Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
எம்.ஜி.ஆர். – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 04:30:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png எம்.ஜி.ஆர். – Touring Talkies https://touringtalkies.co 32 32 பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் https://touringtalkies.co/those-scared-minutes-s-a-chandrasekhar/ Thu, 10 Nov 2022 04:29:54 +0000 https://touringtalkies.co/?p=26894 ஒரு காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் ரீதியான படங்களை இயக்கி வந்தார். அவை வசூலில் வெற்றி பெற்றதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர்,  அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி. எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு. குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார்.  […]

The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் ரீதியான படங்களை இயக்கி வந்தார். அவை வசூலில் வெற்றி பெற்றதோடு, பரபரப்பையும் ஏற்படுத்தின.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், 1987ம் ஆண்டு இவரது இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற படம் வெளியானது. இப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர்,  அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து உருவான படம் இது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க, சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு.

குறிப்பிட்ட நேரத்துக்கு எஸ்.ஏ.சி. சென்றுவிட்டார்.  ஆனால் எம்.ஜி.ஆர். காக்கவைத்துவிட்டார்.

நேரம் ஆக நேரம் ஆக சந்திரசேகருக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அழைக்க.. அறையினுள் எஸ்.ஏ.சி. சென்றார்.

நீதிக்கு தண்டனை படம் குறித்து எதுவுமே கேட்காத எம்.ஜி.ஆர், “என்னுடைய எம்ஜிஆர் பிக்சர்ஸ் மூலம் நிறைய படங்களை தயாரித்து இருக்கிறேன்.  ஆனால் இப்பொழுது எந்த படமும் எடுக்கவில்லை. நீங்கள் வருடத்திற்கு இரண்டு  படங்கள் இயக்க முடியுமா” என்று கேட்டிருக்கிறார். எஸ்.ஏ.சி.க்கு. ஆச்சரியம்.

இது குறித்து பழைய நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சி.

அப்போது, “எம்.ஜி.ஆரை நினைத்து வியந்தேன். அவரை விமர்சித்து படம் எடுத்திருக்கோம். ஏதோ மிரட்டுவார் என எண்ணி வந்த எனககு ஆச்சரியம். எம்ஜிஆர் எப்பொழுது திறமையானவர்களை மிகவும் மதிக்க கூடியவர்” என்று பிரமிப்பாக தெரிவித்தார் எஸ்.ஏ.சி.

The post பயந்த அந்த நிமிடங்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் appeared first on Touring Talkies.

]]>
‘அவரை’ நினைத்து கலங்கிய ஐசரி கணேஷ்! https://touringtalkies.co/isari-ganesh-is-worried-about-him/ Thu, 10 Nov 2022 04:16:36 +0000 https://touringtalkies.co/?p=26877 சமீபத்தில் இவர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்: “என் அப்பா, நடிகர் ஐசரி வேலன் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏ வாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் அவர் ஐசரி வேலன் இறக்கும் தருவாயில் 2 லட்சத்துக்கும் மேலாக கடன் வைத்து விட்டு இறந்துவிட்டார். அப்போது அது மிகப்பெரிய தொகை. அதனால் பல பிரச்சினைகள்.  ஆகவே,  உதவியை நாடி எம்ஜிஆரை அணுகினார் என் தாயார்.  எங்களுக்கு உள்ள கடன்கள்  உண்மைதானா என விசாரிக்க ஒரு தாசில்தாரையும் நியமித்தாராம் எம்ஜிஆர். […]

The post ‘அவரை’ நினைத்து கலங்கிய ஐசரி கணேஷ்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் இவர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்:

“என் அப்பா, நடிகர் ஐசரி வேலன் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏ வாக இருந்தவர். ஒரு காலகட்டத்தில் அவர் ஐசரி வேலன் இறக்கும் தருவாயில் 2 லட்சத்துக்கும் மேலாக கடன் வைத்து விட்டு இறந்துவிட்டார். அப்போது அது மிகப்பெரிய தொகை. அதனால் பல பிரச்சினைகள்.

 ஆகவே,  உதவியை நாடி எம்ஜிஆரை அணுகினார் என் தாயார்.  எங்களுக்கு உள்ள கடன்கள்  உண்மைதானா என விசாரிக்க ஒரு தாசில்தாரையும் நியமித்தாராம் எம்ஜிஆர். உண்மை நிலவரம் தெரியவர அந்த தாசில்தாரிடமே 3 லட்சம் தொகையை கொடுத்து கடனை அடைக்க சொல்லிவிட்டார்.   2.70 லட்சம் ரூபாய் கடன் போக மீதி 30000 ரூபாயை எம்ஜிஆரிடம் கொடுக்கச் சென்னாறார் என் தாயார். ஆனால் எம்ஜிஆர்  நீங்களே செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என கொடுத்துவிட்டார்.

வாழ்க்கையில் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது” என தன் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஐசரி கணேஷ்.

The post ‘அவரை’ நினைத்து கலங்கிய ஐசரி கணேஷ்! appeared first on Touring Talkies.

]]>
“ எனக்கு அது நடந்ததில்லை..” : காரணத்தைச் சொல்லும் பபிதா! https://touringtalkies.co/it-has-never-happened-to-me-babita-tells-the-reason/ Fri, 04 Nov 2022 15:56:41 +0000 https://touringtalkies.co/?p=26542 தமிழின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பபிதா. நாயகன் படத்தில் இவர் ஆடிய, நான் சிரித்தால் தீபாவளி பாடல் இன்றும் பிரபலம். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகுக்கு வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, “திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது உண்டா” என்று கேட்கப்பட்டது. அதற்கு பபிதா, “எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த ஜஸ்டின்தான் என் அப்பா.  அதனால் எம்.ஜி.ஆரை, பெரியப்பா என்றுதான் […]

The post “ எனக்கு அது நடந்ததில்லை..” : காரணத்தைச் சொல்லும் பபிதா! appeared first on Touring Talkies.

]]>
தமிழின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பபிதா. நாயகன் படத்தில் இவர் ஆடிய, நான் சிரித்தால் தீபாவளி பாடல் இன்றும் பிரபலம். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகுக்கு வந்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, “திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது உண்டா” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பபிதா, “எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த ஜஸ்டின்தான் என் அப்பா.  அதனால் எம்.ஜி.ஆரை, பெரியப்பா என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை மகள் போலவே நினைத்து பாசம் காட்டினார். திரையுலகமும் என்னை அப்படியே நினைத்தது. ஆகவே என்னிடம் யாரும் தவறான நோக்கத்துடன் பேசியது.. இல்லை.. பார்த்தது கூட கிடையாது. இதற்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான்” என்று தெரிவித்தார்.

The post “ எனக்கு அது நடந்ததில்லை..” : காரணத்தைச் சொல்லும் பபிதா! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! https://touringtalkies.co/mgr-gave-a-volley-of-bun/ Fri, 28 Oct 2022 15:00:00 +0000 https://touringtalkies.co/?p=26140 ஜாலியாக ஒருவருக்கு ஐஸ் வைப்பதை அல்வா கொடுப்பது என்போம். அதே போல எம்.ஜி.ஆருக்கு ‘பன்’ கொடுத்தவர் கவிஞர் வாலி. இதை அவரே சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி.  ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது. கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் […]

The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.

]]>
ஜாலியாக ஒருவருக்கு ஐஸ் வைப்பதை அல்வா கொடுப்பது என்போம். அதே போல எம்.ஜி.ஆருக்கு ‘பன்’ கொடுத்தவர் கவிஞர் வாலி. இதை அவரே சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி.  ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது.

கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் ஏற்பட்டதாம்.

நேராக சத்யா ஸ்டுடியோ சென்ற வாலி,  எம்.ஜி.ஆரை சந்தித்து உரிமையாக, “உலகம் சுற்று் வாலிபன் படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர்.,  உறுதியாகச் சொல்லாமல், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார், பட்டும் படாமல்.

உடனே வாலி, “ இந்தப் படத்தில் நான் பாடல் எழுதவில்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.

குழப்பமாக எம்.ஜி.ஆர்., “ஏன்” என்று கேட்க.. அதற்கு வாலி, “படத்தின் பெயர், உலகம் சுற்றும் வாலிபன். இதில் ‘வாலிபன்’ என்பதில் என்னுடைய பெயரை நீக்கிவிட்டால்,  ‘உலகம் சுற்றும் பன்’ என்று ஆகிவிடுமே.. இதை எப்படி மக்கள் ஏற்பார்கள்?” என்று முகத்தை சீரிஸாக வைத்துக்கொண்டு வாலி கேட்டார்.

வாலி கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். ரசித்துச் சிரித்தார். அதோடு, “சரி, நீயும் பாட்டு எழுது” என அனுமதித்தார்.

பாடல் எழுத பாட்டுத்திறமை மட்டும் போதாது.. பேச்சுத் திறனும் வேண்டும் என்பதற்கு வாலி ஓர் உதாரணம்.

The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.

]]>
கதறி அழுத நாகேஷ்! https://touringtalkies.co/dazzling-nagesh/ Fri, 28 Oct 2022 14:48:00 +0000 https://touringtalkies.co/?p=26128 நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாகேஷ், சொந்தமாக திரையரங்கம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தார். இறுதியில் தனது சம்பாத்தியம் அனைத்தையும் போட்டு, சென்னை தி.நகரில், தனது பெயரிலேயே திரையரங்கம் துவங்கினார். ஆனால் அத்திரையரங்கம் திறக்க இருந்த நேரத்தில், மாநகராட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டது. காரணம் அருகில்  ஒரு பள்ளி இருப்பதால், அந்த இடத்தில் திரையரங்கம் வருவது சரியாக இருக்காது என காரணம் சொல்லப்பட்டது. நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார். […]

The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நாகேஷ், சொந்தமாக திரையரங்கம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தார். இறுதியில் தனது சம்பாத்தியம் அனைத்தையும் போட்டு, சென்னை தி.நகரில், தனது பெயரிலேயே திரையரங்கம் துவங்கினார்.

ஆனால் அத்திரையரங்கம் திறக்க இருந்த நேரத்தில், மாநகராட்சி அனுமதி ரத்து செய்யப்பட்டது. காரணம் அருகில்  ஒரு பள்ளி இருப்பதால், அந்த இடத்தில் திரையரங்கம் வருவது சரியாக இருக்காது என காரணம் சொல்லப்பட்டது.

நாகேசுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. எம்.ஜி.ஆரிடம் ஓடினார்.

“சட்டதிட்டங்கள் தெரிந்து தியேட்டர் கட்டமாட்டாயா” என கடிந்து திருப்பி அனுப்பிவிட்டார் எம்.ஜி.ஆர்.

சோகத்துடன் வீட்டுக்கு வந்தார் நாகேஸ். ஆனால் இரு நாட்களில் திரையரங்கத்துக்கு அனுமதி கிடைத்தது.

நெகிழ்வும் ஆச்சரியமுமாக எம்.ஜி.ஆரை சந்திக்க ஓடினார்.

அப்போது எம்.ஜி.ஆர்., “அந்த பள்ளிக்கு இன்னொரு வாசல் உண்டு. அந்த வாசலைத் திறந்து இந்த கதவை மூடச் சொல்லி விட்டோம். இது உனக்காக செய்தது அல்ல. நீண்ட நாட்களாகவே, திரையரங்கப் பகுதியில் நெரிசல் இருப்பதால் வழியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அது  இப்போது நிறைவேறிவிட்டது” என்று சிரித்தார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்ட நாகேஸ், நெகிழ்ச்சியில் கதறி அழுதுவிட்டார்.

காலத்தால் செய்த உதவி என்பார்கள்.. ஆனால் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் காலம் கடந்து நிற்பவை!

The post கதறி அழுத நாகேஷ்! appeared first on Touring Talkies.

]]>
நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! https://touringtalkies.co/nadodi-manan-the-secret-of-the-title/ Fri, 28 Oct 2022 14:42:00 +0000 https://touringtalkies.co/?p=26122 ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார். அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து […]

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார்.


அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து உருவாக்கினார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் அப்படம் உருவானது. திரையுலகமே, எதற்காக இவ்வளவு செலவு செய்து ரிஸ்க் எடுக்கிறார் என அதிசயித்தது.

இதை  அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் வாய்விட்டே கேட்டுவிட்டார்கள்.

அதற்கு சிரித்தபடியே, “என் சம்பாத்தியம் முழுவதையும் இப்படத்திற்காக செலவு செய்துவிட்டேன். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் திரையுலகில் நான் வெற்றிகரமாக தொடர முடியும். அதாவது இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி. ஆகவேதான் படத்துக்கும் அபபடி பெயர் வைத்தேன்” என்று சொல்லி வியக்க வைத்தார்.

படம் வெற்றி பெற்று நிஜமாகவே திரையுலகின் மன்னன் ஆனார் எம்.ஜி.ஆர்.!

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! https://touringtalkies.co/cinema-history-83-mgr-gives-freedom-to-actor-cho/ Fri, 14 Oct 2022 17:46:39 +0000 https://touringtalkies.co/?p=25428 ‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு  எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக  சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப்  பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு  சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது   என்பதை சோ நான்கு அறிந்திருந்தபோதிலும் அவரை விமர்சிக்கும் போக்கை சோ கை விடவேயில்லை. […]

The post சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! appeared first on Touring Talkies.

]]>
‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு  எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக  சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப்  பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு  சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் இருந்த செல்வாக்கு எப்படிப்பட்டது   என்பதை சோ நான்கு அறிந்திருந்தபோதிலும் அவரை விமர்சிக்கும் போக்கை சோ கை விடவேயில்லை. அதே போன்று  படப்பிடிப்பு தளத்திலும்  மற்றவர்கள் எம்.ஜி.ஆரோடு பேசத் தயங்குகின்ற விஷயங்கள் பற்றி சர்வசாதாரணமாக அவரோடு பேசுவது  சோவின் வழக்கம்.

கலைஞர் கருணாநிதி துவங்கிய ‘மேகலா பிக்சர்ஸ்’ தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்.’ .அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே இருந்த சுமுக உறவு, படம் முடிவடைகின்ற கட்டத்தை நெருங்கியபோது இல்லை.

அவர்கள் இருவருக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அந்தப் படத்தின்  கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர்.வந்தார்.

சண்டைக் காட்சியில், இரண்டு ஷாட்டுகளும்  ‘சோ’வுடன் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு காட்சியில் விடுபட்டுப்போன இரண்டு ஷாட்களும் மட்டுமே அன்று படமாக்கப்படவிருந்தன. எம்.ஜி.ஆர். ஒத்துழைத்தால் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட கூடிய படப்பிடிப்பு அது.

அன்றைய  படப்பிடிப்பை முடித்துவிட்டு மறுநாள் எம்.ஜி.ஆர். வெளிநாடு செல்லவிருந்தார். அன்று படப்பிடிப்பை  முடிக்கவில்லையென்றால் அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் அந்தப் படம் வெளிவருவது சிக்கலாகிவிடும் என்பதால் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட எல்லோரையும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.

 9 மணிக்கு துவங்க இருந்த படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். சரியாக எட்டு மணிக்கே வந்துவிட்டார். அவர் அவ்வளவு சீக்கிரம் வருவார் என்று படக் குழுவினர் எவரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் சரியான நேரத்துக்கு  வந்து விட்டதால் 9 மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்தால் பத்து மணிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் துரிதப்படுத்தினார்கள்.

அப்போது மேக்கப் அறைக்கு  வெளியே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்த எம்.ஜி.ஆர். அங்கிருந்தவர்களை கூப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு மேக்கப் போட்டு படப்பிடிப்புக்கு அவர் தயாராகிவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது காரில் ஏறி யாரையோ சந்திக்க புறப்பட்டுவிட்டார் அவர்.

அவர் திரும்பி வந்தபோது மணி பன்னிரண்டு. அவர் இப்படி போக்குக் காட்டிக் கொண்டு இருந்ததால் அன்றைய படப்பிடிப்பை முடிக்க மாட்டார் என்று ‘சோ’-விற்கு தோன்றியது. அதை எம்.ஜி.ஆரிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பிய அவர் எம்.ஜி.ஆர். அருகில் சென்றார். 

“இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா இல்லையான்னு எனக்கு மட்டுமாவது சொல்லுங்க. ஷூட்டிங் இல்லேன்னா நான் எதுக்கு தண்டமா இங்கே காத்துக் கிட்டு இருக்கணும்?” என்று அவரிடம் சோ கேட்டபோது “எனக்கு ஒரு உதவி பண்ணுங்க” என்று சோவிடம் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் “நீங்க கொஞ்சம் பேசாம இருங்க” என்று அவரிடம்  சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அன்று ஷூட்டிங்கில் கலந்து கொள்வதில்லை என்று எம்.ஜி.ஆர் முடிவெடுத்திருந்தால் நிச்சயம் தன்னை அவர் காக்க வைக்க மாட்டார் என்று எண்ணிய சோ பேசாமல் இருக்கச் சொல்லி எம்.ஜி.ஆர் சொல்லியதால் அமைதியாக மேக்கப் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

அன்று இரவு எட்டு மணிவரை ஸ்டுடியோவில் இருந்த பலரோடு பேசுவதும்  அடிக்கடி வெளியே போவதும், வருவதுமாக எம்.ஜி.ஆர். இருந்தாரே தவிர மேக்கப் போட்டுக் கொள்ளவேயில்லை.

“இன்று ஷூட்டிங் உண்டா இல்லையா?” என்று எம்.ஜி.ஆரிடம் நேரடியாகக் கேட்கக் கூடிய தைரியம் படத் தயாரிப்பாளரான முரசொலி மாறனுக்கோ, இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவிற்கோ அறவே இல்லை. அவரிடம் அப்படி கேட்டு அதுவே பிரச்னையாகி அவர் கிளம்பிவிட்டால் என்ன செய்வது என்று எல்லோரும் பயந்தனர்.

நிச்சயமாக இன்று படம் முடியாது என்ற முடிவுக்கு படப்பிடிப்புக் குழுவினர் வந்துவிட்ட நிலையில் இரவு பதினொரு மணிக்கு மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

இரவு பன்னிரண்டு மணிக்கு படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் ”என்ன தெளிவு வந்ததா?” என்று ‘சோ’வைப் பார்த்து எம்.ஜி.ஆர்.  கேட்டபோது “இல்லை சார்… தூக்கம்தான் வந்தது” என்று பதில் சொன்னார் சோ.

“என்ன காரணத்திற்காக அன்றைய படப்பிடிப்பில் எம். ஜி. ஆர் அப்படி நடந்து கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இடையே அப்போது இருந்த கருத்து மோதல்கள்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நானே ஒரு முடிவுக்கு வந்தேன் ”என்று ஒரு கட்டுரையில் ‘சோ’ குறிப்பிட்டிருக்கிறார்.

ப.நீலகண்டன் இயக்கத்தில்  எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் சோ கலந்து கொண்டபோது எம்.ஜி.ஆரை  தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த சோவைக்   கிண்டல் செய்யும் நோக்கத்துடன் அவரை வம்புக்கு இழுத்த இயக்குநர் ப.நீலகண்டன், ”என்ன சோ… உங்க ‘துக்ளக்’ பத்திரிக்கை விற்பனை எப்படி இருக்கு?” என்று அவரிடம் கேட்டார்.

“ரொம்ப நல்லா இருக்கு சார்“ என்று ‘சோ’ பதில் சொன்னவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்து சிரித்தபடியே ”கலைமகள் பத்திரிகையின் விற்பனை எப்படி இருக்கு..?” என்று நீலகண்டன் கேட்க “பரவாயில்லை சார்..” என்று பதில் பிறந்தது ‘சோ’விடமிருந்து.

அடுத்து ”துக்ளக்கைவிட ‘கலைமகள்’ விற்பனை குறைவுதான் இல்லையா?” என்று நீலகண்டன் கேட்டபோது  அவரது கேள்வியின் நோக்கம் சோவிற்கு புரிந்து விட்டது.   அடுத்து ‘சோ’ எதிர்பார்த்த மாதிரியே ஒரு கேள்வியினை  எழுப்பினார் நீலகண்டன்.

“கலைமகள் எப்படிப்பட்ட பத்திரிகை?” என்று அவர் கேட்ட கேள்விக்கு “ரொம்பவும் தரமான ஒரு பத்திரிகை சார்” என்று பதிலளித்தார் சோ. அடுத்து “துக்ளக்”பத்திரிகை  ‘கலைமகள்’  அளவிற்கு தரமான பத்திரிகையா?” என்று  அவர் கேட்க “நிச்சயமாக இல்லை” என்று சோவிடமிருந்து பதில் வந்தது.

“துக்ளக்’கின் விற்பனை ‘கலைமகளு’க்கு இல்லை என்பது எதைக் காட்டுகிறது? தமிழ் நாட்டில் தரமுள்ள சரக்கு விற்பதில்லை. தரமில்லாத சரக்கு நன்கு விற்பனையாகிறது என்பதைத்தானே“ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து  சிரித்தபடியே சொன்ன ப.நீலகண்டன் அடுத்து அப்படியொரு பதிலை ‘சோ’ சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

“தமிழ் நாட்டில் எப்போதும் அப்படித்தான் சார். தரமான பல படங்கள் இங்கே ஒடுவதில்லை.  தரமில்லாத படங்கள்தான்  நன்றாக ஓடுகின்றன. பல நல்ல படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதே சமயம் நீங்க டைரக்ட் செய்த ‘என் அண்ணன்’ நன்றாக ஓடுகிறது” என்று சிரித்தபடியே அவருக்கு பதில் சொன்னார் ‘சோ’.

ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘என் அண்ணன்’. ‘சோ’ அப்படி சொன்னவுடன் ப.நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை.அப்போது ப.நீலகண்டனின் பக்கத்திலிருந்த எம்.ஜி.ஆர் “அவரிடம் என் வம்புக்கு போனீங்க? அவர்கிட்ட வம்பு பண்ணா அவர் இப்படித்தான் பதில் சொல்வாருன்னு தெரியுமில்லே?” என்று சொன்னாரே தவிர சோ மீது கோபம் கொள்ளவில்லை.

தமிழக அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி.. சோவை அறியாத தலைவர்களே இல்லை என்ற நிலைமைக்கு ஒரு கட்டத்தில் உயர்ந்த சோ தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ், கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார் ஆகியோருடனும் வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி போன்ற பல தேசியத் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப்  பழகியவர் என்ற போதிலும் அவர்களையும் விமர்சிக்க  என்றுமே அவர்  தயங்கியதில்லை. அந்த விமர்சனங்களை மீறி பல அரசியல் தலைவர்கள் அவரோடு நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தனர்.

அதனால்தான் சோ உடல் நலமின்றி  சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது  அவரது நலம் விசாரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரைத் தேடிச் சென்றனர்.

நாடக உலகிலும், பத்திரிகை உலகிலும் சோ  நிகழ்த்திய சாதனைகளை அவருடைய  அளவிற்கு துணிச்சலோடு இனி எவராலும் நடத்த முடியாது என்பதும் அதற்கான அரசியல் சூழல்  இப்போது இல்லை என்பதும் நிதர்சனமான உண்மைகள்.

(தொடரும்)

The post சினிமா வரலாறு-83 – ‘சோ’விற்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த சுதந்திரம்..! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். – சிவாஜி: மோதலும் காதலும்! https://touringtalkies.co/mgr-shivaji-conflict-and-love/ Wed, 12 Oct 2022 03:55:27 +0000 https://touringtalkies.co/?p=25262 ஒரு காலகட்டத்தில் தமிழின் உச்ச நடிகர்களாக  இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி ஆகியோர். அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.விலும், சிவாஜி காங்கிரஸிலு் இருந்தனர். 1971 தேர்தல் தேர்தலில் அவரவர் அவரவர் கட்சிக்காக தமிழ்நாடு முழுதும் சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போது பொதுக்கூட்ட மேடை ஒன்றில், சிவாஜி. `என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரை நோக்கி கேள்விக்கணை விடுத்தார். அடுத்த ஒரு மேடையில் பதிலுக்கு எம்.ஜி.ஆர்., “என் படங்கள் அளவுக்கு உன் படம் வசூலாகுமா?’ என்று காட்டமாக […]

The post எம்.ஜி.ஆர். – சிவாஜி: மோதலும் காதலும்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலகட்டத்தில் தமிழின் உச்ச நடிகர்களாக  இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி ஆகியோர்.

அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.விலும், சிவாஜி காங்கிரஸிலு் இருந்தனர்.

1971 தேர்தல் தேர்தலில் அவரவர் அவரவர் கட்சிக்காக தமிழ்நாடு முழுதும் சென்று பிரச்சாரம் செய்தனர்.

அப்போது பொதுக்கூட்ட மேடை ஒன்றில், சிவாஜி. `என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரை நோக்கி கேள்விக்கணை விடுத்தார். அடுத்த ஒரு மேடையில் பதிலுக்கு எம்.ஜி.ஆர்., “என் படங்கள் அளவுக்கு உன் படம் வசூலாகுமா?’ என்று காட்டமாக கேட்டார்.

இதனால் இருவரின் ரசிகர்கலும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இரண்டு கட்சி தலைவர்களும் இருவரையும் சமாதானப்படுத்த. முன்பைவிட, இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.

மோதலுக்குப் பின் காதல்!

The post எம்.ஜி.ஆர். – சிவாஜி: மோதலும் காதலும்! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். ஸ்டைலை உருவாக்கியவர் யார் தெரியுமா? https://touringtalkies.co/mgr-style/ Tue, 11 Oct 2022 12:30:02 +0000 https://touringtalkies.co/?p=25231 எம்.ஜி.ஆர். நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அவரது மேனரிசம், முகபாவம், உடல் மொழி அனைத்துமே அனைவரையும் கவரும். இப்படிப்பட்ட நடிகராக எம்.ஜி.ஆரை உருவாக்கியவர் இயக்குனரான ப. நீலகண்டன். வருடா வருடம்  எம்.ஜி.ஆரை வைத்து 18 வெற்றிப் படங்களை அளித்தவர்  நீலகண்டன். திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை எப்படி காட்டினால் மக்கள் விரும்புவார்கள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து கற்பனை செய்து கதாபாத்திரத்தை வடிவமைத்தார். பிறகு அதுவே எம்.ஜி.ஆருக்கான அடையாளமாக மக்களைக் கவர்ந்தது.

The post எம்.ஜி.ஆர். ஸ்டைலை உருவாக்கியவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அவரது மேனரிசம், முகபாவம், உடல் மொழி அனைத்துமே அனைவரையும் கவரும். இப்படிப்பட்ட நடிகராக எம்.ஜி.ஆரை உருவாக்கியவர் இயக்குனரான ப. நீலகண்டன்.
 
வருடா வருடம்  எம்.ஜி.ஆரை வைத்து 18 வெற்றிப் படங்களை அளித்தவர்  நீலகண்டன். திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை எப்படி காட்டினால் மக்கள் விரும்புவார்கள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து கற்பனை செய்து கதாபாத்திரத்தை வடிவமைத்தார். பிறகு அதுவே எம்.ஜி.ஆருக்கான அடையாளமாக மக்களைக் கவர்ந்தது.

The post எம்.ஜி.ஆர். ஸ்டைலை உருவாக்கியவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! https://touringtalkies.co/rajarajan-mgr/ Sun, 09 Oct 2022 11:29:13 +0000 https://touringtalkies.co/?p=25037 கயல்விழி என்ற பாண்டிய நாட்டு நடனமாதுவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயல்வான் சோழ இளவரசனான ராஜராஜன்…   அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி. அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள். ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது. அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது. இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே  என்று கேட்கலாம். இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் […]

The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>
கயல்விழி என்ற பாண்டிய நாட்டு நடனமாதுவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயல்வான் சோழ இளவரசனான ராஜராஜன்…  

அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி.

அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள்.

ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது.

அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது.

இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே  என்று கேட்கலாம்.

இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

படத்தில் வில்லன் (!) ராஜ ராஜனாக நம்பியார் நடித்தார். அவரதை எதிர்க்கும் நாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார்! வில்லனை வழக்கம்போல ஓட ஓட விரட்டினார்.

(அதே எம்ஜிஆர்தான் 1957-ல் ராஜராஜன் என்ற பெயரிலேயே ராஜராஜனாக நடித்தார்.)

The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>