The post ‘ஜவான்’ ஷாருக்கானுக்கு உயிருக்கு ஆபத்து! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் இருப்பார்கள். இதுதவிர அவரது வீட்டைச் சுற்றி ஆயுதம் ஏந்திய நான்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அவருக்கும் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’ இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரூ.1000 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தன.
The post ‘ஜவான்’ ஷாருக்கானுக்கு உயிருக்கு ஆபத்து! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>“ஏற்கெனவே கோழி கூவுது, கும்பக்கரை தங்கையா உள்ளிட்ட படங்களில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடித்து உள்ளார். அடுத்து மீண்டும் இருவரும் இணைய இருந்தனர்.
அப்போது பிரபுவிடம் ஒரு கதை சொன்னார் கங்கை அமரன். அது பிரபுவுக்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து சொன்ன இரு கதைகளும் அவருக்கு பிடிக்கவில்லை. நான்காவதாக ஒரு கதை சொன்னார். அதைக் கேட்டு பிரபு பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
இதனால் டென்சன் ஆன கங்கை அமரன், “பிரபு நீங்க கதை வச்சிருந்தா சொல்லுங்க.. அல்லது உங்களுக்கு யாராவது கதை சொல்லி இருந்தாலும் சொல்லுங்க.. அந்த கதையை இயக்குறேன்! ஆனா அடுத்தவங்க கதையில என்னால ஈஸியா டிராவல் பண்ண முடியாது.
அதனால படம் துவங்கறதுக்கு முன்னால, ‘இது பிரபுவின் கதை.. படத்தின் வெற்றி தோல்விக்கு நான் பொறுப்பு அல்ல’ அப்படினு சொல்லிடுறேன்” என்றார்.
அவ்வளவுதான், மிரண்டு போய்விட்டார் பிரபு. “நீங்க முதல்ல சொன்ன கதையையே எடுத்திரலாம்” என்று உடனடியாக சொன்னார் பிரபு.
அந்த சின்னவர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..
The post நடிகர் பிரபுவை மிரட்டிய பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post சூப்பர் ஸ்டாருக்கு மிரட்டல் விடுத்த நபர்! காரணம் என்ன? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோவை வெளியிடப்போவதாக மர்ம நபரிடமிருந்து கடிதம் வந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், அவரது அறக்கட்டை தலைவரான ரமேஷ் கிட்டி என்பவரை பெங்களூரு போலீசார் கைது செய்து உள்ளனர்.
ரமேஷ் கிட்டி, “கிச்சா சுதீப் என்னிடம் ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டார். அதனாலேயே மிரட்டல் கடிதம் அனுப்பினேன்” என்று கூறியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சூப்பர் ஸ்டாருக்கு மிரட்டல் விடுத்த நபர்! காரணம் என்ன? appeared first on Touring Talkies.
]]>The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், உலகளவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம்கோபால் வர்மா.
தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜமௌலி சார் உங்களின் பாதுகாப்பை அதிகரித்து கொள்ளுங்கள். உங்கள் மீது பொறாமையில் இருக்கும் இயக்குனர்கள் உங்களை கொலை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளனர். அந்த குழுவின் நானும் ஒருவனாக இருக்கிறேன். தற்போது குடிபோதையில் இருப்பதால் உண்மையை உளறிவிட்டேன்”என பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்கோபால் வர்மா இது போன்ற ஒரு கொலை மிரட்டலை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் இதை ராம் கோபல் வர்மா கண்டுகொள்ளவில்லை.
The post “மன்னிப்பு கேட்க மாட்டேன்!”: கொலை மிரட்டல் விடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா! appeared first on Touring Talkies.
]]>