The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>‘நவரச நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
‘மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “ரஜினி, கமலுக்கு நிகராக நவரச நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.
நமது தமிழ்ச் சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள். பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தையும், படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது, “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ ‘நவரச நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இது அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.
பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது. இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்ன மாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.
அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னி லியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.
அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். ‘தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படமும், பாடலும் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்…” என்றார்.
The post “தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.
]]>‘நவரச நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
‘மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை சன்னி லியோன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “குறுகிய கால இடைவெளியில் மீண்டும் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வருவதற்கு முன்பு ஒருவித அயர்ச்சியில் இருந்தேன்.
ஆனால், இந்தப் படத்தின் பாடலுக்கு ஆடியபோது ரொம்பவும் கூலாகிட்டேன். டான்ஸ் மாஸ்டர் மிக அழகாக நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்ததால் ரொம்ப எளிதாகவும், நன்றாகவும் நடனமாட முடிந்தது. படத்தின் ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்.
நான் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை.
நான் இந்தப் பாடல் காட்சியில் ஏன் நடித்தேன் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்தக் குழுவினருக்கும் எனது நன்றிகள்.
இன்றைக்கு தேசிய பத்திரிகையாளர் தினம். நீங்கள் இல்லாமல் நாங்கள் மக்களை சென்று சேர முடியாது. உங்க வேலை என்றைக்குமே நிற்காது. இந்த நாளில் பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் Y.N.முரளி, காதல் கந்தாஸ், முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள சுமன் J, தயாரிப்பாளார் நிர்மலா தேவி ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இறுதியில் ‘தீ இவன்’ படத்தின் டீசரை சன்னி லியோன் வெளியிட்டார்.
The post ‘தீ இவன்’ படத்தில் நடனமாடியிருக்கும் சன்னி லியோன்..! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – Y. N.முரளி, படத் தொகுப்பு – மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை – A.J.அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை – M.அப்பு, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – நிர்மலாதேவி ஜெயமுருகன்.
‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T.M.ஜெயமுருகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ளாராம். இது பற்றி இயக்குநர் T.M. ஜெயமுருகன் பேசும்போது, “நம் தமிழ் சமூகம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும், கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும்விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் இடம் பெற உள்ள ‘மேலே ஆகாயம்; கீழே பாதாளம்; நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது.
நேற்று முன் தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன். கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக் கொண்டார். அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பாடலின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் T.M.ஜெயமுருகன்.
The post கார்த்திக் நடிக்கும் ‘தீ இவன்’ படத்தில் சன்னி லியோன் நடனமாடுகிறாராம்..! appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக்-சுகன்யா நடித்த ‘தீ இவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘சிந்துபாத்’ படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, அர்த்திகா, ‘சேது’ அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, ‘மஸ்காரா’ அஸ்மிதா, உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குநர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – Y.N.முரளி, படத் தொகுப்பு & பின்னணி இசை – ஏ.ஜே.அலி மிர்ஸா, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், நிர்வாகத் தயாரிப்பு – அப்பு, தயாரிப்பு மேற்பார்வை – ஜே.சுகுமார், எஸ்.ராபின், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – நிர்மலாதேவி ஜெயமுருகன்.
இந்த படத்தில் இடம்பெறும் ‘ரைட்டும் ஓடுது ஒன் வேயில் ராங்கும் ஓடுது’, ‘தோப்புக்குள்ள குருவி ரெண்டு தாணானே’, ‘ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டமென்ன உனக்கு’ போன்ற மண் மனம் மாறாத மூன்று பாடல் காட்சிகளை நடன இயக்குநரான கூல் ஜெயந்தின் நடன அமைப்பில் அறிமுக நாயகன் சுமன் மற்றும் நாயகி அர்த்திகா இருவரும் நடிக்க இயற்கை எழில் நிறைந்த வயல் வெளிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
தற்போது இந்தப் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டு வர படக் குழு திட்டமிட்டுள்ளது.
The post கார்த்திக்-சுகன்யா நடித்த ‘தீ இவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது appeared first on Touring Talkies.
]]>