Friday, April 12, 2024

7 ஆண்டுகள் கழித்து திரைக்கு வருகிறது ‘வா டீல்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருண் விஜய் நடித்து பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன் கார்த்திகா நாயர் நாயகியாக நடித்திருந்தார். மேலும் வம்சி, ஜெயப்பிரகா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஆர்.ரத்தினசிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் 2014-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயார் நிலையில் இருந்தது. ஆனால் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளால் அப்போது வெளியாகவில்லை.

அருண் விஜய் வில்லனாக நடிக்க அஜித் நாயகனாக நடித்து 2015-ல் வெளிவந்த என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு படத்தை வெளியிட முயற்சித்தார்கள். அப்போதும் படம் வெளியாகவில்லை. இதுபோல் கடந்த ஏழாண்டுகளில் பல முறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியீடு மட்டும் தள்ளிக் கொண்டே போனது.

ஆனால், இப்போது இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிடப் போவதாக அப்படத்தை வழங்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உறுதியாக அறிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ ஆகிய 2 படங்களும் வெளியாக உள்ளன. இப்போது அந்தப் படங்களுடன் ‘வா டீல்’ படமும் போட்டியில் குதிக்கிறது.

- Advertisement -

Read more

Local News