The post இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின் appeared first on Touring Talkies.
]]>வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ‘விடுதலை’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. தற்போது ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கான டி-ஏஜிங் வேலைகளை மேற்கொள்ள, அமெரிக்கா செல்லவுள்ளார் வெற்றிமாறன்.
நடிகர் சூர்யா, இதற்கு முன்பு டெஸ்ட் ஷூட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து, அத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தி ப்ரூஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் இந்தப் படம் குறித்தும், வாடிவாசல் படத்தின் கதைக்களம் குறித்தும் சமீபத்தில் வெற்றிமாறனிடம் பேசியதாகக் கூறினார். இந்தப் படம் இந்தியளவில் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைகளில் நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்த மிஷ்கின், வாடிவாசல் படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமானதாக அமையும் என்றும், இந்தப் படம் வெளியான பின்னர் சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார் என்றும் கூறினார். மேலும், அதிகமான புத்தகங்களைப் படிப்பவரான வெற்றிமாறன், வாடிவாசல் நாவலிலிருந்து எடுத்த கதைக்களம் குறித்து தன்னிடம் பேசியதாகவும் மிஷ்கின் கூறினார்.
The post இந்திய லெவல்ல வேறுமாதிரி இருக்க போது வாடிவாசல்… சூர்யா இதுக்கு அப்புறம் லெஜன்ட் தான் – மிஷ்கின் appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர, இரண்டாம் பாகத்திலும் அதே தரத்தை எட்ட படக்குழு உழைத்து வருகிறது. காமெடி நடிகரான சூரி, முதல் பாகத்தில் கதையின் வலிமையான நாயகனாக வலம் வந்தார். இதேபோல், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஷ்ரீ போன்றோரும் தங்கள் பாத்திரங்களில் முக்கியமாக இயங்கினர். இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக இருந்தாலும், சூரியின் கதாபாத்திரமே மையமாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் இளமைக் காட்சிகளுக்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகின்றனர்.
பெருமாள் வாத்தியார் கம்யூனிசத்தில் எப்படி தீவிரமாக ஈடுபட்டார் என்பதை, அவரது இளமைக் காலம், திருமணம், கொள்கை போன்ற பல விஷயங்களை இந்தப் படம் பேசவிருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றது. தற்போது தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் அங்கு நடித்து வருகின்றனர். பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. தென்காசியில் இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும், தற்போது அங்கே கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டீ-ஏஜிங் தொழில்நுட்பத்திற்காக வெற்றிமாறன் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளார். விரைவில் ‘பாகம் 2’க்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The post விரைவில் விடுதலை 2 ! அமெரிக்கா பறக்கும் வெற்றி மாறன்… எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post திறக்கப்படுமா வாடிவாசல்? வெற்றிமாறன் சொன்ன நல்ல செய்தி! appeared first on Touring Talkies.
]]>சூர்யா மற்றும் வெற்றிமாறன் இருவரும் அவரவரின் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக இருக்க இந்த படத்தின் அப்டேட் எதுவும் வெளிவாரத நிலையில் எப்போதோ அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்காத வாடிவாசல் படம் ட்ராப் ஆகிவிட்டது என இணையத்தில் தகவல் பரவிய நிலையில் ஒருவழியாக இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்றை வெற்றிமாறன் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் வெற்றிமாறன். அத்துடன் பல முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் நடிக்க தயாராக உள்ளார்கள்.இந்நிலையில் சூர்யா, வெற்றிமாறன் இருவரும் வாடிவாசல் படத்தின் மூலம் முதன் முறையாக கூட்டணி அமைத்தனர் இதனால் இப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்தது.
நடிகர் சூரி விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து வெற்றிமாறன் நீண்ட காலமாக விடுதலை படம் தொடர்பான வேலைகளில் தீவிரமாக உள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கி வெளியிட்ட வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளார்.இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியின் போது வாடிவாசல் படத்தை பற்றிய கேள்விக்கு பதில் ஒன்றை அளித்திருந்தார் அதாவது விடுதலை 2ம் பாகம் வெளியான உடனே வாடிவாசல் படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கும் எனவும் அதன் பின்னர் வடசென்னை 2 படத்திற்கு இன்னும் நேரம் எடுக்கும் என்று தெரிவித்து உள்ளார். இந்த அப்டேட்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post திறக்கப்படுமா வாடிவாசல்? வெற்றிமாறன் சொன்ன நல்ல செய்தி! appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்.
2) பாடகரான விஜய் சேதுபதி
கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயாகியாகவும் , ஜிவா வில்லனாகவும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையில் விஜய் சேதுபதி ‘காதல் குமாரு வைரல் ஆனாரு…, என்ற பாடலை பாடியுள்ளார்.
3) வதந்திகளை நம்பாதீங்க – நடிகை பூஜா
ஆர்யாவின் திருமணத்தில் நடிகையான பூஜா கலந்து கொள்ளாமல் போனதை பல விதங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன் ஆர்யா எனக்கு போன் செய்து இருந்தார் அதை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர வதந்திகளை நம்பாதீங்க என்றுள்ளார்.
4) நித்தியாமேனனுக்கு காமெடி கதாபாத்திரம்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நித்தியா மேனன். தற்போது விஷ்ணு வர்தனின் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி எழுதி இயக்கும் காதல், காமெடி கலந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன். இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
5) மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘ரோமியோ’
கவரும் தலைப்பு, கதை, சமூக கருத்து என நடிப்பில் ஈர்க்கும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தங்களுடைய சொந்த ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் ரோமியோ என்ற படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத விஜய் ஆண்டனியாக நடித்துள்ளாராம்.இவருடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.
The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.
]]>The post விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ் appeared first on Touring Talkies.
]]>தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவரின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் இன்று – ஜூலை 12 – வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்களும் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஃபார்சி’ வெப் சீரிஸ் விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post “விஜய் சேதுபதியைப் போற்றவும் நடிகர்கள் வருவார்கள்” – நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “நான் இந்த விழாவுக்கு வந்தது விஜய் சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத்தான்.
என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக் கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
நாளை விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள், அதுதான் சினிமாவின் சுழற்சி. இந்தப் படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.
The post “விஜய் சேதுபதியைப் போற்றவும் நடிகர்கள் வருவார்கள்” – நடிகர் கமல்ஹாசனின் வாழ்த்து appeared first on Touring Talkies.
]]>The post சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்த ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் ‘மைக்கேல்’. இதில் நடிகர் சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார்.
:மைக்கேல்’ படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
‘மைக்கேல்’ படத்தின் டீசரில், ‘‘மைக்கேல்! வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு,, “ துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர் ” என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி… ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் ‘மைக்கேல்’ திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.
இந்தப் படத்தின் டீசரில் ஒரு குழந்தையின் கால்கள், அதன் உருவப்படம் மற்றும் ஒரு தெய்வம் போன்ற சில மர்மமான விசயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. சந்தீப் கிஷன் தன்னுடைய கட்டுடலை காட்டி ஆக்சன் அதிரடி நாயகன் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தி அதகளப்படுத்துகிறார்.
படத்தின் காதல் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளைப் போல் சுவராசியமாக இருக்கிறது. இந்த டீசரில் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை திவ்யான்ஷா கௌஷிக் இடையேயான உதட்டுடன் உதடு பொருத்திய முத்தக் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. ‘மக்கள் செல்வன்: விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றம் ஆகியவையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது. இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘மைக்கேல்’ படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள்
சந்தீப் கிஷன்
விஜய் சேதுபதி
கௌதம் வாசுதேவ் மேனன்
வருண் சந்தேஷ்
திவ்யான்ஷா கௌஷிக்
வரலட்சுமி சரத்குமார்
அனசுயா பரத்வாஜ்
மற்றும் பலர்
தொழில் நுட்பக் கலைஞர்களின் பட்டியல்
இயக்குநர் : ரஞ்சித் ஜெயக்கொடி
தயாரிப்பாளர்கள் : பரத் சவுத்ரி & புஸ்கூர் ராம் மோகன் ராவ்.
வழங்குபவர் : ஸ்ரீ நாராயணன் தாஸ் கே நரங் ( மறைவு)
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி & கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.
ஒளிப்பதிவு : கிரண் கௌஷிக்
வசனம் : திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி
நிர்வாகத் தயாரிப்பு : கே. சாம்பசிவராவ்
மக்கள் தொடர்பு :யுவராஜ்
The post சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்த ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.
]]>The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘இடம் பொருள் ஏவல்’.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, 2015-ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய வேறு படங்களே வெளியாகிவிட்டன.
இதனிடையே, தற்போது இந்தப் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு படத்தை வெளியிடவும் நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டதாம். இதனால் இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
The post விரைவில் திரைக்கு வருகிறது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ZEE STUDIOS தயாரிக்கும் மெளனப் படம் ‘காந்தி டாக்ஸ்’ appeared first on Touring Talkies.
]]>Zee Studios, தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிமுக ப்ரோமோ படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்குக் கொடுத்தது. ஒரு மௌனப் படமாக இருப்பதால், காந்தி டாக்ஸ் அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை – நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.
இப்படத்தில் பிரபல முன்னணி திரைபிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே.. மேலும் உலகம் முழுக்க பல விருதுகளை குவித்திட்ட இசைப்புயல் பத்மஶ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குநர் கிஷோர் P பெலேகர் கூறுகையில், “மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம் என்றார். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும்கூட” என்றார்.
Zee Studios ன் CBO, ஷாரிக் படேல் கூறுகையில், “இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகவும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது.” என்றார்.
Zee Studios தயாரித்து வழங்கும், ‘காந்தி டாக்கீஸ் ’ படத்தை Kyoorious Digital Pvt Ltd. மற்றும் Movie Mill Entertainment இணை தயாரிப்பு செய்கின்றனர்.
இப்படம் உலகம் முழுவதும் 2023-ல் வெளியிடப்படவுள்து.
The post ZEE STUDIOS தயாரிக்கும் மெளனப் படம் ‘காந்தி டாக்ஸ்’ appeared first on Touring Talkies.
]]>