Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
எம்.எஸ்.விஸ்வநாதன் – Touring Talkies https://touringtalkies.co Mon, 17 Jan 2022 13:58:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png எம்.எஸ்.விஸ்வநாதன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் https://touringtalkies.co/cinema-varalaaru-78-msv-refuses-of-kannadasans-lyrics/ Mon, 17 Jan 2022 13:57:47 +0000 https://touringtalkies.co/?p=20275 தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம். கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன். அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் […]

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ பாடலாசிரியர்களையும், இசையமைப்பாளர்களையும் சந்தித்திருந்தாலும் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்போல பாசத்துடன் பணியாற்றிய இரட்டையர்களை  இதுவரை சந்திக்கவில்லை என்பது நிஜம்.

கண்ணதாசனுக்கு ஒன்று என்றால் அப்படியே நிலை குலைந்து போவார் விஸ்வநாதன். அவர் கண்ணதாசன் மீது வைத்திருந்த பாசத்திற்கு சற்றும் குறைவில்லாத பாசத்தை விஸ்வநாதன் மிது வைத்திருந்தார் கண்ணதாசன்.

அந்த இருவரின் ஒற்றுமை அவர்கள் பிறந்த தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கண்ணதாசன் -விஸ்வநாதன் ஆகிய இருவருமே பிறந்தது ஒரே தேதியில். ஜூன் 24-தான் அவர்கள் இருவரும் பிறந்த தினம்.

1927-ம் ஆண்டு கண்ணதாசன் பிறக்க,  அதற்கு ஒரு வருடம் தள்ளி 1928-ம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தார்.

சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த பாலும் பழமும்’ படத்தில இடம் பெற்றிருந்த  நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று தொடங்கும் பாடலை  எழுதிய கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவருமே அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள். அப்படி அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்த  அவர்களுடைய முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது.

அப்போது  ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில்  இசை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன் . எந்த இசையமைப்பாளர் இசையமைத்தாலும்  அந்த மெட்டை கவிஞர்களிடம் வாசித்துக் காட்டி  அந்த மெட்டுக்குரிய பாடலை அவர்களிடம் எழுதி வாங்குகின்ற வேலை அவருடையதாக இருந்தது.

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  கன்னியின் காதலி’ என்ற படத்திலதான்  கண்ணதாசன் பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய  முதல் இரண்டு பாடல்களுக்கும் அவர் பாடல்களை எழுதிய பிறகே  எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்தார். ஆகவே அவரைச்  சந்திக்கக் கூடிய வாய்ப்பு விஸ்வநாதனுக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் இடம் பெற்ற  மூன்றாவது பாட்டுதான் அவர்களுடைய முதல் சந்திப்பிற்கு வழி வகுத்தது.

பாடலுக்கான மெட்டை விஸ்வநாதன் வாசித்துக் காண்பித்தவுடன் “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று அந்தப் பாடலுக்கான பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் கொடுத்தார் கண்ணதாசன்.  

எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்துக் காட்டிய மெட்டுக்கு அந்தப்  பாடல் வரிகள் மிகச்   சரியாக பொருந்தி  இருந்தாலும் அந்தப் பல்லவியில் இடம் பெற்றிருந்த களி’, ‘கூத்து’ போன்ற வார்த்தைகள் விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லை.

“அது என்ன ‘களி’, ‘கூத்து’? அதெல்லாம் சரியாக இல்லை. மாற்றி எழுதிக் கொடுங்கள்” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்னபோது அவரைப் பார்த்து கண்ணதாசன் முறைத்த முறைப்பில் விஸ்வநாதன் எரிந்து போகாமல் இருந்தது அதிசயம்தான் . அந்த அளவு கோபத்தோடு அவரைப் பார்த்து முறைத்தார் அவர். “நீயெல்லாம்  எப்படி பாட்டை எழுதவேண்டுமென்று எனக்கு சொல்லித் தருகிறாயா?” என்ற கேள்வியும்  அந்த முறைப்புக்குள்  இருந்தது.

அப்போது விஸ்வநாதன் இருபத்தியோரு வயது இளைஞர். ஆகவே கண்ணதாசனின் முறைப்புக்கெல்லாம் அவர் கொஞ்சம் கூட  அசரவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார் ஜுபிடர் பிக்சர்சில் ஆஸ்தான கவிஞராக இருந்த உடுமலை நாராயணகவி.

“என்னடா பல்லவியை எழுதிட்டானா?” என்று விஸ்வநாதனைப் பார்த்து கேட்ட அவர்  “எங்கே பல்லவியைப் படி பார்க்கலாம்” என்றார். “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்று கண்ணதாசன் எழுதியிருந்த பல்லவியை விஸ்வநாதன் படித்துக் காட்டிய உடன் “என்னடா இது களி’, ‘கூத்து’ன்னு? இந்த வார்த்தைகள் எல்லாம் இவனுக்கு ஒத்து வராதே” என்று கண்ணதாசனைப் பார்த்து சொன்ன அவர் “சரி சரி அதை மாத்தி எழுதிக் கொடுத்து விடு” என்று கண்ணதாசனிடம்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் மேல் உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும் கண்ணதாசனால் அதை வெளியே காட்ட முடியவில்லை. அதற்கிடையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம்  வந்த உடுமலை நாராயணகவி  “என்னடா மாத்தி எழுதி கொடுத்தானா இல்லையா?” என்று விஸ்வநாதனிடம்  கேட்டார்

“இன்னும் எழுதித் தரவில்லை” என்று அவர் பதில் சொன்னதும் “சரி இப்படி மாத்திக்கோ” என்று சொல்லி விட்டு “காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்பதற்கு பதிலாக “காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு போட்டுப் பார்” என்றார் அவர்.

அவர் சொன்ன வார்த்தைகளை அந்த மெட்டுக்குள் பொருத்திப் பார்த்த விஸ்வநாதன் “ரொம்ப சரியாக  இருக்கு” என்றார். உடுமலை நாராயண கவி எந்த அளவிற்கு பண்பாளர் என்பதற்கு அடையாளம்  அடுத்து  அவர் கண்ணதாசனைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தான். 

“காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே” என்ற வார்த்தைகள்தான் கவிதை நயமிக்க அழகான வார்த்தைகள் என்பதெல்லாம் இந்த மடையன் விஸ்வநாதனுக்கு புரியாது. அவனை மாதிரி இருக்கிற மடையங்களுக்குத்தானே இந்தப் பாட்டு. அதனால அவங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான் அதை மாத்தி கேட்கிறான் அவன்” என்று கண்ணதாசனிடம் கூறினார் அவர்.

அதற்குப் பிறகு பல படங்களில் இணைந்து கண்ணதாசனும், விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றினாலும் அவர்களது நட்பிலே நெருக்கம் உண்டானது மகாதேவி’ படத்தில பணியாற்றியபோதுதான்.

அந்தப் படத்திற்குப் பிறகுதான்  கண்ணதாசனை கவிஞரே’ என்று விஸ்வநாதனும் ‘விசு’ என்று விஸ்வநாதனை கண்ணதாசனும் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை தனி புத்தகமாகவே எழுதலாம்.

கண்ணதாசனுக்கும், விஸ்வநாதனுக்கும் இருந்த உறவு ஒரு பாடலாசிரியர்-இசையமைப்பாளர் என்பதை தாண்டிய ஒரு உறவு. அப்படி கண்ணதாசன்  மீது நேசம் கொண்டிருந்த  விஸ்வநாதன்தான் கவிஞர் வாலியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது நட்பு,தொழில் ஆகிய இரண்டையும் எவ்வளவு அழகாக அவர் கையாண்டிருக்கிறார் என்று  வியப்பு கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது.

கண்ணதாசன்  அறிமுகமானதில் இருந்தே பல படங்களில் பாட்டு எழுத அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் எல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதும் சூழ்நிலையே இருந்தது.  தனது பாட்டுச் சுதந்திரத்தை அந்த மெட்டுகள் பறிப்பதாக  எண்ணினார் கவிஞர்.

ஒரு நாள் திடீரென்று விஸ்வநாதனை அழைத்த அவர் “டேய் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதில் மொத்தம் பத்துப் பாட்டுக்கள். அந்த பத்துப் பாடல்களையும் நான் முதலில் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்த வரிகளுக்குத்தான் நீ மெட்டுப் போட வேண்டும் என்ன சரியா? இடையில இந்த பாட்டுக்கு மட்டும்நான் முதல்ல மெட்டுப் போட்டு விடுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது…” என்றார் கண்ணதாசன்.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும்  அதற்கு ஒப்புக் கொண்டனர். அப்படி உருவாகிய படம்தான் மாலையிட்ட மங்கை’. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு மறு வாழ்வு தந்த அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே அவ்வளவு இனிமையாக அமைந்திருந்தன. “அந்தப் படம் வந்த பிறகுதான் என்னுடைய தொழிலில் இருந்த மந்த நிலைமை மாறி வெகு வேகமான முன்னேற்றம் பிறந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

‘மாலையிட்ட மங்கை’ படம் வெளியான அன்று  பயத்துடன்தான் நான் ‘பாரகன்’ தியேட்டருக்குப் போனேன். டைட்டில் காட்டும்போதே மகாலிங்கத்தின் கம்பீரமான குரல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே’ என்று முழங்கியது.படத்தைப் பார்க்க   பெருவாரியாக வந்திருந்த கழகத் தோழர்கள் அனைவரும் பலமாக கை தட்டினார்கள். மகாலிங்கத்திடம் அவர்களுக்குப் பிரியம் வந்துவிட்டது. படத்தையும் பிரமாதமாக அவர்கள் ரசித்தார்கள் படமும் நன்றாக ஓடியது…” என்று குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.

கண்ணதாசனும், விஸ்வநாதனும் பாடல் ஒத்திகைக்காக அமர்ந்துவிட்டால் அந்த இடமே கலகலப்பாகிவிடும். ஒருவரையொருவர் அந்த அளவிற்கு கிண்டல் செய்து கொள்வார்கள்.

கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக அமைந்ததை விஸ்வநாதன் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? எந்த பாடலாசிரியராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்பதானே எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். சூழ்நிலை என்றால் படத்தின் சூழ்நிலை அல்ல – பாடல் எழுதும்போது கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இருந்தாரோ அது அவரது பல பாடல்களில் எதிரொலித்திருக்கிறது.

The post சினிமா வரலாறு-78 – கண்ணதாசன் எழுதிய பல்லவியை ஏற்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் appeared first on Touring Talkies.

]]>
“உங்க இசையைவிடவும் வேகமா எழுதுவேன்…” – எம்.எஸ்.வி.யிடம் சொன்ன பிறைசூடன்..! https://touringtalkies.co/kavingar-piraisoodan-m-s-vishwanathan-first-meeting-news/ Sun, 27 Dec 2020 06:00:44 +0000 https://touringtalkies.co/?p=11480 நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தான் திரையுலகத்தில் நுழைந்த புதிதில் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அசட்டையாக நடந்து கொண்டதைப் பற்றி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “மக்கள் குரல் ராம்ஜி என்னை ஆனந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் ‘சிறை’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்.சி.சக்திதான் இயக்குநர். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைப்பாளர். நான் அந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் கால், மேல் கால் போட்டுக் கொண்டு விறைப்பாக அமர்ந்திருந்தேன். ஆனந்தி பிலிம்ஸ் […]

The post “உங்க இசையைவிடவும் வேகமா எழுதுவேன்…” – எம்.எஸ்.வி.யிடம் சொன்ன பிறைசூடன்..! appeared first on Touring Talkies.

]]>
நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தான் திரையுலகத்தில் நுழைந்த புதிதில் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அசட்டையாக நடந்து கொண்டதைப் பற்றி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“மக்கள் குரல் ராம்ஜி என்னை ஆனந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் ‘சிறை’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆர்.சி.சக்திதான் இயக்குநர். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைப்பாளர்.

நான் அந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் கால், மேல் கால் போட்டுக் கொண்டு விறைப்பாக அமர்ந்திருந்தேன். ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான மோகனும், நடராஜனும் ஆளுக்கொரு கவிஞரின் பெயரைச் சொல்லி “அவர்களைத்தான் பாட்டெழுத அழைக்க வேண்டும்” என்றார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனோ “புலவர் புலமைப்பித்தனை கூப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். எம்.எஸ்.வி. தத்தகாரமும், தந்தகாரமும் போட்டுக் கொண்டிருந்தார். அதுவே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.

இந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்துவிட்டானே என்பதால் எம்.எஸ்.வி.யின் முன்பாக என்னை அமர வைத்தார்கள். “வேகமா பாட்டெழுதுவீங்களா..?” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் என்னிடத்தில் கேட்டார். அப்போது எனக்கு பக்குவமில்லை. தகுதி, வயது பார்த்து பேசத் தெரியாது.. “உங்க இசையைவிடவும் வேகமாக எழுதுவேன்…” என்று பட்டென்று சொல்லிவிட்டேன்.

எம்.எஸ்.வி.யே இதை எதிர்பார்க்கவில்லை. ரசிக்கவில்லை. ஆனாலும் இசையை வாசித்துக் காட்டினார். நானும் உடனுக்குடன் பாடல் வரிகளைச் சொன்னேன். அந்தப் பாடல்தான் ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடல்.

அடுத்தடுத்து எம்.எஸ்.வி. ராகத்தைப் பாடிக் காட்ட வார்த்தைகளைக் கொட்டினேன். உடனேயே, “நாளைக்கு ஏவி.எம்.ல ரிக்கார்டிங் அங்க சரணத்தையெல்லாம் எழுதிட்டு வந்திருங்க…” என்றார் எம்.எஸ்.வி.

மறுநாள் காலையில் முதல் ஆளாக 6.30 மணிக்கெல்லாம் ஏவி.எம். ரிக்கார்டிங் தியேட்டருக்கு போய்விட்டேன். 8.30 மணிக்கு எம்.எஸ்.வி. வந்தார். பின்பு நான் சரணங்களை கொடுத்தவுடன் அதிலிருந்து சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்து எடுத்துக் கொண்டார். அன்றைய பதிவில்கூட மின்சாரம் ரத்தாகி அபசகுனமாகிவிட்டது. ஆனாலும், மலேசியா வாசுதேவனும், வாணி ஜெயராமும் பாட எனது முதல் பாடல் அங்கே பதிவு செய்யப்பட்டது…” என்றார் கவிஞர் பிறைசூடன்.

The post “உங்க இசையைவிடவும் வேகமா எழுதுவேன்…” – எம்.எஸ்.வி.யிடம் சொன்ன பிறைசூடன்..! appeared first on Touring Talkies.

]]>
“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! https://touringtalkies.co/kavingar-muthulingam-told-a-story-of-meenava-nanban-movie-song/ Wed, 28 Oct 2020 11:42:59 +0000 https://touringtalkies.co/?p=9392 ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும். அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார். அது இங்கே : “1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க […]

The post “எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும்.

அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றேன். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றேன்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே என் பக்கம் திரும்பி ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் வேணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர்.

அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்

அங்கங்களே மன்மதனின் படைக்களம்

இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ

இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்’

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் எம்.எஸ்.வி.க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி  

‘தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ –

நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினேன்.

இதை தயாரிப்பாளர், இயக்குநர், எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்…” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

The post “எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..! appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-18 எம்.எஸ்.வி.க்குத் தெரியாத ராகத்தைச் சொல்லிக் கொடுத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா https://touringtalkies.co/cinema-history-18-balamurali-krishna-and-msv-story/ Sun, 18 Oct 2020 09:42:11 +0000 https://touringtalkies.co/?p=8975 தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இசை மேதை மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவை, வெறுமனே ‘பாடகர்’ என்ற ஒரு கூட்டுக்குள் மட்டுமே  அடக்கிவிட முடியாது.    மற்றவர்கள் எடுத்தாளாத பல இராகங்களை இயற்றிப் பாடியிருக்கும் இந்த இசைச் சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.   கர்னாடக இசை உலகின் ஜாம்பவானான இவர் 1930-ம் ஆண்டு ஜுலை மாதம் ஆறாம் தேதியன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் […]

The post சினிமா வரலாறு-18 எம்.எஸ்.வி.க்குத் தெரியாத ராகத்தைச் சொல்லிக் கொடுத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா appeared first on Touring Talkies.

]]>

தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இசை மேதை மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவை, வெறுமனே ‘பாடகர்’ என்ற ஒரு கூட்டுக்குள் மட்டுமே  அடக்கிவிட முடியாது.   

மற்றவர்கள் எடுத்தாளாத பல இராகங்களை இயற்றிப் பாடியிருக்கும் இந்த இசைச் சக்ரவர்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  

கர்னாடக இசை உலகின் ஜாம்பவானான இவர் 1930-ம் ஆண்டு ஜுலை மாதம் ஆறாம் தேதியன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார். அந்த ஊரில் ஊற்றெடுத்த அந்த இசை நதி பின்னர் இசை வெள்ளமாக மாறி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இசை ரசிகர்களை தனது பரவசமூட்டும் இசையால் திக்கு முக்காடச் செய்தது என்பதுதான் உண்மை.

உலகின் பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்  400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.

இசைக் கருவிகள் பலவற்றை இசைக்கின்ற திறமையும் பெற்றிருந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் திரைப்படத்திற்காக பாடிய முதல் பாடல் ‘சதி சாவித்திரி’ என்ற தெலுங்குப் படத்திலே இடம் பெற்றது. பின்னணிப் பாடகி லீலாவுடன் இணைந்து அந்தப் படத்திலே பாடினர் அவர்.

அதைத் தொடர்ந்து ‘திருவிளையாடல்’, ‘கலைக்கோவில்’, ‘கவிக்குயில்’, ‘நவரத்தினம்’ என்று பல திரைப்படங்களில் பாடியுள்ள இவரை திரைப்படத்தில் நடிக்க  வைத்த பெருமை ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களையே சேரும். 

ஏவி.எம்.மின் தயாரிப்பான  ‘பக்த பிரகலாதா’ எனும் தெலுங்கு திரைப்படம்தான் இவர்  நடித்த முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் பல பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. ஆனால், அந்த வாய்ப்புகளை இவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர் ‘சந்தினே செந்தின சிந்தூரம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் மட்டும் பாடகர் வேடத்திலேயே  நடித்திருந்தார்.

‘திருவிளையாடல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒருநாள் போதுமா’ பாட்டை பாடியது இவர்தான் என்பதை நம் அனைவரும் அறிவோம். அந்தப் பாட்டை பாடுவதற்கான வாய்ப்பு முதலில் இவரைத் தேடி வரவில்லை. சீர்காழி கோவிந்தராஜனைத்தான் அந்தப்  பாடலைப் பாடச் சொல்லி கேட்டார் ‘திருவிளையாடல்’ படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன்.

ஆனால்,  சீர்காழி கோவிந்தராஜன்,  “என் பாட்டு எப்போதும் தோற்காது. தோற்கிற மாதிரியான பாடலை நான் பாட மாட்டேன்” என்று மறுத்துவிட்டார். அதன்  பின்னர்தான் அந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை வைத்துப் பாட வைத்தார் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன். சீர்காழி கோவிந்தராஜன் அந்தப் பாடலை பாட மறுத்ததும், அவர் ஏன் பட மறுத்தார் என்பதும் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்குத் தெரியும். நான் பாடுகின்ற பாடல் படத்திலே தோற்கின்ற பாடலாக இருந்தாலும், அது ஈசன் திருவிளையாட்டால் தோற்கடிக்கப்படுகின்ற பாட்டே தவிர தோற்கின்ற பாடல் அல்ல என்று சொல்லி அந்த பாடலைப் பாடிக் கொடுத்தார் பாலமுரளி கிருஷ்ணா.  

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்து பாடலான ‘குருவிக்காரன் பொஞ்சாதி’ என்ற பாடல் ஏபி.நாகராஜன் இயக்கிய ‘நவரத்தினம்’ என்ற படத்திலே இடம் பெற்றது.  அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல வயலின் கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன்.

கர்னாடக இசை உலகில் பலரும் பழைய சம்பிரதாயங்களிலேயே உழண்டு கொண்டிருந்தபோது இசையிலே பல ஆராய்ச்சிகளை நடத்தி ஸித்தி, சுமுகம், ஸர்வஸ்ரீ, ஓம்காரி, கணபதி என்ற பெயர்களில் பல புதிய ராகங்களைப் படத்த இசை  பிரம்மன் பாலமுரளி கிருஷ்ணா.

அதனால்தான் இசை சம்பந்தமாக எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தங்களது சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள  முதலில் பாலமுரளி கிருஷ்ணா அவர்களை  நாடுவதை  பல இசைக் கலைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்திலே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த ‘அதிசய ராகம்’ என்ற பாடலுக்கான ராகத்தை விஸ்வநாதன் அவர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததுகூட பாலமுரளிகிருஷ்ணா அவர்கள்தான் என்பது திரையுலகில் மிகச் சிலரே அறிந்த ஒரு செய்தி. 

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல் கம்போசிங்கின்போது அதுவரை யாரும் பயன்படுத்தாத ஒரு ராகத்திலே அந்தப் படத்திலே ஒரு பாட்டு இடம் பெற  வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கூறினார் படத்தின் இயக்குநரான கே.பாலச்சந்தர்.

அதாவது அந்த ராகம் அபூர்வ ராகமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்திலே அந்த ராகத்தை அதுவரை யாரும் சினிமாவில் பயன்படுத்தி இருக்கவும் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது.

அப்படி ஒரு ராகத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருந்த விஸ்வநாதன் தெலுங்கு புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வானொலியில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்ய அகில இந்திய வானொலி நிலையத்திற்கு சென்றார். அந்தப் பாடலை பாட இருந்தவர் பிரபல சங்கீத வித்வானான பாலமுரளி கிருஷ்ணா.  

அவரைப் பார்த்தவுடனேயே தான் கடந்த இரண்டு நாட்களாக மனதுக்குள் கேட்டுக் கொண்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை விஸ்வநாதனுக்கு பிறந்தது.

 “இதுவரை இசையமைப்பாளர்கள் யாரும் பயன்படுத்தாத புதிய ராகம் ஒன்றை சொல்லுங்கள்” என்று  அவரிடம் கேட்டார் எம்.எஸ்.வி. 

“க ப நி என்று மூன்று ஸ்வரத்தில் ஒரு ராகம் இருக்கிறது. அந்த ராகத்திற்கு மகதி என்று பெயர்” என்று சொன்ன  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சொன்னதோடு நில்லாமல் அந்த ராகத்தைப் பாடியும் காட்டினார்.

அதைக் கேட்டவுடனே அளவில்லாத ஆனந்தம் அடைந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அந்த மேதை கூறிய அந்த ‘மகதி’ என்ற அபூர்வ ராகத்தில் அமைத்த பாடல்தான் ‘அதிசய ராகம்; ஆனந்த ராகம்’ என்று தொடங்கும் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல்.  ஜேசுதாஸ் அந்த  பாடலைப் பாடியிருந்தார்.

பாலமுரளி கிருஷ்ணாவை ஒரு இசைக் கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இசைக் கடல் நம்மிடையே இன்று இல்லை என்றாலும், அவரது இசை அலைகள் என்றும் ஓயாது.

.

The post சினிமா வரலாறு-18 எம்.எஸ்.வி.க்குத் தெரியாத ராகத்தைச் சொல்லிக் கொடுத்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா appeared first on Touring Talkies.

]]>
சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் https://touringtalkies.co/cinema-varalaaru-17-panchu-arunachalam-mgr-msv-ksg/ Sat, 17 Oct 2020 10:46:31 +0000 https://touringtalkies.co/?p=8939 கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார். கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு […]

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>

கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாச்சலம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார்.

கண்ணதாசன் அவர்களைப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை -நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எவரோடும் அவர் எப்போது நெருக்கமாக இருப்பார்… எப்போது விலகி இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது.

சிவாஜி கணேசனைப் பகைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவில் ஒரு கால கட்டத்தில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து “என்னுடைய படங்களுக்கு வசனம் எழுதவோ,  பாடல் எழுதவோ கண்ணதாசனை அழைக்காதீர்கள்…” என்று தனது தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் கண்டிப்பாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

அப்படி கண்ணதாசனிடமிருந்து எம்.ஜி.ஆர். விலகி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கிடைத்தது.

அந்த வாய்ப்பை பஞ்சு அருணாச்சலத்துக்கு வழங்கியவர் பஞ்சுவின் நெருங்கிய நண்பராக இருந்த  ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்கள்.

‘கலங்கரை விளக்கம்’ படத்திற்காக ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலையும், ‘என்னை மறந்ததேன்’ என்ற பாடலையும் எழுதியிருந்தார் பஞ்சு.

எம்.ஜி.ஆர். படத்துக்காக தான் எழுதிய பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்  பதிவானவுடன் அவருக்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். ஏனெனில், அப்போது எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு அரிதான ஒரு விஷயம்.

பாடல் பதிவான மறு தினமே மிகப் பெரிய வில்லங்கத்தை அந்தப் பாடல் சந்திக்கப் போகிறது என்று அப்போது பஞ்சு  அருணாச்சலத்துக்குத்  தெரியாது.

பதிவு செய்யப்பட்ட பாடலை மறுநாள் எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காண்பித்தார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். “இன்னொரு தடவை போடுங்க” என்றதும் வேலுமணிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரே., இன்னொரு தடவை கேட்க விரும்புகிறார் என்றால் பாட்டு நிச்சயமாக பெரிய ஹிட்டாகி விடும் என்ற நினைப்புடன், இன்னொரு முறை அந்தப் பாட்டைப் போட்டார் வேலுமணி.

இரண்டவது முறை கேட்டுவிட்டு ‘இன்னொரு முறை’ என்ற எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாகப் பாடலைக் கேட்டு முடித்தவுடன் ஜி.என்.வேலுமணியைப் பார்த்து, “இந்தப் பாட்டை யார் எழுதினதுன்னு சொன்னீங்க…?” என்றார்.

அதுவரை ஆனந்தமாக இருந்த ஜி.என்.வேலுமணியின் முகம் எம்.ஜி.ஆர்., இந்த கேள்வியைக் கேட்டதும் லேசாக மாறியது.

“ஏன் கேட்கறீங்க..? பஞ்சு அருணாச்சலம்தான் எழுதினார்” என்று ஜி. என். வேலுமணி சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே, “நிச்சயமாக இருக்காது” என்ற எம்.ஜி.ஆர்.,  “இந்தப் பாட்டை நிச்சயமாக பஞ்சு அருணாச்சலம் எழுதியிருக்க முடியாது. இப்படிப்பட்ட பாடலை கண்ணதாசனால் மட்டும்தான் எழுத முடியும். அதனால என்கிட்டே  பொய் சொல்லாதிங்க. முதல்ல இந்தப் பாட்டை தூக்கிப் போட்டுட்டு வேற ஏதாவது ஒரு கவிஞர்கிட்ட பாட்டை எழுதி ரிக்கார்ட் பண்ணுங்க” என்று  திட்டவட்டமாகச்  சொன்னார்.

“இல்லேண்ணே. நான்தான் பஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து பாட்டெழுத வைத்தேன். என் முன்னாடிதான் பஞ்சு இந்தப் பாட்டை எழுதினார்…” என்றார் வேலுமணி.

“கண்ணதாசன் எழுத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா. அதனால திரும்பத் திரும்ப நீங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காம… நான் சொன்னதை செய்யுங்க…” என்று இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். சொன்னபோது அவர் குரலில் கொஞ்சம் கடுமை இருந்தது.

அதற்குப் பிறகு எம்.ஜி.ஆரிடம் தான் ஒரு வார்த்தை பேசினாலும் அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஜி.என்.வேலுமணி அடுத்து நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து நடந்த விஷயம் முழுவதையும் கூறினார்.

அதைத் தொடர்ந்து  எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.விஸ்வநாதன், “நான் சொன்னாகூட நீங்க நம்ப மாட்டீங்களா..? அந்த இரண்டு பாட்டையும் எழுதினது பஞ்சுதான்…” என்று அவரிடம் சொன்னது மட்டுமின்றி, “அதில் ஒரு பாட்டு என் டியூனுக்கு அவன் எழுதினது. இன்னொரு பாட்டு  அவன் எழுதின பல்லவிக்கு நான் டியூன் போட்டது” என்று நடந்ததை அப்படியே விளக்கமாக எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.

அதுவரை “இது பஞ்சுவின் பாட்டே இல்லை; கண்ணதாசனின் பாட்டுதான்” என்று அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் சொன்ன  விளக்கத்திற்குப் பிறகு “பஞ்சு ரொம்ப நல்லா எழுதறாரே..” என்று பஞ்சு அருணாச்சலத்தைப் பாராட்டியது மட்டுமின்றி வேலுமணியை அழைத்து ”இனிமே நம்ம படத்தில்  எல்லாம் அவரைத்  தொடர்ந்து எழுதச் சொல்லலாம் என்றிருக்கிறேன். அதனால பஞ்சுவை  நாளைக்கு  என்னை வந்து  பார்க்க சொல்லுங்க…” என்றார்.

காலையில் புயல் வீசிய பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கையில் மாலையில் தென்றல் விசியது. இருந்தாலும் அவரால் நிம்மதியாகத்  தூங்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கும், கவிஞருக்கும் இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத தன்னை அழைக்கிறார் என்று பஞ்சு சொன்னால் “தாராளமாக போய் வா” என்று ஆசி கூறி கவிஞர் தன்னை அனுப்பி வைப்பார் என்று பஞ்சுவிற்கு நன்றாகத்  தெரியும்.

ஆனாலும், அவரைப் பகைத்துக் கொண்டு இருப்பவரை சந்தித்து அவர் படங்களில் பாட்டெழுத வாய்ப்பு பெறுவதை பஞ்சு அருணாச்சலம் விரும்பாததால் மறுநாள் எம்.ஜி.ஆரை சந்திக்க அவர் போகவில்லை.

எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமின்றி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வந்த வாய்ப்பையும், இதே காரணத்திற்காகத்தான் ஏற்க மறுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

கண்ணதாசனைப் பொறுத்தவரையில் ஒரு பாடலுக்கு இவ்வளவு தந்தால்தான் பாட்டு எழுதுவேன் என்று யாரிடமும் அவர் சொன்னதில்லை. இரண்டாயிரம், மூவாயிரம்  ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். வசதியில்லாத தயாரிப்பாளர் ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்.

அப்படி அவர் பணியாற்றிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஒருநாள் கவிஞரின் நெருங்கிய நண்பரான பீம்சிங் அவரிடம் ”ஏன்  இப்படி ஒரு பாடலுக்கு  இரண்டாயிரம், மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு படத்துக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று என்று உங்களது தயாரிப்பாளர்களிடம் கூறிவிட வேண்டியதுதானே…” என்றார்.

அவர் சொன்ன திட்டம்  கவிஞருக்கும் சரியெனத்  தோன்றியதால் உடனே பஞ்சு அருணாச்சலத்தை அழைத்த அவர் “இனிமேல் படத்துக்கு சம்பளம் பேசும்போது பெரிய படங்களுக்கெல்லாம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று சொல்லிவிடு. அது எத்தனை பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிய நட்சத்திரங்கள் நடிக்கிற படத்துக்கு நாம்ப கொஞ்சம் குறைத்து வாங்கிக் கொள்ளலாம்…“  என்றார். 

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அத்தனை சிக்கல்கள் தோன்றும் என்று இதைப் பற்றி இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் செல்லும்வரை  பஞ்சு அருணாச்சலத்துக்கு தெரியாது. 

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரை அவரே பாடல்களை எழுதக் கூடிய ஒரு கவிஞர் என்ற போதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றால் அவருக்கு உயிர். அப்படிப்பட்ட அவர் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்தபோது அவரைப் பார்த்து பேசிய பஞ்சு, “கவிஞர் இனி ஒரு படத்துக்கு தனது சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளார்…” என்ற செய்தியை அவரிடம் சொன்னார்.

அதைக் கேட்டவுடன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவ்வளவு ஆத்திரப்படுவார் என்று பஞ்சு அருணாச்சலம் கனவிலும் நினைக்கவில்லை.

“கவிஞர் ஒரு பாட்டுக்கு இருபத்தி ஐயாயிரம் கேட்டால்கூட நான் தரத் தயாராக இருக்கேன். அது வேற விஷயம். ஆனால், என் படத்தில்  எல்லா பாட்டையும் அவரே எழுதணும்னு  என்று அவர் முடிவு செய்வது எந்த வகையில் நியாயம்…?

நான் என்னுடைய படத்திலே அவருக்கு ஒரு பாட்டு கொடுப்பேன். இல்லே.. இரண்டு பாட்டு கொடுப்பேன். மீதி உள்ள பாடல்களை வேறு யாரையாவது விட்டு எழுதச்  சொல்வேன். இல்லே… நானே  எழுதுவேன். அதனால எங்கிட்ட இது மாதிரி கேட்கறதை எல்லாம் விட்டுவிட்டு அவரை வழக்கம்போல பாட்டுக்கு  இரண்டாயிரமோ, மூவாயிரமோ வாங்கிக் கொண்டு எழுதச் சொல்…” என்றார் அவர்.

இதை எப்படி கவிஞரிடம் சொல்வது என்று யோசித்த பஞ்சு அருணாச்சலம் இறுதிவரை இதைப் பற்றி அவரிடம்  சொல்லவேயில்லை. இதற்கிடையில் ‘கற்பகம்’ படத்துக்கு பாடல் எழுத வேண்டிய நாள் நெருங்கியது.

அப்போது பஞ்சு அருணாச்சலத்தை தொடர்பு கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சகோதரர் சபரிநாதன் “கவிஞர் வரலேன்னா பரவாயில்லை. அண்ணன் இந்த படத்துக்கு உன்னையே பாட்டு எழுதச் சொல்லிட்டாரு. அதனால நாளைக்குக் காலையிலே ஸ்டுடியோவிற்கு வந்துவிடு” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டவுடன் பஞ்சுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. “கவிஞரோட சம்பளத்தைப் பேச வந்த நான், இப்போது உங்களுடைய படத்துக்குப் பாட்டு எழுதினால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நான் கவிஞருடைய வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டேன்னுதான் எல்லோரும் தப்பா எடுத்துக்குவாங்க. அதனால் என்னை மன்னிச்சிக்கங்க. என்னால வர முடியாது…” என்று உடனடியாக அவருக்கு பதில் கூறினார் பஞ்சு.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ‘கற்பகம்’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதினார் வாலி.

The post சினிமா வரலாறு-17 எம்.ஜி.ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம் appeared first on Touring Talkies.

]]>