The post “கேப்டன் மில்லர் கதையை திருடிட்டாங்க!”: எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி பரபர புகார்! appeared first on Touring Talkies.
]]>தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.
சிவராஜ் குமார் -தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி. வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.
இப்படம் தற்போது உலக அளவில் ரூ.65 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு பதிப்பு வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுவந்த சூழலில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தான் எழுதிய பட்டத்து யானை நாவலைத் திருடி, கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளதாகச் சில தினங்களுக்கு முன்பு கூறினார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுத்துள்ளார். மேலும் பட்டத்து யானை நாவலை சங்கத்தில் ஒப்படைத்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து உயிரிழந்த பிறகு, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
The post “கேப்டன் மில்லர் கதையை திருடிட்டாங்க!”: எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி பரபர புகார்! appeared first on Touring Talkies.
]]>The post கதையை தேடி நான் போவதில்லை:’அனிமல்’ படம் பற்றி ராஷ்மிகா appeared first on Touring Talkies.
]]>நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான். இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படத்தை பொறுத்தவரை நான் நடித்ததிலேயே மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான்.
எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை நடித்தது மிகச்சிறப்பான அனுபவவத்தை கொடுத்தது என்றார்.
The post கதையை தேடி நான் போவதில்லை:’அனிமல்’ படம் பற்றி ராஷ்மிகா appeared first on Touring Talkies.
]]>The post லியோ கதை, ‘அந்த’ படத்தின் காப்பியா? appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகளில் சில..
@ லியோ படத்தில் விஜய் ஆபாச வசனம் பேசியது சரிதானா..
இந்த படம், வேறு ஒரு படத்தின் காப்பி என ஒரு தகவல் உலவுகிறதே..
@ மாரிமுத்துவை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்..
@ வெளியில் தெரியாமல் அஜித் பல உதவிகள் செய்கிறாராமே..
@ விஜய் ஆண்ட்டனி நடித்த ரத்தம் படம் வெற்றியா..
இது போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடை தெரிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=hCkb5-mMYzY
The post லியோ கதை, ‘அந்த’ படத்தின் காப்பியா? appeared first on Touring Talkies.
]]>The post கதை சொல்ல ஊர் ஊராக அலைந்த பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>இப்படி பெரும் புகழ் பெற்ற அவர், கதையைச் சொல்ல ஊர் ஊராக அலைந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
இவர், நால்வர் என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இதை திரைப்படமாக்க முடிவு செய்தார். அப்போது தயாரிப்பாளர்கள் பலர் சென்னையில் இல்லை.. வெளியூரில் இருந்தார்கள். தவிர அப்போது விநியோகஸ்தர்களிடமும் கதை சொல்லும் பழக்கம் இருந்தது.
ஆகவே, வெளியூர்களுக்குச் சென்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரிடம் கதை கூறினார்.
பிறகு கதை க்ளிக் ஆகி, நால்வர் படம், வி. கிருஷ்ணன் இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்து, பெரும் வெற்றி பெற்றது.
பிறகு இவரைத் தேடி தயாரிப்பாளர்கள் வந்தனர்.
இதுதான், ஓடத்தில் ஒரு நாள் வண்டி ஏறும், வண்டியில் ஒரு நாள் ஓடம் ஏறும் என்பது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post கதை சொல்ல ஊர் ஊராக அலைந்த பிரபல இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>The post நல்ல நேரமும் கெட்ட நேரமும்: பாக்யராஜின் சுவாரஸ்ய கதை! appeared first on Touring Talkies.
]]>இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ், பேசும்போது ‘‘வாழ்க்கையில் நல்ல நேரம் கெட்ட நேரம் மாறி மாறி வரும்” என்றவர், அதைக் குறிப்பிடும்படி ஒரு கதையையும் கூறினார்:
“சில இளைஞர்கள் பீர் அடித்துக் கொண்டு ஜாலியா போகும் போது, இன்ஸ்பெக்டர் வந்து அவர்களை பிடித்துவிட்டார். அவர் கொஞ்சம் சாஃப்ட் ஆனவர். ‘என்னடா எல்லாரும் படிக்கிற பசங்களா இருக்கீங்க, இப்படி தண்ணி அடிச்சுட்டு திறியுறீங்க? வழக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இனிமே இந்த தப்பு பண்ணாதீங்க.
உங்க அட்ரஸ் எழுதிக் கொடுத்துட்டு கிளம்புங்க” என்கிறார்.
வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நல்ல நேரம்.
அந்த இளைஞர்கள் தங்களது சரியான முகவரியை கொடுத்துவிட்டார்கள்.
ஒருவன் மட்டும், சரியான முகவரியை கொடுத்தால் இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்துவிடுவாரோ என்று பயந்து தப்பான முகவரியை எழுதிக் கொடுத்தான்.
படித்த இன்ஸ்பெக்டர் ஓங்கி அறைந்தார். காரணம், அது அவரது முகவரி!
இதுதான் கெட்ட நேரம்” என்று பாக்யராஜ் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
The post நல்ல நேரமும் கெட்ட நேரமும்: பாக்யராஜின் சுவாரஸ்ய கதை! appeared first on Touring Talkies.
]]>The post “அதுக்கு நானும் காரணம்!”: ‘பம்பர்’ விழாவில் வருத்தப்பட்ட பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது…
அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரெய்லர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.மேலும், ” படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும்” என்று பாக்யராஜ் பேசினார்.
The post “அதுக்கு நானும் காரணம்!”: ‘பம்பர்’ விழாவில் வருத்தப்பட்ட பாக்யராஜ் appeared first on Touring Talkies.
]]>The post “பெண்களை மையப்படுத்தும் கதை தேவையில்லை!” : ஐஸ்வர்யா லஷ்மி appeared first on Touring Talkies.
]]>இவர், “பெண்களை மட்டுமே மையமாக கொண்ட கதைகளில் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை ல்லை. ஏனெனில் பெண்களாகிய நம் வாழ்க்கையில் ஆண்கள் முக்கிய பங்குவகிக்கிறார்கள். சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களை உள்ளடக்கியதே நல்ல சினிமா என நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அதில் எந்தப் பயனுமில்லை. காரணம், சினிமா என்பது நம் வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்று அதிரடியாக தெரிவித்து உள்ளார்.
The post “பெண்களை மையப்படுத்தும் கதை தேவையில்லை!” : ஐஸ்வர்யா லஷ்மி appeared first on Touring Talkies.
]]>The post ரஜினி சொன்ன கதை: விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்! appeared first on Touring Talkies.
]]>படம் குறித்து சமீபத்தில் தாணு, “ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தேன். அது தள்ளிபோய் கொண்டே இருந்துள்ளது. இதனால் ரஜினி வேறு ஹீரோவை வைத்து படம் செய்து விட்டு வாருங்கள், பின்னர் நாம் இணைந்து பணியாற்றலாம் என்றார். மேலும், இந்தியில் சூப்பர் ஹிட்டான காலியா என்ற படத்தை விஜயகாந்தை வைத்து தயாரிக்குமாறும் சொன்னார்.
இப்படித்தான் கூலிக்காரன் படம் துவங்கியது. படமும் பெரிய ஹிட் ஆனது” என்றார் தாணு.
The post ரஜினி சொன்ன கதை: விஜயகாந்தை புரட்சி கலைஞர் ஆக்கிய படம்! appeared first on Touring Talkies.
]]>The post வி.டி.வி.யில் சிம்புவுக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த கவுதம் மேனன் ‘தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து நான் ஒரு படம் இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவருக்காக ஒரு கதை எழுத துவங்கினேன். அவர் ஆக்ஷன் படங்களில் நடிப்பவர். ஆனால், எனக்கு காதல் கதைதான் மனதுக்கு தோன்றியது. கதை யோசித்த போது ‘இந்த உலகத்துல இவ்வளவு பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெர்சிய லவ் பண்ணேன்’ என்கிற வசனத்தைதான் முதலில் எழுதினேன். மகேஷ்பாபு அந்த கதையில் நடிக்க விரும்பவில்லை. அதன்பின்னர்தான் அந்த படத்திற்குள் சிம்பு வந்தார்’ என கவுதம் மேனன் கூறினார்.
The post வி.டி.வி.யில் சிம்புவுக்கு பதில் நடிக்க இருந்தவர் இவரா? appeared first on Touring Talkies.
]]>The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>அவர், “ஒரு காலத்தில், விஜய்க்காக நான் தான் கதை கேட்பேன். கதையில் ஏதேனும் திருத்தம் இருந்தால் சொல்லி திருத்திக் கொண்டு அதன் பின் தான் விஜயிடம் போகும். நான் சொன்னாலே அது முடிவாகிவிடும்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து கதை கேட்க ஆரம்பித்தோம். இப்பொழுது விஜய் தனியே கதை கேட்கிறார்.
அவர் கேட்கும் ஸ்டைலே தனி! கதை கேட்கும் போது டேபிளுக்கு அடியில் தனது மடியில், ஒரு லெட்டர் பேட் வைத்துக் கொள்வார். இயக்குநர் கதை சொல்லும் போது ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அப்படியே பேடில் எழுதிக் கொள்வார். கடைசியாக அந்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வார்” என்றார் எஸ்.ஏ.சி.
The post விஜய் இயக்குநர்களிடம் கதை கேட்கும் ரசகிசயம்! appeared first on Touring Talkies.
]]>