Thursday, April 11, 2024

“தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கதற வைக்கும் கதாநாயகிகள்” – ‘தீ இவன்’ இயக்குநர் பரபரப்பு பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’,  ‘சிந்துபாத்’ படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநரான T.M.ஜெயமுருகன், தனது மனிதன்  சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து,  தயாரித்து, இயக்கி வரும் படம்  ‘தீ இவன்.’

நவரச  நாயகன்’ கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராதாரவி, சுமன்.J, சிங்கம் புலி, இளவரசு, சுகன்யா,‘சேது’ அபிதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில்  கவர்ச்சி ராணி சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

மேலே ஆகாயம் கீழே பாதாளம்…’ எனத் தொடங்கும் அந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட பொருட் செலவில் அரங்கு அமைக்கப்பட்டு நேற்று  படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே படத்தின் டீசரையும் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து  படக் குழுவினர் பத்திரிகையாளர்களை  சந்தித்தனர். அப்போது படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.எம்.ஜெயமுருகன் பேசும்போது, “ரஜினி, கமலுக்கு நிகராக நவரச  நாயகன் கார்த்திக்கும் பெரிய நடிகர். அவரது முழு பரிமானத்தையும் ‘தீ இவன்’ படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு இடைவெளிக்கு பிறகு இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

நமது தமிழ்ச் சமூகம் கலை, கலாச்சாரம், உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளே நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கிறார்கள்.  பின்பற்றவும் செய்கிறார்கள் அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் இன்று சீரழிக்கப்பட்டு  வருகிறது.

இது போன்ற போக்கு வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தையும்,   படத்தை எடுத்துள்ளேன். இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

சன்னி லியோனை மும்பையில் சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னபோது,  “தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்ற கதையுள்ள  இப்படத்தில் நான் இடம் பெறுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்றும் மேலும் இந்தப் படத்தின் ஹீரோ நவரச  நாயகன்’ கார்த்திகை பற்றி சொன்னவுடன் உடனே ஒத்துக் கொண்டார். இத அவர் தமிழ் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தை காட்டுகிறது.

பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்க்காமல்  கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது அவரது நல்ல மனசை காட்டியது. இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு என்ன மாதிரியெல்லாம் சேட்டை பண்ணுகிறார்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு கந்தலாகி போகிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அப்படியொரு சூழ்நிலையில் ஹாலிவுட் நாயகியாக இருந்தும் எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து சன்னி லியோன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றி சொல்கிறேன்.

அவர் அழகாக நடனமாடியுள்ள அந்தப் பாடலில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் காதல் கந்தாஸ் அருமையான நடன அமைப்பை செய்துள்ளார். தீ இவன்’ படம் நல்ல பெயரை பெற்றுத் தரும். இந்த படமும், பாடலும்  அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News