Friday, April 12, 2024

கார்த்திக்-சுகன்யா நடித்த ‘தீ இவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன் ‘.

ந்தப் படத்தை ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’ ஆகிய படங்களை இயக்கியவரும், சிந்துபாத்’ படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, அர்த்திகா, ‘சேது’ அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, ‘மஸ்காரா’ அஸ்மிதா, உமா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குநர் சரவண  சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குநர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – Y.N.முரளி, படத் தொகுப்பு & பின்னணி இசை  –  ஏ.ஜே.அலி மிர்ஸா, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், நிர்வாகத் தயாரிப்பு – அப்பு, தயாரிப்பு மேற்பார்வை – ஜே.சுகுமார், எஸ்.ராபின், மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு  – நிர்மலாதேவி ஜெயமுருகன்.

இந்த படத்தில் இடம்பெறும் ‘ரைட்டும் ஓடுது ஒன் வேயில் ராங்கும் ஓடுது’,  ‘தோப்புக்குள்ள குருவி ரெண்டு தாணானே’, ‘ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி நோட்டமென்ன உனக்கு’ போன்ற மண் மனம் மாறாத  மூன்று பாடல் காட்சிகளை நடன இயக்குநரான கூல் ஜெயந்தின் நடன அமைப்பில் அறிமுக நாயகன் சுமன் மற்றும் நாயகி அர்த்திகா இருவரும் நடிக்க இயற்கை எழில் நிறைந்த வயல் வெளிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

தற்போது இந்தப் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு கொண்டு வர படக் குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News