The post கமல் செய்த மேஜிக் -லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.
]]>விக்ரம் 2 படப்பிடிப்பின் போது ஒரு ஷாட் எடுக்கும் போது கமல் சார் ஒரு சேரில் சாய்ந்து இருக்கனும். அப்படி இருக்கும் போது கண்ணில் இருந்து தண்ணீர் வரனும். அவரிடம் சொன்னேன் உடனே உங்களுக்கு எத்தனை செகண்ட் வேண்டும் என்றார். நான் 3 செகண்டில் இருந்தால் நல்ல வரும் என்றேன். உடனே சேரில் அமந்தார் கண்ணில் எதுவும் போடவில்லை.
நான் கேட்ட அந்த நேரத்துக்குள் கண்ணீர் வந்தது அது எப்படின்னு தெரியல மேஜிக் மாதிரி இருந்தது. காமெடியா சிரித்து பேசிக்கொண்டு இருப்பார் ஷாட் ரெடி சொன்னது. அப்படியே கீதா பாத்திமா மாறிவிடுவார். அவர் நடிப்பில் ஒரு மேஜிக் மேன் தான். கமல் பற்றி சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
The post கமல் செய்த மேஜிக் -லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.
]]>The post எச்சரித்த இயக்குநர்.. கேட்காத கமல்! appeared first on Touring Talkies.
]]>ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அப்படியான ஒரு படம்தான் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் அவர், குள்ள மனிதனாக கமல் நடித்திருப்பார். இது மிகவும் வரவேற்பு பெற்றது.
ஆனால் அதற்காக கமல் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல.
தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் சிஜியில்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம்.
அக்காட்சிகளுக்கு சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டன. . முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு எடுத்திருந்தனர். அதே போல, அவர் நடக்கும் காட்சிகளுக்கு நீள குழியை தோண்டி வைத்து எடுத்தனர். ஆனாலும் வீட்டின் உள்ளே எடுக்கும் காட்சிகளுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததாம்.
மற்ற நடிகர்கள் 18 இன்ச் மேடையில் நிறுத்தி கமலுக்கு குழி தோண்டி நடிக்க வைத்தனராம். அதுமட்டுமல்லாமல், அப்பு கமல் காட்சிக்கு கேமராவும் குழிக்குள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மு
கமலுக்கு பிரத்யேகமான காலை சகாதேவன் என்பவர் உருவாக்கி கொடுத்தார். அவர், “இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குநர் பாலசந்தர், “நீ ஒரு முக்கிய நடிகன். எசகுபிசகாக நடித்து, உடலுக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ளாதே” என எச்சரித்தார். ஆனால் கமல் கேட்கவில்லை.. அந்த சவாலான கதாபாத்திரத்தில் நடித்தே தீருவது என உறுதியாக இருந்தார். அதை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
.
The post எச்சரித்த இயக்குநர்.. கேட்காத கமல்! appeared first on Touring Talkies.
]]>The post “கமல் ஜெயிக்கக் காரணம் இதுதான்!” : கவிதாலயா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.
]]>அப்போது, “நான் அரசுப் பணியில் இருந்துகொண்டே நடித்துக்கொண்டு இருந்தேன். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுடன் நானும் நடித்தேன். அப்போதிலிருந்து என்னிடம் நன்றாக பழகுவார். ஒரு முறை அவரிடம் நான் அரசு பணியில் இருப்பதைச் சொன்னேன்.
அதற்கு அவர், ‘ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால் வசச்சா இரண்டிலும் ஜெயிக்க முடியாது. சினிமால இன்ட்ரஸ்ட் இருந்தா முழுசா வந்திரணும். திரும்பிப் போக வழியே இருக்கக்கூடாது. அப்பதான் முண்டி அடிச்சி இதில ஜெயிக்கணும்கிற வெறி வரும். அந்த வெறி வந்தாத்தான் ஜெயிக்க முடியும். நான் மட்டுமில்ல.. ரஜினி உட்பட எல்லா நடிகர்களும் அப்படித்தான்’ என்றார் கமல். அப்போதுதான் புரிந்தது, அவர் இந்த அளவுக்கு வந்ததற்குக் காரணம் எது என்று” என கூறினார் கிருஷ்ணன்.
The post “கமல் ஜெயிக்கக் காரணம் இதுதான்!” : கவிதாலயா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.
]]>The post டேனியல் பாலாஜியின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>இவரது இன்னொரு முகம் பலருக்கு தெரியாது. அது.. புரடக்சன் மேனேஜர்!
இது குறித்து அவர், “பல படங்களுக்கு புரடக்சன் மேனேஜராக பணி புரிந்து உள்ளேன். மிகப் பிரம்மாண்டமாக உருவான நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கும் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன். இப்போது மீண்டும் மருதநாயகம் படம் துவங்கப்பட்டாலும், அதே பணியைக் கொடுங்கள் என கமலிடம் கோரிக்கை வைப்பேன்” என்றார்.
மேலும், “வேட்டையாடு விளையாடு படத்தில் நான் நடித்தது மட்டுமல்ல.. அதில் வரும் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்த பிணங்களின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்புகளை நான்தான் உருவாக்கினேன்” என்றார்.
பல்துறை வித்தகர்தான் டேனியல் பாலாஜி.
The post டேனியல் பாலாஜியின் இன்னொரு முகம்! appeared first on Touring Talkies.
]]>The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.
]]>பெரிய தேவர் என்ற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியபோதே, சலீம் கவுஸ்தான் அந்த வேடத்துக்கு பொருத்தம் என தீர்மானித்து விட்டார் கமல். சலீம் சிறந்த நடிகர் என்றாலும், சரளமாக தமிழ் பேச வராது. அதுவும் இந்தப் படத்தில் தெற்கத்தி தமிழ் பேச வேண்டும்.
அப்போதுதான் இந்த கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அவரும் பெரிய தேவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
திரைப்படம் இப்படித்தான்.. படப்பிப்பு துவங்கும் வரை எந்த கதாபாத்திரத்துக்கு எந்த நடிகர் என உறுதியாகச் சொல்ல முடியாது!
The post தேவர் மகன்: நாசர் வேடத்துக்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நடிகர்.. appeared first on Touring Talkies.
]]>The post தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் எது? appeared first on Touring Talkies.
]]>அதே நேரம் பல படங்கள் ஆஸ்கர் விருது கமிட்டு அனுப்பட்டே வருன்றன. சமீபத்தில் கூட சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதற்கு முன்பும் கூட பல படங்கள் அனுப்பபட்டது. ஆக இந்த விருதுக்கு அன்புப்படுவதே ஒரு அங்கீகாரம் என்று ஆகவிட்டது.
அதே நேரம், முதன் முதல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் எது என பலருக்குத் தெரியாது.
ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த தெய்வ மகன் படம்தான், தமிழில் இருந்து ஆஸ்கர் விருத்துக்கு அனுப்பப்பட்ட படம். ஆண்டு, 1970. ஆனால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவவை எந்த தமிழ்ப்படமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்கர் விருது என்பது தமிழ்த்திரையுலகுக்கு கனவாகவே இருக்கிறது. விரைவில் இந்த கனவு நிறைவேற வேண்டும்.
The post தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் எது? appeared first on Touring Talkies.
]]>The post “கூட்டணி வேண்டாம்!” : மறுத்த கமல்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் ஒரு காலத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்த சம்பவமும் நடந்தது.
அதற்கு முன்பு வரை இருவரும் இணைந்து படங்களில் நடித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களை இணைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.பி. முத்துராமன் படத்தை இயக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு ரஜினி ஒப்புக்கொண்டார். ஆனால் கமல் மறுத்துவிட்டார்.
அவர், “ஆரம்ப காலத்தில் நாங்கள் இணைந்து நடித்தோம். இப்போது இருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். ஆகவே தனித்தனியாகவே படங்கள் வெற்றி பெறும். இருவரும் கால்சீட் கொடுத்து, சம்பளத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கும். தயாரிப்பாளர்களுக்கும் கூடுதல் செலவு. ஆகவே இனி தனித்தனியே நடிக்கலாம். அது இருவரது திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றத்தைத் தரும்” என்றார்.
அவரது பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த முத்துராமனும், ரஜினியும், “இது சரியான விசயம்தான்” என ஒப்புக்கொண்டனர்.
காலமும் அதை உறுதி செய்தது.
திரைத்துறை டெக்னிகல் விசயங்களில் மட்டுமல்ல.. திரையுலக வியாபாரம், எதிர்காலம் குறித்தும் சரியாக கணிக்கக்கூடியவர் கமல்!
The post “கூட்டணி வேண்டாம்!” : மறுத்த கமல்! appeared first on Touring Talkies.
]]>The post எடுத்த சபதத்தை முடித்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் உருவான ‘ஓ சீத கதா’ படத்தின் ரீமேக்தான் இது.
முன்னதாக மலையாளத்திலும் தான் மாட்டாரு சீதா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அப்படத்தில் கமல் வில்லனாக தோன்றினார். தமிழ் ரீமேக் படத்தை கே. பாலசந்தர் இயக்கினார். கமல் நடித்த வில்லன் வேடத்தில் ரஜினி நடித்தார்.
இப்படத்தில் நண்பர்களான கமலும், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியினை காதலிப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவிக்கு கமல் மீது காதல். இதில் ஆத்திரமான ரஜினிகாந்த், கமலை கொன்றுவிடுவார். இதை தொடர்ந்து ஸ்ரீதேவி, வேண்டுமென்றே, ரஜினியின் தந்தையை திருமணம் செய்து கொண்டு சித்திவிடுவார்.
இதையடுத்து ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் நடக்கும் உணர்வு போராட்டமே படம்.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இன்னொரு சுவாரஸ்யமான விசயம்.
இன்று தமிழில் மிக அதிகமான சம்பளம் வாங்குபவர் ரஜினி.
‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்குத் முப்பதாயிரம் ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. ஸ்ரீதேவிக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. வில்லனாக ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய்தான் சம்பளம்.
அப்போது ஸ்ரீதேவி அம்மாவிடம் ரஜினி ஆதங்கமாக, “விரைவில் அனைவரையும்விட அதிக சம்பளம் வாங்கும் நடிகனாக உருவாவேன்” என்றாராம்.
அதே போல இன்று பெரும் சம்பளம் வாங்கும் நடிகராக உருவாகி, சொன்னதை சாதித்துவிட்டார் ரஜினி.
The post எடுத்த சபதத்தை முடித்த ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post ‘களத்தூர் கண்ணம்மா’ பற்றி தெரியாத விசயம்! appeared first on Touring Talkies.
]]>ஆனால் பலரும் மறந்துவிட்ட விசயம், நடிகர் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தை இயக்கியவரும் இவர்தான். அதாவது கமலை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்!
அதுவும் இந்த படத்துக்குள் இவர் வந்தது சுவாரஸ்யமான சம்பவம்.
ஏவி.எம். தயாரித்த இப்படத்தை முதலில் இயக்கியவர் பிரகாஷ்ராவ்தான். ஆனால் ஏனோ ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தியில்லை. இயக்குரும் தான் விலகிக்கொள்வதாக சொல்லிவிட்டார்.
இதனால் களத்தூர் கண்ணம்மா படம் பாதியில் நின்றது. பிறகுதான் இப்படத்துக்கு பீம்சிங் ஒப்பந்தமானார்.
எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்தார். கதையை இன்னும் செம்மைப்படுத்தினார். வசனங்களில் இன்னும் கூர்மைப்படுத்தினார்.
ஜெமினியும் சாவித்திரியும் நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பிரபலமான திரைப்படத்துக்கு, கமல் அறிமுகமான திரைப்படத்துக்கு இயக்குநர் பீம்சிங் பாதியில் தான் வந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
The post ‘களத்தூர் கண்ணம்மா’ பற்றி தெரியாத விசயம்! appeared first on Touring Talkies.
]]>The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>உலக நாயகன் கமல் பல வேடங்களில் நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். களத்தூர் கண்ணமா தொடங்கி விக்ரம் படம் அரை இன்னும் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் மகா நடிகர் கமல்
மறக்க முடியாத படங்கள் வரிசையில் வாழ்வே மாயம், சிவப்பு ரோஜா, இன்னும் நீங்காத இடம் பிடித்தவை. நடிப்பில் மட்டும் அல்லாது பாடல் பாடுவதிலும் கட்டிகாரர் தன் முதல் முறையாக கமல் இளையராஜா இசையில் பன்னீர் புஷ்பங்களே எனத் தொடங்கும் இப்பாடலை பாடினார்.
அதன் பிறகு கமலின் நடிப்பில் வெளியான படம் சிவப்பு ரோஜாக்கள். மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்.வித்தியாசமான கதைக்கலம் இப்படத்திலும் இளையராஜா இசையில் கமல் நினைவோ ஒரு பறவை எனத் தொடங்கும் கவிஞர் வாலியின் வரிகளில் கமல் பாடியிருந்தார். அதன் பிறகு வந்த அவரது படங்களில் ஒரு பாடலாவது பாடி விடுவர் கமல். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பத்தல பத்தல …பாடல் குறிப்பிடத்தக்கது.
The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>