Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
warning – Touring Talkies https://touringtalkies.co Wed, 08 Nov 2023 13:12:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png warning – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராஷ்மிகா மந்தனா வீடியோ விவகாரம்: மத்திய அரசு எச்சரிக்கை… https://touringtalkies.co/rashmika-mandhana-video-issue-central-government-warning/ Tue, 07 Nov 2023 01:39:24 +0000 https://touringtalkies.co/?p=37648 நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்புபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்ஸ்டாகிராமல் ஜாரா படேல் மிகவும் பிரபலம். இங்கிலாந்துவாழ் இந்தியரான ஜாரா படேல், கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சிலர் அந்த வீடியோவில், அவரது முகத்துக்குப் பதிலாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை […]

The post ராஷ்மிகா மந்தனா வீடியோ விவகாரம்: மத்திய அரசு எச்சரிக்கை… appeared first on Touring Talkies.

]]>
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்புபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராமல் ஜாரா படேல் மிகவும் பிரபலம். இங்கிலாந்துவாழ் இந்தியரான ஜாரா படேல், கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சிலர் அந்த வீடியோவில், அவரது முகத்துக்குப் பதிலாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை உருவாக்கி பரப்பியுள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த, சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. போலி வீடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66டி-யின்படி 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ராஷ்மிகா மந்தனா வீடியோ விவகாரம்: மத்திய அரசு எச்சரிக்கை… appeared first on Touring Talkies.

]]>
‘அப்படிப்பட்ட’ நடிகர்களுக்கு மனோரமா விடுத்த எச்சரிக்கை! https://touringtalkies.co/manoramas-warning-to-such-actors/ Sun, 07 May 2023 00:13:41 +0000 https://touringtalkies.co/?p=32237 மறைந்த நடிகை மனோரமா, எவ்வளவு சிறந்த கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிப்பு குறித்து அவர் சில  குறிப்புகளை பல காலம் முன்பே எழுதி இருக்கிறார். அவை, சரியாக படப்பிடிப்புக்கு வராத நடிகர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. அந்த குறிப்புகளில் மனோரமா எழுதி உள்ளவை:  “ஒரு படத்திலோ  அல்லது ஒரு நாடகத்திலோ நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான்  தோன்றுகின்ற முதல் காட்சியிலேயே நான் ஏற்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன்.   எந்தக்  காரணத்தை […]

The post ‘அப்படிப்பட்ட’ நடிகர்களுக்கு மனோரமா விடுத்த எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த நடிகை மனோரமா, எவ்வளவு சிறந்த கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிப்பு குறித்து அவர் சில  குறிப்புகளை பல காலம் முன்பே எழுதி இருக்கிறார். அவை, சரியாக படப்பிடிப்புக்கு வராத நடிகர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

அந்த குறிப்புகளில் மனோரமா எழுதி உள்ளவை: 

ஒரு படத்திலோ  அல்லது ஒரு நாடகத்திலோ நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான்  தோன்றுகின்ற முதல் காட்சியிலேயே நான் ஏற்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன்.   ந்தக்  காரணத்தை கொண்டும் அடுத்தடுத்த  காட்சிகளில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருந்ததே இல்லை. எனது கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் நான் ஜாக்கிரதையாக இருப்பேன். 

ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல படவுலகமும் ரசிகர்களும்  இருவருமே அவசியம். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் நட்சத்திர வாழ்க்கை என்பது செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும்.

எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த சினிமாக்காரர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்’ என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்த பல நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

ஆகவே, கலைஞர்கள் எப்போதும்  ரசிகர்கள் தயாரிப்பாளர்கள்  ஆகிய இருவரையும்  மதித்து நடக்க வேண்டும். 

இன்னொரு விசயம்.. எனது பிரச்சினைகள் எதையும் படப்பிடிப்பில் காண்பிக்க மாட்டேன். ஷூட்டிங்கிற்கு புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரமாகவே உட்காருவேன். கார் வீட்டை விட்டு புறப்பட்ட மறுகணம்  வீட்டை மறந்து விடுவேன்என்று கூறியிருக்கிறார் மனோரமா.  

 

 

 

The post ‘அப்படிப்பட்ட’ நடிகர்களுக்கு மனோரமா விடுத்த எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! https://touringtalkies.co/karthik-warning-to-such-actors/ Tue, 07 Feb 2023 01:31:36 +0000 https://touringtalkies.co/?p=30377 ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால்,  அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன.  படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர்,  “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.  ஆனால்  20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார்.  அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை […]

The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>



ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தவர் கார்த்திக். ஆனால்,  அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன.  படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரமாட்டார் எனவும் சில நேரங்களில் படப்பிடிப்பிற்கே வராமல் அறையிலேயே கதவை மூடிக்கொண்டு படுத்துவிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர்,  “கார்த்திக் டார்ச்சர் செய்வார் என்று நிறைய தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.  ஆனால்  20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்தார்.  அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் திருந்திருப்பாரே” என கேட்டிருந்தார்.



அதற்கு சித்ரா லட்சுமணன் “கார்த்திக் மட்டுந்தான் தமிழ் சினிமாவில் பிரச்சனை கொடுக்கும் நடிகராக இருந்தாரா என்ன? இப்போது பிரச்சனை கொடுக்கின்ற நடிகர்களே இல்லையா? எத்தனை நடிகர்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருகிறார்கள் என உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆனாலும் அதை எல்லாம் மீறி அவர்களை வைத்து தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கிறார்கள்  என்றால், அதற்கு காரணம் அந்த நடிகருடைய திரைப்படங்கள் ஓரளவு வெற்றிப்பெறுகிறது என்பதால்தான்.

இப்படி பிரச்சனை செய்கின்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிபெறாத ஒரு நிலை வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அந்த நடிகரை கைவிட்டுவிடுவார்கள். அதன் பிறகு அந்த நடிகரை வைத்து யாரும் படம் எடுக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நிலைதான் கார்த்திக்கிற்கும் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டது. இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களுக்கும் அப்படி ஒரு நிலை நிச்சயமாக வரும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என பதில் அளித்தார் சித்ரா லட்சுமணன்.

The post கார்த்திக்: அந்த மாதிரி நடிகர்களுக்கு எச்சரிக்கை! appeared first on Touring Talkies.

]]>
“கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை https://touringtalkies.co/poet-thamarai-house-siege-jallikattu-organization-warning/ Thu, 26 Jan 2023 04:20:01 +0000 https://touringtalkies.co/?p=29953 பிரபல பாடலாசிரியரான கவிஞர் தாமரை, “ஜல்லிக்கட்டு என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. விலங்குகளை வதை செய்வது சரியல்ல. ஆகவே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்” என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தனது முகநூல் பக்கத்திலும் இதே கருத்தை பதிவிட்டு இருந்தார். “நாட்டு காளைமாடுகளை காக்க ஜல்லிக்கட்டு  தேவை, இது வீர விளையாட்டு, இதை ஒழிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்பதெல்லாம் வெத்து வாதம். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா […]

The post “கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
பிரபல பாடலாசிரியரான கவிஞர் தாமரை, “ஜல்லிக்கட்டு என்பது மனிதத்தன்மைக்கு எதிரானது. விலங்குகளை வதை செய்வது சரியல்ல. ஆகவே இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்” என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்திலும் இதே கருத்தை பதிவிட்டு இருந்தார்.

“நாட்டு காளைமாடுகளை காக்க ஜல்லிக்கட்டு  தேவை, இது வீர விளையாட்டு, இதை ஒழிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்பதெல்லாம் வெத்து வாதம். தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…!  விலங்குளை வதைத்து உங்கள் தமிழ் உணர்வை காண்பிக்க வேண்டாம்” என தெரிவித்து இருந்தார்.

இதற்கு ல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

“கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவதில் தனது கருத்துக்களை சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க, ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு வேறு கூட்டத்துடன் சேர்ந்து அவர் சதி செய்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. கவிஞர் தாமரை தனது கருத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிவிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம். தமிழகம் முழுவதும் அவரது கொடும்பாவியை எரிப்போம்” என்று தெரிவித்துள்ளது.

The post “கவிஞர் தாமரை வீடு முற்றுகை!”: ஜல்லிக்கட்டு அமைப்பு எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>