The post சேரன் இயக்கும் வெப் சீரிஸ் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>இப்படம் குறித்து கிச்சா சுதீப் பிறந்தநாளன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சேரன், “ஆட்டோகிராப் போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்க காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ‘ஜர்னி’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் சேரன் இயக்கியிருந்தார். வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. இதில் சேரன் விவசாயம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். அது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சேரன். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடவுள்ளனர்.
The post சேரன் இயக்கும் வெப் சீரிஸ் புதிய அப்டேட் appeared first on Touring Talkies.
]]>The post தி வில்லேஜ் – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>தி வில்லேஜ் கதைக்களம்
மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்ன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுகிறது.
மர்மங்களை உள்ளடக்கிய அந்த கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் நாயகன் ஆர்யா.கிராமத்தில் இருப்பவர்கள் அது பயங்கரமான ஊர் நாங்கள் வரமாட்டோம் என முதலில் மறுக்கின்றனர் பின் ஒத்துக் கொள்கின்றனர்.நான்கு பேரும் ஆர்யாவுடன் வருகின்றனர்.
திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. அதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லாம் யார் காரணம் என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் மீதி கதை.
வெப் தொடர் பற்றிய அலசல் முதல் எபிசோட் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்.
6 எபிசோட்கள் கொண்ட இந்த வெப் தொடர் ஹாரர், தில்லர் விறுவிறுப்பு குறையாமல் பட்டைய கிளப்பிவிட்டது.வித்தியாசமான கதைக்களம் லெவலில் இருக்கிறது.
நடிகர்களின் நடிப்பு அருமை, குறிப்பாக ஆடுகளம் நரேனின் மகளாக வருபவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வெப் தொடரின் மிகப்பெரிய மைனஸ் என்றால் பிளாஷ் பேக் போர்ஷன் மற்றும் மேக்கப் தான்.
இந்த வெப் தொடர் மொத்த 4 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடியது. திகில் நிறைந்த பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் வெப் தொடராக தான் தி வில்லேஜ் அமைந்துள்ளது.
The post தி வில்லேஜ் – விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ‘தி வில்லேஜ்’ இணையத் தொடரை பற்றி மனம் திறந்த ஆர்யா,! appeared first on Touring Talkies.
]]>தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. நடிகர் ஆர்யா இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக கதை நகர்கிறது.
இந்த திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், ” தி வில்லேஜ் எனும் இந்த தொடர் ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. திகில் நிறைந்த இந்த கதையை ரசிகர்கள் பாராட்டுவார்கள். ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.” என்றார்.
The post ‘தி வில்லேஜ்’ இணையத் தொடரை பற்றி மனம் திறந்த ஆர்யா,! appeared first on Touring Talkies.
]]>The post சர்ச்சை + கவர்ச்சி நடிகை சோனாவின் வாழ்க்கைத் தொடர்! அவரே இயக்குகிறார்! appeared first on Touring Talkies.
]]>பச்சமாங்கா என்கிற படம் உள்ளிட்ட சிலவற்றில் இவர் அதீத கவர்ச்சி காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னை காதலிப்பதாக சொல்லி இருவர் ஏமாற்றிவிட்டனர் என்றும் தெரிவித்து இருந்தார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் மகனும் நடிகருமான சரண் மீது பாலியல் புகார் கொடுத்து பிறகு வாபஸ் பெற்றார் சோனா. இப்படி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில், தனது வாழ்க்கை கதையை திரைப்படமாகவோ அல்லது வெப் தொடராகவோ எடுப்பேன் என்று சோனா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அந்த வெப் தொடருக்கு ‘ஸ்மோக்கிங்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரை சோனாவே டைரக்டு செய்கிறார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
சோனா ஏற்கனவே திரையுலகில் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து இருந்தார். அந்த விஷயங்களையும் வெப் தொடரில் வெளிப்படுத்த இருப்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
The post சர்ச்சை + கவர்ச்சி நடிகை சோனாவின் வாழ்க்கைத் தொடர்! அவரே இயக்குகிறார்! appeared first on Touring Talkies.
]]>The post வெப் தொடர் இயக்கும் சவுந்தர்யா ரஜினி appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இவர், ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இதில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இப்போது ஐஸ்வர்யா, வெப் தொடர் இயக்குகிறார். ஓடிடி தளம் ஒன்றுக்காக உருவாகும் இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
The post வெப் தொடர் இயக்கும் சவுந்தர்யா ரஜினி appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர் appeared first on Touring Talkies.
]]>இதில் ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்கிற முதல் அத்தியாயத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். அதேபோல் ‘இமைகள்’ என்கிற இரண்டாவது அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார்.
‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற மூன்றாவது அத்தியாயத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். ‘மார்கழி’ என்கிற நான்காவது அத்தியாயத்தை அக்ஷய் சுந்தர் இயக்கி இருக்கிறார். ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்கிற நான்காவது அத்தியாயத்தை பாரதிராஜாவும், ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற ஐந்தாவது அத்தியாயத்தை தியாகராஜன் குமாரராஜாவும் இயக்கி உள்ளனர்.
இதில் முதல் மூன்று அத்தியாயத்திற்கு ஷான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். எஞ்சியுள்ள மூன்று அத்தியாயத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதோ நெட்டிசன்கள் விமர்சனம்:
இமைகள் சூப்பர்: செல்வா
ராஜுமுருகன் இயக்கியுள்ள லாலா குண்டா பொம்மைகள் ஆவரேஜாக இருப்பதாகவும், கலர்புல்லான மேக்கிங் தவிர அதில் ஒன்றுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள இமைகள் நன்றாக இருக்கிறது என்றும், டிஜே பாணுவின் நடிப்பு சூப்பர் என்றும் பதிவிட்டுள்ளார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ செம்ம மொக்கையாகவும், கிரிஞ்சாகவும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
ராஜா ராஜாதான்: குமரேசன்
இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மட்டும் தனியாக தெரிந்தது. சில காட்சிகளை அமைதியால் கையாண்டிருப்பது அருமை. சந்தேகமே இல்லை, அவர் தான் அவர் மட்டும் தான் என்றென்றும் இசையின் கடவுள் என குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் டைம் டிராவல்: ராஜா
மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இளையராஜாவின் இசை பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வகையில், டைம் டிராவல் செய்து மார்கழி தொடரில் இடம்பெறும் தென்றல் மற்றும் நெஞ்சில் ஒரு மின்னல் ஆகிய பாடல்களை இளையராஜா இசையமைத்து உள்ளதாகவும், இந்த இரண்டு முத்தான பாடல்களில் விண்டேஜ் இளையராஜாவை பார்க்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
திரும்ப திரும்ப பார்க்கனும்: ஜெய்ராஜ்
தியாகராஜன் குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை தொடரில் உள்ள பல்வேறு நுனுக்கங்களை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும், ராஜா ராஜா தான்யா. இதில் பயன்படுத்தியுள்ள வண்ணங்கள், பிரேம்கள், இசை மற்றும் எழுத்து மூலம் மெய்மறக்க செய்துள்ளார் இயக்குனர் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பாலாஜி சக்திவேல் கம்பேக்:ரோஷன்
மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் இடம்பெறும் ‘இமைகள்’ என்கிற அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின் மீண்டும் இயக்குனராக களமிறங்கி உள்ள அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
ராஜாவின் ராஜ்ஜியம்:மனோஜ்
மாடர்ன் லவ் சென்னை வெப் தொடருக்காக இளையராஜா இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் புதிதாக இருக்கிறது. இதுபோன்ற பாடல்களை அவர் இதுவரை கொடுத்ததில்லை என நினைக்கிறேன். உனக்கு திமிர் இருக்கலாம் தல, உனக்கு இல்லேனா வேற யாருக்கு இருக்க முடியும் என சிலாகித்துப்போய் பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா பறவைக்கூட்டில் வாழும் மனிதர்கள் என்கிற அத்தியாயத்தை இயக்கி இருக்கிறார். இதற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இந்த குறும்படத்தை மறைந்த தனது நண்பனும், இயக்குனருமான பாலுமகேந்திராவுக்கு சமர்பிப்பதாக அதன் டைட்டில் கார்டில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
The post விமர்சனம்: ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர் appeared first on Touring Talkies.
]]>The post வெப் தொடரில் அபிராமி! appeared first on Touring Talkies.
]]>காணாமல் போகும் மாணவி ஏரியில் பிணமாக கிடக்கிறார். அவரை கொலை செய்தது யார் என்பதே கதை.
அபிராமி கூறும்போது, “நான் நடித்துள்ள முதல் வெப் தொடர் இது. எனக்கு திரில்லர் படங்கள் பிடிக்கும். இதுவும் அதுபோன்ற கதையம்சத்தில் தயாராகி உள்ளது. திறமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த தொடரில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கல்லூரி, குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கிய தொடராக இருக்கும். நான் இரு குழந்தைகளின் தாயாகவும், இளம் விதவையாகவும் நடித்து இருக்கிறேன். தொடர் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
ராகவ், லிசி ஆண்டனி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ஜான் நம்ரிதா, அபிதா, பிராங்கிளின், சில்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை விஷால் வெங்கட் டைரக்டு செய்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் என்.குமார் இசையமைத்து இருக்கிறார்.
The post வெப் தொடரில் அபிராமி! appeared first on Touring Talkies.
]]>The post “செங்களம்” இணையத்தொடர் வெற்றி: அரசியல் தலைவர்கள் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு ! appeared first on Touring Talkies.
]]>மாறுபட்ட அரசியல்களத்தில், பரபரப்பான “செங்களம்” இணையத் தொடரை ஸீ 5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.
The post “செங்களம்” இணையத்தொடர் வெற்றி: அரசியல் தலைவர்கள் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு ! appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: செங்களம் (இணைய தொடர்) appeared first on Touring Talkies.
]]>அரசியல் என்பதும்… அரசியல் களம் என்பதும்… அதிகாரமிக்க அரசியல் ஆதிக்கம் என்பதும்… ஆண்களிடத்தில் மட்டுமே இருக்கிறது. இது பல நூறு ஆண்டுகளாக தமிழ் சமூகத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய மனித சமூகத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிம்பம். இதன் வலிமை தனித்துவமானது.
ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியலில் பெண்களும் பங்கு பற்றி… அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால்.. அதற்காக அரசியல் சதுரங்கத்தில் எந்த மாதிரியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை நுட்பமாகவும், தமிழக அரசியல் வரலாற்றினை சான்றாகவும் கொண்டு ‘செங்களம்’ எனும் இணைய தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திராவிட அரசியல்… கடந்த மூன்று தசாப்த தமிழக அரசியல்… தமிழக நகரான விருதுநகர் எனும் நகராட்சி தலைவர் பதவியை நாற்பது ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் அரசியல் பின்னணியையும், அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்காக கையாளும் தந்திரங்களையும்.. திரைக்கதையாக இயக்குநர் விவரித்திருக்கிறார்.
நகராட்சி தலைவர் பதவி மற்றும் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் ஆகியவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு குடும்பத்தின் முழு நேர அரசியல் விளையாட்டை…, அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விருதுநகர் நகராட்சியை மீட்கவும், குடும்ப அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆளும் கட்சி உதவியுடன் தனி நபராக நாச்சியார் எனும் கதாபாத்திரம் முயற்சிக்கிறது.
‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை’, ‘அரசியல் மூலமாக கிடைக்கும் அதிகார போதை எதையும் செய்ய துணியும்’ என்ற இரு விடயங்களை மையப்படுத்தி இந்த ஒன்பது அத்தியாயங்கள் வரையிலான இணைய தொடராக நீண்டிருக்கிறது.
ஒவ்வொரு தொடரிலும் கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நிகழ்வுகளையும் துல்லியமாக இணைத்து கதை சொல்லும் உத்தி… பாமர பார்வையாளர்களை வசப்படுத்தி இருக்கிறது. ஆனால் நாச்சியார் எனும் கதாபாத்திரம் செல்வந்த நிலையை எட்டியது எப்படி? என்பது குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்படாததால் உச்சகட்ட காட்சியில்… அந்த கதாபாத்திரம்.. நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஸ்வீட் பொக்ஸ்களை எப்படி வழங்க முடிந்தது? என்ற வினா எழுகிறது. நகர்மன்ற தலைவர் பதவிக்கு இருபது உறுப்பினர்கள் வாக்களிப்பதை நீளமாக காட்சிப்படுத்தி இருப்பது… பதற்றத்தை வரவழைப்பதற்கு பதிலாக சோர்வையே உண்டாக்குகிறது.அரசியலில் ஆர்வமுள்ள பெண்மணி, அதிகாரத்தைக் கைப்பற்ற ஆண்களுக்கு எதிராகவும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரி கட்சிகள் போன்ற அரசியல் கட்சியின் நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களையும்.., எப்படி புத்திசாலித்தனமாக சூழ்ச்சி செய்து, திட்டமிட்டு காய் நகர்த்தி வெற்றி பெறுவது படைப்பிற்காக சரி என்று ஒப்புக்கொண்டாலும்… தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.
உள்ளூராட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற பணம் மட்டுமே போதும் என்ற நிலைபாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பது… நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் ஆரோக்கியமான அரசியல்வாதிகள் உருவாவதற்கு தடைக்கல்லாக இருக்கிறது. இவ்விடயத்தில் இயக்குநரும், கதாசிரியரும் கதாபாத்திர சமநிலையை பேணி இருக்கலாம். இது பார்வையாளர்களிடத்தில் அரசியல் குறித்த எதிர் நிலையான எண்ணத்தையே வலிமையாக விதைக்கும்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பது போல்…, அரசியலில் ஒரு பெண்மணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவரின் பின்னணியில் ரத்த உறவுள்ள ஆண்கள் இருக்க வேண்டும் என்று காட்சிப்படுத்தி இருப்பது ஆண்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
சூரியகலா ராஜமாணிக்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜனின் நடிப்பை விட, நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலியின் நடிப்பு நிறைவைத் தருகிறது. சூரியகலா- நாச்சியார் இருவரும் தோழிகள். இதில் நாச்சியாரின் சகோதரரான ராயர், சூரியகலாவை காதலிக்கிறார் இன்று காட்சிப்படுத்தி இருப்பது… சூரிய கலாவை அரசியல் சதி செய்து கொன்றவர்களை ராயர் பழி வாங்குவதற்கான ஒரு உத்வேக புள்ளியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் பின்னணியில் அவருடைய தங்கையின் பங்களிப்பு இருக்கிறது என்று தெரிந்த பிறகு, அவர் எடுக்கும் முடிவு கதாபாத்திரத்தின் நிறைவின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
சிவஞானம் எனும் கதாபாத்திரம் முதுமையின் காரணமாக சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்துகிறார்… என குறிப்பிட்டிருப்பது, சூரிய கலா எனும் கதாபாத்திரம் ‘மக்களுக்காக நான்.. மக்களால் நான்..’ என மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா மேடையில் பயன்படுத்திய வசனத்தை பேசுவது.. இப்படி ஏராளமான குறியீடுகள் தமிழக அரசியலிலிருந்து எடுக்கப்பட்டு படைப்பிற்காக கையாளப்பட்டிருந்தாலும்.. ஒரு பிரிவு ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வழங்கக்கூடும்.ஒன்பது அத்தியாயங்களாக நீளும் இந்த பொலிட்டிக்கல் திரில்லர் ஜேனரிலான இணையத் தொடரை ஒளிப்பதிவாளர் வெற்றி மகாலிங்கம், இசையமைப்பாளர் தரண்குமார் இருவரும் இணைந்து தங்களது கடின உழைப்பை வழங்கி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள்.
செங்களம் – பெண்மணியின் அரசியல் அதிகார பேராசை.
The post விமர்சனம்: செங்களம் (இணைய தொடர்) appeared first on Touring Talkies.
]]>The post ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் appeared first on Touring Talkies.
]]>‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ் appeared first on Touring Talkies.
]]>