Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
அருண் விஜய் – Touring Talkies https://touringtalkies.co Sun, 20 Nov 2022 19:02:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png அருண் விஜய் – Touring Talkies https://touringtalkies.co 32 32 அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ போஸ்டர் வெளியானது https://touringtalkies.co/acham-enbathu-illaiyea-movie-poster-released/ Sun, 20 Nov 2022 19:01:30 +0000 https://touringtalkies.co/?p=27347 ஸ்ரீஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் – ஏமி ஜாக்சன் – நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியானது. அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்களிடையே இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு  அதிகம் உள்ளது. படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் பேசும்போது, “செப்டம்பர் மாதத்தில் […]

The post அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் – ஏமி ஜாக்சன் – நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியானது.

அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்து வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்களிடையே இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு  அதிகம் உள்ளது.

படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் பேசும்போது, “செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்.

இந்தக் கதை முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தேடியபோது, இதை சரியாக செய்யக் கூடியவர் அருண் விஜய்தான் என தோன்றியது. அதை படத்தில் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.

ஏமி ஜாக்சன் லண்டன் சிறையின் ஜெயிலராக நடித்திருக்கிறார். மேலும், அவருக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. மீண்டும் அவரை கேமரா முன் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. நிமிஷா விஜயன் படத்தின் இன்னொரு ஈர்க்கக் கூடிய விஷயமாக இருப்பார்” என்றார்.

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

The post அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ போஸ்டர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
சினம் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/sinam-movie-review/ Sun, 18 Sep 2022 06:19:52 +0000 https://touringtalkies.co/?p=24563 எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும் ஈடுபடுவோருக்குண்டாகும் கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே நாம் பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச் சினம் அப்பாடியானதொன்று அல்ல. பல நேரங்களில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாகவும் சில இடங்களில் சினம் அமைந்துவிடும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத் தர சில நேரங்களில் இந்த சினம் மிகவும் அவசியமானதாகவும் இருக்கும். இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. ‘பாரி […]

The post சினம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
எப்போதும் எந்தவொரு விஷயத்திலும், எந்தவொரு தொழிலும் ஈடுபடுவோருக்குண்டாகும் கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும். கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே நாம் பலரும் வந்திருப்போம்.

ஆனால் இந்தச் சினம் அப்பாடியானதொன்று அல்ல. பல நேரங்களில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாகவும் சில இடங்களில் சினம் அமைந்துவிடும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத் தர சில நேரங்களில் இந்த சினம் மிகவும் அவசியமானதாகவும் இருக்கும். இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

‘பாரி வெங்கட்’ என்ற அருண் விஜய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக சென்னையில் பணியாற்றுகிறார். முணுக்கென்றாலே கோபம் வந்துவிடும். எப்போதும் சினத்துடனேயே வாழ்ந்து வரும் அருண் விஜய்யின் மீது அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு ஒரு காண்டு.

அருண் விஜய் கையாளும் ஒரு வழக்கில் அஜாக்கிரதையாக இருந்துவிட.. நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் கைதி, எதிரி கூட்டத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கொல்லப்படுகிறான். இந்தப் பிரச்சினையினால் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சிக்காக மாமனார் வீட்டுக்குப் போக முடியாமல் போகிறது அருண் விஜய்க்கு.

குற்றவாளியைத் தேடி கண்டுபிடித்து சிறையில் அடைக்கும் நேரத்தில் ஊரிலிருந்து வீடு திரும்பிய மனைவி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கூடவே சம்பந்தமே இல்லாமல் வேறொரு ஆணும் அருகிலேயே பிணமாக கிடக்கிறார்.

கள்ளக் காதல் தோரணையில் கதைகள் கட்டப்பட மனமுடைந்து போகிறார் அருண் விஜய். இந்த விசாரணை அருண் விஜய்யிடமே ஒப்படைக்கப்பட தனது மனைவின் கொலையின் பின்னணியை விசாரிக்கத் துவங்குகிறார் அருண் விஜய். கண்டறிந்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நடிக்கத் தெரிந்த கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் அருண் விஜய் பெற்று பல வருடங்களாகிவிட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக மக்களின் கலைஞனாக மாறுவதற்கான வாய்ப்புகள்தான் அவரை அண்ட மறுக்கிறது.

சினம் கொண்ட சிறுத்தையாய் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் அருண் விஜய். கேரக்டர் ஸ்கெட்ச்சே கோபக்காரர்தான் என்பதால் அதற்கேற்ற சினத்தைதான் காண்பித்திருக்கிறார்.

கைதாக வேண்டிய ரவுடியை டாஸ்மாக்கில் அடித்துத் துவைத்து கைது செய்யும்போதும், தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும் இன்ஸ்பெக்டரின் கையை உடைக்கும்போதும், கிளைமாக்ஸில் அத்தனை கொலைகளையும் தான் ஒருவனாகவே செய்து முடிக்கும்போதும் சினம் கொண்ட சிறுத்தையின் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அருண் விஜய்.

மனைவியின் இறப்பின்போதும், மகளின் பிரிவின்போதும் காண்பிக்கும் உணர்ச்சிமிகு நடிப்பில் இன்னும் ஒரு படி மேலேதான் போயிருக்கிறார் அருண் விஜய். வஞ்சகமில்லாத சிரிப்பு.. மனைவியுடனான கொஞ்சல், கெஞ்சல் என்று எல்லா பக்கமும் தனது வசீகர முகத்தைக் காண்பித்திருக்கிறார். இன்னும் என்ன வேண்டும் இவருக்கு..?

நாயகியான பாலக் லால்வாணியின் ஸ்கிரீன் பிரஸ்னஸ் அழகு. சிறிது நேரமே ஆனாலும் மனதைக் கவரும் அளவுக்கு இருக்கிறது இவரது கதாப்பாத்திரம். கதை கேட்டு தூங்கும் அந்த சின்னக் குழந்தையை நாமும் கொஞ்ச வேண்டும்போல உள்ளது. முறைப்பு காட்டும் மாமனாராக கே.எஸ்.ஜி.வெங்கடேஷூம், அம்மாவாக ரேகா சுரேஷூம் அளவான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

கடைசிவரையிலும் உடன் இருக்கும் ஏட்டய்யாவாக காளி வெங்கட் படம் நெடுகிலும் நம்மை வழி நடத்துகிறார். இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தவுடன் வேகமாக ஓடி வந்து அருண் விஜய்யைக் கட்டியணைத்து ‘சூப்பர் ஸார்’ என்று மகிழும் காட்சியில் நம்மையும் உற்சாகப்படுத்துகிறார் காளி வெங்கட்.

வயதில் மூத்தவராக, அனுபவசாலியாக புத்தி சொல்லும் திருத்தும் உயர் போலீஸ் அதிகாரியான ஆர்.என்.ஆர்.மனோகரின் அறிவுரை எல்லாருக்கும் பொருத்தமானதுதான். இந்த நல்ல நடிகரின் இழப்பு, தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக பேரிழப்புதான்.

முக்கியக் குற்றவாளியின் அப்பாவும், அம்மாவும் கோபத்துடன் வீட்டுக்குள் பேசிக் கொள்ளும் அந்த ஒரு காட்சியே இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு சான்று.

ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சி இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடிருக்கிறார்கள். ஒவ்வொரு சண்டை காட்சியும் உயிரைக் கொடுத்து படமாக்கப்பட்டுள்ளதுபோல தெரிகிறது. அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி தெறி மாஸ் என்றே சொல்ல வேண்டும்.

இரவு நேரக் காட்சிகளை ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்டுகள் அழகோ அழகு. பாடல்களும் வழக்கமான பாணியில்தான் அமைந்திருக்கின்றன. இசை இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் பாடல்களும் தனித்து தெரிந்திருக்கும்.

படத் தொகுப்பாளரும் தனது பணியை நிறைவாகவே செய்திருக்கிறார். படத்தை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே செய்து கொடுத்திருக்கிறார். இது போன்ற படங்களுக்கு இதுவே போதும்தான்.

வழமையான கொலை, தேடுதல் வேட்டை, சஸ்பென்ஸ், திரில்லர் என்ற பாணியிலேயே முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் மையக் கருவைவிட்டு வெளியில் வராமலேயே கதை செல்வதால் என்னதான் முடிவு என்பதை அறியும் ஆவலைக் கூட்டியிருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.

இயக்குநரின் திறமையான இயக்கத்தினால் நடிகர், நடிகைகள் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். இருந்தும் இப்போதைய காலக்கட்டத்தில் மனித உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படியாக காவலர்கள் நடந்து கொள்வதைப் பற்றி ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கோபத்தில் இருக்கும் தருணத்தில் சினம் கொண்ட மனிதனின் கோபம் சட்டத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இந்தப் படம் சொல்லியிருக்க வேண்டும்.

மாறாக கிளைமாக்ஸில் தான் செய்துதான் சரி என்றும், “இது போன்று நாமே தண்டனை கொடுத்தால்தான் குற்றங்கள் குறையும்” என்றெல்லாம் வசனத்தின் மூலமாகவே சொல்லியிருப்பது இயக்குநருக்குத் தவறாகப் படவில்லையா..? அதிலும் ஒரு போலீஸ் அதிகாரி இதைச் சொல்லியிருக்கவே கூடாதே..? அப்புறம் சட்டம் எதற்கு..? நீதிமன்றங்கள் எதற்கு..?

அருண் தன் பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு காட்சியில் சொல்கிறார். அது ஏற்றுக் கொள்ளப்படுவது போலவே கதையை மாற்றியமைத்து தனியாகவே அருண் இதை விசாரித்து இறுதியில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதுபோல திரைக்கதை அமைத்திருந்தால்கூட இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் காவல்துறை அதிகாரியே செய்வதுபோல் காட்டுவதெல்லாம் நாட்டுக்கு நல்லதல்ல இயக்குநரே..!?

இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால் ஒரு கச்சிதமான சஸ்பென்ஸ்-திரில்லர் படத்தைப் பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கிறது.

RATING : 3.5 / 5

The post சினம் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வெற்றிக்காகக் காத்திருக்கும் ‘சினம்’ திரைப்படம் https://touringtalkies.co/sinam-movie-waiting-for-success/ Wed, 14 Sep 2022 18:11:40 +0000 https://touringtalkies.co/?p=24523 மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R. குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’. இந்தப் படத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், R.N.R.மனோகர், K.S.G.வெங்கடேஷ், ‘மறுமலர்ச்சி’ பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இசை – ஷபீர் தபேரே ஆலம், ஒளிப்பதிவாளர் – கோபிநாத், கலை இயக்கம் – மைக்கேல் BFA, கதை, வசனம்  ஆர்.சரவணன், ஆடை வடிவமைப்பு – ஆர்த்தி அருண், பாடல்கள் […]

The post வெற்றிக்காகக் காத்திருக்கும் ‘சினம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R. குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’.

இந்தப் படத்தில் அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், R.N.R.மனோகர், K.S.G.வெங்கடேஷ், மறுமலர்ச்சி’ பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஷபீர் தபேரே ஆலம், ஒளிப்பதிவாளர் – கோபிநாத், கலை இயக்கம் – மைக்கேல் BFA, கதை, வசனம்  ஆர்.சரவணன், ஆடை வடிவமைப்பு – ஆர்த்தி அருண், பாடல்கள் – கார்கி, ஏக்நாத், ப்ரியன், தமிழணங்கு, DI & VFX – நாக் ஸ்டுடியோஸ் (Knack Studios), சண்டை பயிற்சி இயக்கம் – ’ஸ்டண்ட்’ சில்வா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா (D’One).

இந்த ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. வரும் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பேசும்போது, “‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய்விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் இந்த ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது.

’வாகா’ படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில்தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்துதான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது.

த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும்.  அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்…” என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

The post வெற்றிக்காகக் காத்திருக்கும் ‘சினம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
காவல்துறையில் பணியாற்றுபவர் எழுதிய கதையில் உருவான ‘சினம்’ படம் https://touringtalkies.co/sinam-is-a-film-based-on-a-story-written-by-a-police-officer/ Mon, 05 Sep 2022 07:58:48 +0000 https://touringtalkies.co/?p=24299 Movie Slides Pvt. Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R.குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் ‘சினம்’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா தியேட்டரில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பல திரையுலக பிரபலங்களும், படத்தின் குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் படத்தின் இயக்குநரான G.N.R.குமரவேலன் பேசும்போது, “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களையும் தொடர்ந்து […]

The post காவல்துறையில் பணியாற்றுபவர் எழுதிய கதையில் உருவான ‘சினம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
Movie Slides Pvt. Ltd நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஜயகுமாரின் தயாரிப்பில், இயக்குநர் G.N.R.குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் சினம்’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கமலா தியேட்டரில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பல திரையுலக பிரபலங்களும், படத்தின் குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் படத்தின் இயக்குநரான G.N.R.குமரவேலன் பேசும்போது, “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களையும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

இந்தப் படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே சொன்னார்.

விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன் பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது.

கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.” என்றார்.

The post காவல்துறையில் பணியாற்றுபவர் எழுதிய கதையில் உருவான ‘சினம்’ படம் appeared first on Touring Talkies.

]]>
‘பார்டர்’ படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது https://touringtalkies.co/border-movie-will-release-on-october-5/ Mon, 29 Aug 2022 06:08:21 +0000 https://touringtalkies.co/?p=24077 All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடும், நடிகர் அருண் விஜய் நடிக்கும், ‘பார்டர்’ திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது.   இந்த ‘பார்டர்’ படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. எழுத்து, இயக்கம் – அறிவழகன், சாம் C.S.(இசை), B.ராஜசேகர்(ஒளிப்பதிவு), சாபு ஜோசப்(படத் தொகுப்பு), ஷக்தி வெங்கட்ராஜ்.M(கலை […]

The post ‘பார்டர்’ படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடும், நடிகர் அருண் விஜய் நடிக்கும், பார்டர்’ திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது.  

இந்த ‘பார்டர்’ படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது.

எழுத்து, இயக்கம் – அறிவழகன், சாம் C.S.(இசை), B.ராஜசேகர்(ஒளிப்பதிவு), சாபு ஜோசப்(படத் தொகுப்பு), ஷக்தி வெங்கட்ராஜ்.M(கலை இயக்கம்), ஹீரா அறிவழகன்(ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R.(நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ்(கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), &  Sync Cinema(ஒலி வடிவமைப்பு).  

இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் பட வெளியீடு குறித்துப் பேசுகையில், “தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்”  படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

எங்களது 11:11 Productions எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம்  அனைத்து காரணிகளையும் ஒருங்கே  கொண்டுள்ளது .

தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும்  இயக்குநர்  அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்தப் படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப  திறமையாளர்களின் அருமையான உழைப்பு,  அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது.  நாங்கள்  இப்படத்தினை மிகப் பெரிய அளவில் வெளியிட  திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

The post ‘பார்டர்’ படம் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது https://touringtalkies.co/tamil-rockerz-movie-will-release-august-19-on-ott/ Wed, 10 Aug 2022 07:22:49 +0000 https://touringtalkies.co/?p=23705 எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் படமாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்னும் படத்தைத் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தினை AVM தயாரிப்பு நிறுவனம் சோனி லிவ் தளத்திற்காகத் தயாரித்துள்ளது. மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இத்தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

The post பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் படமாக தமிழ் ராக்கர்ஸ்’ என்னும் படத்தைத் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தினை AVM தயாரிப்பு நிறுவனம் சோனி லிவ் தளத்திற்காகத் தயாரித்துள்ளது.

மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இத்தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான அறிவழகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

“ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை, மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை பைரசி சிக்கலில் இருந்து நாயகன் எவ்வாறு காப்பாற்றுகிறான்..?” என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் தளம்.

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட  இந்த தொடர், ருத்ரா’ எனும் ஒரு காவல் அதிகாரியின்  பயனம் மூலமாக திரைக்கதையை விவரிக்கிறது. இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார்.

இந்தத் தொடரில் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளனர்.

உலகளவில் கலையுலகில் சட்ட விரோதமான செய்தி திருட்டு என்பது மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தி திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

முதல்முறையாக ஒரு மிக பெரிய ஆராய்ச்சியையும், தேடுதல் வேட்டையையும் நடத்தி, உண்மையை அறிந்து கொண்டு, இந்த சதி வலையில் இருக்கும்  மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்விதமாக இத்தொடரில் வெளிப்படுத்துகிறார்கள்.  

இந்த தமிழ் ராக்கர்ஸ்’ படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் தி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏவி.எம்.புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் பேசும்போது, “இந்த தமிழ் ராக்கர்ஸ்’ ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டியுள்ளனர்.

சோனி லிவ் நிறுவனத்தினை எங்களது பங்குதாரராக கொண்டது எங்களது பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. மேலும், தொலை நோக்கு சிந்தனையுள்ள இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவரும் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டுமில்லாமல், மக்களுடன் ஒரு உணர்வுபூர்வமான ஒரு பந்தத்தினையும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.” என்றார்.

படத்தின் இயக்குநரான அறிவழகன் பேசும்போது, “பைரசி’, ‘ஹால் காபி’, ‘டோரன்ட் டவுன்லோட்’ போன்ற வார்த்தைகள் என்னதான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் மற்றைய உலகிற்கு தெரியாது.

தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இந்த சுவாரஸ்மான திரில்லரில் நாயகன் அருண் விஜய் தனது ருத்ரா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் மக்களை பைரசி உலகத்தின் மர்மமான வாசல்களுக்கு அழைத்து செல்கிறார்..” என்றார்.

நடிகர் அருண் விஜய் பேசும்போது, “இந்தத் தொடரின் ஒரு பகுதியாக நானும் இருந்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராகவே நான இதனை பார்க்கிறேன்.

திரைத்துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

செய்தி திருட்டு என்பது காலம்காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொடர், திரையுலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும்.

எனது கதாபாத்திரமான ருத்ரா’ என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதுதான் கதை. எனவே, நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் காண்பதற்கு காத்திருக்கின்றேன்…” என்றார்.

The post பைரசி திருடர்களின் கதையைச் சொல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
7 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருகிறது ‘வா டீல்’ திரைப்படம் https://touringtalkies.co/vaa-deal-movie-released-on-2021-deepavali/ Sun, 26 Sep 2021 10:46:56 +0000 https://touringtalkies.co/?p=18282 அருண் விஜய் நடித்து பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் கார்த்திகா நாயர் நாயகியாக நடித்திருந்தார். மேலும் வம்சி, ஜெயப்பிரகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஆர்.ரத்தினசிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2014-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருந்தது. ஆனால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளால் அப்போது வெளியாகவில்லை. அருண் விஜய் வில்லனாக நடிக்க அஜித் […]

The post 7 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருகிறது ‘வா டீல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் நடித்து பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் கார்த்திகா நாயர் நாயகியாக நடித்திருந்தார். மேலும் வம்சி, ஜெயப்பிரகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஆர்.ரத்தினசிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் 2014-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருந்தது. ஆனால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளால் அப்போது வெளியாகவில்லை.

அருண் விஜய் வில்லனாக நடிக்க அஜித் நாயகனாக நடித்து 2015-ல் வெளிவந்த என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு படத்தை வெளியிட முயற்சித்தார்கள். அப்போதும் படம் வெளியாகவில்லை. இதுபோல் கடந்த ஏழாண்டுகளில் பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியீடு மட்டும் தள்ளிக் கொண்டே போனது.

ஆனால், இப்போது இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிடப் போவதாக அப்படத்தை வழங்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உறுதியாக அறிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ ஆகிய 2 படங்களும் வெளியாக உள்ளன. இப்போது அந்தப் படங்களுடன் ‘வா டீல்’ படமும் போட்டியில் குதிக்கிறது.

The post 7 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருகிறது ‘வா டீல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் ‘யானை’ https://touringtalkies.co/director-hari-actor-arun-vijay-movie-name-is-yaanai/ Sat, 11 Sep 2021 10:08:41 +0000 https://touringtalkies.co/?p=17815 இயக்குநர் ஹரியின் இயக்கத்தில்  அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம்வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை தந்த இவர், தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் […]

The post இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் ‘யானை’ appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில்  அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம்வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி.

தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை தந்த இவர், தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது ஞாபகமிருக்கலாம். ரசிகர்களிடம் இந்தத் தலைப்பு மிகுந்த உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை – G.V. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்கம் – மைக்கேல், மக்கள் தொடர்பு – ஜான்சன், இணை தயாரிப்பு – G.அருண்குமார், தயாரிப்பு – டிரம் ஸ்டிக்ஸ்   புரொடக்ஷன்ஸ், Drumstick Productions எஸ்.சக்திவேல் 

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது.

இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக் காட்சிகள் உட்பட,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

The post இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் ‘யானை’ appeared first on Touring Talkies.

]]>
மாலை, மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்ட நடிகர் https://touringtalkies.co/av-33-movie-shooting-news/ Mon, 06 Sep 2021 06:36:24 +0000 https://touringtalkies.co/?p=17702 இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘AV-33’. இப்படத்தில் வில்லனாக ‘K.G.F.’ படப் புகழ் ‘கருடா’ ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த  K.G.F.  படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் ‘கருடா’ ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.   தற்போது இயக்குநர் ஹரி […]

The post மாலை, மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்ட நடிகர் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘AV-33’. இப்படத்தில் வில்லனாக ‘K.G.F.’ படப் புகழ் ‘கருடா’ ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த  K.G.F.  படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் ‘கருடா’ ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.  

தற்போது இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடித்து வந்தார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி  பழநி முதலான பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

வில்லனாக நடிக்கும் நடிகர் K.G.F. புகழ் ‘கருடா’ ராம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது. இதனால், அவரை வழியனுப்பும் பொருட்டு படக் குழு மிகப் பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு  மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய்  மற்றும் இணை தயாரிப்பாளர் G.அருண்குமார் ஆகியோர்  அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனால் ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார் கருடா’ ராம்.

“K.G.F.  படத்திற்கு பிறகு நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது போல் எந்த ஒரு படக் குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அருண் விஜய், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post மாலை, மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்ட நடிகர் appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜூக்குப் பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார் https://touringtalkies.co/samuthirakani-replaces-for-prakashraj-in-arun-vijay-movie/ Fri, 27 Aug 2021 07:35:56 +0000 https://touringtalkies.co/?p=17370 இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது இந்த #AV33 படத்திலும் அருண் விஜய்யின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று […]

The post அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜூக்குப் பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஹரி. தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து  #AV33  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இவரது அனேக படங்களில்  ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார்.

தற்போது இந்த #AV33 படத்திலும் அருண் விஜய்யின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். #AV33 பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருவதால் அவர் இயக்குநர் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் தான் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.

“எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆகையால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை  நடத்துங்கள்…” என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு “நான் வாங்கிய அட்வான்ஸை திரும்ப தந்து விடுகிறேன். நாம் அடுத்த படத்தில் இணைவோம்” என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளில் பிசியாக இருக்கும் சமுத்திரக்கனி இந்தக் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரமாக சமுத்திரக்கனிதான் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

அருண் விஜய், ப்ரியா பவானிசங்கர், சமுத்திரகனி மற்றும் பெரும் நடசத்திரங்கள் பங்கேற்க “AV33” படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில்  யோகிபாபு, ராதிகா, KGF கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

பழனியைத் தொடர்ந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடரும்.

The post அருண் விஜய் படத்தில் பிரகாஷ் ராஜூக்குப் பதிலாக சமுத்திரக்கனி நடிக்கிறார் appeared first on Touring Talkies.

]]>