தமிழின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பபிதா. நாயகன் படத்தில் இவர் ஆடிய, நான் சிரித்தால் தீபாவளி பாடல் இன்றும் பிரபலம். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகுக்கு வந்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது, “திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது உண்டா” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பபிதா, “எம்.ஜி.ஆரின் வலது கரமாக இருந்த ஜஸ்டின்தான் என் அப்பா. அதனால் எம்.ஜி.ஆரை, பெரியப்பா என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை மகள் போலவே நினைத்து பாசம் காட்டினார். திரையுலகமும் என்னை அப்படியே நினைத்தது. ஆகவே என்னிடம் யாரும் தவறான நோக்கத்துடன் பேசியது.. இல்லை.. பார்த்தது கூட கிடையாது. இதற்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான்” என்று தெரிவித்தார்.