒத்துப் போகாத தன்மையும் கொஞ்சம் கண்ணிலும், காதிலும் படுகிறது.
ஒரு நாயகியான ராஷி கண்ணா திரைக்கதையை நகர்த்துவதற்காகவே வந்திருக்கிறார். ரஜிஷா விஜயன் பிளாஷ்பேக் காட்சிகளில் நம் மனதைத் தொட்டுவிடுகிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தலையைக் கொடுத்திருக்கும் லைலாவின் கதாப்பாத்திரம்தான் கதையின் மையப் புள்ளி. பெரிதாக நடிப்பென்று இல்லையென்றாலும் கண்களைக் கவர்ந்திருக்கிறார்.
லைலாவின் மகனாக வரும் சிறுவன் ரித்விக்கின் காட்சிகளையும், இன்ஸ்பெக்டர் கார்த்தியின் பிளாஷ்பேக் காட்சிகளையும் இணைத்துக் காட்டும் அந்த சிறிய காட்சி சிறப்பு. ஆனால் சிறுவன் ரித்விக் பேசும் பல வசனங்கள் அவனது வயதுக்கு மீறியவை என்பதையும் நாம் சொல்லித்தான் தீர வேண்டும்.
குடும்பத்துக்கே தெரியாமல் ராணுவ உளவாளியாகப் பணியாற்றுபவன், சொந்த அப்பாவாலேயே வீட்டில் ஒதுக்கப்படுவது போன்ற காட்சியமைப்புகள், நாம் பெரிதும் அறிந்திராத இது போன்ற உளவுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னையை எடுத்துக் காட்டுகின்றன.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களை மாற்றி, மாற்றி காட்டி அசத்துகிறது. ‘சர்தார்’ கார்த்தியின் சண்டைக் காட்சிகளை அதிகம் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர். குறிப்பாக பங்களாதேஷ் ஜெயில் சண்டை மற்றும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மிக சிறப்பு.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘ஏறு மயிலேறி’ பாடலும், நடனமும் நம்மை ஈர்க்கவே செய்திருக்கிறது. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார்.
உளவாளிகளின் நிலையில்லாத வாழ்க்கை ஒரு புறம், நாட்டில் ஓடும் தண்ணீர் மொத்ததையும் கையகப்படுத்த நினைக்கும் உலகளாவிய மாபியா கும்பல் இன்னொரு புறம் என்று இரண்டு விஷயங்களைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர் மித்ரன். நாட்டில் நடந்துவரும் தண்ணீர் அரசியல் குறித்து ஆராய்ச்சி செய்து கண்டறியாமல் வெறுமனே செய்தித் தாள்களை மட்டுமே வைத்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
பிரச்சினை தண்ணீர் வளத்தை சுரண்டுவது பற்றியதா.. அல்லது நல்ல குடிதண்ணீர் வேண்டும் என்பதா என்ற குழப்பத்தையும் உண்டு பண்ணியிருக்கிறார் இயக்குநர். இரண்டுக்குமே சம அளவில் காட்சிகளை வைத்திருப்பதால் நாம் இரண்டையுமே கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
குடும்பம், மனைவி, குழந்தையையெல்லாம் விட்டுவிட்டு நாட்டுக்காக தேசப் பற்றோடு தன் பெயரைக்கூட வெளியிடாமல் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பது கொடுமையான திரைக்கதை. இந்த ‘சர்தார்’ இந்த அளவுக்கான தேசபிமானி என்றால் நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.
மற்றபடி விறுவிறுப்பான திரைக்கதையும், கார்த்தியின் அலுப்பில்லாத நடிப்பும் இந்த ‘சர்தாரை’ பார்த்தே தீர வேண்டிய பட லிஸ்ட்டில் சேர்த்துள்ளன.
RATING : 3.5 / 5
The post சர்தார் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை “மேடம்” என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் இந்தப் படம் வெளியான பின்பு அவரை “மேடம்” என்று அழைக்கப் போவதில்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை. நான் சிறு வயதில் ‘கண்ணாலே மியா மியா’ பாடலைத்தான் கேட்டு ரசிப்பேன். முதல்முறையாக அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்தது எனக்குப் பெருமையாகவுள்ளது..” என்றார் இயக்குநர் மித்ரன்
The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் ‘பிதாமகனி’ல் பார்த்தது போலவேதான் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.
பிறகு ராஷி கன்னா வந்தார். அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.
ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். “என்னம்மா.. 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்க?” என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.
முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்று கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரிதான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன்.
படத்தில் என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன்.
வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன், “முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டுத்தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன்..” என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான்.. அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதியிருக்கிறார். “எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று மித்ரனிடம் கூறினேன்.
திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.
இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம்.
ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு, பகலாக என்னுடன் பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல் நலம் சரியில்லாமல்போய் பெரிதும் அவதிப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி.
இது உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்…” என்றார்.
The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.
]]>The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “இங்கே நான் வந்திருப்பது தமிழ் சினிமாவின் ரசிகனாக. தயாரிப்பாளராக, இந்த நடிகர்களை பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகனாக, ஒரு சிறந்த படத்தில் இவர்கள் நடித்துள்ளார்கள் என்பதுபோக இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாம் என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கிறார்கள். பல நடிகர்கள் இந்த இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதை இவர்கள் செய்துள்ளனர். ஒரு ரசிகனாக இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட மலைப்பு கண்டிப்பாக எல்லா தமிழ் ரசிகர்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொற்காலத்தைப் பற்றிய ஒரு வசனம் வரும்.. அது என் குரலில் வரும். அதை மீண்டும் ஒரு முறை சொல்ல ஆசைப்படுகிறேன்.. தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்ட ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஒரு சினிமா தயாரிப்பாளராக கலைஞராக எனக்கு அது பெருமிதம்.
ஆரோக்கியமான ஒரு போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியதுதான். ஆனால், மற்றவர்கள் வீழ்ச்சியை பார்த்து மகிழ்வதில் எந்த சந்தோஷமும் கிடையாது. ஏனென்றால் இந்த படகில் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம் என்பதுதான் உண்மை. இதில் ஓட்டை விழுந்தால் நானும் சேர்ந்து முழுகுவேன் என்பதுதான் உண்மை.
தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் பிலிம்ஸின் படமாக இருந்தால்தான் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று இல்லை. இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் எனக்கு சந்தோஷம்.
இது வெற்றிப் படம். லைக்கா ப்ரொடக்ஷனையும், மணிரத்தினத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இதில் நிறைய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். நான் மலையாள படத்தில் ஆரம்பிக்கும்போது மொத்தமாகவே 12, 13 பேர்தான் இருப்போம். இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டதை பார்த்தால் மலைப்பாக உள்ளது. இப்படி ஒரு தயாரிப்புக்கு துணையாக இருந்த லைக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கார்த்தி நடித்தது நான் நடிப்பதாக இருந்த வேஷம்.. இவருக்கு வந்தது. சிவாஜி சார் அருண்மொழிவர்மன் நான் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். பல வேஷங்களில் நானே நடிக்க ஆசைப்பட்டேன். இதை அருமையாக நடித்துள்ளார்கள். போர்க்களத்தில் வரும் காட்சிகளை எல்லாம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இந்த படத்தை நான் தயாரித்தது போல ஒரு சந்தோஷம். ஏனென்றால் தமிழ் சினிமா தயாரித்திருக்கிறது. அது நான் தயாரித்த மாதிரிதான். இந்த புத்துணர்ச்சி நீடிக்க வேண்டும். இந்த கூட்டுணர்வு நீடிக்க வேண்டும்.
நாளைக்கு என் படத்தை நீங்கள் இதுபோல கொண்டாட வேண்டும் என நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியிடம் கேட்டுக் கொண்டார். சுமாராக இருந்தால் ரகசியமாக என்னிடம் சொல்லி விடுங்கள்..” என கமலஹாசன் சொன்னதும் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
மேலும், “ஒரு புத்தகத்தை படமாக்குவது போன்ற கஷ்டம் வேறு கிடையாது. ராமாயணத்தை எப்படி எடுப்பீர்கள்.. எங்கிருந்து தொடங்குவீர்கள். இந்த படத்தைப் பொறுத்தவரை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்கள். என்னைப் போன்ற புத்தகம் படித்தவர்களுக்கு இன்னும் நான்கு காட்சிகள் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.
இதை விமர்சனமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் காட்ஃபாதர் புத்தகத்தை அப்படியே எடுக்க முடியாது. கதையில் எது தேவையோ அதை எடுத்துக் கொண்டு படம் எடுத்து உள்ளார்கள். தெரிந்த பாடலை எங்களோடு சேர்ந்து பாடுங்கள், இடையில் இரண்டு வரிகள் சரணம், பல்லவி விட்டால் கோவித்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்ல முடியும். தவறுகள் கண்டுபிடித்தால் எல்லாவற்றிலும் தவறுகள் கண்டுபிடிக்கலாம். காந்திக்கு பல்லு இல்லை என சொல்வது முக்கியமில்லை.
கல்கி எழுதியதிலேயே நிறைய வரலாற்று உண்மைகள் இருக்க முடியாது. மறைமலை அடிகளார் எழுதிய அம்பிகாபதி, அமராவதி கதாபாத்திரங்கள் இருந்ததற்கான சான்றுகளே இல்லை. இது சரித்திர புனைவுதானே தவிர சரித்திர புத்தகம் அல்ல.
பாலச்சந்தர் ஆந்திராவில் போய் படம் எடுத்த பொழுது ஆந்திர மக்கள் அதை கொண்டாடினர். மொழி அரசியலை சினிமா துறையில் பண்ணாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. நாம் சங்கரா புராணத்தை கொண்டாடியதுபோல ஆந்திராவில் சமமாக கொண்டாடினார்கள்.
கர்நாடகாவில் ஒரு முறை நான் பேசும்போது உங்கள் நாகேஷ் என்று சொல்லக் கூடாது, எங்கள் நாகேஷ் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறினேன். எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் யாரும் எனக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு தெலுங்கு படம் பிடிக்கும். ஆரோக்கியமான போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதை நிகழ்த்தி காட்டுவதற்கான திறமைகள் தமிழ் சினிமாவில் இருப்பதற்கான சான்றுதான் இந்த பொன்னியின் செல்வன் படம்..” என்றார் கமல்ஹாசன்.
“பொன்னியின் செல்வன் படம் விக்ரம் பட வசூலை முறியடித்துள்ளது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கமலஹாசன், “இதில் எனக்கு சந்தோஷம்தான், அதனால்தான் நான் இங்கே வந்துள்ளேன்.” என்றார்.
“படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் ஆதித்த கரிகாலனா, வந்தியத்தேவனா, அருள்மொழிவர்மனா?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “இவர்கள் 3 பேருக்கும் இடையில் சண்டை மூட்டிவிட பார்க்கிறீர்களா?” என கேட்டதும் சிரிப்பலை எழுந்தது. மேலும் தொடர்ந்த கமல், “கல்கிக்கே யாரைப் போற்றுவது என்ற குழப்பம் இருந்தது. இரண்டாவது பாகத்தை பார்த்துவிட்டு சொல்கிறேன். இப்பொழுது சொல்ல முடியாது. படத்தின் இடைவேளையில் படம் எப்படி இருக்கிறது என கேட்டால் என்ன சொல்ல முடியும்? அதுபோலத்தான் இதுவும்..” என்றார்.
தொடர்ந்து “இயக்குநர் வெற்றி மாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை” என்று கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ராஜராஜசோழன் காலத்தில் ‘இந்து மதம்’ என்ற பெயர் கிடையாது. ‘சைவம்’, ‘வைணவம்’, ‘சமணம்’ போன்ற சமயங்கள் இருந்தன. ‘இந்து’ என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ‘ஷண்மத ஸ்தாபனம்’ என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்.” என்றார்.
நடிகர் விக்ரம் பேசுகையில், “எங்களின் கனவு நிஜமாகியதில் சந்தோஷம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி. அனைத்து தலைமுறையினரும் இந்தப் படத்தை பார்க்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இந்த மாதிரி இதைப் போன்ற ஒரு படத்தில் நடிப்பது திருப்தியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லருக்கு கமல் சார் வாய்ஸ் கொடுத்தார். இந்தப் படத்தின் தொடக்கத்தில் கமல் சார் கொடுக்கும் descriptionதான் படத்தில் ஜிவ்வுனு ஏறி அப்படியே போகும்…” என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், “அனைவரும் இந்தப் படத்தை நமது படம்… தமிழ்நாட்டின் படம் என கொண்டாடுகிறார்கள். விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு அம்மாவையும், பாட்டியையும் உடன் அழைத்து வந்து படம் பார்க்கிறார்கள் என்றால் இது சந்தோஷமான விஷயம். நாங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் எங்கள் வெற்றி கமல்ஹாசன் சாரை சேரும். ‘பருத்தி வீரன்’ பட பூஜையின்போது மருதநாயகம் படத்தின் டிரைலர் போட்டு காட்டினார்கள். அந்த ட்ரெய்லரில் குதிரையில் நீங்கள் வருவது என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது…” என்றார்.
The post “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post பொன்னியின் செல்வன்-1-சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், மதுராந்தகனாக ரகுமான், சுந்தர் சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயராக மோகன்ராமன், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், வீரபாண்டியனாக நாசர், ரவிதாசனாக கிஷோர், சேந்தன் அமுதனாக அஸ்வின் கக்கமானு, ராஷ்டிரகூட மன்னனாக பாபு ஆண்டனி, சம்புவரையராக நிழல்கள் ரவி, கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, லால், விஜய் யேசுதாஸ், அர்ஜூன் சிதம்பரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வானதியாக சோஷித துலிபலா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவிவர்மன், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, படத் தொகுப்பு – கர்பிரசாத், கதை – கல்கி, திரைக்கதை – மணிரத்னம், ஜெயமோகன், குமரவேல், வசனம் – ஜெயமோகன், பாடல்கள் – இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவ ஆனந்த், கிருத்திகா நெல்சன், சண்டை இயக்கம் – ஷாம் கெளஸல், திலீப் சுப்பராயன், கெச்சா கம்பாக்டீ, நடன இயக்கம் – பிருந்தா, உடைகள் – ஏகோ லகானி, ஒப்பனை – விக்ரம் கெய்க்வாட், நகைகள் – கிரிஷ்ணதாஸ் அண்ட் கோ, விளம்பரம் – ராகுல் நந்தா, பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், யுவராஜ், VFX – NYVFXWALLAH, DI – Red Chillies Entertainment, தயாரிப்பு நிர்வாகம் – சிவ ஆனந்த், தயாரிப்பு – சுபாஷ்கரன், மணிரத்னம், இயக்கம் – மணிரத்னம்.
கி.பி.957 முதல் 970-ம் ஆண்டுவரையிலும் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.
இந்தக் கதை ‘கல்கி’ இதழில் 1950-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி முதல் 1954-ம் ஆண்டு மே 16-ம் தேதிவரையிலும் வெளிவந்தது. அதே ஆண்டிலேயே முதல்முறையாக 5 பாகங்களாக இந்தக் கதை புத்தகங்களாக வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி என்று அனைவருமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, முடியாமல் போன கதை இது. கடைசியாக தற்போது லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் புண்ணியத்தில், இயக்குநர் மணிரத்னத்தால் இந்தக் கதை படமாக உருவாகியுள்ளது.
கதை துவங்கும் காலக்கட்டம் சுந்தர சோழரின்(பிரகாஷ்ராஜ்) அந்திமக் காலம். உடல் நலிவுற்று இருக்கும் சுந்தர சோழர், தஞ்சை அரண்மனையில் வசித்து வருகிறார்.
இவருடைய மூத்த மகனான ஆதித்த கரிகாலன்(விக்ரம்) ராஷ்டிரகூட(கன்னட தேசம்) நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்த நாட்டைக் கைப்பற்றுகிறான்.
இன்னொரு மகனான அருள்மொழி வர்மன் என்னும் பொன்னியின் செல்வன்(ஜெயம் ரவி) இலங்கை மீது படையெடுத்துச் சென்றிருக்கிறான். மகளான குந்தவை பழையாறை அரண்மனையில் வசித்து வருகிறாள்.
இந்தச் சூழலில் கடம்பூரில் இருக்கும் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள் ஒன்றுகூடி சோழ பேரரசரான சுந்தர சோழருக்கெதிராக ஏதோ சதி திட்டம் தீட்டுவதாக ஆதித்த கரிகாலனுக்கு செய்தி வருகிறது.
இதையடுத்து ஆதித்த கரிகாலன் தன்னுடன் இருக்கும் தனது நெருங்கிய நண்பனான வந்தியத்தேவனை உடனடியாக கடம்பூருக்கு சென்று அந்த சதி திட்டம் என்னவென்பதை அறிந்து, தஞ்சைக்கு சென்று தனது தந்தையான சுந்தர சோழரையும், தங்கை குந்தவையையும் பார்த்து சொல்லும்படி உத்தரவிடுகிறார்.
பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலனின் உத்தரவையேற்று வந்தியத்தேவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வருகிறான்.
அங்கே சோழ தேசத்தின் நிதியமைச்சரான பெரிய பழுவேட்டரையர்(சரத்குமார்) தலைமையில் சிற்றரசர்கள் ஒன்று கூடி “சுந்தர சோழருக்குப் பின்பு அரசராக வருவதற்கு சுந்தர சோழரின் பெரியப்பா மகனான மதுராந்தகன் என்னும் உத்தமசோழனுக்கே(ரகுமான்) உரிமையுண்டு. எனவே தற்போதைய பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டாமல் மதுராந்தகனுக்கு முடி சூட்ட வேண்டும். இதற்கு சுந்தர சோழர் சம்மதம் தெரிவிக்காவிட்டால் வேறு வழிகளைக் கையாள்வோம்…” என்று பேசி முடிவெடுக்கிறார்கள்.
இதைக் கேட்ட வந்தியத்தேவன் தஞ்சாவூருக்கு விரைந்து செல்கிறான். வழியில் பெரிய பழுவேட்டரையரின் மனைவியான நந்தினியை(ஐஸ்வர்யா ராய்) எதிர்பாராமல் சந்திக்கிறான். அவளிடத்தில் மோதிர லச்சனத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலமாகவே தஞ்சை அரண்மனைக்குள் நுழைகிறான்.
அரண்மனையில் சக்கரவர்த்தி சுந்தர சோழரை சந்தித்து கடம்பூர் மாளிகையில் நடந்தவைகளைச் சொல்லி அரசரை எச்சரிக்கிறான் வந்தியத்தேவன். ஆனால் அவன் மீது சந்தேகப்படும் சின்னப் பழுவேட்டரையர்(பார்த்திபன்) வந்தியத்தேவனை சிறைப்படுத்த முனைகிறார்.
அங்கேயிருந்து தப்பிக்கும் வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்து அங்கேயிருக்கும் குந்தவையைச் சந்தித்து நடந்தவைகளை ஒப்பிக்கிறான். குந்தவையோ தற்போது இலங்கையில் இருக்கும் தனது தம்பியான அருண்மொழி வர்மனை பத்திரமாக தன்னிடம் அழைத்து வரும்படி ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறாள். இளவரசியின் உத்தரவுக்கிணங்க சமுத்திரராணி(ஐஸ்வர்யா லட்சுமி)யின் உதவியோடு இலங்கைக்கு செல்கிறான் வந்தியத்தேவன்.
இங்கே தஞ்சாவூரில் பெரிய பழுவேட்டரையரின் ஏற்பாட்டில் மதுராந்தகனை அடுத்த அரசனாக்குவதற்கான சதித் திட்டங்கள் நடக்கிறது. இந்த சதியின் ஒரு பகுதியாக நந்தினியின் தூண்டுதலால் “இலங்கையில் இருக்கும் அருண்மொழி வர்மனை கைது செய்தாவது அழைத்து வர வேண்டும்” என்று அரசரின் உத்தரவு பெறப்பட்டு சோழப் படை வீரர்கள் இலங்கைக்கு செல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ராஷ்டிரகூட நாட்டில் இருக்கும் ஆதித்த கரிகாலன், “நான் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தஞ்சைக்கு வர மாட்டேன்” என்கிறான். குந்தவை நேரில் சென்று அழைத்தும் அவன் வர மறுக்கிறான். இப்படியான குழப்பத்தில் நாடு இருக்கும் சூழலில் அருண் மொழி வர்மன் தஞ்சாவூர் திரும்பினானா..? ஆதித்த கரிகாலன் ஏன் தஞ்சைக்கு வர மறுக்கிறான்..? மதுராந்தகனை அரியணை ஏற்றும் திட்டம் என்னவானது என்பதுதான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் திரைக்கதை.
நாவலில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் அதிகம் விரும்பப்படும் குணாதிசயம் கொண்டவனாகவும், வீரனாகும், நன்றியுள்ளவனாகவும், சிறந்த காதலனாகவும், நகைச்சுவை உணர்வு உள்ளவனாகவும், உற்ற நண்பனாகவும், சோழ அரச வம்சத்திற்கு உண்மையானவனாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சிற்கு மிகப் பெரிய நியாயத்தை செய்திருக்கிறார் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி.
ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழி வர்மனுடன் இணைந்து வீரத்துடன் எதிரிகளுடன் போரிடுவது.. குந்தவையை பார்த்த மாத்திரத்தில் காதலிக்க வைப்பது.. பூங்குழலியுடன் மனதளவில் நட்பாவது.. ஆழ்வார்க்கடியானுடன் சிநேகம் வைத்துக் கொண்டு உளவு வேலை பார்ப்பது.. நந்தினியிடம் நைச்சியமாக பேசி அனைத்தையும் தெரிந்து கொள்வது.. யாரையும் நம்பாத சின்னப் பழுவேட்டரையரை நம்ப வைப்பது.. சுந்தர சோழரின் அன்பிற்குப் பாத்திரமாவது.. என்று பல்வேறு குணாதிசயங்களை தனது நடிப்பில் காண்பித்து ரசிகர்களை மனம் குளிர வைத்திருக்கிறார் கார்த்தி.
ஆதித்த கரிகாலனாக, போர்க்களத்தில் பெரும் வீரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் விக்ரமின் நடிப்பு இன்னொரு பக்கம் இந்த முதல் பாகத்தில் அனைவராலும் பேசப்படுகிறது.
“நிராயுதபாணியை நான் கொல்வதில்லை” என்று சொல்லி ராஷ்டிரகூட அரசனை கொல்லாமல் விடுவதில் இருந்து… தன்னைத் தேடி வந்து தஞ்சைக்கு அழைக்கும் தமக்கை குந்தவையிடம் தன் காதல் தோற்றுப் போனதற்கு குந்தவையும் ஒரு காரணம் என்று ஆத்திரத்தைக் காட்டும் காட்சியிலும்.. தன் காதலியை நினைத்து விசனப்படும் காதலன் உணர்வையும் விக்ரம் வெளிக்காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அசாத்தியமானதாக இருக்கிறது அவரது நடிப்பு. அத்தனை ஈர்ப்பாகவும் இருக்கிறது.
இந்த நாவலில் பேசப்படும் முக்கிய கதாபாத்திரமான நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் படத்திற்கு மிகப் பெரிய தூணாக மாறியிருக்கிறார். தனது காதலரான வீரபாண்டியனின் சாவுக்குக் காரணமான ஆதித்த கரிகாலனை கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கும் நந்தினி அதற்காக தனது அழகினை வைத்து பெரிய பழுவேட்டரையை மயக்கி வைத்திருப்பதை ஐஸ்வர்யா ராய் தோன்றும் அத்தனை காட்சிகளிலும் அவரது அழகை காட்டியும், முன் வைத்துமே சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
வந்தியத்தேவன் ஒற்றன் என்று தெரிந்தும் தனது மோதிர லச்சினத்தை கொடுத்து உதவி அவனைத் தன் வலையில் வீழ்த்தியிருப்பதை சரத்குமாரிடம் சொல்லும்போது அவரது முகம் காட்டும் வில்லித்தனம் அபாரம்.
குந்தவையான த்ரிஷாவுக்கு “வயதானாலும் அழகு போகவில்லை” என்ற வசனம் மிகப் பொருத்தமானதாக இருக்கும். நிஜத்தில் 40 வயதினை தொடும் த்ரிஷா இந்தப் படத்தில் இளம் வயது மங்கையாக.. சோழ சாம்ராஜ்யத்தின் அடுத்த சக்கரவர்த்தி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தான் இருப்பதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நடித்திருக்கிறார்.
வந்தியத்தேவனை முதன்முதலில் சந்தித்தவுடனேயே இவன் வீரன்.. உண்மையானவன் என்பதை புரிந்து கொண்டு பேசுவதும்.. உடனேயே வேலை கொடுப்பதும், போகும்போது கார்த்தி காதல் மொழி பேச.. அதற்குப் பதில் கொடுப்பதிலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார்.
மேலும் பெரிய பழுவேட்டரையரின் மாளிகையில் நடக்கும் சிற்றரசர்கள் கூட்டத்தில் அழையா விருந்தாளியாகச் சென்று அவர்களின் ஒற்றுமையை வானதியை முன் வைத்து சிதைக்கும் அந்தக் காட்சியில் “இந்தப் பொண்ணா இந்த வேலையைச் செய்யுது.. நந்தினிக்கு சரியான போட்டிதான்” என்று பொ.செல்வனின் ரசிகர்களாலேயே பாராட்டினைப் பெற்றுள்ளார்.
அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி.. மக்களால் அதிகம் விரும்பப்படும் ‘பொன்னியின் செல்வனா’கவே அழைக்கப்படுவதால் அதற்கேற்ற தகுதியான நடிப்பை காண்பித்திருக்கிறார். “அரசரின் கட்டளையே ஏற்று நான் தஞ்சைக்கு கைதியாகவே செல்வேன்” என்று உறுதிபட சொல்லிவிட்டு செல்வதிலும், சண்டை காட்சிகளில் தீயாய் ஆக்சனைக் காட்டியிருப்பதிலும் தனது ‘ராஜராஜ சோழன்’ கெட்டப்பிற்கு தயாராகிவிட்டார் என்றே சொல்லலாம்.
வானதியாக சோபிதா துலாலி சில காட்சிகளில் வந்து செல்கிறார். அடுத்த பாகத்தில்தான் இவருக்கு அதிகம் வேலையிருக்கும். ‘சமுத்திர ராணி’யான ஐஸ்வர்யா லட்சுமி மிக அலட்சியமாக தனது படகோட்டி கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆண்களுக்கு நிகராக அந்தக் காலத்திலேயே பெண்களும் நாடு விட்டு நாடு செல்லும் படகை செலுத்தியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியதுதான்.
படகில் செல்லும்போது கார்த்தியுடன் பதிலுக்குப் பதிலாகப் பேசி அவரை சீண்டுவதிலும், படகு கரையைத் தொட்டவுடன் “பொன்னியின் செல்வனிடத்தில் சமுத்திர ராணியை நியாபகம் இருக்கான்னு கேளுங்க..?” என்று தன் ஒரு தலைக் காதலை வெளிப்படுத்தும்போதும் ஆஹா.. என்று சொல்ல வைத்திருக்கிறார்.
வந்தியத்தேவனை போலவே ஒற்று வேலையைப் பார்க்கும் ஆழ்வார்க்கடியானாகிய ஜெயராம் தனது அரை நிர்வாண உடலுடன், தொந்தியுடன்.. பார்க்கும் இடங்களிலெல்லாம் வந்தியத்தேவனுடன் சண்டையிட்டு பின்பு இணைந்து கொண்டு பேசியே நம்மை அசரடிக்கிறார். நாவலில் படிக்கும்போதே சிறு வயதினரை வெகுவாகக் கவர்ந்த கதாபாத்திரம் இவர்தான். நிஜமாகவே ஜெயராம் இந்தக் கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வுதான்..!
சுந்தர சோழரான பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சின்னப் பழுவேட்டரையர் பார்த்திபன், முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரான மோகன் ராமன், வீரபாண்டியன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கக் காத்திருக்கும் ஆபத்துவுதவிகளின் தலைவனான ரவிதாசன் மற்றும் பல சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் குறைவில்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் அடுத்து அரசனாகக் காத்திருக்கும் மதுராந்தகனான ரகுமான் தனது தாயான செம்பியன் மாதேவியான ஜெயசித்ராவிடம் தான் சிவனடியாரக இருக்க விரும்பவில்லை என்று கோபத்துடன் சொல்லிவிட்டு போகும் காட்சியின் மூலம், படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு முதல் ‘ஜே’ போடலாம். மனிதர் பம்பரமாக சுழன்றிருக்கிறார். அத்தனை கதாபாத்திரங்களையும், எத்தனை அழகாகக் காண்பிக்க முடியுமோ அத்தனை அழகுபடுத்தியிருக்கிறார்.
நந்தினியான ஐஸ்வர்யா ராயும், குந்தவையான த்ரிஷாவும் சந்திக்கும் காட்சிகளில் இருவரில் யார் அழகி என்று போட்டியே வைக்கலாம் என்னும் அளவுக்கு இருவரின் அழகையும் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இவர்களுக்கு வைத்த குளோஸப் ஷாட்டுகளில் ஒன்றைகூட வானதிக்கு வைக்கவில்லை என்பதை நாமும் கண்டிப்போம். ஐஸ்வர்யா லட்சுமியையும் படகோட்டி கதாபாத்திரத்தில் எப்படியெல்லாம் அழகுபடு்த்த முடியுமோ அத்தனை அழகுடன் காண்பித்திருக்கிறார்.
பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் ஒளிப்பதிவு செய்திருக்கும் வித்தைக்கு தனியாக புத்தகமே போடலாம். இதேபோல் சண்டை காட்சி இயக்குநர்கள் மூவரும் படைத் தளபதியாகவே மாறிவிட்டார்கள். கிராபிக்ஸ் இல்லாத சண்டைகளில் உண்மைத்தனத்துடன் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகள் ஏனோ சற்று மந்தமாக இருக்கிறது. ஏனெனில் ‘பாகுபலி’யில் இதைவிட அழகான, ஆக்ரோஷமான சண்டை காட்சிகளை பார்த்துவிட்டதால் சண்டை காட்சி பிரியர்களுக்கு இதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டதால் கிராபிக்ஸ், சி.ஜி.யில் அதிகமாக வேலை செய்யவில்லையோ.. கிளைமாக்ஸில் கடலில் நடக்கும் சண்டை காட்சி இன்னமும் சிறப்பு இருந்திருக்க வேண்டும். என்னமோ மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது.
கலை இயக்குநரான தோட்டா தரணியின் வேலை எப்போதும்போல சிறப்புதான். அரண்மனைகளையும், குடில்களையும், ஊர்களையும் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். இதேபோல் உடையலங்காரம், முடியலங்காரம், ஒப்பனை செய்தவர்களையெல்லாம் முதன்முறையாக ஒரு சேர இந்தப் படத்திற்காகத்தான் பாராட்டியாக வேண்டும். ஐஸ்வர்யா ராய், மற்றும் த்ரிஷாவின் ஒப்பனைகள் அத்தனை சிறப்பு.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறை யாரையும் ஏமாற்றாமல் பாடல்களையும், பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார். ‘பொன்னி நதி’, ‘சோழா சோழா’, ‘ராட்சஸ மாமனே’, ‘அலை கடல்’, ‘தேவராளன்’, ‘சொல் சொல்’ என்று தமிழ் ததும்பி வழியும் சொற்களைக் கொண்டு பாடல்களைக் கட்டமைத்திருக்கிறார் ரஹ்மான். ஆனால் வாத்தியக் கருவிகளின் இரைச்சலில் ஒலிந்து போயிருக்கின்றன. ‘அலை கடல்’ பாடல் மட்டுமே மனதில் நின்று விளையாடுகிறது.
ஆனால் பின்னணி இசையில் மனிதர் அடித்து ஆடியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் அறிமுகக் காட்சி, வந்தியத்தேவன் தஞ்சை அரண்மனையில் இருந்து தப்பித்துச் செல்லும் காட்சிகள், குந்தவை, நந்தினி சந்திப்பின்போது.. போர்க்களக் காட்சிகள்.. என்று பலவற்றிலும் தன்னுடைய பின்னணி இசையினால் யாரையும் சோர்வடைய வைத்துவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நாவலின் கதை, திரைக்கதை, வசனம் என்று மூன்றிலுமே சினிமாவுக்காக நிறைய மாற்றங்களை செய்து பலவற்றை ரத்து செய்து, சிலவற்றை மட்டுமே முன் வைத்து இந்த முதல் பாகத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இப்போதே இந்த முதல் பாகத்தின் முடிவு, ஒரிஜினல் நாவலின் 3-ம் பாகத்தைத் தொட்டுவிட்டது.
திரைக்கதையில் யாருக்கு, யார் உறவுகள்.. என்னென்ன கதாப்பாத்திரங்கள் என்பதையெல்லாம் போகிறபோக்கில் சொல்லியபடியே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை மிக, மிக சுவாரஸ்யமாக இருக்கும்படியான காட்சிகளை மட்டுமே நாவலில் இருந்து தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
வந்தியத்தேவனின் ஓட்டத்திலேயே கதை நகர்வதால் அவன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகன் மணிரத்னத்திற்கு ஏற்றபடியான நறுக்குத் தெரித்தாற்போன்ற வசனங்களையே எழுதியிருக்கிறார். கார்த்தியை பார்த்தவுடனேயே பிடித்துப் போன நிலைமையில் அவரை இலங்கைக்குச் செல்ல உத்தரவிட்ட பின்பு “தலை பத்திரம்” என்று த்ரிஷா சொல்ல.. இதைக் கேட்டு கார்த்தி “உயிர் உங்ககிட்ட இருக்கே?” என்று பதில் சொல்ல.. காதல் பூத்ததன் அடையாளத்தை ருசிகரமாக சொல்லியிருக்கிறார் ‘யூத்’ இயக்குநர் மணிரத்னம்.
இதேபோல் ஆழ்வார்க்கடியான் மூலமாக சைவ-வைணவ பிரச்சார சண்டையையும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். “விஷ்ணுவும், புத்தர்தானா..?” என்று கார்த்தி நகைச்சுவையாக கேட்கும் கேள்விக்கு ஜெயராம் “ஆம்” என்று சொல்லியிருப்பதுகூட ஜெயமோகனின் ‘டச்’தான்.
உரையாடல்களில் வந்தியத்தேவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும், அவன் பேசும் வசனங்களை எளிமையாக்கி கொடுத்திருப்பதும் படத்திற்கு மிகப் பெரிய உதவியாக அமைந்திருக்கிறது. அரசர் காலத்து தமிழ் இல்லாது, கொஞ்சம் நயமான தமிழை கலந்து கொடுத்தமைக்காக ஜெயமோகனுக்கு நமது நன்றிகள்.
அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியிருப்பது இயக்குநர் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
டைட்டிலில் துவங்கி, அலை கடலில் அருண்மொழி வர்மனும், வந்தியத்தேவனும் சிக்கி மறையும்வரையிலும் சிறப்பான இயக்கம் என்பதற்கு முழு உதாரணமாகத் திகழ்கிறது இந்தப் படம்.
நமது நெஞ்சார்ந்த நன்றிகளை நாம் இயக்குநர் மணிரத்னத்திற்கு சமர்ப்பிக்கும் அதே நேரத்தில் இந்தப் படத்தின் வெற்றிக்கும், பெயருக்கும், புகழுக்கும், மரியாதைக்கும் காரணகர்த்தாவான கதையைத் தாங்கியிருக்கும் நாவலான ‘பொன்னியின் செல்வனை’ எழுதிய அமரர் கல்கி அவர்களுக்கு படத்தின் டைட்டில் பகுதியில், புகைப்படத்துடன் தனியாக ஒரு நன்றி கார்டுகூட போடாதது ‘பொன்னியின் செல்வனின்’ ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் வருத்தத்தைத் தந்திருக்கிறது. அடுத்த பாகத்தில் இந்தத் தவறு சரி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
பொன்னியின் செல்வன்-1 – பார்த்தே ஆக வேண்டிய திரைப்படம்..!
The post பொன்னியின் செல்வன்-1-சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>