The post அடிப்பாரு… கத்துவாரு..!: மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக் நியூஸ் appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில், உதயநிதி ஸ்டாலின், “ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனாக இருப்பார். அவருடைய அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கண்ணாபின்னானு கத்துவாரு, ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும்” என கூற, அதற்கு வடிவேலுவும் ஆமாம் என சொன்னார்.
இதேபோல், மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு நேர்காணலில், ‘என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன்’ என்று அவரே கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது ஒருபுறம் தீயாக பரவ, மறுபுறம் அவர் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் அப்பாவாக வரும் கூத்து கட்டும் கலைஞரை கன்னத்தில் அறைந்ததாக அவரே கூறும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிர்களும் மாரி செல்வராஜ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
The post அடிப்பாரு… கத்துவாரு..!: மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக் நியூஸ் appeared first on Touring Talkies.
]]>The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.
]]>படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் பேசிய வடிவேலு, “தேவர் மகனுக்கு பின்னர் மாமன்னன் எனக்கு ஒரு பெரிய படமாக இருக்கும்..
இந்தப் படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒத்துகொண்ட உதயநிதி மன்னாதி மன்னன். இது போன்ற படத்தில் மீண்டும் நடிக்க ஆசை. ஆனால் இம்மாதிரியான படங்கள் கிடைப்பது கஷ்டம்” என்றார் வடிவேலு.
The post “மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி மன்னாதி மன்னன்”: வடிவேலு appeared first on Touring Talkies.
]]>The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் , “இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக மாமன்னன் இருக்கும்” என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, “முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டதால், இதுதான் என் கடைசி படம் என ஏற்கெனவே அறிவித்து விட்டேன். ஒருவேளை மீண்டும் நடிக்க வந்தால், மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பேன்” என்று பேசினார்.
The post “மீண்டும் நடித்தால்….!”: ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி பேச்சு! appeared first on Touring Talkies.
]]>