The post ‘வாத்தி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! appeared first on Touring Talkies.
]]>வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். ‘வாத்தி’ திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘வாத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 17-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post ‘வாத்தி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..! appeared first on Touring Talkies.
]]>The post விமர்சனம்: வாத்தி appeared first on Touring Talkies.
]]>முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைத் தாண்டி இப்படத்தின் வா வாத்தி பாடல், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு எதிர்பார்ப்பை அதிகரித்தது.
90களில் துவங்குகிறது படம். கல்வித் தந்தையான சமுத்திரகனி, அரசு பள்ளிகளையும் தன் வசம் கொண்டு வர திட்டமிடுகிறார். அதன்படி, அரசு பள்ளிகளுக்கு தானே தரமான ஆசிரியர்களை அனுப்பி தரத்தை உயர்த்துவதாக கூறுகிறார். லஞ்சம் கொடுத்து காரியத்தையும் சாதிக்கிறார். அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தர ஆசிரியர்களை அனுப்புகிறார்.
அப்படி அனுப்பப்பட்டவர்தான் தனுஷ். அவரோ சிறப்பாக பாடம் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற செய்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் சமுத்திரகனி, என்ன செய்கிறார்.. அதை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
தனுஷ் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பினால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். மாணவர்களை எப்படியாவது படிக்கவைத்து விட வேண்டும், படிப்பு தான் மரியாதையை தேடி தரும் என்று போராடும் தனுஷின் நடிப்பு சிறப்பு.
கதநாயகியாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே ஈர்த்துள்ளார் சம்யுக்தா. வில்லனாக வரும் சமுத்திரக்கனி மிரட்டுகிறார்.
‘கல்வியில் கிடைக்கும் பணம் அரசியலில் கிடைக்காது’ என்று அவர் கூறும் வசனம் எதார்த்த சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.
அவருடைய வில்லத்தமான கதாபாத்திரத்தை
மேலும், சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் கச்சிதமாக அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இயக்குனர் வெங்கி அட்லூரி எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமுதாயத்திற்கு – கல்வி குறித்த புரிதலுக்கு – மிகவும் தேவையானது.
ஜி.வி. பிரகாஷின் வா வாத்தி பாடல் கவனத்தை கவர்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.
தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பு, நடிப்பு, ஜி.வி-யின் ரசிக்கவைக்கும் இசை, நல்ல கருத்தை சொன்ன விதம் என சிறந்த படமாக விளங்குகிறது வாத்தி.
The post விமர்சனம்: வாத்தி appeared first on Touring Talkies.
]]>The post ‘வாத்தி’ படத்தின் புதிய அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெறும் நாடோடி மன்னன் பாடல் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.
இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post ‘வாத்தி’ படத்தின் புதிய அப்டேட்! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் “ வாத்தி “பட சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>இந்த விவகாரம் குறித்த வழக்கு நீதியரசர் சரவணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விநியோகாஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தின் விநியோக உரிமை ஆரண்யா சினி கம்பைன்ஸ் நிறுவனத்திடம் உள்ளதாகவும், உரிமை தொகையை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்தது.
தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்தை வேறு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதால் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கு வழங்க முடியாது என வாதிட்டார்.
தங்களிடம் விநியோக உரிமை இருந்து வருவதால் காப்புரிமை சட்டப்படி வேறு ஒருவருக்கு படத்தை விற்க முடியாது என்று ஆரண்யா சினி கம்பைன்ஸ் வழக்கறிஞர் மறுத்து வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காப்புரிமை சட்டப்படி ஒருவரிடம் காப்புரிமை உள்ள நிலையில் வேறொருவருக்கு எப்படி விற்க முடியும் என்று இடைமறித்து கருத்தை தெரிவித்து வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
23ம் தேதி நடக்க உள்ள இறுதி வாதங்களை பொறுத்து வாத்தி பட விநியோக உரிமை யாருக்கு என்பது தெரியவரும்.
இந்த விவகாரம், திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தனுஷின் “ வாத்தி “பட சர்ச்சை! appeared first on Touring Talkies.
]]>The post தனுஷின் ‘வாத்தி’: புதிய அப்டேட்..! appeared first on Touring Talkies.
]]>வுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
படத்தின் இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “படத்தின் இரண்டாவது பாடலான ‘நாடோடி மன்னன்’ பாடல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” எனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆகவே இந்த பாடலும் விரைவில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
The post தனுஷின் ‘வாத்தி’: புதிய அப்டேட்..! appeared first on Touring Talkies.
]]>